சனி, ஜூன் 26, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் நாற்பத்தெட்டு(48)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் ::நாற்பத்தெட்டு(48)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது.ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின்  மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று  உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது..மேலும் இப்பாராயணத்தின்  மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...

அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம்:: நாற்பத்தெட்டு(48)🙏

🙏முன்னுரை...🙏

சத்குரு என்பவர் யார்..? சத்குருவின் சிறப்பியல்புகளும், லக்ஷணங்கள் பற்றிய சூட்சம விளக்கமும் மற்றும் சீரடிபாபா தன்  இயல் வாழ்க்கை முறையை எவ்வாறு  அனுஷ்டித்தார்  என்பதன் விளக்கம் மற்றும்  தூய்மையான அன்புடன் இறையைப் பின்பற்றுதலே உயரிய  நிலையை அடைய வழி  வகுக்கும் என்பதன் மூல சூட்சம உரை ..

சேவடே  தன்னுடைய சத்குருவின் வைத்திருந்த நம்பிக்கையினால், என்னை பாபா தேர்வில் வெற்றிப்பெறச் செய்வார் என்று கூறியதைக் கேட்டு  அவமதித்த சபட்ணேகர், மேலும் பாபா மீது வைத்திருந்த  நம்பிக்கையையும், பாபாவின் அருட்செயலையும் கேலிசெய்தக் காரணத்தால் , பாபாவின் ஆசியைப் பெறமுடியாமல் போனதற்காக எவ்வாறு பிரார்த்தனைச் செய்து ஆசிப்பெற்றார் என்பதன் அனுபவ விளக்கவுரை... 

திருமதி சபட்ணேகர் என்ற பக்தையின்  கனவில் பகவான் காட்சி  வழங்கியதைப் பற்றி தன் கணவனிடம் எடுத்துக் கூறியவுடன்,  இருவரும் சீரடி சென்று  பாபாவைச் சந்தித்தப் போது , பாபா  இவ்விருவர்களின் இயல் வாழ்க்கையில் நடந்த அனைத்து  நிகழ்வையும் எடுத்துக்கூறி, எவ்வாறு  குழந்தைப்பாக்கியத்தை அருளி ஆசிர்வதித்தார் என்பதைப்  பற்றிய அனுபவ விளக்கவுரை.. 

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி இங்கு கீழே காண்போம்...

🔥 முதலில் சத்குரு என்பவர் யார்..? சத்குருவின் சிறப்பியல்புகளும், லக்ஷணங்கள் பற்றிய சூட்சம விளக்கமும் மற்றும் சீரடிபாபா தன்  இயல் வாழ்க்கை முறையை எவ்வாறு  அனுஷ்டித்தார்  என்பதன் விளக்கம் மற்றும்  தூய்மையான அன்புடன் இறையைப் பின்பற்றுதலே உயரிய  நிலையை அடைய வழி வகுக்கும் என்பதன் மூல சூட்சம உரையை இங்கு காண்போம்....🔥

இவ்வத்தியாயத் தொடக்கத்தில் சாயீபகவான் என்பவர், குருவா அல்லது  சத்குருவா என்று ஒரு பக்தர்  கேட்டக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக,  ஆசிரியர்  ஹேமாட்பந்த் அவர்கள்  சத்குருவின் லட்சணங்களையும், அடையாளங்களையும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்..வேதம், வேதாந்தம் அல்லது சாஸ்திரங்கள் ஆறையும் நமக்குக் கற்பிப்பவர், மூச்சைக் கட்டுப்படுத்துபவர், தமது உடம்பில் முத்திரைச் சின்னகளைப் ( அதாவது விஷ்ணுவின் சங்கு சக்கரச் சின்னங்களைப்) பொறித்துக் கொண்டிருப்பவர், பிரம்மத்தைப் பற்றி இனிமையாக உபதேசம் செய்பவர், தமது சீடர்களுக்குச் சில மந்திரங்களை உபதேசித்து, அதைக் குறிப்பிட்ட முறை ஜெபிக்கச் கூறி குறிப்பிட்ட நிச்சயக்கப்பட்டக்  காலத்திற்குள் அதனால் ஏற்படும் பலனைக் காட்டஇயலாதவர், உயரிய மூலத் தத்துவங்களைத் தனது வார்த்தை ஞானத்தால் அழகாக விளக்கினாலும் தனக்கு எவ்வித சொந்த அனுபவமோ, ஆன்ம உணர்வோ இல்லாதவர் எவரோ ஆகிய இவரெல்லாம் சத்குரு என்பவர்  அல்ல என்பதைப் புரிந்துக்கொள்ளவும்...

தனது உபன்யாசத்தால் இகபர இன்பங்களின் மீது வெறுப்புத் தோன்றச் செய்து, ஆன்ம உணர்வில் ஒரு சுவையை அளிப்பவரும், ஆன்ம உணர்வைப்பற்றிய அனுபூதி தன்மையும், எதிலும் பற்றின்மையும், அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டவரும், தனக்குள்ளே அண்ட சராசரத்தையும் கண்டவரும்,  நடைமுறை ஞானம் இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவரும் 'சத்குரு' என்று அழைக்கபபடுவற்குத் தகுதி உடையவராகின்றார்.  ஆத்ம மறுமலர்ச்சி பெறாமல்  குறைபாடு உடையவரும், ஆத்ம அனுபூதி அடையாத   ஒருவர் அஃதை எவ்வாறு  பிறருக்கு  உபதேசம் அளிக்க இயலும்..? சத்குரு என்பவர்  கனவிலும் கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ,உதவியையோ, இலாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை... மாறாக அவர்களுக்குச் சேவைகள் செய்ய விரும்புகின்றார்..தாம் உயர்ந்தவர், தமது அடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் ஒருபோதும்  எண்ணியதில்லை..தன் பக்தர்களைத்  தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது,  தமக்குச் சமமானவன் அல்லது பிரம்மத்துக்குச் சமமானவன்  என்றேக்  கருதுகின்றார்.. சத்குருவின் முக்கியமான சிறப்பியல்புகள் என்னவென்றால, அவர் அமைதி, சாந்தம், சத்தியம், உண்மை, உயரிய தூய்மையான அன்பு, தாய்மையுணர்வு ஆகியவற்றின் உறைவிடமாக இருக்கின்றார்  என்பதேயாகும்.. அவர் அமைதியற்றோ, வருத்தமாகவோ,  எதனையும்  எதிர்பார்த்தோ  இருந்ததே இல்லை எனலாம்.. மூத்தோன், கற்றோன், அனைத்தும் தெரியும்  என்ற கர்வம், அவருக்குக் ஒருபோதும் கிடையாது.. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், நல்லவன், கெட்டவன்,  அர்த்தசாஸ்த்திரம் அறிந்தவன், ஒன்றுமே அறியாதவன், சத்தியன், அசத்தியன் ஆகியோர் எவராக இருந்தாலும் பேதம். பாராது  அனைவரையும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வோரு தனிமனித உயிருக்கு ஏற்றாற்ப்போல் உபதேசம் வழங்கி சூட்சமமாக அறிவுருத்திக் கடைத்தேற்றம் அடையச்செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

முந்தைய பிறப்புக்களில் செய்த நற்கருமங்களின் குவியலின் விளைவால் சாயீபாபாவைப் போன்ற சத்குருவைச் சந்தித்து தாம் அவரால் ஆசீர்வதிக்கப்படும் நல்லதிர்ஷ்டத்தைப் பெற்றதாக ஹேமாட்ப்ந்த் இங்கே குறிப்பிடுகின்றார்.. தம்முடைய இளமையான காலத்தில் கூட பாபா எதையும் சேகரிக்கவில்லை எதன்மீதும் பற்று இல்லை.. (சில்லிம் என்ற புகைக்குழாய் மட்டும் கரங்களில்  இருந்திருக்கின்றது.) அவருக்குக் குடும்பம் ஏதுமில்லை, நண்பர்கள்  யாருமில்லை, வீடு ஏதும் இல்லை, எவ்வித ஆதாரமும் இல்லை.. பதினெட்டாம் வயதிலிருந்தே பாபாவின் மனக்கட்டுப்பாடு முழுமையானதாகவும், எதிலும்  பற்றின்மையும், அசாதாரணமானதாகவும் இருந்தது..அப்போது அவர் தனிமையான  இடத்தை தேர்வு செய்து தியானம் மேற்க்கொண்டவாறு பயமற்று வாழ்ந்தார்...  எப்போதும் அவர் ஆன்ம உணர்விலேயே மூழ்கி இருந்தார்..தமது அடியவர்களின் தூய அன்பைக்கண்டு அவர்களின் விருப்பப்படியே, அவர் எப்போதும் நடந்தார்.  எனவே ஒருவகையில் தன் அடியவர்கள் பால் சார்ந்தவரானார்... பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்து வந்தாரோ, அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு, மகாசமாதியான பின்பும்  இன்று வரையில்  அளித்து வருகின்றார்.

பக்தி, நம்பிக்கை என்னும் அகவிளக்கை நாம்  ஏற்றி, அன்பெனும் திரியை ஏற்றவேண்டும்.. இவ்வாறு செய்யப்படும்போது, ஞானம் (ஆன்ம உணர்வு) என்னும் ஜோதி சுடர்விட்டு அதிகமாகப் பிரகாசிக்கும்.  அன்பில்லாத வெறும் ஞானம் வறண்டது, எவரும் அத்தகைய ஞானத்தை விரும்புவதில்லை.  அன்பின்றி திருப்தி ஏற்படுவதில்லை..எனவே நாம் தடையற்ற, எல்லையற்ற,  எதனையும் எதிர்பாராத  அன்பு உடையவர்களாக வேண்டும்...அன்பை எங்ஙனம் நாம் எடுத்துக்கூறினாலும், தூய்மையான அதன்முன் எதுவும் முக்கியமற்று விடுகிறது...? அன்பின்றி நமது கல்வி, கேள்வி, படிப்பு யாவும் பயனற்றுவிடுகிறது..அன்பு உள்ளத்தில் உதயமாகும்போது பக்தி, பற்றின்மை, அமைதி, விடுதலை இவையாவும் அவைகளின் அனைத்துச் செல்வக் களஞ்சியங்களுடன் வருகின்றன..அன்பை அடைய ஊக்கத்துடன் விரும்பினாலன்றி, எதைக்கொடுத்தும் பெற இயலாது..எனவே எங்கே உண்மையான அன்பும், ஆர்வமும், ஏக்கமும் இருக்கின்றதோ, கடவுள் தம்மைத்தாமே அவ்விடத்தில் ப்ரதிஷ்டை செய்துக் கொள்கின்றார்..அது அன்பை உள்ளடக்கிய விடுதலைக்கு ஒரு வழியாகிறது...இப்பொழுது  இந்த அத்தியாயத்தின் முக்கிய நிகழ்விற்கு  இப்போது திரும்புவோம்..ஒரு ஞானியிடம் ஒரு மனிதன் தூய உள்ளத்துடன் சத்குருவின் பாதக்கமலத்தில் சரணாகதி அடைந்தால், முடிவாக அவன் காப்பாற்றப்படுவது உறுதி.  இது பின்வரும் நிகழ்வால் விளக்கப்படுகிறது...

🔥சேவடே  தன்னுடைய சத்குருவின் வைத்திருந்த நம்பிக்கையினால், என்னை பாபா தேர்வில் வெற்றிப்பெறச் செய்வார் என்று கூறியதைக் கேட்டு  அவமதித்த சபட்ணேகர், மேலும் பாபா மீது வைத்திருந்த  நம்பிக்கையையும், பாபாவின் அருட்செயலையும் கேலிசெய்தக் காரணத்தால் , பாபாவின் ஆசியைப் பெறமுடியாமல் போனதற்காக எவ்வாறு பிரார்த்தனைச் செய்து ஆசிப்பெற்றார் என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

சோலாப்பூர் ஜில்லா, அக்கல்கோட்டைச் சேர்ந்த சபட்ணேகர் வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருந்தார்..அவருடன் படிக்கும் சேவடே அவரைச் சந்தித்தார்..மற்றும் பல மாணவர்களும் ஒன்றாகக் கூடித் தாங்கள் படிக்கும் பாடங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர்..அவர்களுக்குள் ஏற்பட்ட வினா விடைகளிலிருந்து சேவடே என்பவர்தான் எல்லோரைக்காட்டிலும் பரீட்சைக்குத் தயாரற்ற நிலையிலிருந்தார் என்று தெரியவந்தது... எனவே, மற்றவர்கள் அவரைக் கேலி செய்தனர்...தாம் சரியாகப் படிக்கவில்லையாயினும் தமது சாயிபாபா இருப்பதால் தம்மை வெற்றியடையச் செய்வார் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.

சபட்ணேகர் இக்கூற்றால் ஆச்சரியமடைந்தார்.. அவர் சேவடேயைத் தனியே அழைத்துக் கொண்டுபோய் அவர் அவ்வளவு உயர்வுபடக் கூறும் சாயீபாபா என்பவர் யார் என்று கேட்டார்.  அகமத்நகர் ஜில்லா சீரடியில் உள்ள மசூதியில் பக்கிரி ஒருவர் வாழ்கின்றார்...அவர் மிகப்பெரும் சத்புருஷர்.. மற்ற ஞானிகள் இருக்கலாம், ஆனால் இவர் ஒப்பற்றவர்... முன்வினையில் பல நற்கருமங்களின் பலன் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தாலன்றி ஒருவரும் அவரைப் பார்க்க முடியாது...நான் முழுமையும் அவரை நிச்சயம் நம்புகிறேன். அவர் சொல்வது பொய்யாவதில்லை.. அடுத்த ஆண்டு நான் தேறிவிடுவேன் என்று அவர் எனக்கு உறுதிக் கூறி இருக்கிறார்...கடைசி வருடத் தேர்வையும், அவர்தம் கருணையால் நான் தேறிவிடுவேன் எனக்கூறினார் சேவடே...  சபட்ணேகர் அவர் நம்பிக்கையைக் கண்டு சிரித்து அவரையும், சாயீபாபாவையும் கேலி செய்தார்.....

சபட்ணேகர் தமது தேர்வில் வெற்றிப்பெற்று  அக்கல்கோட்டில் குடியேறி அங்கு வக்கீலாகத் தொழில் நடத்தினார்... இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1913-ஆம் ஆண்டில் தொண்டையில் வந்த வியாதி காரணமாக அவரது ஒரே மகனை இழக்க நேரிட்டது..அது அவர் உள்ளத்தைப் பிளந்தது...பண்டரீபுரம், கனகாபூர் மற்றும் பல புனித க்ஷேத்திரங்களுக்கு அவர் க்ஷேத்ராடனம் செய்து அமைதியைத் தேடினார்..அவருக்கு மனஅமைதி கிடைக்கவில்லை.. பின்னர்  வேதாந்தம்  கற்கத் தொடங்கினார்..அதுவும் அவருக்குப் பயனளிக்கவில்லை.... இத்தருணத்தில், தமது நண்பரான  சேவடே, பாபாவைப் பற்றிக் கூறியதும், பாபாவின்மேல் அவருக்குள்ள நம்பிக்கையையும், சபட்ணேகர் நினைவு கூர்ந்தார்.  தாமும் சீரடிக்குச் சென்று பாபாவைக் காணவேண்டுமென்று அவர் எண்ணினார்..தம் தம்பி பண்டிட்ராவுடன் அவர் சீரடிக்குச் சென்றார்.. பாபாவைத் தூரத்திலிருந்து கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்..பாபா அருகே சென்று வீழ்ந்துபணிந்து, பக்தியுடன் ஒரு தேங்காயை முன்னே வைத்தபோது, "போ...! வெளியே" என்று பாபா கூச்சலிட்டார்...சபட்ணேகர் தலைகுனிந்துக்  கொண்டு, பின்னால் நகர்ந்துபோய் வேறுபக்கம் அமர்ந்திருந்தார்...  மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை அவர் யாரிடமாவது கலந்து ஆலோசிக்க விரும்பினார்...யாரோ பாலா ஷிம்பியின் பெயரைக் குறிப்பிட்டனர்..  சபட்ணேகர் அவரைச் சந்தித்து அவருடைய உதவியை வேண்டினார்... அவர்கள் பாபாவின் போட்டோக்களை வாங்கிக்கொண்டு அவற்றுடன் மசூதிக்குள் வந்தனர்..பாலா ஷிம்பி ஒரு போட்டோவை எடுத்து பாபா கையில் கொடுத்து அது யார் போட்டோ என்று கேட்டார்.. பாபா சபட்ணேகரைக் காண்பித்து, இது அவரது காதலன் போட்டோ என்று கூறிவிட்டுச் சிரித்தார்.  எல்லோரும் சிரித்தனர்.  பாலா ஷிம்பி பாபாவை அச்சிரிப்பின் குறிப்பு என்ன என்று கேட்டுக்கொண்டே சபட்ணேகரை முன்னால் வந்து தரிசனம் செய்துகொள்ளும்படி சமிக்ஞை செய்தார்....

சபட்ணேகர் வீழ்ந்து கும்பிடத் தொடங்குகையில், பாபா மீண்டும் "போ...! வெளியே" என்று கூச்சலிட்டார்...சபட்ணேகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை..பின்னர், இருவரும் (பாலா ஷிம்பி, சபட்ணேகர்) கைக்கோர்த்து பாபாவின்முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.  பாபா முடிவாக சபட்ணேகரை உடனே வெளியே போகும்படி கட்டளையிட்டார்...இருவரும் வருத்தமடைந்து, மனமுடைந்து போயினர்.  பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டுமாதலால் மறுமுறை வரும்போது தரிசனம் தரவேண்டுமென்று, பிரார்த்தனை செய்துக்கொண்டு சபட்ணேகர்  சோர்ந்த உள்ளத்துடன் வீடு திரும்பினார்..

🔥திருமதி சபட்ணேகர் என்ற பக்தை, தனது  கனவில் பகவான் காட்சி  வழங்கியதைப் பற்றி தன் கணவனிடம் எடுத்துக் கூறியவுடன்,  இருவரும் சீரடி சென்று  பாபாவைச் சந்தித்தப் போது , பாபா  இவ்விருவர்களின் இயல் வாழ்க்கையில் முன்னர்  நடந்த அனைத்து  நிகழ்வையும் எடுத்துக்கூறி, எவ்வாறு குழந்தைப் பாக்கியத்தை  அருளி ஆசிர்வதித்தார் என்பதைப்  பற்றிய அனுபவ விளக்கவுரை.. 🔥

ஓர் ஆண்டு ஓடியது.. எனினும் சபட்ணேகர் மனம் அமைதியடையவில்லை...கனகாபூருக்குச் சென்றார்.. அங்கு அவர் இன்னும் அதிகமான மனக் கலக்கத்தை அடைந்தார்.. பின்னர் ஓய்வுக்காக மதேகாவன் சென்றார்... பின்னர் முடிவாக காசிக்குச் செல்லத் தீர்மானித்தார்.  புறப்படுவதற்கு இரண்டு தினங்களுக்குமுன் அவரின் மனைவி ஒரு கனவு கண்டாள்.  அக்கனவில் தான் ஒரு மண் பானையுடன் லக்கட்ஷாவின் கிணற்றுக்குப் போய்க்கொண்டு இருப்பதாகவும், வேப்பமரத்தடியில் ஒரு துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு ஒரு பக்கிரி அமர்ந்திருப்பதையும், அவர் அவளருகில் வந்து, "அன்புள்ள பெண்ணே...! எதற்காக ஒன்றுமில்லாத ஆயாசம்..? நான் உனது பானையில் தண்ணீர் நிரப்பித் தருகிறேன்" என்று கூறியதாகவும் கண்டாள். .அப்பக்கிரிக்குப்  பயந்து காலிப்  பானையுடன் விரைவாகத் திரும்பியபோது, அவரால்  தொடரப்பட்டத்  தருணத்தில்  தூக்கம் கலைந்து  கண்ணைத் திறந்து பார்த்தாள். இக்கனவைத் தனது கணவனிடம் கூறினாள்...இது ஒரு புனிதமான நேரம் என்று அவர்கள் நினைத்து சீரடிக்குப் புறப்பட்டனர்.. அவர்கள் மசூதியை அடைந்தபோது பாபா அங்கில்லை... லெண்டித்தோட்டத்திற்குச் சென்றிருந்தார்.. பகவான்  திரும்பிவரும் வரையில் காத்திருந்தனர்..அவர் திரும்பிவந்ததும் அவள் கனவில் கண்ட அப்பக்கிரியின் தோற்றம் பாபாவுடன் சரியாக ஒத்திருந்ததைக் கண்டு அவள் ஆச்சரியம் அடைந்தாள்..பணிவுடன் அவள் பாபாவின்முன் வீழ்த்து வணங்கிவிட்டு அவரை நோக்கி அமர்ந்திருந்தாள்...

அவளது பணிவைக்கண்டு பாபா மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கே உரிய விசித்திரமான பாணியில் மூன்றாமவர் ஒருவரிடம் ஒரு கதை சொல்லத் தொடங்கினார்.. எனது புயம், அடிவயிறு, இடுப்பு எல்லாம் நீண்ட நாட்களாக வலித்துக்கொண்டு இருந்தன..பல மருந்துகளைச் சாப்பிட்டேன்...வலி குறையவில்லை. மருந்துகள் எவ்வித நிவாரணத்தையும் அளிக்கவில்லை...ஆதலால் நான் மருந்துகளின் மேல் வெறுப்படைந்தேன்.  ஆனால் இப்போது திடீரென்று எல்லா வலிகளும் நீங்கிவிட்டது கண்டு ஆச்சரியம் அடைகிறேன்" என்றார்... எவ்விதப் பெயரும் கூறப்படவில்லை..ஆயினும் உண்மையில் அது திருமதி  சபட்ணேகரின் கதையே ஆகும்..பாபா விவரித்தபடியே அவளது வலி உடனே நீங்கிவிட்டது... அவள் மகிழ்ச்சி அடைந்தாள்...

பின் சபட்ணேகர்  தரிசனம் செய்துகொள்ள  முன்னால் சென்றார்..அவர் மீண்டும் முந்தைய "வெளியே போ!" என்ற வார்த்தைகளுடன் வரவேற்கப்பட்டார்...இந்த முறை அவர் தவறுக்கு வருந்துபவராகவும், இன்னும் விடாமுயற்சி உள்ளவராகவும் இருந்தார்..தனது முந்தைய வினைகளே பாபாவின் அதிருப்திக்குக் காரணம் என்று நினைத்து  அதற்கு ஈடுசெய்யத் தீர்மானித்தார்..பாபாவைத் தனியாகக் கண்டு, தனது முந்தைய வினைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள முடிவுசெய்து தனது தலையை பாபாவின் பாதத்தின் மீது வைத்தார்..பாபா தமது கையை கையை அவர் தலைமீது வைத்தார்..பாபாவின் கால்களை சபட்ணேகர் கீழே அமர்ந்து வருடத் தொடங்கினார்..பின் ஆடுமேய்க்கும் ஆய்மகள் ஒருத்தி பாபாவின் இடுப்பை உட்கார்ந்து பிடித்துவிடத் தொடங்கினாள்...பாபா தமக்கே உரிய பாணியில் ஒரு வணிகனின் கதையைக் கூறத்  தொடங்கினார்....

வணிகனின்  வாழ்க்கை முழுவதிலும் ஏற்பட்ட மாறுதல்களையும்,  அவனது ஒரே மகன் இறந்தது உட்பட அனைத்தையும் எடுத்துரைத்தார்...பாபா கூறிக் கொண்டிருந்த கதை முழுவதும் தன்னுடையதே என்று அறிந்து, சபட்ணேகர் ஆச்சரியமடைந்தார்...பாபாவுக்கு அதன் ஒவ்வொரு விவரமும் தெரிந்தது கண்டு அதிசயமடைந்தார்...அவர் நிறைப் பேரறிவுடையவர் என்றும், அனைவரின் இதயங்களையும் அறிந்திருப்பவர் என்றும் அறியலானார்...இந்த எண்ணம் அவர் மனதில்  எழுந்த போது, பாபா ஆடுமேய்க்கும் பெண்ணை நோக்கி சபட்ணேகரைச் சுட்டிக்காண்பித்து, "இந்த ஆள் அவரது குழந்தையை நான் கொன்றுவிட்டதாக, என் மீது பழி சுமத்தித் திட்டுகின்றார்...நான் எனது மக்களின் குழந்தைகளைக் கொல்கின்றேனா..? ஏன் இவர் மசூதிக்கு வந்து அழுகிறார்..?  நான் இப்போதே ஒன்றைச்  செய்கிறேன்..அதே குழந்தையை மீண்டும் அவரது மனைவியின் கருப்பையில் கொண்டு வைக்கின்றேன்"  என்று கூறினார்...

இவ்வார்த்தைகளைக் கூறிக்கொண்டே தமது ஆசி வழங்கும்  கரத்தை, அவர் தலைமீது வைத்து, "இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை...இப்போது உனக்குக் கவலையில்லை...என்மீது முழு நம்பிக்கையையும் வைப்பீராக...நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்.!" என்று கூறித் தேற்றினார்..சபட்ணேகர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, பாபாவின் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தார்..பின்னர் அவர் பூஜை, நிவேதனம்  இவைகளைத் தயார் செய்துக் கொண்டு மனைவியுடன் மசூதிக்கு வந்தார்...தினந்தோறும் இவைகளை பாபாவுக்குச் சமர்ப்பித்து, அவரிடமிருந்து பிரசாதம் பெற்றுக்கொண்டிருந்தார்..மசூதிக்குள் கூட்டமாக இருந்தது...சபட்ணேகர் அங்குசென்று மீண்டும் மீண்டும் வணங்கிக் கொண்டிருந்தார்.. தலையோடு தலைகள் மோதிக் கொள்வதைக் கண்ட பாபா சபட்ணேகரை நோக்கி, "ஓ...! நீ ஏன் அடிக்கடி வணங்கிக் கொண்டிருக்கின்றாய்...?" என்று கேட்டார்...  "பணிவுடனும், அன்புடனும் செய்யும் ஒரு நமஸ்காரமே போதும்" என்றார்..  அன்றிரவு முன்னரே விவரிக்கப்பட்ட சாவடி ஊர்வலத்தை சபட்ணேகர் கண்டுகளித்தார்.  ஊர்வலத்தின்போது பாபா, பாண்டுரங்கன் மாதிரியே காட்சியளித்தார்...

மறுநாள் விடைபெறும்போது தக்ஷிணையாக ஒரு ரூபாய் கொடுக்க வேண்டுமென்றும், பாபா மீண்டும் கேட்டால் இல்லையென்று கூறாமல், பிரயாணம் செய்வதற்குப் போதுமான பணத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு, மேலும் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டு என்றும் நினைத்தார்...  மசூதிக்கு அவர் சென்று ஒரு ரூபாய் அளித்தபோது, அவருடைய எண்ணத்தின் படியே பாபா மேலும் ஒரு ரூபாய் கேட்டார்..அது கொடுக்கப்பட்டபோது, பாபா இதைக்கூறி ஆசீர்வதித்தார்...இத்தேங்காயை எடுத்து உனது மனைவியின்  சேலை  முந்தானையில் போட்டுவிட்டு எவ்விதக் கவலையும் படாமல் சௌகரியமாகப் போய் வா" என்றார்..அவரும் அங்ஙனமே செய்தார்... 

ஒரு வருடத்திற்குள் அவருக்கு ஒரு மகன் பிறந்தான்...எட்டு மாதக் குழந்தையுடன் அவ்விருவரும் சீரடிக்கு வந்தனர்..அதை பாபாவின் காலடிகளில் வைத்து, "ஓ...! சாயிநாத், தங்கள் உதவிக்கு என்ன கைம்மாறு செய்வது என்று நாங்கள் அறியாமல் இருக்கின்றோம்.. எனவே தங்கள்முன் வீழ்ந்து பணிகின்றோம்.. எளிய ஆதரவற்ற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்..இனி தங்களின் புனிதப் பாதங்களே எங்களது ஒரே அடைக்கலமாக இருக்கட்டும்...பற்பல எண்ணங்கள் கனவிலும், நினைவிலும் எங்களை தொல்லைப் படுத்துகின்றன... எங்கள் மனதை அப்பாதிப்பிலிருந்து திரும்பச்செய்து, எங்களை  தங்கள் வழிபாட்டுக்குத் திருப்பி ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்" எனப் பிரார்த்தித்தனர்..  புத்திரனுக்கு 'முரளீதர்' என்று பெயரிடப்பட்டது..  பின்னர் பாஸ்கர், தினகர் என்ற இருவரும் பிறந்தனர்..இங்ஙனமாக சபட்ணேகர் தம்பதிகள் பாபாவின் மொழிகள் பொய்ப்பதில்லை என்றும், நிறைவேறாமல் போவதில்லை என்றும், முற்றிலும் உண்மையாகவே நிகழ்கின்றன என்றும் உணர்ந்தனர்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப்  பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்...🙏🏼🙏🏼

வெள்ளி, ஜூன் 25, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் நாற்பத்தேழு (47)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🙏🙏

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் ::நாற்பத்தேழு (47)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்.. இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...,

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

 🙏அத்தியாயம் :: நாற்பத்தேழு(47)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருநாதர் சீரடி பாபா, தான்  அண்ட சராசரத்திலும் இருக்கின்ற அனைத்து  ஜீவராசிகளிலும்  நீக்கமற நிறைந்து வியாப்பித்திருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக, பாம்பு மற்றும் தவளையும், எவ்வாறு  முன் ஜென்மத்தில் மனிதர்களாக வாழ்ந்து, பிறகு  பகைமைக் கொண்டார்கள் என்பதை வழிப் போக்கனிடம் பாபா  விவரித்து,  எவ்வாறு தவளையை பாம்பிடமிருந்து மீட்டார் என்பதன்  விளக்கவுரை ...

வீரபத்ரப்பா என்பவர்  பாம்பாகவும், சனபசப்பா என்பவர்  தவளையாக ஏன் பிறந்தார்கள் என்பதைப் பற்றியும் ,  முன் ஜென்மத்தில் வீரபத்ரப்பாவிற்கும் சனபசப்பாவிற்கும். இடையேயான பகைமையின் மூலக் காரணம் என்ன என்பதன் அனுபவ விளக்கவுரை... 

மேற்க்கண்ட தலைப்புக்களைப் பற்றிய விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்...

🔥 முதலில்  சத்குருநாதர் சீரடி பாபா, தான் அண்ட சராசரத்திலும் இருக்கின்ற அனைத்து ஜீவராசிகளிலும்  நீக்கமற நிறைந்து வியாப்பித்திருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக, பாம்பு மற்றும் தவளையும், எவ்வாறு  முன் ஜென்மத்தில் மனிதர்களாக வாழ்ந்து, பிறகு  பகைமைக் கொண்டார்கள் என்பதை வழிப் போக்கனிடம் பாபா  விவரித்து,  எவ்வாறு தவளையை பாம்பிடமிருந்து மீட்டார் என்பதன்  விளக்கவுரையை இங்கு காண்போம் ...🔥

சாயீயின் முகம் புனிதமானது...சில கணங்களுக்கு நாம் நமது பார்வையை அவர்பால் செலுத்தினாலும் நமது முந்தைய பல பிறவிகளின் துக்கங்களையழித்து நம்மீது பேரானந்தத்தைப் பொழிகிறார்...  கருணையுடன் அவர் நம்மை ஆழமாக  நோக்குவாராயின் நமது முன் ஜென்மக்  கர்மவினைக் கட்டுக்களெல்லாம் அறுப்பட்டு உயர்ந்த நிலையில் வாழ  வழிக் காட்டப்படுகின்றோம்.. கங்கை என்கின்ற புனித நதியானவள், தன்னிடம்  குளிப்பதற்காக வரும்  மக்களனைவரின் பாவங்களையும், சாபங்களையும்  நீக்குகின்றாள்...ஆனால் கங்கை கருதுகின்றாள், ஞானிகள் தன்னிடம் வரவேண்டுமென்றும், அவர்களது பாதாரவிந்தங்களால்  தான் ஆசீர்வதிக்கப்பட்டு, தன்னிடம் குவிக்கப்பட்ட பாவங்களும், சாபங்களும்  நீக்கப்படவேண்டுமென்றும் மிகுந்த ஆவலுடன் விரும்புகின்றாள்... ஞானிகளின் பாதாரவிந்தங்களால் மட்டுமே இப்பாவமூட்டை அழிக்கப்படும் என்று அவள் உறுதியாக அறிகிறாள்...ஞானிகளுக்கெல்லாம்  தலையாய முடிமணியாக சாயீநாதர் விளங்குகின்றார்..அவரிடமிருந்து இப்போது நம்மைத் தூய்மைப்படுத்தும் பின்வரும் நிகழ்வைப்  பார்ப்போம்....

சத்குருநாதர் சீரடி பாபா கூறுகின்றார்...ஒருநாள் எனது காலை உணவை உண்டபின் ஒரு சிறு நதிக்கரை வரும்வரை மெதுவாக உலவிக் கொண்டிருந்தேன்..களைப்பாய் இருந்தபடியால் அங்கு சற்று இளைப்பாறினேன்..எனது கைகால்களைக் கழுவிக்கொண்டு, குளித்துவிட்டு புத்துணர்ச்சி பெற்றேன்.. அங்கு மரங்கள் அடர்ந்து நிழல்மிகுந்த ஒரு வண்டிப்பாதையும், ஒற்றையடிப்பாதையும் இருந்தது..மெல்லிய இளங்காற்றும் இதமாக வீசிக்கொண்டிருந்தது.  நான் புகைபிடிப்பதற்கு சில்லிம் (புகைக்குழாய்) தயார் செய்துக் கொண்டிருந்தபோது ஒரு தவளை ஒலமிடுவதைக் கேட்டேன்...சிக்கிமுக்கிக் கல்லைத் தட்டி நெருப்புப் பற்றவைத்தபோது, ஒரு வழிப்போக்கன் எனதருகில் வந்து அமர்ந்து, என்னைப் பணிவுடன் வணங்கி உணவுக்கும், இளைப்பாறுதலுக்கும் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான்... புகைக்குழாயைப் பற்றவைத்து என்னிடம் கொடுத்தான்....மீண்டும் தவளையின்  ஓலம் கேட்டது...அவன் அது என்னவென்று அறிந்துக் கொள்ள விரும்பினான்...

நான் கூறினேன்  அவனிடம், ஒரு தவளை கஷ்டத்தில் இருக்கிறதென்றும், அது தன்னுடையதேயான முந்தைய வினைகளின் கசப்பான கர்மபலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறினேன்.. முந்தைய பிறவிகளில் நாம் விதைத்த  விதையின்  பலனை நாமே அறுவடை செய்ய வேண்டும் தானே..ஆகவே தவளைக்  கதறுவதால் பலன் ஒன்றும் இல்லை என்றேன்...பின்னர் அவன் புகைப்பிடித்துவிட்டு குழாயை என்னிடம் கொடுத்துவிட்டு தானே நேரடியாகச் சென்று அதைப் பார்த்து வருவதாகக் கூறினான்...அதற்கு நான்(சீரடி பாபா), ஒரு பெரிய பாம்பு தவளையைப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும், தவளை ஓலமிட்டு அழுவதாகவும், முந்தைய மனிதப் பிறவியில்  இவ்விருவருமே மிகக் கொடூரமானவர்களாக இருந்தனர் என்றும், இப்போது அவர்களின் கர்மப்பலனை இவ்வுடம்பில் அனுபவிக்கின்றார்கள் என்றும் நான் அவனிடம் கூறினேன்....

வழிப்போக்கன்  வெளியேச் சென்று தவளையின் நிலையைப் பார்த்துவிட்டு எம்மிடம் கூறினான், ஒரு பெரும் கருநாகம் ஒன்று   தவளையைத் தன் வாயில் கவ்விக் கொண்டிருந்ததைக் கண்டேன்  என்று கூறினான்...மேலும்  என்னிடம் திரும்பிவந்து இன்னும் பத்துப் பன்னிரண்டு நிமிடங்களில் தவளையைப் பாம்பு தின்றுவிடும் என்றும்  கூறினான்.. நான், "இல்லை அப்படி இருக்கமுடியாது...நானே அதன் தந்தை.. (பாதுகாவலன்)  மேலும் நான் இப்போது இங்கேயே இருக்கிறேன்..அப்பாம்பு அதைத் தின்பதை எங்ஙனம் நான் அனுமதிப்பேன்...?  வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கின்றேன்...?  அதை எங்ஙனம் விடுவிக்கிறேன் என்பதைச் சற்றே பாருங்கள்" என்று கூறினேன் வழிப்போக்கனிடம்.. மீண்டும் புகைபிடித்தப் பின்னர் நாங்கள் அவ்விடத்துக்கு நடந்துச் சென்றோம்..அவன் பயந்து அப்பாம்பு எங்களைத் தாக்கலாமாதலால், மேற்கொண்டு செல்ல வேண்டாமென்று என்னிடம் கூறினான்.. அவனைப் பொருட்படுத்தாது நான் முன்னே சென்று அந்த ஜந்துக்களை நோக்கி இங்ஙனம் விளித்துக் கூறினேன், "ஓ...! வீரபத்ரப்பா, உனது பகைவனான சனபசப்பா தவளையாகப் பிறந்தபோதிலும், தான் செய்ததற்காக வருத்தப்படவில்லையா...?  நீயும் பாம்பாகப் பிறந்தும், அவன்மீது இன்னும் கசப்பான பகைமையை வைத்திருக்கின்றாயா...?  சீ...! கேவலம் வெட்கப்படு... உன்னுடைய பகைமையை இப்போதே ஒழித்துவிட்டு அமைதியாக இரு" என்றேன்...

இவ்வார்த்தைகளைக் கேட்டு, பாம்பு தவளையை விட்டு உடனே அகன்று ஆற்றில் தாவி மறைந்துவிட்டது...தவளையும் குதித்து புதர்களில் தன்னை மறைத்துக்கொண்டது. வழிப்போக்கன் மிகவும் ஆச்சரியப்பட்டான்... நீங்கள்  கூறியவுடன் பாம்பு எங்ஙனம் தவளையைப் போட்டுவிட்டு மறைந்தது என்பது தனக்கு விளங்கவில்லை என்றும், யார் வீரபத்ரப்பா...?  யார் சனபசப்பா...?  அவர்களின் பகைக்குக் காரணம் என்ன என்றும்  வழிப்போக்கன் எம்மிடம்  கேட்கின்றான்.. அவனுடன் நான் மரத்தடிக்கு வந்து சிறிது புகைபிடித்தப்  பின்னர் அப்புதிர் முழுவதையும் பின்வருமாறு விளக்கினேன்...  

🔥வீரபத்ரப்பா என்பவர்  பாம்பாகவும், சனபசப்பா என்பவர்  தவளையாக ஏன் பிறந்தார்கள் என்பதைப் பற்றியும் ,  முன் ஜென்மத்தில் வீரபத்ரப்பாவிற்கும் சனபசப்பாவிற்கும். இடையேயான பகைமையின் மூலக் காரணம் என்ன என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்🔥

எனது இடத்திலிருந்து நாலைந்து மைல் தொலைவில் மஹாதேவரின் கோவிலால் புனிதமாக்கப்பட்ட ஒரு புராதன க்ஷேத்திரம் இருந்தது...கோவில் மிகப் பழமையானதாகவும், சிதிலம் அடைந்தும் இருந்தது.. அவ்வூரார் கோவிலின் பழுதுபார்க்கும் வேலைகளுக்கு நிதி வசூலித்தனர்..  பெருந்தொகை நிதி வசூலிக்கப்பட்டதும்  வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன...பழுதுப் பார்ப்பதற்குத் திட்டமும், மதிப்பீட்டுப் பட்டியல்  தயாரிக்கப்பட்டது.  ஒரு உள்ளூர் பணக்காரனை அதிகாரியாக  நியமிக்கப்பட்டு,முழுப்பொருப்பும்  அவனிடம் ஒப்படைக்கப்பட்டது..அவன் ஒழுங்காகக் கணக்கு வைத்துக் கொண்டு, தனது எல்லா விஷயங்களிலும் நேர்மையாக இருந்திருக்கவேண்டும்...அவன் முதல் தரமான கஞ்சன்...பழுதுபார்க்கும் செலவுகளுக்காக மிகக்கொஞ்சமே பணம் கொடுத்ததால் வெகுசொற்ப முன்னேற்றமே காணப்பட்டது.. எல்லா நிதியையும் அவனே செலவழித்து ஏப்பம் விட்டுவிட்டான்..தனது பணம் ஏதுமே செலவழிக்கவில்லை..அவனுக்கு இனிமையாகப் பேச்சுத்திறன் இருந்தது...  வேலையின் தாமதத்தைப் பற்றியும், வேலைத் தாமதமாவதற்கு காரணங்களை மிகச்  சாமர்த்தியமாக,  பிறர்  ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில்  சமாதானங்கள் கூறினான்.. அவனாலான மிகச்சிறந்த முயற்சியை செய்து உதவினாலன்றி வேலை பூர்த்தியடையாது என்று மக்கள் மீண்டும் அவனிடம் சென்று கூறினர்...அவ்வேலையைச் செய்துமுடிக்க அவர்கள் அவனிடம் வேண்டிக் கொண்டு மீண்டும் நிதி சேகரித்து அவனிடம் கொடுத்தனர்...அவன் அதைப் பெற்றுக் கொண்டு  முன்போலவே எவ்வித முன்னேற்றமும் செய்யாமல் இருந்தான்..

சிலநாட்களுக்குப் பிறகு கடவுள் (மகாதேவ்) அவனது மனைவியின் கனவில் தோன்றி, "எழுந்திரு, கோவிலின் கோபுரத்தைக் கட்டு..நீ செலவழித்ததைப் போல் நூறு பங்கு உனக்குத் திருப்பித் தருகிறேன்" என்று அவளிடம் கூறினார்..இக்காட்சியை அவள் தன்னுடைய கணவனுக்கு அறிவித்தாள்..உடனே அவளின் கணவன் இது வெறும் கனவே என்றும், அதை நம்பிச் செயலில் இறங்கத் தேவையில்லை என்றும், அல்லாவிடில் தன்னிடமும் ஏன் கடவுள் தோன்றிச் சொல்லவில்லை என்றும் கூறி, சிரித்து மழுப்பிவிட்டான்..அவன் அவளிடமிருந்து நெடுந்தொலைவிலா இருந்தான்...?  கணவன் மனைவியிடத்தே மனஸ்தாபம் உண்டாக்கும் நோக்கத்துடன் கூடிய கெட்டக் கனவு மாதிரி தோன்றுகிறது என்றான்...  அவள் அமைதியாக இருக்கவேண்டியதாயிற்று. 

நன்கொடையாளர்களின் விருப்பத்துக்கு மாறாக சேகரிக்கப்படும் பெருந்தொகைகளைக் கடவுள் விரும்புவதில்லை..ஆனால் அன்பு, பக்தி, ஆர்வம் இவற்றுடன் கொடுக்கப்படும் எளிய தொகைகளையே அவர் உவப்புடன் ஏற்கிறார்... சில நாட்களுக்குப் பின்னர், கடவுள் மீண்டும் அவளது கனவில் தோன்றி, "உனது கணவனைப் பற்றியோ அல்லது அவனிடமிருக்கும் நிதியைப் பற்றியோ கவலைப்படாதே....கோவிலுக்காக அவனை எதையும் செலவு செய்யும்படியும் வற்புறுத்தாதே...எனக்குத் தேவையானது அன்பும், பக்தியுமே..எனவே உனக்குச் சொந்தமானது எதையும் நீ விரும்பினால் கொடுப்பாயாக" என்று அவளிடம் கூறினார்.  இக்காட்சியைப் பற்றி அவள் தன் கணவனுடன் கலந்தாலோசித்தாள்....

தனது தந்தையால் கொடுக்கப்பட்ட ஆபரணங்களையெல்லாம் கொடுக்கத் தீர்மானித்தாள். கஞ்சன் கலக்கமடைந்து கடவுளையே இவ்விஷயத்தில் ஏமாற்றத் தீர்மானித்தான்...அவன் அவ்வாபரணங்களை ரூபாய் ஆயிரத்துக்கு குறைவாக மதிப்பீடு செய்து தானே வாங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக கடவுளுக்கு ஒரு நிலத்தை பாதுகாப்புச் சொத்தாக அளித்தான்..இதற்கு மனைவியும் சம்மதித்தாள்.. இந்நிலமும் அவனுடையது அல்ல..டுபகி என்ற ஏழைப் பெண்மணி ஒருத்தி அதை அவனிடம் ரூ.200க்கு அடமானம் வைத்து நெடுநாளாக அதை மீட்க முடியாமல் இருந்தாள்..  எனவே கபடம் உள்ளமான   அக்கஞ்சன் தனது மனைவி, டுபகி மற்றும் கடவுள் அனைவரையும் ஏமாற்றினான்.. நிலமோ தரிசு, ஒன்றுக்கும் பயனற்றது...சிறந்த பருவகாலங்களில் கூட விளைச்சல் ஏதும் கொடுக்காது...இவ்விதமாக இந்த வாணிப நடவடிக்கை முடிவுபெற்றது...ஒரு ஏழைப் பூசாரியின் பொறுப்பில் நிலம் விடப்பட்டது..அவனும் இத்தர்மத்தால் மகிழ்ச்சியடைந்தான்..சில நாட்களுக்குப் பிறகு வினோதமான நிகழ்சிகள் நடைபெற்றன.. பயங்கர புயலும், பேய்மழையும் வந்தது..கஞ்சன் வீட்டில் இடிவிழுந்து கணவனும், மனைவியும் இறந்தனர்.  டுபகியும்  மரணமடைந்தாள்..

அடுத்த பிறவியில் அப்பணக்காரக் கஞ்சன் மதுராவில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பிறந்து வீரபத்ரப்பா என்று பெயரிடப்பட்டான்..  அவளுடைய பக்தியுள்ள மனைவி கோவில் பூசாரியின் மகளாகப் பிறந்து கௌரி என்று பெயரிடப்பட்டாள்.. டுபகி என்பவள்  கோவில் பணி செய்பவர் ஒருவரின் குடும்பத்தில் ஆணாகப் பிறந்து சனபஸப்பா என்று பெயரிடப்பட்டாள்.  அப்பூசாரி எனது நண்பன்..  அவன் அடிக்கடி என்னிடம் வந்து உரையாடி புகைப்பிடிப்பான்.அவனது மகளான கௌரியும் என்னிடம் பக்தி பூண்டவள்.  அவள் வேகமாக வளர்ந்தாள்...அவளது தகப்பனார் நல்ல வரன் ஒன்றை அவளுக்குத் தேடினார்..அவனிடம் நான் இதைப்பற்றிக் கவலையுற வேண்டாமென்றும், மாப்பிள்ளையே அவளைத் தேடிக்கொண்டு வருவானென்றும் கூறினேன்..அவர்கள் ஜாதியில் உள்ள வீரபத்ரப்பா என்ற ஏழைப்பையன் ஊரூராகத் திரிந்துகொண்டும், பிச்சையெடுத்துக் கொண்டும் அப்பூசாரியின் வீட்டுக்கு வந்தான்...என்னுடைய சம்மதத்தின் பேரில் பூசாரி கௌரியை அவனுக்கு திருமணம் செய்து வைத்தான்..அவனுடைய திருமணத்திற்கு நான் சிபாரிசு செய்ததால் வீரபத்ரப்பாவும்  முதலில் என்பால் பக்தி பூண்டவனாக இருந்தான்...இந்த  ஜன்மத்திலும் அவன் பணத்தாசை பிடித்தவனாக இருந்தான்.. மேலும்  தான் சம்சாரியாக இருப்பதால் பணம் சம்பாதிக்க  என்னை உதவி செய்யுமாறு கூறினான்...

அதன்பின் விசித்திரமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன..விலைவாசிகளில் ஒரு திடீர் ஏற்றம் கண்டது.  கௌரியின் நல்ல  அதிர்ஷ்டத்தினால் நிலத்துக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டு, அந்தத் தர்ம நிலம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.. (அவளது ஆபரணத்தின் மதிப்பைப்போல் நூறு மடங்கு) பாதித்தொகை பணமாகவும், மீதித்தொகை ரூ.2000 வீதமாக இருபத்தைந்து தவணைகளில் கொடுக்கப்படவும் இருந்தது... இந்த விவகாரத்தை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.. ஆனால் பணத்துக்காகச் சண்டைப்  பிடித்துக் கொண்டனர்.. எனது யோசனைக்காக அவர்கள் என்னிடம் வந்தனர்...  கடவுளுக்குரிய அந்த சொத்து பூசாரியின் பாதுகாப்பில் இருந்தது. கௌரியே அதன் பிதுரார்ஜித சொத்துக்கு வாரிசுக்காரி, உரிமைக்காரி..அவளது சம்மதமின்றி எந்தப் பணமும் செலவழிக்கப்படக்கூடாது...அவளது கணவனுக்கு அதில் எவ்வித உரிமையில்லை என்று நான் கூறினேன்...என்னுடைய கருத்தைக்கேட்டு வீரபத்ரப்பா என்மீது கடுமையான கோபமடைந்தான்..நான் கௌரியின் உரிமையைப் பலப்படுத்தி அவளது சொத்தைக் கவர விரும்புவதாக என்னைக் குற்றம்  கூறினான்..அவன் கூற்றைக்கேட்டு நான் கடவுளை நினைவுகூர்ந்து அமைதியாய் இருந்தேன்..வீரபத்ரப்பா அவனது மனைவியைத் திட்டினான்.  மதியம் அவள் என்னிடம் வந்து பிறர் மொழிகளைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும், எனது மகளாயிருப்பதால் அவளைக் கைவிட வேண்டாம் என்றும் கூறினாள்..இவ்வாறாக அவள் எனது பாதுகாப்பை வேண்டியதன் காரணமாக, அவளைக் காப்பதற்காக நான் ஏழ்கடலையும் கடப்பேன் என்று அவளுக்கு வரம் கொடுத்தேன்...

பின்னர் அன்றிரவு கௌரி மீண்டும் ஒரு கனவுக் கண்டாள்..மஹாதேவ் அவளது கனவில் தோன்றி, "பணம் முழுவதும் உன்னுடையது.. அதை யாரிடமும் கொடுக்காதே, கொஞ்சம் பணத்தை கோவில் வேலைக்காக சனபசப்பாவிடம் கலந்து ஆலோசித்துச் செலவிடு..  வேறெதற்காவது அதை நீ செலவிட விரும்பினால் மசூதியிலுள்ள பாபாவிடம் கலந்தாலோசி" என்று அறிவுருத்தினார் என்று .  கௌரி என்னிடம் அக்கனவைக் கூறினாள்...  இவ்விஷயத்தில் அவளுக்கு நான் உரிய ஆலோசனை கூறினேன்..அசல் தொகையை அவளே எடுத்துக்கொள்ளவும், வட்டியில் பாதியை சனபசப்பாவுக்குக் கொடுக்கவும், இவ்விஷயத்தில் வீரபத்ரப்பாவுக்கு ஒன்றுமில்லையென்றும் கூறினேன்...இவ்வாறு நான் பேசிக் கொண்டிருக்கும்போது வீரபத்ரப்பாவும்,  சனபசப்பாவும் சண்டை போட்டுக் கொண்டே வந்தனர்..அவர்களைச் சாந்தப்படுத்த என்னாலான முழு முயற்சியைச் செய்து அவர்களுக்குக் கௌரியின் கனவைக் கூறினேன்..வீரபத்ரப்பா மூர்க்கனாகிக் கோபமடைந்து, சனபசப்பாவை கண்டத்துண்டமாக வெட்டப்போவதாக பயமுறுத்தினான்..

சனபசப்பா பீதியடைந்து என் கால்களைப் பிடித்துக் கொண்டு எனது அடைக்கலத்தை வேண்டினான்...அவனது எதிரியின் கடுமையானக்  கோபத்திலிருந்து அவனைக் காப்பதற்காக, நான் என்னுடையதான வாக்குறுதியைக் கொடுத்தேன்..சிலக் காலத்திற்குப்பின் வீரபத்ரப்பாவும், சனபசப்பாவும் காலமாகி முறையே பாம்பாகவும், தவளையாகவும் பிறந்தனர்... சனபஸப்பாவின் ஓலத்தைக் கேட்டதும் எனது வாக்குறதியை நினைவுகூர்ந்து இங்குவந்து அவனைப் பாதுகாத்து என் வார்த்தையைக் காப்பாற்றினேன்...தமது அடியவர்களின் அபாயகாலத்தில் கடவுள் ஓடிச்சென்று உதவுகிறார்...அவர் என்னை இங்கு அனுப்பியதன் மூலம் சனபஸப்பாவைக் காத்தார்.  இவைகளெல்லாம் கடவுளின் லீலை அல்லது திருவிளையாடல்  என்பதை உணர வேண்டும்..

 நீதி போதனை..

ஒருவன் விதைப்பதை அவனே அறுவடைச் செய்து தீரவேண்டும் என்றும், மற்றவர்களிடம் பட்ட பழைய கடனையும், விவகாரங்களையும் கஷ்டத்துடன் அனுபவித்து தீர்த்தாலன்றி வேறு விமோசனம் இல்லையென்றும், பணத்தின் மீதுள்ள பேராசையானது அப்பேராசைக் காரனைக் கீழான நிலைக்கு இழுத்துச்சென்று கடைசியில் அவனுக்கும், பிறருக்கும் அழிவைக் கொணர்கிறது என்பதுமே இக்கதையின் நீதியாகும்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

வியாழன், ஜூன் 24, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் நாற்பத்தாறு (46 )

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🙏🏼🙏🏼

 🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம்:: நாற்பத்தாறு (46 )🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய  சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்பு ரிகின்றது..மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்...அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம் நாற்பத்தாறு (46)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருநாதர் சீரடி பாபா, தன்னை நாடிவந்து சரணாகதி அடைந்த  பக்தர்கள் அனைவரையும், பேதம் பாராது தாய்மையுணர்வுடன்  அரவணைத்து, எவ்வாறு உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதைப் பற்றிய மறைப்பொருள் சூட்சம விளக்கவுரை....

சத்குருநாதர் சீரடி பாபா, அண்ட சராசரத்திலும் நீக்கமற வியாப்பித்து  நிறைந்திருக்கின்றேன்  என்பதை நிரூபிக்கும் வகையில், தன் பக்தர்களான காகா சாஹேப் தீஷித் மற்றும் நானா சாந்தோர்கர் ஆகியவர்களின் அழைப்பு விடுத்த  இல்லத் திருமண வைபவத்திற்கு ஷாமாவை அழைத்துச் செல்லுமாறு கூறி, மேலும் காசி,கயா மற்றும் பிரயாகைக்குச் சென்றப் பின்பு நான் ஷாமாவை விட  முன்னரே சென்று அங்கிருப்போம் என்று அறிவுருத்தி,  எங்கும் தான்  வியாப்பித்து இருக்கின்றேன் என்பதை, நாம் அனைவரும்  உணர  வைத்த நிகழ்வின் உவமான விளக்கவுரை....

சீரடி பாபா, ஒரு ஆட்டு மந்தையை தான்  கண்டபோது, தன் கவனத்தை ஈர்த்த இரண்டு ஆடுகளை அதிக விலைக் கொடுத்து வாங்கினார்.. அதனைப் பார்த்தவுடன்  தாத்யா கோதே  மற்றும் ஷாமாவும் ஏன் இவ்வாறு அதிகமாக ரூபாயைக் கொடுக்கின்றீர்கள்  என்று விளக்கம் கேட்டதற்கு  பாபா  கூறியப் பதிலுரையைப் பற்றிய விளக்கவுரை..

மேற்க்கண்ட  தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கு கீழேக் காண்போம்....

🔥முதலில் சத்குருநாதர் சீரடி பாபா, தன்னை நாடிவந்து சரணாகதி அடைந்த  பக்தர்கள் அனைவரையும், பேதம் பாராது தாய்மையுணர்வுடன்  அரவணைத்து, எவ்வாறு உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதைப் பற்றிய மறைப்பொருள் சூட்சம விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

ஓ..! சாயீநாதா..எங்களின் சத்குருநாதரே.. தங்களின் பாதக் கமலங்களும், தங்களைப் பற்றிய நினைவுகளும், தங்களது தரிசனமும் புனிதமானவை...அவை எங்களை கர்ம வினை போராட்டங்களிலிருந்தும், அனைத்து அறியாமை தன்மைகளிலிருந்தும், மாயைச் சுழற்சியிலிருந்தும்  எங்களை  விடுவிக்கிறது...  எங்களுக்குத் தங்கள் ரூபம் தெரியாமலிருந்தாலும், இப்போதும் அடியவர்கள் தங்களை நம்பினால், பிரத்தியட்சமான அனுபவங்களை உடனே தங்களிடமிருந்து பெறுகின்றார்கள்..

கண்களினால்  தென்படாத சூட்சமமான நூலால், தாங்கள் அருகிலும், தொலைவிலுள்ள பக்தர்களைத் தங்கள் பாதகமலங்களுக்கு ஈர்த்து இழுத்து, அன்பும் பாசமுமுள்ள தாயாரைப் போல மிகுந்தக் கனிவுடன் அரவணைக்கின்றீர்கள்.  தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடியவர்கள் அறியவில்லை என்றாலும், தாங்கள் அவர்களின் அருகிலேயே இருந்து, அவர்களுக்கு உதவி புரிந்து ஆதரித்து ஆசி வழங்குகின்றீர்கள்  என்பதைக் கடைமுடிவாக ஒவ்வொரு பக்தனும்  உணர்ந்துக் கொள்ளும்படி அவ்வளவு சாமர்த்தியமாக நூலை இழுக்கின்றீர்கள்... 

ஒவ்வொரு மனித உயிரும், தன்னுடைய அகங்காரத்தின் காரணமாக அதாவது  புத்திசாலிகள், அறிவாளிகள், கற்றறிந்தோர் ஆகியோர்கள் அனைவரும்  சம்சாரக் குழியில் விழுகின்றார்கள..ஆனால் மிகவும் ஏழ்மையான, சாதாரண பக்தர்களைத் தங்கள் சக்தியினால் காப்பாற்றுகிறீர்கள்.. ஆன்மஸ்வரூபமாகவும், யாரும் அறியாதபடியும், எல்லா லீலைகளையும் புரிந்துவிட்டு, அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதது போல் தோற்றமளிக்கின்றீர்கள்... தாங்களே செயல்களைச் செய்கின்றீர்கள்.. ஆனால் செய்யாதவரைப் போன்று காட்சியளிக்கின்றீர்கள்..ஒருவருக்கும், ஒருபோதும் தங்கள் வாழ்க்கையைப் பற்றித் தெரியாது..எனவே  எங்களது பாவங்களைப் போக்கும் எங்களுக்கு உண்டான சிறந்த வழி, மனம், மொழி, மெய் இவற்றால் தங்கள் பாதார விந்தங்களைச் சரணடைந்து தங்களது நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்வதேயாகும்... 

அடியவர்களின் ஆசைகளைத் தாங்கள் பூர்த்தி செய்கின்றீர்கள்....பற்றற்றவர்களுக்குப் பேரானந்தப் பெருநிலையை அளிக்கின்றீர்கள்... தங்கள் இனிமையான நாமத்தை ஸ்மரணம் செய்வதே அடியவர்களுக்கு மிகமிக எளிதான சாதனமாகும்...இச்சாதனங்களால் ராஜச, தாமசப் பண்புகள் மறைந்து சத்துவ குணமும், நேர்மையும், சத்தியப் பண்புகளையும் அடியவர்கள் அடைகின்றனர்.. விவேகம், பற்றின்மை, ஞானம் முதலியவையும் நம்மை ஆட்கொள்கின்றது. பின்னர் நாம், நமது ஆன்மாவுடனும், குருவிடமும் ஒன்றிவிடுவோம்..  (இரண்டும் ஒன்றே) இதுவே குருவிடம் பூரண சரணாகதி அடைவது என்பதாகும்...மேலும் நமது மனம் அமைதியும், சாந்தியும், பற்றின்மையும்  பெறுவதே இதற்கான ஒரே தீர்விற்கான  அடையாளமாகும்...இச்சரணாகதியானது, பக்தி, ஞானம் இவற்றின் பெருமையும்,  தனித் தன்மையும் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.... ஏனெனில் அமைதி, பற்றின்மை, புகழ், முக்தி முதலியவை அதைத் தொடர்ந்து வருகின்றன...

ஒரு அடியவரை பாபா ஏற்றுக்கொண்டால், அவரை முக்காலமும்  தொடர்கின்றார்..இரவும், பகலும், வீட்டிலும், வெளியிலும் அவருடனேயே இருக்கின்றார்...அவர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்... ஆராய்ச்சிக்கும், அறிவுக்கெட்டாத வகையில் ஏதாவது ஒரு ரூபத்தில் தன் பக்தர்களுக்கு  முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார்.  கீழ்வரும் கதை இதை விளக்குகிறது.

🔥சத்குருநாதர் சீரடி பாபா, அண்ட சராசரத்திலும் நீக்கமற வியாப்பித்து  நிறைந்திருக்கின்றேன்  என்பதை நிரூபிக்கும் வகையில், தன் பக்தர்களான காகா சாஹேப் தீஷித் மற்றும் நானா சாந்தோர்கர் ஆகியவர்களின் அழைப்பு விடுத்த  இல்லத் திருமண வைபவத்திற்கு ஷாமாவை அழைத்துச் செல்லுமாறு கூறி, மேலும் காசி,கயா மற்றும் பிரயாகைக்குச் சென்றப் பின்பு நான் ஷாமாவை விட  முன்னரே சென்று அங்கிருப்போம் என்று அறிவுருத்தி,  எங்கும் தான்  வியாப்பித்து இருக்கின்றேன்  என்பதை, நாம் அனைவரும் உணர  வைத்த நிகழ்வின் உவமான விளக்கவுரை இங்கே..🔥

காகா சாஹேப் தீஷித் என்பவர் பாபாவின் மீது  ஆத்மார்த்தமான அன்பும், பக்தியும் கொண்ட பக்தர்.. தனது மூத்த மகன் பாபுவுக்கு, நாக்பூரில் பூணூல் திருமணம் நிகழ்த்த நிச்சயித்தார்..  ஏறக்குறைய அதே தருணம் நானா சாஹேப் சாந்தோர்கர் என்ற பக்தரும், தமது மூத்த மகனுக்கு குவாலியரில் திருமண வைபவம் நிகழ்த்த நிச்சயித்தார்.  காகா சாஹேப் தீஷித், மற்றும்  நானா சாஹேப்  சாந்தோர்கர் ஆகிய இருவரும் சீரடிக்கு வந்து, இவ்வைபவங்களுக்கு பாபாவை அன்புடன் வரவேற்றனர்...தமது பிரதிநிதியாக ஷாமாவை ஏற்றுக் கொள்ளும்படி பாபா அவர்களிடம் கூறினார்...தன்னுடைய சத்குருநாதர் பாபாவே  நேரடியாக வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட போது, ஷாமாவை அவர்களுடன் கூட்டிக்கொண்டு செல்லும்படி அவர்களிடம் கூறி, காசிக்கும், பிரயாகைக்கும் சென்றபின்பு நாம் ஷாமாவைவிட அங்கு  முன்னால்     சென்றிருப்போம்  என்று சூட்சமமாக  கூறினார். இந்த சூட்சமம்  வாய்ந்த பாபாவின் மொழிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஏனெனில் அவைகள் பாபாவின்  சர்வ வியாபகத்தைக் காண்பிக்கின்றன..

ஷாமா, பாபாவின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு இந்த வைபவங்கள், விழாக்கள், ஆகியவற்றுக்காக நாக்பூருக்கும், குவாலியருக்கும் சென்றுவிட்டு பின்னர் காசி, பிரயாகை மற்றும் கயாவுக்கும் செல்லத் தீர்மானித்தார்.  ஆபாகோதேவும்  ஷாமாவுடன்  செல்வதாக இருந்தார்...இருவரும் முதலில் நாக்பூருக்கு பூணூல் விழாவுக்குச் சென்றனர்... காகா சாஹேப் தீஷித், ஷாமாவுக்கு அவரின் செலவுக்காக ரூ.200 வழங்கினார்..பின்னர் அவர்கள் குவாலியருக்குத் திருமண வைபவத்திற்காகச் சென்றனர்..அங்கே நானா சாஹேப் சாந்தோர்கர், ஷாமாவுக்கு நூறு ரூபாயும், அவரது சம்பந்தியான ஜடார் நூறு ரூபாயும் அன்பளிப்பாக வழங்கினார்கள்... பின்னர் ஷாமா காசி, அயோத்தி முதலிய இடங்களுக்குச் சென்றார்...காசியில் ஜடாரின் அழகான லக்ஷ்மி நாராயணர் கோவிலிலும், அயோத்தியில் ராமர் கோவிலிலும் ஜடார் என்பவரின் அதிகாரியால்  நன்கு வரவேற்கப்பட்டார்.

ஷாமாவும் , ஆபாகோதேயும்  அயோத்தியில் இருபத்தொரு நாட்களும், காசியில் இரண்டு மாதங்களும் தங்கினர்...பின்னர் அங்கிருந்து கயாவுக்குப் புறப்பட்டனர்...கயாவில் பிளேக் பரவியிருக்கிறது என்பதை ரயிலில் அவர்கள் கேள்விப்பட்டு மனக்கிலேசம் அடைந்தனர்... இரவில் கயா இரயில் நிலையத்தில்  இறங்கி தர்மசாலையில் தங்கினார்கள்...காலையில் கயாவாலா (யாத்திரீகர்களுக்கு உணவும், இருப்பிடமும் அளிக்கும் அந்தணர்) வந்து "யாத்ரீகர்கள் எல்லாம் முன்னரே புறப்பட்டு சென்றுவிட்டனர்.. ஆகவே  நீங்களும் சீக்கிரம் புறப்படுவது நல்லது" என்றார்... ஷாமா தற்செயலாக அவரை கயாவில் பிளேக் இருக்கிறதா என்று வினவினார்...இல்லை என்றார் கயாவாலா.  "தயவுசெய்து எவ்விதக் கவலையும், பயமுமின்றி வந்து தாங்களே பாருங்கள்" என்றார்... பின்னர் அவர்கள் அவருடன் சென்று அவரது இல்லத்தில் தங்கினார்கள்..அது பெரிய விசாலமான சத்திரமாகும்..தனக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பற்றி ஷாமா மிகவும் மகிழ்ந்தார்...ஆனால் கட்டிடத்தின் முற்பகுதியில் நடுவே மாட்டப்பட்டிருந்த பாபாவின் பெரிய அழகான பகவான்  படமே அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது...இப்படத்தைப் பார்த்ததும் ஷாமாவுக்கு உணர்ச்சி பொங்கியது...ஷாமா அப்போது பாபா கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்...பாபா கூறிய வார்த்தைகள் என்னவென்றால் ,  காசிக்கும்,கயாவிற்க்கும் பிரயாகைக்கும் சென்ற பிறகு ஷாமாவுக்கு முன்னதாகவே நாம் அங்கு இருப்போம்" என்ற பாபாவின் மொழிகள் தற்போது அப்படியே நிகழ்ந்தது...ஷாமாவிற்கு  கண்களில் கண்ணீர் பொங்கியது...  மயிர்க்கூச்செறிந்து தொண்டை  அடித்துத் தேம்பி அழத் தொடங்கினார்...அங்கு பிளேக் இருப்பது குறித்துப் பயந்து, அதனால் அவர் அழுகிறார் என கயாவாலா நினைத்தார்... ஆனால் ஷாமா பாபாவின் படத்தை எங்கிருந்து, எப்போது அவர் பெற்றார் என்று  கயாவாலாவிடம்  விசாரித்தார்...கயாவுக்கு வரும் யாத்ரீகர்களின் வசதிகளைக் கவனித்துக் கொள்வதற்காக கயாவாலாவிற்கு,  இருநூறு  இடைத்தரகர்கள்  மன்மாடிலும், புண்தாம்பேயிலும் வேலை செய்வதாகவும், அவர்களிடமிருந்து பாபாவின் புகழைக் கேள்விப்பட்டதாகவும் கூறினார்...

மேலும்  ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கயாவாலா  சீரடிக்குச்  சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று இருக்கின்றார்...அங்கு ஷாமாவின் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த பாபாவின் படத்தை பாபாவின் அனுமதிபெற்று, ஷாமா கயாவாலாவிற்கு  அப்பொழுது கொடுத்து இருக்கின்றார்..அந்தப்  புகைப்படம் தான், ஷாமா தற்போது பார்த்தப் புகைப்படம்..இந்த முந்தைய நிகழ்ச்சியை ஷாமா இப்போது நினைவுக் கூர்ந்தார் கயாவாலாவிடம்....முன்னால் தனக்கு பணிவன்பு புரிந்த அதே ஷாமாதான் தனது விருந்தினர் என்று தெரிந்தவுடன் கயாவாலாவின். மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. பின்னர் இவர்களிருவரும் அன்பையும், சேவையையும் பரிமாறிக் கொண்டார்கள்.. மிகமிக உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருவரும்  இருந்தனர்..கயாவாலா அவருக்குச் சரியான ராஜோபசாரம் செய்தார்..அவர் பெரும் பணக்காரர்...  தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து, யானையின் மேல் ஷாமாவை அமரச்செய்து அவரது தேவை, சௌகர்யங்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டார்..  

இக்கதையின் நீதியாவது பாபாவின் மொழிகள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உண்மையாகின்றன..தமது அடியவர்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பு எல்லையற்றதாகும்.. பகவான் அனைத்து  ஜீவராசிகளையும் பேதமின்றி  சமமாக நேசித்தார்...ஏனெனில் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் வியாப்பித்து, நீக்கமற நிறைந்து  ஒன்றியவராக இருந்தார்.... பின்வரும் நிகழ்வு  இதனை பறைச்சாற்றுகின்றது... 

🔥சீரடி பாபா, ஒரு ஆட்டு மந்தையை தான்  கண்டபோது, தன் கவனத்தை ஈர்த்த இரண்டு ஆடுகளை அதிக விலைக் கொடுத்து வாங்கினார்.. அதனைப் பார்த்தவுடன்  தாத்யா கோதே  மற்றும் ஷாமாவும் ஏன் இவ்வாறு அதிகமாக ரூபாயைக் கொடுக்கின்றீர்கள்  என்று விளக்கம் கேட்டதற்கு  பாபா  கூறியப் பதிலுரையைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

ஒருமுறை பகவான்  லெண்டியிலிருந்து  திரும்பி வந்துக் கொண்டிருக்கும்போது, ஆட்டு மந்தையொன்றைக் காண நேர்ந்தது..  அவைகளில் இரண்டு அவரின் கவனத்தைக் கவர்ந்தன...ஆடுகளிடம்  சென்று அவற்றைத் தடவிக்கொடுத்து அன்புசெலுத்தி , அந்த ஆடுகளை ரூபாய் 32-க்கு  விலைக்கு வாங்கினார்..பாபாவின் இந்தச் செயலைக் ழ்கண்டு பக்தர்கள் ஆச்சரியமுற்றனர்.  இவ்வியாபாரத்தில் பாபா ஏமாற்றப்பட்டார் எனவும், ஒரு ஆடு ரூ.2 வீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 அல்லது 4 வீதம் இரண்டு ஆடுகளும் ரூ.8 மட்டுமே பெறும் எனவும் நினைத்தனர்..ஆகவே அவர்கள் இதற்காக பாபாவைக் கடிந்துக் கொண்டனர்...ஆனால் பாபா அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்...ஷாமாவும், தாத்யா கோதேவும் விலை அதிகம் கொடுத்ததற்காக பாபாவிடம்  விளக்கம் கேட்டனர்.. தமக்கென வீடும், கவனிக்கக் குடும்பமும் இல்லாதபடியால் தாம் பணத்தைச் சேமிக்கக்கூடாது என்று பாபா  கூறினார்...தமது செலவில் நான்குசேர் பருப்பு வாங்கி ஆடுகளுக்கு அளிக்கும்படி கூறினார்... இது முடிந்தபின், பாபா அவ்வாடுகளை மந்தையின் சொந்தகாரருக்குக் கொடுத்து விட்டு, பின்னர்  ஆடுகளைப் பற்றிய பூர்வ ஜென்மக்  கதையைக்   கூறினார்...  

"ஓ...! ஷாமா, தாத்யா...! இவ்வியாபாரத்தில் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என நீங்கள் நினைக்கின்றீர்கள்..அவ்வாறு  கிடையாது...  அவைகளின்  பூர்வ ஜென்மக் கதையைக் கேளுங்கள்..இந்த ஆடுகள்  முந்தைய பிறவியில் மனிதர்களாய் இருந்தனர்.  எனது நண்பர்களாய் இருந்து, எனது அருகில் அமரும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர்...அவர்கள் ஒருதாய் மக்கள்.  முதலில் ஆழமாக  ஒருவரையொருவர் நேசித்தனர்..ஆனால் பிற்காலத்தில் பகையாளிகளாய் ஆகிவிட்டனர்...மூத்தவன் சோம்பேறி, பின்னவன் சுறுசுறுப்பானவன்...ஆதலால்  சிறியவன் பெரும்பொருள் திரட்டினான்.. மூத்தவன் பேராசையும், பொறாமையும் கொண்டு பின்னவனைக் கொன்று பணத்தை எடுத்துக் கொள்ள விரும்பினான்...

தங்கள் சகோதர உறவை மறந்து, ஒருவருடன் ஒருவர் சண்டையும், வாக்குவாதமும் செய்யத் தொடங்கினர்..மூத்தவன் இளையவனைக் கொல்லப் பல வழிமுறைகளைக் கையாண்டு அவனது முயற்சிகளில் தோல்வியடைந்தான்.  இவ்வாறாக அவர்கள் மரண விரோதியானார்கள்.... முடிவாக ஒரு சந்தர்ப்பத்தில் மூத்தவன், இளையவன் தலையில் தடிக்கம்பால் பலத்த மரணஅடி ஒன்று கொடுக்க, இளையவன் மூத்தவனை கோடாரியால் தாக்க இதன் விளைவாக இருவரும் அவ்விடத்திலேயே மாண்டனர்... அவர்களின்  வினைப்பலனின்  காரணமாக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர்...சற்றுமுன் என்னைக்கடந்து சென்றபோது, நான் அவர்களை அறிந்துக் கொண்டேன்...  அவர்களின் முந்தைய பிறவிகளை நினைவுக் கூர்ந்து இரக்கம் கொண்டு, ஆடுகள் ரூபத்தில் இருக்கின்ற அவைகளுக்கு  இளைப்பாறுதலும், சௌகரியமும் தர விரும்பி என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் செலவழித்தேன்...  இதற்காகத்தான் நீங்கள் என்னைப் குறை கூறுகின்றீர்கள்....

நீங்கள் என்னுடைய பேரத்தை விரும்பாததால் நான் அவைகளை மேய்ப்பவனிடமே திருப்பி அனுப்பிவிட்டேன்", என்றார்..இன்றளவு வரை பகவான்,  தமது சூட்சம பேராற்றலாள் நம் அனைவரின் மீதும் பேதமின்றியும் தாய்மையுணர்வுடனும் நீங்காத  அன்பு  செலுத்துகின்றார்..அதற்கு  ஈடு இணையில்லை என்றேக் கூறலாம்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக....அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

புதன், ஜூன் 23, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் நாற்பத்தைந்து (45 )

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.🙏🏽🙏🏽

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு...🙏🏽🙏🏽

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம்::: நாற்பத்தைந்து (45 )🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப் புரிகின்றது...மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...

அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

 🙏அத்தியாயம் ::நாற்பத்தைந்து(45)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருவிடம்  எவ்வாறு  நாம்  சரணாகதி அடைந்து உயரிய நிலையை‌ அடைவது என்பதன் மூல சூட்சம விளக்கவுரை..

காகா சாஹேப் தீஷித் வாசித்த ஏக்நாத் பாகவதத்தில், பதினோராவது காண்டத்தில் ஜனகரின் கேள்விக்கு  ஒன்பது நாதர்கள்  பக்தியைப் பற்றி உபதேசித்த விளக்கவுரை..

ஒன்பது நாதர்கள் கூறிய பக்தியின் விளக்கத்தைக் கேட்டு தம்மால் இதனை அடைவது சாத்தியமில்லை என்று சோர்வடைந்த காகா சாஹேப் தீஷித்திற்கு மாதவராவ் கூறியதைப் பற்றிய விளக்கமும் மற்றும்  மேலும் திருப்தியடையாத நிலையில்  இருந்த  காகா சாஹேப் தீஷித்திற்கு , ஆனந்த் ராவ் பாகாடே என்பவரின் கனவின்  மூலம்  பாபா  அறிவுருத்திய  தெய்வீகக் காட்சியைப் பற்றிய  விளக்கவுரைகள்......

நாலு முழ நீளமும்,ஒரு முழ நீளமும் உள்ள மரப்பலலகையில் விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க பாபா எவ்வாறு உறங்கினார் என்பதன் மூல சூட்சம விளக்கவுரை..

மேற்க்கண்ட தலைப்புக்களில் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...

🔥முதலில் சத்குருவிடம்  எவ்வாறு  நாம்  சரணாகதி அடைந்து உயரிய நிலையை‌ அடைவது என்பதன் மூல சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

முந்தைய மூன்று அத்தியாயங்களில் பாபாவின் மறைவைக் குறித்து நாம் விவரிக்கப்பட்டுள்ளது. அவரது நிலையற்ற ஸ்தூல உருவம் நமது காட்சியிலிருந்து மறைந்ததில் ஐயமில்லை..  ஆனால் அவரது அழிவற்ற சூட்சும உருவம் எப்போதும் வாழ்கிறது...அவரது வாழ்நாளில் நடைபெற்ற லீலைகளும், அற்புதங்களும், அனுபவங்களும்  இன்றும் பெருமளவில்  நிகழ்ந்துக் கொண்டு  வருகின்றன.. பகவான் சமாதி அடைந்தப்   பின்னரும் அவரது லீலைகள்  இன்று வரை ஒரே மாதிரியாக நடைபெறுகின்றன...இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..பாபா எப்போதும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் என்பதையும், அவர்தம் பக்தர்களுக்கு முன்னைப்போலவே உதவிக் கொண்டிருக்கிறார் என்பதையும் தெளிவாக்குகின்றன...பாபாவின் வாழ்நாளில் அவரது தொடர்பைப் பெற்றவர்கள் மிக அதிர்ஷ்டசாலிகளே....ஆனால் அவர்களில் யார் இவ்வுலகப் பற்றையும், இன்பங்களின் மேல் விருப்பத்தையும் விடாமல், கடவுள்மேல் உள்ளத்தைத் திருப்பவில்லை என்றால் அது அவர்களது துரதிர்ஷ்டமேயாகும்....அப்போதும், இப்போதும் தேவை என்னவென்றால் பாபாவின் பால் நாம்  வைத்திருக்கும்  ஆத்மார்த்தமான உண்மையான, முழுமனதான பக்தியே முக்கியமாகக் கருதப்படுகின்றது...நமது புலன்கள், உறுப்புக்கள், மனம் யாவும் பாபாவை வழிபடுவதில் ஒருங்கிணைத்து அவருக்குச் சேவைபுரிய வேண்டும்..வழிபாட்டில் முழுவதுமாக நம்மை அர்பணிப்பது மிகவும் நல்லது....அவ்வாறில்லாமல்  மற்றவற்றை வேறுபக்கம் செலுத்துவது பயனற்றது.  வழிபாடு, தியானம் போன்றவை மனப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் செய்யப்படவேண்டும். 

தம் கணவரிடம் எதிர்பார்ப்பில்லாத இல்லறத்தாள்  கொண்டிருக்கும் அன்பு, சீடன் குருவிடம் கொண்டிருக்கும் அன்புடன் சிலசமயம் ஒப்பிடப்படுகிறது.. எனினும் முதலில் கூறியது  குருபக்தியை விட மிகத்தாழ்வான படியால் இரண்டையும் ஒப்பிட இயலாது... தந்தையோ, தாயோ, சகோதரனோ அல்லது வேறு எந்த உறவினரோ நம் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைய (ஆத்ம உணர்வு பெற) உதவிக்கு வரமாட்டார்கள்.  நாமே திட்டமிட்டுக் கொண்டு ஆன்ம உணர்வு பெறும் பாதையில் வழிநடக்க வேண்டும்.. உண்மைக்கும், மாயைக்கும் இடையில் பேதம் கண்டு இகபர இன்பங்களையும், பொருட்களையும் துறந்து, புலன்களையும், மனதையும் அடக்கி முக்தியை அடைவதில் மட்டுமே விருப்பம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்...  மற்றவர்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக நம்மிடமே நமக்குப் பூரண நம்பிக்கை வேண்டும்...பேதங்கள் உணர பயிற்சி செய்யத் தொடங்கும் போது, உலகம் ஒரு மாயை என்றும், நிலையற்றது என்றும் அறிந்து கொள்வதால் உலக ஆசைகள் மீதான பற்று குறைந்து முடிவில் பற்றற்ற நிலையைப் பெறுகிறோம்...பிரம்மம் என்பது நமது குருவைத் தவிர வேறல்ல என்றும், அவரே முழுமையாக  நாம் காணும் அண்ட சராசரங்களிலும் வியாபித்து நீக்கமற நிறைந்து ஆட் கொண்டிருப்பதையும் உணர்ந்து, அவரை எல்லா உயிர்களிடத்திலும் கண்டு வணங்கத் தொடங்க வேண்டும்...இதுவே  வழிபாடாகும் என்பதை உணர்வீர்களாக...

இவ்விதம் குருவாகிய பிரம்மத்தை மனமுருகி வழிபடும்போது நாம் அவர்களுடன், ஒன்றி ஆன்ம உணர்வைப் பெறுகிறோம்.. சுருக்கமாக, குருவின் நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்துக்கொண்டு இருப்பதும், அவரைத் தியானிப்பதும் எல்லா ஜீவராசிகளிலும் அவரைக் காணச்செய்து நம்மீது அழியாத பேரின்பத்தைச் சொரிகிறது.  பின்வரும் கதை இதனை விளக்குகிறது....

🔥காகா சாஹேப் தீஷித் வாசித்த ஏக்நாத் பாகவதத்தில், பதினோராவது காண்டத்தில் ஜனகரின் கேள்விக்கு  ஒன்பது நாதர்கள் பக்தியைப் பற்றி உபதேசித்த விளக்கவுரை🔥

ஏக்நாத்தின் நூல்களான ஸ்ரீமத் பாகவதம், பாவார்த்த ராமாயணம் இரண்டையும், காகா சாஹேப் தீஷித்தை தினந்தோறும் வாசிக்குமாறு  பாபா உத்தரவிட்டார்.. காகா சாஹேப் தீஷித், பாபா உயிருடன் இருக்கும் போதும், அவர் மறைந்த பின்பும் இதனைப் பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது....  பம்பாய் சௌபாத்திலுள்ள காகா மஹாஜனியின் வீட்டில் ஒருநாள் காலை காகா சாஹேப் தீஷித் ஏக்நாத்தின் பாகவதத்தை வாசித்துக் கொண்டிருந்தார்...

அப்போத  ஷாமா என்றழைக்கப்படும் மாதவராவ் தேஷ்பாண்டேயும், காகா மகாஜனியும் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் பதினோராம் காண்டம் படிக்கப்பட்டதைக் கவனத்துடன் கேட்டனர்..  அதில் ரிஷபக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது சித்தர்கள் அல்லது நாதர்கள் என்றழைக்கப்பட்ட கவி, ஹரி, அந்தரிக்ஷா, பிரபுத்தா, பிப்பலாயன், அவிர்ஹோத்ரர், த்ருமில், சமஸ், கரபாஜன் முதலியோர் பாகவத தர்மத்தை ஜனகராஜனுக்கு உபதேசித்தார்கள்..ஜனகர் அவ்வொன்பது நாதர்களையும் மிகமிக முக்கியமான கேள்விகளைக் கேட்டார்.  அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் திருப்திகரமான முறையில் பதிலளித்தார்கள்...

இதனைப் பற்றிய விளக்கம் பின்வருமாறு..

முதல்வரான கவி என்பவர் பாகவத தர்மம் என்றால் என்ன..!  என்பதைப் பற்றி  விவரித்தார்... 

ஹரி என்பவர் பக்தனின் குணநலன்களைப் பற்றி விளக்கினார்...

மாயை  என்றால் என்ன என்பதைப் பற்றி  அந்தரிக்க்ஷா விளக்கினார்...

மாயையை எவ்வாறு கடக்க வேண்டும் என்பதைப் பற்றி பிரபுத்தா விளக்கினார்... 

பரப்பிரம்மம் என்றால் என்ன என்பதன் மூல சூட்சமத்தைப் பற்றி  பிப்பலாயன் விவரித்தார்...

கர்மத்தைப் பற்றி அவிர்ஹோத்ரர் விளக்கினார்...

த்ருமில் கடவுள் அவதாரங்களைப் பற்றியும், இறையதிர்வின் சூட்சம  செயல்பாடுகளைப் பற்றியும்  விளக்கினார்.

மரணத்துக்குப்பின் பக்தனில்லாதவன் எங்ஙனம் கூலி கொடுக்கப்படுகிறான் என்பதை சமஸ் கூறினார். 

வெவ்வேறு யுகங்களில் விவ்வேறு விதமான கடவுள் வழிபாட்டைப் பற்றி கரபாஜன் விளக்கினார்...

கலியுகத்தில் ஹரி அல்லது சத்குருவின் பாதங்களை நினைவூட்டிக் கொள்வதே விடுதலைக்கு ஒரேவழி என்பதே எல்லா விளக்கங்களின் கருத்துமாகும்....  

🔥ஒன்பது நாதர்கள் கூறிய பக்தியின் விளக்கத்தைக் கேட்டு தம்மால் இதனை அடைவது சாத்தியமில்லை என்று சோர்வடைந்த காகா சாஹேப் தீஷித்திற்கு மாதவராவ் கூறியதைப் பற்றிய விளக்கமும் மற்றும்  மேலும் திருப்தியடையாத நிலையில்  இருந்த  காகா சாஹேப் தீஷித்திற்கு , ஆனந்த் ராவ் பாகாடே என்பவரின் கனவின்  மூலம்  பாபா  அறிவுருத்திய  தெய்வீகக் காட்சியைப் பற்றிய  விளக்கவுரைகள்...🔥

மேற்க்கூறிய ஒன்பது நாதர்கள் பக்தியைப் பற்றிக்  கூறிய  விளக்கங்கள்  முடிவடைந்த பின்னர், மாதவ்ராவிடமும், மற்றவர்களிடமும் காகா சாஹேப்  கூறினார், "பக்தியைப் பற்றி ஒன்பது நாதர்களின் விளக்கமும் எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கிறது பாருங்கள்...!  அதே நேரத்தில் அதை அப்பியாசத்திற்குக் கொண்டுவருவது எவ்வளவு கடினம்...!  என்று நான் உணர்கின்றேன் என்றார்.. நாதர்கள் பூரணத்துவம் பெற்றவர்கள்... ஆனால் அவர்களால் விவரிக்கப்பட்ட  பக்தியை நம்போன்ற அறிவற்றவர்கள் அடைவது சாத்தியமா...?  பல பிறவிகளுக்குப் பின்னரும் நாம் அதை அடையப் போவதில்லை..பின்னர் எங்ஙனம் நாம் முக்தியடைய முடியும்...?  நமக்கெல்லாம் கதிமோட்சத்திற்கான நம்பிக்கையே இல்லையென்றே தோன்றுகிறது" என்று கூறுகின்றார்...ஆனால் காகா சாஹேப்பின்  எண்ணத்தை மாதவ்ராவ் விரும்பவில்லை....

மேலும் மாதவ்ராவ் கூறுகின்றார்... "வைரத்தைப் போன்ற பாபாவைக் குருவாக அடைந்த நல்லதிர்ஷ்டம் உள்ள ஒருவர் இவ்வளவு தாழ்வுணர்ச்சியுடன் உரைப்பது பரிதாபமானது..  பாபாவிடம் உங்களுக்கு நிலையான,  அசைவற்ற நம்பிக்கை இருக்குமானால் ஏன் இவ்வாறு  மனச்சலனமடைய வேண்டும்.. நாதர்களின் பக்தி உறுதியானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கலாம்...ஆனால் நாம் சத்குருவின் மீது வைத்துள்ள  தூய்மையான பக்தியும், ஆத்மார்த்தமான உயரிய  அன்பும் ஆழமானதல்லவா.?. ஹரியினுடைய அல்லது குருவினுடைய பெயரை ஸ்மரணம் செய்துக் கொண்டிருப்பதே நமக்கு முக்தியை அளிக்கும் என்று பாபா நமக்கு ஆணித்தரமாகக் கூறவில்லையா...? பின்னர்  பயத்துக்கும், கவலைக்கும் என்னக்  காரணம்...?" ஆனால்   மாதவ்ராவின் விளக்கத்தால் காகா சாஹேப் தீஷித் திருப்தியடையவில்லை...  அன்று முழுவதும் அவர் நாதர்களின் சிறந்த பக்தியுணர்வைப் போல் தாமும் எவ்விதம் பெறுவது என்ற சிந்தனையிலும், எண்ணத்திலும், கவலையாகவும், மன அமைதியற்றும் இருந்தார்.  அடுத்த நாள் காலை பின்வரும் அற்புதம் நிகழ்ந்தது...

ஆனந்த்ராவ் பாகாடே என்ற பக்தர்,  மாதவ்ராவைத் தேடி மசூதிக்கு வந்தார்... அப்போது அங்கு  பாகவத பாராயணம் அப்போது நடந்துக்கொண்டிருந்தது.அப்போது ஆனந்தராவ்  பாகாடே, மாதவ்ராவின் அருகில் அமர்ந்து எதையோ அவரிடம் கூறிக்கொண்டு இருந்தார்..அவர் தாம் கண்ட தெய்வீகக் காட்சியை மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருந்தார்.  பாராயணத்திற்கு இடையில் இருவரும் பேசுவது  சிறிது இடையூறாக இருந்ததால் காகா சாஹேப் தீஷித் படிப்பதை நிறுத்திவிட்டு மாதவ்ராவை விஷயம் என்னவென்று கேட்டார்.. மாதவ்ராவ்,"நேற்று உங்கள் சந்தேகத்தை எழுப்பினீர்கள்...இப்போது அதற்கு விளக்கம் கிடைத்திருக்கின்றது...  பக்தி மார்க்கத்தில் எவ்வாறு  நம்பிக்கை மற்றும் பொறுமையின்  குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், குருவின் பாதங்களை வணங்குதல், வழிபடுதல், விசுவாசத்துடன் சத்குருவோடு பிணைத்துக் கொள்ளல், பூரண சரணாகதி போன்றத் தன்மைகளைப் பெற்றிருந்தால்  மட்டுமே போதுமானது என்று பாபா,  கனவின் மூலம்  ஆனந்த்ராவ் பாகாடேவிற்கு சூட்சமமாக உணர்த்தியதைக் கேளுங்கள்" எனக் கூறினார் மாதவ்ராவ்..அனைவரும்  குறிப்பாக காகா சாஹேப் தீஷித் உட்பட, அக்கனவுக் காட்சியைக் கேட்க ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர்..அவர்களது யோசனையின்பேரில் பாகாடே தமது காட்சியைப் பின்வருமாறு வர்ணிக்கத் தொடங்கினார்.... 

ஆழமான கடலில் இடுப்பளவு நீரில் நான் நின்றுக்கொண்டிருந்தேன்.  திடீரென்று அங்கு சாய்பாபாவைக் கண்டேன்...அவர்தம் பாதங்கள் நீரில்பட வைரங்கள் பதிக்கப்பட்ட  அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்துக் கொண்டிருந்தார்... பாபாவின் ரூபத்தைக் கண்டு  தரிசித்த நான் மிகமிக மகிழ்வுக் கொண்டு திருப்தியடைந்தேன்....கனவு என்று நினைக்க முடியாத அளவுக்கு தத்ரூபமாக அக்காட்சி இருந்தது..மிகுதியான ஆர்வத்துடன் மாதவ்ராவும் அங்கு நின்றுக் கொண்டிருந்தார்.  அவர் உணர்ச்சி வசப்பட்டு, "ஆனந்த்ராவ், பாபாவின் பாதத்தில் விழு...!"என்றார்..  "நானும் அவ்வாறே  செய்ய விரும்புகிறேன், ஆனால் பாபாவின் பாதங்கள் தண்ணீரில் இருக்கின்றன...எங்ஙனம் எனது சிரசை அவற்றின் மேல் வைக்கமுடியும்...? என்று எண்ணி  நான் இயலாதவனாக இருக்கிறேன்" என்று வருந்தினேன்....பின்னர் நான் பாபாவிடம், "ஓ...! தேவா, நீரில் இருக்கும் தங்கள் பாதங்களை வெளியே எடுத்துக் கொள்ளுங்கள்" என்றேன்...  உடனே பாபா தமது பாதங்களை வெளியே எடுத்துக்கொண்டார்.  தாமதமின்றி நான் அவைகளைப் பற்றிக்கொண்டு வணங்கினேன். இதைக்கண்டு பாபா என்னை ஆசீர்வதித்து, "இப்போது போ, வாழ்வில் உயரிய  நன்மையை நீ பெறுவாய்..பயத்திற்கோ, கவலைக்கோ எதுவும்  காரணமில்லை...எனது ஷாமாவிற்கு பட்டுக்கரை வேட்டி ஒன்றைக் எடுத்துக்கொடு.. நீ நன்மை அடைவாய்" என்றார். 

பாபா கனவில் அறிவுருத்திய  ஆணைக்கேற்ப  ஆனந்த்ராவ் பாகாடே ஒரு வேஷ்டி கொணர்ந்து அதை மாதவ்ராவிடம் கொடுக்கும்படி காகா சாஹேப் தீஷித்தை வேண்டிக்கொண்டார்...  ஆனால் பாபா அதனை ஏற்றுக்     கொள்வதற்கேற்ற  ஏதாவதொரு குறிப்பு அல்லது யோசனை கூறினாலன்றி தாம் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று மாதவ்ராவ் கூறிவிட்டார்....

சிறிது விவாதத்திற்குப்பின் காகா சாஹேப் திருவுளச் சீட்டுப் போடத் தீர்மானித்தார்.  ஐயப்பாடுள்ள எல்லா விஷயங்களிலும் திருவுளச் சீட்டுப்போட்டு பொறுக்கி எடுக்கப்பட்ட சீட்டில் கண்டுள்ளபடி நடப்பது காகா சாஹேபின் நிரந்தரமான வழக்கமாகும்.  இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி எழுதி  'ஏற்றுக்கொள்ளலாமா', அல்லது  ' மறுப்பதா' என்று இரு சீட்டுக்களில் எழுதப்பட்டு பாபாவின் படத்தின் அடியில் வைக்கப்பட்டு, ஒரு குழந்தையால் ஒரு சீட்டு எடுக்கும்படி கேட்கப்பட்டது.  'ஏற்றுக்கொள்' என்ற சீட்டே குழந்தையால் எடுக்கப்பட்டு வேஷ்டியும் மாதவ்ராவிடம் கொடுக்கப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது...  இவ்விஷயமாக ஆனந்த்ராவ், மாதவ்ராவ் இருவருமே திருப்தியடைந்தனர்.  காகா சாஹேபின் பிரச்சனையும் தீர்ந்தது...   

மற்ற ஞானிகளின் மொழிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை  இக்கதை நமக்கு வலியுருத்துகின்றது...அதே சமயம் நமது அன்னையிடம் அதாவது சத்குருவிடம் முழு நம்பிக்கைக் கொண்டு அவரது அறிவுரைகளின் படி நடக்கவும் கூறுகிறது.. ஏனெனில் அவர் வேறு எவரையும் விட சிறப்பாக நமது நலத்தை அறிந்து வழிக்காட்டக் கூடிய பேராற்றல் படைத்தவர்... தாயுமானவர்...முக்காலத்தையும் உணர்ந்தவர்.. பின்வரும் பாபாவின மொழிகளை உங்கள் உள்ளத்தில் ஆழப்பதித்துக் கொள்ளுங்கள்... "இவ்வுலகில் எண்ணற்ற ஞானிகள் இருக்கிறார்கள்.  ஆனால் 'நமது தந்தையே' (சத்குருவே), 'உண்மையான தந்தை' (நிஜமான குரு) ஆவார்...மற்றவர்கள் பல நல்ல விஷயங்களைக் கூறலாம்...ஆனால் நமது குருவின் மொழியை மறக்கவே கூடாது.  சுருக்கமாக உங்கள் குருவை முழு மனதுடன் நேசியுங்கள்..அவரிடமே பரிபூர்ண சரணாகதி அடையுங்கள்..பயப் பக்தியுடன் அவர்முன் சாஷ்டாங்கமாக வணங்குங்கள்..பின்னர் ஆதவனுக்கு முன் இருள் இல்லாதிருப்பதைப் போல் உங்கள் முன் நீங்கள் கடக்கவேண்டிய உலக வாழ்வெனும் கடல் இல்லாததைக் காண்பீர்கள்."

🔥நாலு முழ நீளமும்,ஒரு முழ நீளமும் உள்ள மரப்பலலகையில் விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க பாபா எவ்வாறு உறங்கினார் என்பதன் மூல சூட்சம விளக்கவுரை..🔥

தமது ஆரம்ப நாட்களில் நாலு முழ நீளமும் ஒரு முழ அகலமும் உள்ள ஒரு மரப்பலகையின் நான்கு மூலைகளிலும் சிட்டி (அகல்) விளக்குகள் எரிந்துகொண்டிருக்க பாபா உறங்கினார்.. பின்னர் அவர் அப்பலகையைத் துண்டுத்துண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டார்...  (அத்தியாயம் 10) ஒருமுறை இப்பலகையின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் காகா சாஹேப் தீஷித்திடம் பாபா விவரித்தார்... இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் பாபாவிடம், "நீங்கள் இன்னும் மரப்பலகையை விரும்பினால் சௌகரியமாகத் தூங்குவதற்காக மசூதியில் மீண்டும் ஒன்றைத் தொங்கவிடுகிறேன்" என்றார்...

பாபா :  மகல்சாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் மேலே துயில விரும்பவில்லை என்று பதில் உரைக்கின்றார்....

காகா :  மகல்சாபதிக்காக நான் மற்றொரு பலகையையும் ஏற்பாடு செய்கிறேன் என்று பணிந்து வேண்டுதலை வைக்கின்றார்....

பாபா :  அவன் எங்ஙனம் பலகையில் தூங்கமுடியும்...?  பலகையின் மீது தூங்குவது எளிதல்ல...  தன்னிடத்து பல நல்ல குணங்கள் மற்றும் பண்புகள் உள்ள ஒருவனே அங்ஙனம் செய்ய இயலும்.  தனது கண்கள் அகல அறிதுயில் நிலையில் விழிப்புணர்வுடன்  தூங்கக் கூடியவனே அதில் தூங்கமுடியும்...நான் தூங்கப் போகும் முன் மகல்சாபதியை என் அருகில் அமருமாறு கூறி, எனது இதயத்தின்  மீது கைவைத்து நாமஸ்மரணம் கேட்கிறதா எனக் கவனிக்கும்படியும், தூங்கிவிட்டால் எழுப்பும்படியும் அவனைக் கேட்கிறேன்... இதைக்கூட அவனால் செய்ய இயலுவதில்லை... தூக்க மயக்கத்தில் தலையை ஆட்ட ஆரம்பிக்கிறான்...எனது இதயத்தில்  அவனது கை ஒரு கல்லைப் போல் கனப்பதை உணர்ந்து நான், "ஓ...! பகத்" என்று கூவும்போது அவன் அசைந்து கண் விழிக்கிறான்...தரையின் மீதே சரியாக அமர முடியாமலும், தூங்க முடியாமல் தடுமாறுபவனும்,  தனது ஆசனம் (தோற்ற அமைவு) நிலையுறுதியாக இல்லாதவனும், தூக்கத்திற்கு அடிமையானவனுமான அவன் உயரத்திலுள்ள பலகையில் எவ்விதம் தூங்க இயலும்...?  என்று பதில் உரைத்தார்..மற்ற அநேக முறைகளில் அடியார்கள் மேல் கொண்ட அன்பினால், "எது நம்முடையதோ (நன்மையோ, தீமையோ) அது நம்மிடம் இருக்கிறது...  எது மற்றவனுடையதோ அது அவனிடம் இருக்கிறது" என்று பாபா கூறினார்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏

செவ்வாய், ஜூன் 22, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் (43)மற்றும் (44)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏அத்தியாயம்::நாற்பத்து மூன்று மற்றும் நாற்பத்து நான்கு...(43)மற்றும் (44)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய ஶ்ரீசாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே  ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்.. நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை,  மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப் புரிகின்றது...மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம்::நாற்பத்து மூன்று மற்றும் நாற்பத்து நான்கு..(43) மற்றும்  (44)🙏

🙏முன்னுரை..🙏

சீரடி பாபா தான் சமாதி அடைவதை சூட்சமமாக தெரிந்துக்கொண்டு,  எவ்வாறு தன்னுடைய இயல் வாழ்க்கையின் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டார் என்பதன் விளக்கமும், பகவான் சமாதி அடைந்த தினத்தில் நடந்த நிகழ்வைப் பற்றிய விளக்கவுரைகள்...

பாபாவின்  பூதவுடல் எவ்வாறு, எங்கே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றி முக்கியமானவர்கள் கலந்து ஆலோசித்த நிகழ்வைப்  பற்றிய விளக்கவுரையும் மற்றும்  முடிவாக  முரளீதரனின் மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்ட  வாதாவில் மத்திய இடத்தில் பாபா அடக்கம் செய்யப்பட்டு, சமாதி மந்திராக போற்றப்பட்டதன் நிகழ்வைப் பற்றிய விளக்கவுரை...

பாபா தனது ஆயுட்கால நண்பனைப் போன்று பாவித்து,  தியானித்த செங்கல் உடைதல் என்ற நிகழ்வைப் பற்றிய விளக்கவுரை... 

சீரடி பாபா தன்னுடைய உயரிய பக்தன் பகத் மகல்சாபதியிடம் எனது உடலை மூன்று நாள் பாதுகாப்பாயாக என்று அறிவுருத்தி,தேகத்தை உதறி எழுபத்திரெண்டு நேரம்  சமாதி அடைந்த நிகழ்வைப் பற்றிய  மூல சூட்சம விளக்கவுரை...

சீரடி பாபா,தன்னை நாடி வந்த பக்தன் பாபு சாஹேப் ஜோக்கின் துறவு மேற்க்கொள்ள வேண்டும் என்ற  பிரார்த்தனையை ஏற்று, எவ்வாறு  உபதேச மொழிகளை அறிவுருத்தி உயரிய வழியைக் காட்டினார் என்பதன் விளக்கவுரை..

சீரடி பாபா தன்னை நாடி வந்த பக்தர்களை  தாய்மையுணர்வுடன் அரவணைத்து, எவ்வாறு உபதேச மொழிகளை உபதேசித்து  நல்வழிக்காட்டினார் என்பதன் விளக்கவுரை..

யார் இந்த  ""நான்"" என்பதன் பற்றிய மூல சூட்சம விளக்கவுரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...

🔥முதலில் சீரடி பாபா தான் சமாதி அடைவதை சூட்சமமாக தெரிந்துக் கொண்டு,  எவ்வாறு தன்னுடைய இயல் வாழ்க்கையின் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டார் என்பதன் விளக்கமும், பகவான் சமாதி அடைந்த தினத்தில் நடந்த நிகழ்வைப் பற்றிய விளக்கவுரையை  இங்கே காண்போம்...🔥

குறிப்பு...அத்தியாயம் நாற்பத்து மூன்று (43)  மற்றும் நாற்பத்து நான்கு  (44)  இல், சீரடி பாபா மகாசமாதியடையும் நிகழ்ச்சிப்  பற்றியே குறிப்பிடுவதால், இரண்டு அத்தியாயங்களின் உள்ள நிகழ்வின் விளக்கவுரைகளும்  ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன....

ஒவ்வொரு மனித உயிரும்  மரணத்தறுவாயில் இருக்கும்போது அவனது உயிர் பிரியும் தருணம்  இயற்கையாகவும், எளிதாகவும் இருக்கும் பொருட்டு, உலக விஷயங்களிலிருந்து அவன் மனதை மீட்டு ஆன்மிக விஷயங்களில் நிலைத்திருக்கச் செய்யும் எண்ணத்துடன் சில மத சம்பந்தமான நூல்கள் பராயணம் செய்யப்படுவது இந்துக்களிடையே உள்ள பொதுவான வழக்கமாகும்...ஒரு அந்தண ரிஷியின் புதல்வனால், பரீக்ஷித்து மஹாராஜன் சாபமிடப்பட்டு மரணத்தறுவாயில் இருந்த நாட்களில்,  மாபெரும் ரிஷியான சுகர் புகழ்பெற்ற பாகவதப் புராணத்தை (சப்தாஹம்) அவருக்கு விளக்கினார்....இப்பழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இன்னும் பல புனித நூல்களும் மரணத்தறுவாயில் இருப்பவர்களிடம் வாசிக்கப்படுகிறது....அனைத்தையும் கடந்த நிலையில் இருப்பவருமான,  கடவுளின் அவதாரப் புருஷராகிய  பாபாவிற்கு  எதுவும் தேவை இருக்கவில்லை...ஆனால், மக்களுக்கு வழிகாட்டும் பொருட்டாக  பாராயணப்  வழக்கத்தை  பகவான் ஏற்றுக் கொண்டார்.. 

எங்கும் நிறைந்த  பேரறிவால் விரைவில் தான் காலமடையப் போவதை சூட்சமமாக  அறிந்த பகவான், வஸே என்றப் பக்தரை  தம்மிடம் ராமவிஜயத்தைப் படிக்கும்படி கட்டளையிட்டார்.. வஸே வாரமொருமுறை அதைப் படித்தார்... பின்னர் இரவும், பகலும் அதையே படிக்கும்படி பாபா கேட்டுக்கொண்டார்..அவர் மூன்றே நாட்களில் இரண்டாவது பாராயணத்தை முடித்தார்.. இவ்வாறாக பதினோரு நாட்கள் சென்றன...பின்னர் மீண்டும் மூன்று நாட்கள் படித்துக் களைப்படைந்து விட்டார்..எனவே பாபா அவரைப்போக அனுமதித்துவிட்டு தாமே அமைதியாக வீற்றிருந்தார். தமது ஆத்ம விசாரணையில்  மூழ்கியவராய் தமது கடைசி வினாடிக்காகக் காத்திருந்தார்... 

மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே தமது காலை சஞ்சாரத்தையும், பிக்ஷாதனம் பெறச்செல்லும் நியமத்தையும் அவர் நிறுத்திவிட்டு மசூதியிலேயே தங்கிவிட்டார்.. தமது இறுதி வினாடிவரை உணர்வுடன் இருந்து,  தமது அடியவர்களை மனமுடைய வேண்டாமென்று  உபதேசித்துக் கொண்டிருந்தார்..தாம் சமாதி அடையவுள்ள சரியான தருணத்தை பாபா  ஒருவருக்கும் அறிவிக்கவில்லை...மசூதியில் தினந்தோறும் அவருடன் காகா சாஹேப் தீஷித்தும், பூட்டியும் மதிய உணவு உண்டனர்..ஆனால் சமாதி அடைந்தத் தினத்தன்று அக்டோபர் பதினைந்தாம் தேதி ஆரத்திக்குப் பின்னர் பாபா அவர்களை, தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று  உணவு உட்கொள்ளுமாறு  பாபா கூறினார் என்றாலும் லக்ஷ்மிபாய் ஷிண்டே, பாகோஜி ஷிண்டே, பயாஜி கோத்யா, லக்ஷ்மண் பாலா ஷிம்பி, நானா சாஹேப் நிமோண்கர் போன்றவர்கள் அங்கேயே இருந்து கொண்டனர்.

ஷாமா கீழே படிகளில் அமர்ந்திருந்தார்...  லக்ஷ்மிபாய் ஷிண்டேவுக்கு ரூ.9 ஐ  வழங்கியப் பின்பு பாபா தமக்கு மசூதியில் சௌகரியமாய் இல்லையென்றும், பூட்டியினுடைய தகடி வாதாவுக்கு (கல் கட்டிடம்) எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும், அங்கு தாம் நலமுற்று விடப் போவதாகவும் கூறினார்...  இக்கடைசி மொழிகளை உதிர்த்துவிட்டு பயாஜி கோதேயின் மேனியில் சாய்ந்துகொண்டு உயிர் நீத்தார்..அவரது மூச்சு நின்றுவிட்டதை பாகோஜி கவனித்து கீழே அமர்ந்திருந்த நானா சாஹேப் நிமொண்கரிடம் கூறினார்..நானா சாஹேப் சிறிது தண்ணீர் கொணர்ந்து பாபாவின் வாயில் ஊற்றினார்...அது வெளியே வந்துவிட்டது.

பின்னர் அவர் பலமாக "ஓ...! தேவா" என்று கதறினார்.  பாபா சிறிதே தமது கண்களைத் திறந்து "ஆ...!" என்று மெல்லிய குரலில் கூறுவதைப் போன்றிருந்தது...ஆனால், பாபா தமது  புனித பூதவுடலை  நீத்துவிட்டார் என்பது சீக்கிரமாக நிதர்சனமாயிற்று...பாபா காலமான செய்தி சீரடி கிராமத்தில் காட்டுத்தீப் போல் பரவியது...ஆண்கள், பெண்கள், குழந்தைகள் யாவரும் மசூதிக்கு ஓடி வந்து இந்த இழப்பின் துயரைப் பல்வேறு விதங்களில் வெளியிட்டனர்.. சிலர் பலமாகக் கதறினர்..சிலர் தெருவில் உருண்டு புரண்டனர்...சிலர் மூர்ச்சயடைத்து  விழுந்தனர்.. எல்லோருடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாக நீர் வழிந்தது.  அனைவரும் வருத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர்...

சிலர் சாயீபாபாவின் மொழிகளை நினைவூட்டிக் கொள்ள ஆரம்பித்தனர்... வரப்போகும் காலங்களில் தாம் ஒரு எட்டுவயதுப் பையனாகத் தோன்றப் போவதாக  சாயிபாபா  தம் பக்தர்களிடம் தெரிவித்ததாகச் சிலர் கூறினர்...இவைகள் ஞானியின் மொழிகள்...  எனவே, இது குறித்து யாரும் ஐயுறத் தேவையில்லை...  ஏனெனில் கிருஷ்ணாவதாரத்தில் சக்ரபாணி (மகாவிஷ்ணு) இதே காரியத்தைத்தான் நிகழ்த்தினார்...  சிறையிலிருந்த தேவகியின் முன் கிருஷ்ணர் ஒளி பொருந்திய நிறத்தினராகவும், தமது நான்கு கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி எட்டுவயது  பாலகனாகவும் தோற்றமளித்தார்..அந்த அவதாரத்தின்போது கிருஷ்ணர் பூமியின் பாரத்தைக் குறைத்தார்.. இந்த அவதாரம் தமது பக்தர்களின் முன்னேற்றத்திற்கானது.. எனவே ஐயத்துக்குரிய காரணம் எங்கேயுள்ளது...?  ஞானிகளின் வழியானது,  உண்மையான அறிவால் சிந்திப்பதைக் காட்டிலும் கடந்தது...ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்கின்றது...சாயீ பாபாவுக்குத் தமது பக்தர்களுடன் உண்டான தொடர்பு இந்த ஒரு தலைமுறைக்குரியது மட்டுமன்று...அது கடந்த எழுபத்திரெண்டு  ஜென்மங்களின் தொடர்பாகும்...இத்தகைய ஜென்மப் பிணைப்புக்களை உருவாக்குவதன்  பொருட்டுத்தான்,  சாயிபகவான்  திக்விஜயம் செய்யச் சென்றுள்ளார் என்பது போல் தோன்றுகிறது...பாபா  மீண்டும் விரைவில் திரும்பி வருவார் என்று பக்தர்கள் உறுதியான நம்பிக்கை பூண்டுள்ளனர்...

🔥பாபாவின்  பூதவுடல் எவ்வாறு, எங்கே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றி முக்கியமானவர்கள் கலந்து ஆலோசித்த நிகழ்வைப்  பற்றிய விளக்கவுரையும் மற்றும்  முடிவாக  முரளீதரனின் மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்ட  வாதாவில் மத்திய இடத்தில் பாபா அடக்கம் செய்யப்பட்டு, சமாதி மந்திராக போற்றப்பட்டதன் நிகழ்வைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥 

பாபாவின் பூதவுடலை  எவ்வாறு, எங்கே  அடக்கம் செய்வது என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்தது...சில முகம்மதியர்கள்  பாபாவின் உடல் திறந்த வெளியில் அடக்கம் செய்யப்பட்டு, அதன் மேல் ஒரு சமாதி கட்டவேண்டும் என்றனர்...குஷால் சந்த்தும், அமீர் ஷக்கரும் இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்...ஆனால் ராமச்சந்திர பாடீல் என்னும் கிராம அதிகாரி உறுதியான,  தீர்மானமான குரலில் கிராம பரிஷத்தை நோக்கி,  "எங்களுக்கு உங்கள் கருத்து சம்மதமில்லை...வாதாவைத் தவிர வேறு எவ்விடத்திலும் பாபாவின் உடல்   நல்லடக்கம் செய்யப்படக் கூடாது" என்று கூறினார்...மக்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுக் கொண்டு முப்பத்தாறு மணிநேரம் வரை இதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்...  புதன்கிழமை காலை பாபா, லக்ஷ்மண் மாமா ஜோஷியின் கனவில் தோன்றி அவரைத் தம் அருகில் அழைத்து, "சீக்கிரம் எழுந்திரு,  பாபு சாஹேப்  நான் இறந்துவிட்டதாக நினைக்கின்றார்..எனவே  பாபு சாஹேப்  எமக்கு ஆரத்தி எடுக்கவில்லை... நீ வழிபாட்டை நடத்தி காகட் (காலை) ஆரத்தி செய்" என்றார்... லக்ஷ்மண் மாமா என்பவர்,  கிராம ஜோசியரும் ஷாமாவின் தாய் மாமனுமாவார்...  அவர் ஒரு வைதீகப் பிராமணர்.. பாபாவைக் காலையில் வணங்கிய பின்னர்,  மற்ற பிற கிராம தெய்வங்களை வணங்கினார்...பாபாவிடம் அவருக்கு மிகுந்த பக்தி உண்டு... இக்கனவிற்க்குப் பின்னர் பூஜாத் திரவியங்கள் அனைத்துடனும் வந்து மௌல்விகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது , உரிய சம்பிரதாயங்களுடன் பூஜையும், காலை ஆரத்தியும் காண்பித்துச் சென்றுவிட்டார்.. பின்னர் மத்தியானம் பாபு சாஹேப் ஜோக் மற்றெல்லாருடனும் வந்து வழக்கம்போல் மத்தியான ஆரத்தியைச் செய்தார்...பாபாவின் இறுதி மொழிகளுக்கு கிராமமக்கள் உரிய மதிப்புக் கொடுத்து, அவர்தம் திருமேனியை வாதாவில் வைக்க முடிவுசெய்து, வாதாவின்  நடுப்பகுதியைத் தோண்டத் துவங்கினார்கள்...  அடுத்தநாள் மாலை ரஹாதாவிலிருந்து துணைக்காவல் துறை அதிகாரியும், மற்ற இடங்களிலிருந்து மக்களும் வந்து எல்லோரும் கலந்து பேசி அம்முடிவை ஏற்றுக் கொண்டனர்... அடுத்தநாள் காலை பம்பாயிலிருந்து அமீர்பாயும், கோபர்காவனிலிருந்து மம்லதாரும் வந்தனர்..மக்கள் கருத்து வேறுபாடு மீண்டும்  கொண்டதாகத் தோன்றியது...சிலர் அவர் உடம்பை  திறந்தவெளியில் அடக்கம் செய்வதற்கு வற்புறுத்தினர்..எனவே மம்லதார் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினார்.. அந்த வாக்கெடுப்பில் வாதாவை பகவான் சமாதி மந்திராக உபயோகப்படுத்தும் தீர்மானம், மற்றதைப் போல் இரண்டு பங்கு ஓட்டுக்கள் பெற்றதைக் கண்டார்.

ஆயினும்  கலெக்டரிடம் இதுகுறித்து குறிப்பிட விரும்பியதன் காரணமாக, காகா சாஹேப் தீஷித் அஹமத்நகருக்குப் புறப்பட ஆயத்தமானார்.. இத்தருணத்தில் பாபாவின் அகத்தூண்டுதலால் மறுசாராரிடம் ஒரு கருத்து மாற்றம் ஏற்பட்டு, அனைவரும் எதிர்ப்பின்றி ஒரே முடிவை ஆதரித்தனர்..  புதன்கிழமை மாலை பாபாவின் திருமேனி  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வாதாவுக்கு கொண்டுவரப்பட்டு  உரிய சம்பிரதாயங்களுடன் முரளீதரின் மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்ட மத்திய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது...  உண்மையில் பாபா முரளீதர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது..எங்கே எவ்வளவு அதிகமான பக்தர்கள் மன  அமைதியும், சாந்தியும் தேடிச் சென்றார்களோ அல்லது சென்றுக்கொண்டு இருக்கின்றார்களோ அத்தகையவர்களுக்கு  கோவிலாகவும், புனித ஆலயமாகவும் வாதா திகழத் தொடங்கியது...பாபாவின் இறுதிச் சடங்குகள் யாவும் பாலா சாஹேப் பாடேயாலும், பாபாவின் ஒரு பெரும் அடியவரான உபாஸனியாலும் நிறைவேற்றப்பட்டது.

பேராசிரியர் நார்கே அவர்கள்  கவனித்த விதமாக இந்த இடத்தில் இது குறிப்பிடப்படுகிறது...முப்பத்தாறு மணிநேரம் பாபாவின் உடல் திறந்து வைக்கப்பட்டிருந்த போதிலும், சடலம் விறைத்துப் போகாமலும், அங்கங்கள் வளைந்து கொடுக்கும் விதத்திலும் மிருதுவாக இருந்ததால் அவர் அணிந்துக் கொண்டிருந்த கஃப்னி துண்டுகளாகக் கிழிக்கபடாமல் இயல்பாக  கழற்றி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...

🔥பாபா தனது ஆயுட்கால நண்பனைப் போன்று பாவித்து, தியானித்து வந்த  செங்கல் உடைதல்  என்ற நிகழ்வைப் பற்றிய விளக்கவுரை... 🔥

பாபா சமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு  முன்பாக இச்சம்பவம் நிகழ்ந்தது.. மசூதியில் பாபா கைவைத்து அமரும் ஒரு பழைய செங்கல் இருந்தது...இரவில் அதன் மீது சாய்ந்துக் கொண்டு இருக்கையில் அமர்வார்...இது பல ஆண்டுகள் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.. ஒருநாள் பாபா இல்லாத போது தரையைக் கூட்டிக் கொண்டிருந்த சிறுவன்  தனது கையில் அதை எடுத்தான்..துரதிர்ஷ்டவசமாக கைதவறிக் கீழே விழுந்து அது இரண்டாகியது...பாபா இதைத் தெரிந்துக் கொண்டதும்,  அதன் இழப்பைக் குறித்து வெகுவாகக் கவலை அடைந்து "உடைந்தது செங்கல் அல்ல...எனது விதியே துண்டுகளாக உடைந்துவிட்டது...அது எனது ஆயுட்கால நண்பன்...அதன் ஸ்பரிசத்துடன் நான் எப்போதும் ஆத்மதியானம் செய்தேன்...அது என் உயிரைப்போன்று அவ்வளவு பிரியமானது..  இன்று அது என்னைவிட்டு நீங்கிவிட்டது" எனப் புலம்பி அழுதார்...செங்கல்லைப் போன்ற ஒரு ஜடப்பொருளுக்கு பாபா ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க  வேண்டும்...? என்று சிலர் கேட்கலாம்...இதற்கு ஹேமாட்பந்த் கூறுகின்றார்.."ஞானிகள் இவ்வுலகில் ஆதரவற்றோரைக் காப்பது என்ற முக்கிய நோக்கத்திற்க்காகவே அவதரிக்கின்றார்கள்... அவதரித்த உருவில் மக்களுடன் கலந்து அம்மக்களைப் போலவே வெளிப்படையாகச் சிரித்தல், விளையாடுதல், அழுதல் ஆகியவற்றைச் செய்தாலும், தமக்குள்ளே அவர்கள் தமது கடமைகளையும், பிறவியெடுத்த நோக்கத்தையும் பற்றி முழுதும் விழிப்பாய் இருக்கின்றார்கள்" என பதிலளித்திருக்கிறார்... 

🔥சீரடி பாபா தன்னுடைய உயரிய பக்தன் பகத் மகல்சாபதியிடம் எனது உடலை மூன்று நாள் பாதுகாப்பாயாக என்று அறிவுருத்தி,தேகத்தை உதறி எழுபத்திரெண்டு நேரம்  சமாதி அடைந்த நிகழ்வைப் பற்றிய  மூல சூட்சம விளக்கவுரை🔥

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1886- ஆம் ஆண்டில் பாபா எல்லைக்கோட்டை (ஆயுள் என்ற எல்லை) தாண்ட முற்சித்தார்..ஒரு மார்கழிப் பௌர்ணமி தினத்தன்று பாபா கடுமையான ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டார்....அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு  பாபா, தனது பிராணனை மிக உயர எடுத்துச்சென்று சமாதி நிலையை அடையத் தீர்மானித்தார்..உடனே பகத் மகல்சாபதியிடம் "எனது உடலை மூன்று நாட்கள் பாதுகாப்பாயாக என்று கூறினார்.... மேலும்  நான் திரும்பினால் எல்லாம் சரியாகிவிடும்... நான் திரும்பவில்லை என்றால், அந்த திறந்தவெளியில் (சுட்டிக்காண்பித்து) எனது உடலைப் புதைத்துவிட்டு அதன்மேல் இரண்டு கொடிகளை அடையாளமாக நட்டுவிடு" என்று கூறினார்...இதைக் கூறிவிட்டு இரவு சுமார் பத்துமணிக்கு பாபா கீழே சாய்ந்தார்.... அவரது மூச்சும், நாடியும் நின்றுபோயின.. உடம்பை விட்டுவிட்டு உயிர் அகன்று விட்டதைப்போல் தோன்றியது...கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் அங்குவந்து விசாரணை ஒன்றை நடத்தி, பாபாவால் சுட்டிக் காண்பிக்கபட்ட இடத்தில் அவரை அடக்கம் செய்ய வந்தனர்..ஆனால் பகத் மகல்சாபதி  இதனை  ஏற்றுக் கொள்ளாமல், பாபாவின் வாக்கை வேதவாக்காக ஏற்று உடலைப் பாதுக்காத்தார்...தமது மடியிலேயே வைத்துக் கொண்டு மூன்று நாட்கள் விடாமல் காத்திருந்தார்...மூன்று நாட்கள் கழிந்ததும் காலை மூன்று  மணியளவில்  பாவாவின் உடலில் உயிர் இருப்பதற்கான  அறிகுறிகள் தெரிந்தன..அவரது சுவாசம் ஆரம்பித்து, அடிவயிறு அசையத் தொடங்கியது...கண்கள் திறந்தன...தனது அங்கங்களை அசைத்துக்  கொண்டு மீண்டும் உணர்வுக்கு வந்தார்....

இதிலிருந்து நாம் அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், உயிர் அழியாதது.. நிலையானது..தேகமே அழியக்கூடியது..ஆகவே  சாயீபாபா இத்தனை ஆண்டுகளாக உறைந்த மூன்றரை  முழ அளவான உடலைக் கொண்டவர் தானா, அதை விட்டுவிட்ட பிறகு அவர் நீங்கிவிட்டாரா, அல்லது அகத்தே உறையும் ஆத்மவடிவாக விளங்கினாரா என்று தீர்மானித்துக் கொள்ளலாம்...பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது...ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.. இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் இருக்கின்றார் சாயீ என்ற பரம்பொருள்...

இப்பரம்பொருளாகிய சாயீயே அண்ட பேரண்டங்களிலும், இடைவெளி இல்லாமல் வியாபித்திருக்கின்றார்....குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக இவ்வுடம்பை எடுத்துக் கொண்டார்..தமது குறிக்கோள் நிறைவேறியதும் தமது அழியும் தேகத்தை  (வரையறையுள்ள பண்புக்கூறு) துறந்துவிட்டு தமது வரையறையற்ற பண்புக்கூற்றை அடைந்தார்.. கடவுள் தத்தர், கனகாபூரைச் சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி போன்ற முந்தைய அவதாரங்கள் போலவே சாயீ எப்போதும் வாழ்கிறார்...அவரது மரணம் என்ற சமாதி அடைதல் என்ற நிகழ்வானது ,ஒரு புறத்தோற்றமே தவிர உயிருள்ளவற்றிலும், ஜடப்பொருட்களிலும் நிலைபெற்று ஆதிக்கம் செலுத்தி அவைகளைக் கட்டுப்படுத்துகிறார்.. இது இயல்பானதே..இப்போதும் கூட பாபாவை முழுவதுமாக  தூய்மையான அன்புடன்  சரணாகதி அடைந்தவர்களும், அவரையே முழுமனதாக ஏற்று  பக்தியுடன்  வணங்குபவர் அனைவரும், பாபா எங்கும் நிறைந்து அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் வியாப்பித்து ஆட்சி புரிவதை அனுபவபூர்வமாக உணரலாம்...

பாபாவின் ஸ்தூல உருவத்தை நாம் தற்போது காண இயலாவிடினும், இப்போதும் கூட சீரடிக்குச் செல்வோமேயானால், மசூதியில் அவரது அழகான, தத்ரூபமான சித்திரம் காட்சியளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்...பாபாவின் புகழ்பெற்ற அடியவரும், ஓவியம் வரைவதில் திறன்மிக்க  ஷாம்ராவ் ஜெயகரால்  என்பவரால் இந்த ஓவியம் வரையப்பட்டது.. கற்பனை வளம், பக்தியுள்ள பார்வையாளருக்கு இப்படம் இன்றும் பாபாவின் தரிசனம் தரும் திருப்தியையளிக்கிறது.  பாபா இப்போது உடல் உருவில் இல்லையாயினும் அவர் அங்கும், எங்கும் இருந்து அவர் பூதவுடலுடன் இருந்த சமயம் எவ்வாறு பக்தர்களை நலமுடன் ஆராதித்து ஆசி வழங்கினாரோ, அவ்வாறே இப்போதும் அனுக்கிரகம்  செய்கின்றார்...பாபாவைப் போன்ற ஞானிகள் மனிதர்களைப் போன்று தோன்றினாலும், இறப்பதே இல்லை... உண்மையில் அவர்கள் கடவுளே ஆவர்....

🔥சீரடி பாபா,தன்னை நாடி வந்த பக்தன் பாபு சாஹேப் ஜோக்கின் துறவு மேற்க்கொள்ள வேண்டும் என்ற  பிரார்த்தனையை ஏற்று, எவ்வாறு  உபதேச மொழிகளை அறிவுருத்தி உயரிய வழியைக் காட்டினார் என்பதன் விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

ஜோகின் சந்நியாசத்தைப் பற்றிய செய்தியுடன் ஹேமாட்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கின்றார்.. புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற வர்க்காரி விஷ்ணுபுவா ஜோக் என்பவரின் மாமா சகாராம் ஹரி என்ற பாபு சாஹேப் ஜோக் என்பவர் ஆவார்...அவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து (P.W. துறை அதிகாரி)1909- ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றதும், தமது மனைவியுடன் சீரடிக்கு வந்து வசித்து வந்தார்...அவருக்குக் குழந்தைகள் இல்லை...  கணவனும், மனைவியும் பாபாவை நேசித்தனர்.. பாபாவை வழிபடுவதிலும், அவருக்குச் சேவை செய்வதிலும் தங்கள் முழுநேரத்தையும் செலவிட்டனர்..மேகாவின் மரணத்திற்குப் பின் மசூதியிலும், சாவடியிலும் பாபாவின் மகாசமாதிவரை ஜோக் ஆரத்தி எடுத்தார்... சாதேவின் வாதாவில் ஞானேஸ்வரியையும், ஏக்நாத் பாகவதத்தையும் மக்களுக்குப் படித்து விவரிக்கும் வேலையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது...ஜோக் பல ஆண்டுகள் பாபாவிற்குச் சேவை செய்தப் பின்னர் பாபாவை நோக்கி, "நான் இத்தனை ஆண்டுகள்  தங்களுக்குச் சேவை செய்தேன்... எனது மனம் இன்னும் அமைதியும், சாந்தியும் பெறவில்லை..  ஞானிகளுடன் எனக்கு உண்டான தொடர்பு எங்ஙனம் என்னை முன்னேற்றாமல் இருக்கிறது...?  எப்போது என்னைத் தாங்கள் ஆசீர்வதிப்பீர்கள்...?" என்று கேட்டார்....

பக்தரின் வேண்டுகோளைச் செவிமடுத்த பாபா, "உரிய காலத்தில் உனது தீவினைகள் (அவைகளின் விளைவு அல்லது பயன்) அழிக்கப்பட்டுவிடும்...உனது நன்மை, தீமை யாவும் சாம்பலாக்கப்படும்.. எல்லாப் பற்றுக்களையும் துறந்து, அடங்காச் சிற்றின்ப அவாவையும், சுவை உணர்வையும்  விடுத்து, எல்லாத் தடைகளையும் ஒழித்துவிட்டு, முழு மனதுடன் கடவுளுக்கே சேவை செய்து பிக்ஷை  பாத்திரத்தை எப்போது நாடி அடைகின்றாயோ (சந்நியாசம் ஏற்கிறாயோ) அன்றே நான் உன்னை புனிதமடைந்தவனாக உருமாற்றுவேன்" என்றார்..  சில நாட்களுக்குப் பின் பாபாவின் மொழிகள் உண்மையாயின... அவரது மனைவி அவருக்குமுன் இயற்கை எய்தினாள்.  வேறு பற்றொன்றும்  அவருக்கு இல்லை.  அவர் சுதந்திரமானார்...இறப்பதற்கு முன் சந்நியாசம் ஏற்றார்.  வாழ்க்கையின் இலட்சியத்தை எய்தினார்...

🔥சீரடி பாபா தன்னை நாடி வந்த பக்தர்களை  தாய்மையுணர்வுடன் அரவணைத்து, எவ்வாறு உபதேச மொழிகளை உபதேசித்து  நல்வழிக்காட்டினார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥

அன்பும், கருணையும் உள்ள சாயீபாபா பலமுறை கீழ்கண்ட இனிய மொழிகளை மசூதியில் உபதேசம் செய்திருக்கின்றார்...

"என்னை எவன் மிகவும் விரும்புகின்றானோ, அவன் எப்போதும் என்னைக் காண்கிறான்...  என்னைவிட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது...எனது கதைகளைத் தவிர பிறவற்றை அவன் கூறுவதில்லை... இடையறாது என்னையே தியானித்து, என் நாமத்தையே அவன் ஸ்மரணம் செய்கிறான்... முழுமையாக தன்னை என்னிடம் சமர்ப்பித்து, என்னையே எப்போதும் எவன் நினைவில் கொண்டிருக்கின்றானோ, அவனுக்கு நான் கடன்பட்டதாக  உணர்கின்றேன்...அவனுக்கு விடுதலையை அதாவது தன்னையுணர்தல் என்கின்ற உயர்நிலையை  அளித்து எனது கடனைத் தீர்ப்பேன்...என்னை நினைத்து, எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன்பாலும் நான் சார்ந்திருக்கிறேன்... மேற்க்கூறிய குணங்களுடன்  என்னிடம் வருபவன் ஆறு கடலுடன் ஒன்றாவதுபோல் என்னுடன் இரண்டறக் கலக்கின்றான்...  பெருமையையும், அகங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு, எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தில்  அமர்ந்துக் கொண்டிருக்கின்ற என்னிடம் உங்களைப் பூரணமாகச் சமர்ப்பியுங்கள்...!"..

🔥யார் இந்த  ""நான்"" என்பதன் பற்றிய மூல சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

யார் இந்த 'நான்' என்பதன் மூல சூட்சமம் விளக்கம் என்னவென்றால்...பலமுறை சாய்பாபா யார் இந்த நான் என்பதை விளக்கியிருக்கின்றார்..  அவர் கூறினார், "நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கேயும்  வேறு  என்னைத் தேடிக் கொண்டு போகவேண்டாம்...உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும், அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப்பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது.. அது நானேயாகும்...இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும், எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக் காண்பீர்களாக.  இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்"...

எனவே வாசகர்களுக்கு ஹேமாட்பந்த் வணக்கம் தெரிவித்துவிட்டு எல்லாத் தெய்வங்களையும், ஞானிகளையும், பக்தர்களையும் மரியாதை செய்யும்படி பணிவுடனும், அன்புடனும் வேண்டிக்கொள்கின்றார்.  "எவனொருவன் பிறர்மீது குறைகூறி குற்றங்கண்டு குதர்க்கம் செய்கிறானோ, அவன் என்னை உள்ளத்தில் துளைத்துக் காயமேற்படுத்துகின்றான்..ஆனால் எவன் கஷ்டப்பட்டுப் பொறுமையுடன், அனைத்தையும் சகிப்புத் தன்மையுடன்  ஏற்றுக் கொண்டு  இருக்கிறானோ, அவன் என்னை மிக அதிகமாக சந்தோஷப்படுத்துகிறான்" என்று பாபா அடிக்கடி உபதேசம் அளித்துள்ளார்..

பாபா இவ்வாறு எல்லா ஜந்துக்களிடமும், ஜீவராசிகளிடமும் வியாபித்து அவைகள்பாலும், எல்லாத் திசைகளிலும் சூழ்ந்து இருக்கிறார்.. .எல்லா உயிர்களிடமிருந்தும், அன்பைத் தவிர வேறெதையும் அவர் விரும்புவதில்லை.  இத்தகைய புனிதமான அமிர்தம் எப்போதும் பாபாவின் திருவாயினின்று பெருக்கெடுத்தது... அவர்தம் புகழை அன்புடன் பாடுவோர், அதையே பக்தியுடன் கேட்போர் ஆகிய இருவரும் சாயீயிடம் ஒன்றாகிவிடுகிறார்கள் என்பதை உணர்ந்து பாபாவை சரணாகதி அடைவோமாக... 

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக.... அனைவருக்கும் சாந்தி, நிலவட்டும்..🙏🏼🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியானபீடம்...🙏🏼🙏🏼

https://shorte.be/LP?$=468844

https://youtu.be/M9mObkJoMRE

திங்கள், ஜூன் 21, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் நாற்பத்திரெண்டு (42)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் :: நாற்பத்திரெண்டு (42)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக  இந்த வேத நூலாகிய ஶ்ரீசாய்  சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே  ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப் பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....இவ்வேதப் பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த  ஶ்ரீசாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம் ::நாற்பத்திரெண்டு(42)🙏

🙏முன்னுரை..🙏🏼

அனைத்தையும் கடந்து சாட்சியாக வீற்றிருக்கின்ற  பகவானை , பக்தர்கள் இந்துவா, முகம்மதியனா என்று பரிசோதித்த  காரணத்தால்,  தன்னுடைய உடைகளை கழட்டி துனியில் எறிந்து பாருங்கள் என்னை  என்றுக் கூறி,  கோபஆவேசத்துடன் சூட்சமமாக  இந்த தசராவே தனது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்குரிய சமயம் என்று தன் இறப்பின்  இறுதி நாளையும் சூட்சமமாக குறிப்பிட்டதைப் பற்றிய அனுபவ விளக்கம்...

தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட  ராமச்சந்திர பாடீலின்  கனவில் தோன்றி உமது மரண ஓலை பெற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறி குணப்படுத்திக் காப்பாற்றியதைப்  பற்றிய அனுபவ  விளக்கவுரை மற்றும் தாத்யா பாடீல் இறக்கும் நாளைக்  குறிப்பிட்டு, எவ்வாறு  பாபா, தன் பெயருக்குப் பதிலாக தாத்யா பாடீல் பெயரை மாற்றி  மரணிக்கும் தருணத்தை  சூட்சமமாக  அறிவுருத்தியதைப் பற்றிய  அனுபவ உரை.. 

சீரடி பாபா, தன்னுடைய பக்தன் தாஸ்கணுவின் கனவில் தோன்றி தன்னுடைய இறப்பைக் குறிப்பிட்டு அறிவுருத்தியதைப் பற்றிய விளக்கவுரை..

 தன் உயரிய பக்தையான  லஷ்மிபாய் ஷிண்டேவிற்கு  பாபா, தான்  சமாதி அடைவதற்கு  முன்   நவநாணயங்களை வழங்கியதில்  இருக்கின்ற மூல சூட்சம விளக்கம்....

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழை காண்போம்..

🔥 முதலில் அனைத்தையும் கடந்து சாட்சியாக வீற்றிருக்கின்ற  பாபாவை , பக்தர்கள் இந்துவா, முகம்மதியனா என்று  பக்தர்கள் பரிசோதித்த  காரணத்தால்,  தன்னுடைய உடைகளை கழட்டி துனியில் எறிந்து பாருங்கள் என்னை  என்றுக் கூறி, கோப ஆவேசத்துடன் கூச்சவிட்டு,  இந்த தசராவே தனது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்குரிய சமயம் என்று தன் இறப்பின்  இறுதி நாளையும் சூட்சமமாக குறிப்பிட்டதைப் பற்றிய அனுபவ விளக்கம் இங்கே...🔥

ஒவ்வொருவரும்  இவ்வுலக வாழ்க்கையின் இருக்கின்ற அச்சம்,பயம், தேவையற்ற குழப்பங்கள், எண்ணப்போராட்டங்கள், முன் ஜென்ப சாப பாவ தோஷங்கள்  மற்றும்  மாயைச் சுழற்சிகளால்  ஆட்படுகின்ற அனைத்து விளைவுகளையும்  குருவின் கிருபை என்ற ஒளி நீக்குவதை முந்தைய அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட நிகழ்வுகளும், அனுபவ விளக்கங்களும் எடுத்துரைக்கின்றனர்..

அனைத்து  உபதேச மொழிகளுமே முக்திக்கு வழி வகுக்கின்றன...நமது துன்பத்தை இன்பமாக மாற்றுகின்றன... சத்குருவின் பாதங்களை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்போமேயானால், நமது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன... மரணம் கூட தன்  வலிமையை இழந்து இறுதி நாளை தள்ளி வைக்கின்றது.. இவ்வுலக வாழ்வின் துயரங்கள் நீக்கப்படுகின்றன..  எனவே, தங்கள் நலத்தை விரும்புவோர் மனதைத் தூய்மைப்படுத்தும் சமர்த்த சாயீயின்  சாய்சரித்திர  உபதேசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.. ஆரம்பத்தில் ஹேமாட்பந்த், மருத்துவர்  பண்டிட்டின் வழிபாட்டையும், அவர் பாபாவின் நெறியில் மூன்று பட்டைகள் இட்டதைப் பற்றியும் கூறுகின்றார்.. ஆனால் இந்த நிகழ்வுப் பற்றிய விளக்கங்களை ஏற்கெனவே  அத்தியாயம் பதினொன்றில் முன்பே கூறப்பட்டுவிட்டதால், இவ்விடம் நீக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது...

நாம் அனைவரும்  இதுவரை பாபாவின் வாழ்க்கையைப் பற்றிய நிகழ்வுகள், உபதேச அருளுரைகள், ஞான மார்க்கப்பாதைக்கு வழிக்காட்டும் விதமாக மறை ஞான விளக்கவுரைகள், உயர்ந்த இறைப்பண்புகளைப் பெற்று,  மிகச்சிறந்த கர்ம யோகியாக வாழ்வதற்குரிய அனைத்து உபதேச உரைகளைப் பலவிதமான உவமான விளக்கத்துடன்  பாராயணம்  செய்தோம்.. இப்பொழுது பாராயணம் செய்பவர்கள், எடுத்துக் கூறுபவர்கள்  அனைவரும்  பாபாவின் மறைவைப்பற்றிய நிகழ்வுரையை  கவனத்துடன் பாராயணம் செய்து எடுத்துக் கூறுவீர்களாக.. பாபாவுக்கு 1918- ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி லேசான காய்ச்சல் தோன்றியது... காய்ச்சல்  இரண்டு, மூன்று நாட்கள் இருந்தது.  பின்னர் பாபா உணவு உண்பதை  நிறுத்திக் கொண்டார்.. அதனால் நாளுக்கு நாள் பலவீனமானார்...உடல் குன்றிய  பதினேழாவது  நாளன்று, அதாவது 1918-ஆம் ஆண்டு, அக்டோபர்  மாதம் பதினைந்தாம்  தேதி மாலை சுமார் 2:30- மணியளவில்  பாபா தமது பூத உடலை நீத்தார்.. இதைப் பற்றிய விவரங்களுக்கு தாதா சாஹேப் கபர்டேவுக்கு, பேராசிரியர் நார்கே 1918-ஆம் ஆண்டு , நவம்பர் 5-ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் சாயிலீலா சஞ்சிகையில் (முதல் வருடம், பக்கம் 78)  பார்க்க.  இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1916- ஆம் ஆண்டில்  பாபா, தாம் இயற்கை எய்துவதைப் பற்றிய குறிப்பு ஒன்றை சூட்சமமாக உணர்த்தினார்.ஆனால் அதை அவர்கள் அப்போது புரிந்துக் கொள்ளவில்லை.அதன் விளக்கத்தை இங்கே பார்ப்போம்...

"விஜயதசமியன்று (தசரா) மாலையில் மக்கள் ஷிமோலங்கணிலிருந்து (ஷிமோலங்கண் என்பது கிராம எல்லையைத் தாண்டுதல்) திரும்பி வரும்போது பாபா திடீரென்று கோப ஆவேசமடைந்து தமது தலையணி, கஃப்னி லங்கோடு முதலியவைகளை எல்லாம் கழற்றி அவைகளைக் கிழித்து அவருக்கு முன்னால் உள்ள துனியில் எறிந்தார்.. இந்தச் சமர்ப்பணத்தை ஏற்று  துனியிலுள்ள தீ, மிக்க ஒளியுடன் எரிந்து பிரகாசிக்கத் தொடங்கியது.. பாபா முற்றிலும் நிர்வாணமான நிலையில் அங்கு நின்றார்...நெருப்புப் போன்ற  போன்ற சிவந்த கண்களுடன் எல்லோரையும் நோக்கி, "ஓ..! பேர்வழிகளே, இப்போது என்னை எல்லோரும் நன்றாகப் பார்த்து, நான் ஒரு இந்துவா அல்லது முகம்மதியனா  என்பதைத் தீர்மானியுங்கள்" என்று உரக்கக் கூறினார்...  எல்லோரும் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தனர்.. ஒருவருக்கும் பாபாவிடம் நெருங்கத் தைரியமில்லை.கொஞ்ச நேரத்திற்குப் பின் பாபாவின் ஆத்மார்த்தமான அடியவரான  பாகோஜி ஷிண்டே தைரியத்துடன் அருகில் சென்று லங்கோடை கட்டிவிடும் முயற்சியில் வெற்றிப் பெற்றார்..."பாபா என்ன இதெல்லாம்... இன்றைக்கு ஷிமொலங்கண் - தசரா விடுமுறை" என்றார்... பாபா தமது சட்காவைத் தரையில் அடித்து, "இது என்னுடைய ஷிமொலங்கண் என்றார்.  இரவு பதினோரு மணிவரை சாந்தமடையவில்லை.  அன்றிரவு சாவடி ஊர்வலம் நடக்குமா என்று அனைவரும் ஐயம் அடைந்தனர்...

ஒரு மணி நேரத்திற்குப்பின் பாபா தமது சாதாரண நிலைக்குத் திரும்பினார்...  வழக்கம்போல் உடையணிந்துக் கொண்டு  சாவடி ஊர்வலத்தில் பங்குகொண்டார்....இந்த நிகழ்ச்சியின் மூலம் தசராவே தமது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்குரிய சமயம் என்ற கருத்தை சூட்சமமாக பகவான்  தெரிவித்தார்.  ஆனால் ஒருவரும் அதன் ஆழமான உட்பொருளைப் புரிந்துக் கொள்ளவில்லை.  மற்றுமொரு குறிப்பாலும் பாபா இதனை சூட்சமமாக உணர்த்தினார்...அது என்னவென்றால்,  ராமச்சந்திர பாடீல் கனவில் தோன்றி தீவிர நோயிலிருந்து அவரைக்  காப்பாற்றிய பாபா, அத்தருணத்தில்  தாத்யாவின் மரணக் காலத்தை சூட்சமமாக உணர்த்தியப் பின், பின்னாளில்  தாத்யாவின்  மரணத்தைத் தவிர்த்து, தான்  அதே நாளில்  இறப்பை  ஏற்றுக் கொண்டதன் நிகழ்வைப் பற்றிக் கீழே காண்போம்....

🔥தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட  ராமச்சந்திர பாடீலின்  கனவில் தோன்றி உமது மரண ஓலை பெற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறி குணப்படுத்திக் காப்பாற்றியதைப்  பற்றிய அனுபவ  விளக்கவுரை மற்றும் தாத்யா பாடீல் இறக்கும் நாளைக்  குறிப்பிட்டு, எவ்வாறு  பாபா, தன் பெயருக்குப் பதிலாக தாத்யா பாடீல் பெயரை மாற்றி  மரணிக்கும் தருணத்தை  சூட்சமமாக  அறிவுருத்தியதைப் பற்றிய  அனுபவ உரையை இங்கே காண்போம்.. 🔥

பாபாவின் அடியவரான  ராமச்சந்திர பாடீல் என்பவர்,  தீவிரமான காய்ச்சலால் அவதியுற்றார்..நோயின் தீவிரம் குறையாமல்  அவர் பெரிதும் துன்பமடைந்தார்.  பாடீல்  எல்லாவித சிகிச்சைகளையும் கையாண்டும்,  குணமேதும் காணாமல் தமது வாழ்வில் வெறுப்படைந்து கடைசி வினாடிக்காகக் காத்துக் கொண்டிருந்தார்...பின்னர் ஒருநாள் நள்ளிரவு பாபா திடீரென்று அவரது தலையணைக்கருகில் நின்றார்..பாடீல் பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, "வாழ்க்கையின் எல்லாவித நம்பிக்கைகளையும் நான் இழந்துவிட்டேன்.. நான் எப்போது இறப்பை சந்திப்பேன்  என்று உறுதியாகக் கூறுங்கள்" என்றார்... கருணையுள்ள பாபா, "கவலைப்படாதே, உனது ஹண்டி (மரண ஓலை) மீண்டும்  பெற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது..நீ விரைவில் குணம் அடைவாய்...ஆனால் தாத்யா பாடீலைக் குறித்து நான் கவலைப்படுகிறேன் என்று கூறினார் பாபா. மேலும் அவன் சக வருடம் 1840-ஆம்  ஆண்டில் (1918) விஜயதசமியன்று மரணமடைவான்.. யாருக்கும் இதை வெளியிட்டு விடாதே...தாத்யாவிடமும்  இதைக் கூறாதே.. ஏனென்றால் அவன் மேன்மேலும் பயமுடன் பீதியடைவான்" என்றார் பாபா...

ராமச்சந்திர தாதா பாடீல்  சுகமடைந்தார்.. ஆனால் தாத்யாவின் வாழ்வைப் பற்றி எண்ணி நடுக்கமுற்றார்.. ஏனெனில் பாபாவின் மொழிகள் மாற்ற இயலாதவை என்பதாலும், இரண்டாண்டுகளில் தாத்யா மரணமடைவார் என்பதைக் குறித்துமே....பாலா ஷிம்பி (தையல்காரர்) என்பவரைத் தவிர வேறொருவரிடமும் இக்குறிப்பைக் கூறாமல் இரகசியமாக வைத்திருந்தார் ராமச்சந்திர பாடீல்... ராமச்சந்திர பாடீல், பாலா ஷிம்பி என்ற இவ்விரண்டுபேர் மட்டும் தாத்யாவின் உயிரைப்பற்றி, என்ன ஆகுமோ என்று  ஒரு விதப்  பயத்துடன்  இருந்தனர்.  ராமச்சந்திர பாடீல்  படுக்கையை விட்டு எழுந்து  நடமாடத் தொடங்கினார்...  காலம் வேகமாகச் சென்றது... சக வருடம் 1840..இல்  (1918- ஆம் ஆண்டு ) பாத்ரபத் மாதம் முடிந்து ஐப்பசி மாதம் வரத் தொடங்கியது...

பாபாவின் கூற்றுப்படியே தாத்யா காய்ச்சலினால் படுத்தப்  படுக்கையானார்.  எனவே அவரால் பாபாவின் தரிசனத்துக்கு வரமுடியவில்லை.  பாபாவுக்கும் காய்ச்சல் வந்தது..பாபாவிடம் தாத்யாவுக்கு முழு நம்பிக்கை இருந்தது...  தாத்யாவின் காய்ச்சல் மோசமடைந்துகொண்டே வந்தது...அவரால் அசைய முடியவில்லை..எப்போதும் அவர் பாபாவை ஞாபகப்படுத்திக் கொண்டார்... பாபாவும்  உடல்  நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.. முன்னர்  பாபாவால்   அறிவுருத்தப்பட்ட விஜயதசமி நாளும் வந்துக்  கொண்டிருந்தது.

ராமச்சந்திர தாதாவும், பாலா ஷிம்பியும் தாத்யாவைப் பற்றி நினைத்து மேலும்  அச்சமும்,  பீதியும் அடைந்தனர்...பாபா முன்னர் உரைத்தபடி தாத்யாவின் முடிவு வந்துவிட்டது என்று  எண்ணி, அவர்கள் உடல் நடுங்கி வியர்த்தது...விஜயதசமியும் மலர்ந்தது... தாத்யாவின் நாடி மிக மெதுவாக அடித்துக் கொள்ளத் தொடங்கியது.. விரைவில் அவர் மரணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது...  ஆனால் ஒரு வினோதமான நிகழ்ச்சி நடைபெற்றது. தாத்யா பிழைத்துக் கொண்டார்... அவரது மரணம் தவிர்க்கப்பட்டது...அவருக்குப் பதிலாக பாபா உடலை உகுத்தார்.. ஒரு பரிவர்த்தனை ஏற்பட்டதாகத் தோன்றியது.  பாபா தாத்யாவுக்காகத் தமது உயிரைக் கொடுத்தார் என்று மக்கள் கூறினர்...  அவர் அங்ஙனம் செய்தாரா...? பாபாவின் வழிமுறைகள் அனைத்தும்  ஆராய்ச்சிக்கு  அப்பாற்பட்டவை என்பதால்,  இதன் மூல சூட்சமம்  பாபாவிற்கு  மட்டுமே தெரியும் என்றாலும், இந்நிகழ்ச்சியின் மூலம்  பாபா தமது மரணத்தைப் பற்றி தமது பெயருக்குப் பதில் தாத்யாவின் பெயரைக் கூறி,  சூட்சமமாக  உணர்த்தியிருக்கின்றார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள  வேண்டும்....

🔥சீரடி பாபா, தன்னுடைய பக்தன் தாஸ்கணுவின் கனவில் தோன்றி தன்னுடைய இறப்பைக் குறிப்பிட்டு அறிவுருத்தியதைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம் .🔥

அடுத்தநாள் காலை அக்டோபர்  பதினாறாம் தேதி  பண்டாரீபுரத்தில் தாஸ்கணுவின் கனவில் பாபா தோன்றி, "மசூதி இடிந்து விழுந்துவிட்டது..  சீரடியில் எல்லா எண்ணெய்க்காரர்களும், கடைக்காரர்களும் என்னைப் பெருமளவு துயரப்படுத்தினர்...எனவே நான் அவ்விடத்தை விட்டு நீங்கிவிட்டேன்...நான் இதை உனக்குத் தெரிவிக்கவே இங்கு வந்தேன்..ஆகவே  அங்கு உடனே சென்று 'பக்கல்' என்கின்ற கதம்ப  புஷ்பங்களால் என்னைப் போர்த்து" என்று அறிவுருத்தினார்.தாஸ்கணு இவ்விஷயத்தை சீரடியிலிருந்து வந்த கடிதங்கள் மூலமாக அறிந்தார்...எனவே அவர் சீரடிக்குத்  தமது சீடர்களுடன் வந்து பஜனையும், கீர்த்தனைகளும் செய்யத் தொடங்கினார்...இறைவன் நாமத்தை பாபாவின் சமாதி முன்னால் நாள் முழுவதும் பாடினார்...ஹரி நாமத்துடன் தாமே ஒரு அழகிய பூமாலை தொடுத்துப்  பாபாவின் சமாதி முன்னர் வைத்து, பாபாவின் பெயரால் மக்களுக்கு அன்னதானமும் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

 🔥தன் உயரிய பக்தையான  லஷ்மிபாய் ஷிண்டேவிற்கு  பாபா, தான்  சமாதி அடைவதற்கு  முன்   நவநாணயங்களை வழங்கியதில்  இருக்கின்ற மூல சூட்சம விளக்கம் இங்கே....🔥

எல்லா இந்துக்களாலும் தசரா அல்லது விஜயதசமி மிகமிகப் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது...பாபா தமது எல்லைக் கோட்டைத் தாண்டுவதற்கு இந்நாளைத் தேர்ந்தெடுத்தது பொருத்தமேயாகும்.. இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் பகவான் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்  என்றாலும்,  எப்போதும் அவர் உள்ளுணர்வுடன் இருந்தார்...கடைசித் தருணத்திற்குச் சற்று  முன்னர்  எவருடைய உதவியுமின்றி நன்றாக நிமிர்ந்து அமர்ந்து காட்சியளித்தார்..இந்தக் காட்சியைக் கண்டவுடன் பாபாவுக்கு அபாயம் நீங்கிவிட்டதென்றும், அவர் உடல்நலம்  தேறி வருகிறாரென்றும் மக்கள் கருதினர்...தாம் விரைவில் காலமாகப் போவதை அவர் அறிந்திருந்தார்..எனவே லஷ்மிபாய் ஷிண்டேவுக்கு தாம் ஏதும் தர்மம் செய்யவேண்டுமென்று நினைத்தார். 

இந்த லக்ஷ்மிபாய் ஷிண்டே ஒரு நல்ல வசதியுள்ள பெண்மணி...இரவும் பகலும் அவள் மசூதியில் வேலை செய்தாள்...பகத் மகல்சாபதி, தாத்யா, லக்ஷ்மிபாய் இவர்களைத் தவிர,  வேறு எவருக்கும் இரவில் மசூதிக்குள் அனுமதியில்லை...ஒருநாள் மாலை பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்துக் கொண்டிருக்கும்போது லஷ்மிபாய் வந்து வணங்கினாள்...பாபா அவளிடம், "ஓ..! லக்ஷ்மி, நான் மிகவும் பசியாய் இருக்கிறேன்" என்றார்...  அதற்கு அவள், "பாபா சிறிதுநேரம் பொறுங்கள்...நான் ரொட்டியுடன் வருகிறேன்" என்று கூறிக்கொண்டு சென்றாள்...பிறகு ரொட்டி, காய்கறிகளுடன் அவள் திரும்பினாள்... அவற்றை பாபாவின் முன் வைத்தாள்...அவர் அதை எடுத்து நாய்க்குக் வழங்கினார்..அதற்கு லக்ஷ்மி, "பாபா..! இது என்ன..? உங்களுக்காக நான் அவசரமாக ஓடி நானே  ரொட்டி தயாரித்தேன்...நீங்கள் அதில் சிறிதேனும் எடுத்துக் கொள்ளாமல் நாயிடம் தூக்கி எறிகின்றீர்களே...!  வீணாக  எதற்கு  எனக்குத் தொல்லைக் கொடுத்தீர்கள்.?" என்றாள்... 

அதற்கு பாபா, "ஒன்றுமில்லாததற்காக ஏன் கவலைப்படுகிறாய்... நாயின் பசியைப் போக்குவது  என் பசியைத் தணிப்பது போன்றதேயாம்...அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் யான் நீக்கமற நிறைந்திருக்கின்றேன்...ஜீவராசிகள் அனைத்தும்  வெவ்வேறாயிருப்பினும், யாவற்றிலும் இருக்கின்ற பசி  ஒன்றல்லவா.. பசியாய் இருப்பவர்களுக்கு உணவு அளிப்பவன் எவனோ, அவன்  உண்மையிலேயே எனக்கு உணவைப் பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்துக் கொள்வாயாக.  இதை ஒரு ஆதார நீதியாகக் கருது" என்று பதிலளித்தார்...இது ஒரு சாதாரண சிறிய நிகழ்ச்சிதான்..ஆனால், ஒரு மிகப்பெரும் ஆதி  மூல சூட்சமத்தை, ஏகத்தன்மையை பாபா இதன்மூலம் முன்னிலைக்குக் கொணர்ந்து காட்டினார்...  தினசரி வாழ்வில் அதை நடைமுறைக்குக் கொண்டுவருதலை, எவருடைய இயல்பானத் தன்மையும்  பாதிக்காத நிலையில் அறிவுருத்தினார்...

இத்தருணத்திலிருந்து லக்ஷ்மிபாய் பாபாவிற்கு, தினந்தோறும் பாலையும், ரொட்டியையும் அன்புடனும்,  பக்தியுடனும் அளித்து வந்தாள்... பாபா அதை ஏற்றுக்கொண்டு பசி தணியும் வரை உண்டார்...இதில் ஒரு பகுதியை அவர் ராதாகிருஷ்ணமாயீக்கு லக்ஷ்மிபாயிடமே கொடுத்தனுப்புவார்..அந்த அம்மையாரும் பாபாவின் மீதியான பிரசாதத்தை உவப்புடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்டாள்..இந்த நிகழ்வை  ஒரு சம்பந்தமில்லாத விஷயமாகக் கருதக்கூடாது...இதன் மூலம் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால்,  எங்ஙனம் சாயீபாபா எல்லா ஜீவராசிகளிடமும் வியாபித்து ஊடுருவி நீக்கமற நிறைந்து  இருக்கிறார் என்றும், அவைகளைக் கடந்தும் இருக்கின்றார் என்றும் அறிவுருத்தப்படுகின்றது..பாபா  சர்வவியாபி, பிறப்பற்றவர், இறப்பற்றவர், அழிவற்றவர்...

பாபா லக்ஷ்மிபாயின் சேவையை நினைவு கூர்ந்தார்...அவளை எங்ஙனம் அவர் மறக்கமுடியும்....? உடம்பைவிட்டு உயிர்  நீங்குவதற்கு முன் தமது கரங்களினால்,  ஒருமுறை ஐந்து ரூபாயும், மீண்டும் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் கொடுத்தார்... இதற்கு முன்னர் ஒன்பது  நவநாணயத்தின் மூல சூட்சமத்தைப் பற்றி,  இருபத்தொன்றாம்  அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி  நவவித பக்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறது... (இந்த நவவித பக்தியும் ஸ்ரீராமரால் சபரிக்கு உபதேசிக்கப்பட்டது.) அல்லது ஷிமொலங்கண் நேரத்தில் அளிக்கப்பட்ட்ட தஷிணையாக இருக்கலாம்.லக்ஷ்மிபாயி ஒரு வசதியான பெண்மணி....எனவே பாபா அவளுக்குக் குறிப்பால் உணர்த்தி, தன்னுடைய பக்தர்கள் பின்பற்ற வேண்டிய ஒன்பதுவித குணங்களை அறிவுருத்தி,  நவ நாணயங்களை வழங்கியிருக்கலாம் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.. 

பாகவதத்தில் பதினொன்றாவது  காண்டத்தில்,  பத்தாவது அத்தியாயத்தில்,  ஆறாவது பாடலில் முதலாவதில் உள்ள , இரண்டாவது செய்யுளில் முறையே முதல் ஐந்து குணங்களும், பின் நான்கு குணங்களும் கூறப்பட்டுள்ளன...  பாபாவும் அத்தகைய ஒழுங்கைப் பின்பற்றி முதலில் ஐந்து ரூபாயும், பின்னர் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் அளித்தார்...  அப்போது மாத்திரமல்ல.  பலமுறை லக்ஷ்மிபாயின் கைகளில் ஒன்பது ரூபாய் சென்றிருக்கிறது..ஆனால் பாபாவின் இந்த ஒன்பது நவ நாணயங்களை  எப்போதும் லஷ்மிபாயி  நினைவில் கொண்டிருப்பார்கள்., எப்போதும் மிகுந்த  விழிப்புணர்வுடன் கூடிய   பாபா தமது கடைசித் தருணத்தில் மற்ற முன்னேற்பாடுகளையும் செய்தார்...தமது அடியவர்களுடைய நீங்காத  அன்பாலும், பாசத்தாலும், பிணைப்பாலும்  சிக்கிக் கொள்ளாதபடி  பக்தர்கள் அனைவரையும்  இருப்பிடத்திற்கு செல்லுமாறும், உணவருந்துமாறும்  ஆணையிட்டார்.

காகா சாஹேப் தீஷித்தும், பாபு சாஹேப் பூட்டியும் பாபாவிடம் கவலையுடன் காத்திருந்தனர்...ஆனால் பாபா, அவர்களை வாதாவுக்குப் போய் உணவுக்குப்பின் வரும்படி கூறினார்... பாபாவின் சந்நிதாதனத்தைவிட்டு அவர்களால் செல்ல முடியவில்லை.. எனினும் பாபாவுக்குக் கீழ்ப்படியாமலும் இருக்க முடியவில்லை...எனவே அவர்கள் மிகுந்த கவலை  நிறைந்த மனதுடன் வாதாவிற்குச் சென்றனர்..  பாபாவின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது என்பதை அவர்கள் அறிவார்களாதலால், அவரை அவர்களால் மறக்க முடியவில்லை... உணவுக்காக  அமர்ந்தாலும் அவர்கள் மனம் பாபாவிடமே  இருந்தது...அவர்கள் உணவை உண்பதற்கு   முன்பாக பாபா பூதவுடலை நீத்துவிட்டார் என்ற செய்தி வந்தது...உடனே தங்கள் உணவை விட்டுவிட்டு மசூதிக்கு ஓடினார்கள்... பயாஜி கோதேயின்  மடியில் இறுதியாகப் படுத்திருந்ததைக் கண்டார்கள்...அவர் தரையில் விழவில்லை.  தமது படுக்கையிலும் அவர் படுத்திருக்கவில்லை...ஆனால் அமைதியாக தமது இருக்கையில் அமர்ந்துக் கொண்டே, தமது சொந்தக் கரங்களினால் தர்மம் செய்துக் கொண்டே தமது பூதவுடலை நீத்தார்..ஞானிகள் ஒரு குறிப்பான காரணத்துடன் இந்த உலகிற்கு வருகை தருகிறார்கள்...அது நிறைவேறியபின் அவர்கள் வந்த மாதிரியாகவே அமைதியாகவும், எளிதாகவும் இயற்கை எய்துகிறார்கள்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக ...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏