வியாழன், ஏப்ரல் 04, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

சிவம் என்கிற பிரபஞ்ச பேராற்றல் என்பது அண்டசராசரத்தை இயக்கும் அற்புத ஆற்றல்.  ஆம். சிவம் என்பது எல்லோரும் அழைக்கும் பொது வார்த்தையே என சத்தியமாக நாம் அறிதல் வேண்டும்.நீர்,நிலம்,நெருப்பு,காற்று, ஆகாயம், சூரியன்,சந்திரன் மற்றும் மலை போன்ற சொற்கள் எங்ஙனம் உலகத்தார் அனைவரும் பொதுவார்த்தையாக எடுத்துக்கொள்வது போல ‘சிவம்’ என்ற சொல்லும் பொது வார்த்தை அதுவும் மெய் வார்த்தை...! சிவம் என்றால் என்ன..? தமிழ் அகராதி படி, .நன்மை, முடிவான விடுதலை (முத்தி), சித்துருவாகிச் சுயம் பிரகாசம் என்கிறது .இங்ஙனம் பொதுப் (இயற்கையாய் உள்ள) பொருளை தரும் ‘சிவம்’ இன்று ஒரு குறிப்பிட்ட சமய சொல்லாக பார்க்கப் படுகிறது. சிவன், சிவலிங்கம், பரமசிவம், சிவபிரான் இவை உலக மாபெரும் சமயமான சைவசமய கடவுளரை குறிக்கும். சிவபுராணம்,சிவலோகம், சிவசாதனம்,..சிவாகமம்,சிவராத்திரி இவை அச்சமயம் சார்ந்தவை. ஆனால் ‘சிவம்’ என்றால்.. எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கின்ற ஒளி எனப்படும். ஆக,சிவம் என்பது..இயற்கையாய் எங்கும் நீக்கமன்றி இருக்கின்ற ஒரு மெய் பொருள் ஆகும்.

சிவம் என்றால் என்ன..?

சிவம் என்னும் சொல்லுக்கு மங்களம் என்று பொருள்..!எங்கும் நன்மை…எதிலும் நன்மை உள்ளது…என்பதையே…எங்கும் சிவம்…எதிலும் சிவம்…என்கிறார்கள்..!நன்மை உண்டாகட்டும் என…சிவ சிவா என அழைக்கிறார்கள்.சிவம் என்பதில் …சி-சிகாரம் + வ-வகாரம் + ம்-மகாரம்)இதில் சிகாரம் என்றால் - அறிவு, வகாரம் என்றால் - மனது, மகாரம் என்றால்- ஆற்றல் (மாயை) என பொருள்படும்...அறிவை கொண்டு மனதில் உள்ள மாயையை விலக்குவதையே சிவமயமாதல் என்கிறார்கள்..!பக்தியின் மைய கருத்து…கடவுளை அடைவதில்லை..!மனிதனாய் வாழும் காலத்தில் உயர்வு, தாழ்வு, இச்சை என மனதின் அனைத்து மாயையை நீக்கி வாழ்வதேயாகும்…!சிவனும் சக்தியும் இணைந்ததே சிவம் ஆகும்...

சிவன்(சீவன்,ஜீவன்,உயிர்+சக்தி(ஆற்றல்)=சிவம்ஆற்றலை ஆக்கவோ,அழிக்கவோ முடியாது.தொடக்கமும் முடிவும் இல்லாதது....ஆற்றல் உள்ள யாவும் இயங்கி கொண்டிருப்பது.இயங்கும் அனைத்தும் உயிர் பெற்றுள்ளது...உயிர் எனும் இயக்கம் பெற்ற அனைத்தும் மற்றொரு  ஆற்றலை அதாவது தன்னுடைய ஆற்றலினால் பிறவற்றை நகர்த்தவும்,உருவாக்கவும் மூலம் ஆகும்...இதன் உட்பொருள் தான் உயிருள்ள அனைத்தும் சிவம்(உயிர்-ஜீவன்,ஆற்றல் பெற்றது)உயிரற்ற அனைத்தும் சவம்(உயிரற்றது-ஜீவனற்றது,..ஆற்றலற்றது).இவ்விளக்கம் இறை நம்பிக்கை இல்லார்க்கும் பொருந்தும்.உயிர் தரும் ஆண்,..உடல் தரும் பெண் இரண்டும் சமம் என்று உணர்த்தும் சிவசக்தி வழிபாட்டின் சிவம் என்றால் என்ன...? 

தமிழ் அகராதி படி...நன்மை, முடிவான விடுதலை (முத்தி), சித்துருவாகிச் சுயம் பிரகாசம் என்கிறது...சிவம்- பெயர்ச்சொல்லா..? இல்லை பண்புப் பெயரா...?பித்த உடம்பு என்றால் என்ன...? பித்தம் என்றால் என்ன?

சுயம்பு லிங்கம் என்பது என்ன...? தானாக லிங்கம் தோன்றும் என்பது உண்மையா...? இதனை நீங்கள் பார்த்துள்ளீர்களா...?

உடலே நீ பிறந்தாய் பஞ்சபூதங்களால் நீ இறந்தாய் பஞ்ச பூதங்களால் . உடல் எங்கே அங்கே மண்ணில். மனம் எங்கே இங்கே பிராணனில். புத்தி எங்கே அங்கே அலைகளாய் போய்விட்டது ஆனால் ஜீவன் மட்டும் சிவனாக சிவன் ஜீவனாக பிறப்பெடுக்கும் அன்பே சிவம்

அன்பே சிவம்…

இவ்வுலகத்தில் இறைவன் உண்டு. என்று சாதிப்போர்களும் உள்ளனர். இல்லை என்று சாதிப்பவர்களும் உள்ளனர். கடவுளை நம்பினோர் கைவிடப்படோர். என்பது ஆன்றோர் வாக்கு. வாக்காலும் மிக்க மனத்தாலும் அறிதற்கரிய அப்பரம்பொருளை உணரும் சிறந்த மார்கத்தை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அன்பே சிவம் என்பது அவர்கள் கூரிய அருள்வாக்கு. இதனையே திருமூலர் தமது திருமந்திரத்தில்

அன்பும் சிவனும் இரண் டென்பரறிவிலார்

அன்பே சிவ மாவதற்கும் அறிகிலார்

அன்பே சிவ மாவதாகும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே...என்றார்.

அன்பும் தெய்வமும் இரண்டு என்று கூறுவது அறியாமை. அன்புதான் தெய்வம் என்பதனை ஒருவரும் அறிந்திலர். அவ்வாற ஒன்றும் இல்லாாதது.அதாவது,தொடக்கமும் முடிவும் இல்லாதது....எ.கா.பிரபஞ்சம்...அன்பே சிவம் என திருமூலர் கூறியது அன்பு தான் சிவம் என்னும் பொருளா...? அல்லது சிவன் தான் அன்பு என்னும் பொருளா...?

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,

அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்.

அவன் ஒருவனே மெய்ப்பொருள்.

அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை.

இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது.

இதனைத் திருமந்திரம் ″ஒன்று அவன்தானே″ என்கிறது.

சிவனும் சக்தியும் ஒன்றென கூறுகிறது வேதங்கள்.

பொருளும் சக்தியும் (ஆற்றல்) ஒன்றென கூறுகிறது அறிவியல்.

இஸ்லாமிய மார்க்கத்தில் பொருள், சக்தி எல்லாம் ஒன்றாக இருந்தன, நானே பிரித்தேன் என்கிறான் இறைவன்...உடலை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே என்கிறார் திருமூலர்.

பொருளிலிருந்து ஆற்றலை உருவாக்கலாம்..ஆற்றலிருந்து பொருளை உருவாக்கலாம்...இது அறிவியல்.


“அவன்தான் ஒன்று” என்கிறது திருக்குரான்.

“ஒன்று அவன்தானே” என்கிறது திருமந்திரம்.

“எல்லாம் ஒன்று” என்கிறது அறிவியல்.

ஆற்றல் அழியாது, ஆனால் மாறக்கூடியது,

பொருளும் அழியாது, ஆனால் மாறக்கூடியது,

ஆனால் நினைவுகள் அழியாது, மாறவும் மாறாதது...முடிவாக என்னை பொறுத்தவரையில்

பொருள் (உடல் அல்லது சிவம்)

ஆற்றல் (உயிர் அல்லது சக்தி)

ஆன்மா (நாம் அதாவது நமது நினைவுகள் அதாவது அன்புள்ளம்)...!

ஓம நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் சாயீராம்..🙏🏻🙏🏻

ஒரு விசை இல்லாமல் ஒரு பொருள் நகராது, நகர்த்தவும் முடியாது. அப்படி என்றால் இப்பிரபஞ்சம் உருவாக்கிய இறைவன் யார்...?

 

ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஒரு விசை இல்லாமல் ஒரு பொருள் நகராது, நகர்த்தவும் முடியாது. அப்படி என்றால் இப்பிரபஞ்சம் உருவாக்கிய இறைவன் யார்...? 

இதைப் புரிந்து கொள்ள முதலில் பொறுமை, பணிவு தேவை. இறைவனின் மகிமையை  ஒரு கேள்வியின் மூலம் புரிந்து கொள்ள முடியுமா..? நம் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றை சில வார்த்தைகளில் அடக்கி விட முடியுமா..?ஆயினும் சிறிய முயற்சி எடுப்போம்..! ஒரு உவமை கொண்டு தான் இதை புரிந்து கொள்ள முயலமுடியும்.

கடவுள் என்பதன் ஸ்வபாவம், அதாவது இயல்பு "சுயஒளிர்வு". இதை வடமொழியில் ஸ்வயம்பிரகாசம் (Self Illuminated). வள்ளலார் இதை அருட்பெரும்ஜோதி என்று சொன்னார். சுய ஒளிர்வு என்றால், அது எப்பொழுதும் ஒளிமயமானதாக இருக்கிறது, தோன்றவும் இல்லை, அழிவதும் இல்லை. இதை தான் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்று சொல்வார்கள். இன்னொரு இயல்பு, தன்னை வெளிப்படுத்துதல். அது இறைவனின் விருப்பம் மற்றும் ஆற்றல். அவன் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது. இந்த ஆற்றல் தான் அதன் சக்தி...

இதையே மனித அறிவினால் புரிந்து கொள்ள உவமையாக சும்மா இருக்கும் பொழுது சிவனாகவும், வெளிப்பட செய்யும் பொழுது சக்தியாகவும் கருதப்படுகிறது. இறைவனுக்கு பால்வகை (gender) கிடையாது. நம் அறிவுக்கு எட்டாத ஒன்றை விவரிக்கும் பொழுது ஒரு அளவுகோல் தேவை படுகிறது. அதனால் இறைவனுக்கு பெண் பால் கொடுத்து சக்தி என்றும், ஆண் பால் கொடுத்து சிவன் என்றும் விவரிக்கப்படுகிறது.

உங்கள் கேள்வியின் படி அந்த விசை தான் சக்தி, பராசக்தி, ஆதி சக்தி என்று நம் விருப்பத்திற்கு ஏற்ப அழைக்க படுகிறது. அந்த விசை ஒடுங்கி, அசைவற்று இருக்கும் பொழுது, சிவம், அச்சலம் என்று அழைக்கபடுகிறது. அதனால் தான் திருவண்ணாமலையில் இறைவனை அருணாச்சலம் என்று அழைப்பர். அருணா என்றால் ஒளி, அது மௌனமாக, அசைவற்று இருக்கும் பொழுது அச்சலம். (ஹிமாச்சலம் என்றால் அசையாது இருக்கும் பனிமலை என்று பொருள்). அதனால் தான் சிவனுக்கு மௌனகுரு என்று பெயர். இதையே ரமண மகரிஷி, அருணகிரிநாதர், தாயுமானவர் போன்றோர் "சும்மா இரு" என்று சொன்னார்கள். இயேசுநாதரின் "Be Still and know that I am God" என்ற வாக்கியமும் இதையே குறிக்கிறது...

ஆற்றல் வெளிப்படும் பொழுது இப்பிரபஞ்சம் உருவாகிறது. ஆற்றல் ஒடுங்கும் பொழுது பிரபஞ்சம் மறைகிறது....ஆற்றல் குண கலவைகளால் (சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்கள்), வேறு வேறு உருவம் பெறுகிறது. ஆணாக, பெண்ணாக, பல உடல்களில், உருவங்களில் இந்த ஆற்றல் நிகழும். எல்லா குணங்களும் ஒடுங்கியபின் சிவம் நிலைக்கிறது. இந்த ஆற்றல் நிகழும் பொழுது மாயையும் சேர்த்து உருவாக்குகிறான் இறைவன். அதனால் நாம் இந்த உடல் என்று நினைத்து அல்லல்படுகிறோம். இந்த மாயையில் சிக்கி, ஆணவ மலம், மாயா மலம் மற்றும் கர்ம மலம் உண்டாகிறது. அதுவே மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க வைக்கிறது...

இதில் இருந்து விடுபட வேண்டும் என்று தோன்றும் பொழுது, ஒரு தக்க குரு அமைகிறார். அவர் வழிபடி நடந்தால் மாயையில் இருந்து விடுபட்டு சுதந்திரம் அடைகிறோம். இதையே மோட்சம், நிர்வாணம், சமாதி நிலை, ஆன்ம விடுதலை, வீடுபெறுதல் என்று பலவாறு அழைக்கபடுகிறது....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻