வெள்ளி, மே 28, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் பதினாறு மற்றும் பதினேழு (16,17)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏻 அத்தியாயம்::..பதினாறு மற்றும் பதினேழு (16,17)

 🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம் பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேதநூல்  என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்....சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல்,  மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே  சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித    வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  வேண்டியது  கிடைக்கப்பெறும்... .சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது  திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்....🔥

         🙏ஶ்ரீ சாய்சரித்திர அத்தியாயம்...🙏

       🙏பதினாறு மற்றும் ::பதினேழு (16 ,17)🙏 

🙏முன்னுரை...🙏

🔥 முதலில் துரித பிரம்ம ஞானத்தைப் பெற , தன்னை நாடி வந்த பக்தரிடம் பகவான் எவ்வாறு பிரம்ம ஞானத்தின் மூல சூட்சமத்தை உணர்த்தி பக்தரின் அறியாமையைப் போக்கிய அனுபவ மறை ஞான விளக்கவுரை....மற்றும்  பதினாறு மற்றும் பதினேழு என்கிற இவ்விரண்டு அத்தியாயங்களும், பாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெறவிழைந்த ஒரு செல்வந்தரின் கதையைப் பற்றிய விளக்கவுரையைப் பற்றி இங்கே காண்போம்.🔥

பதினைந்தாவது  அத்தியாயத்தில் சோல்கரின் சிறிய அளவிலான சமர்பண சங்கல்ப விரதம் எவ்விதம் நிறைவேற்றப்பட்டு ஏற்கப்பட்டது என்று  விளக்கப்பெற்றது...அன்புடனும், பக்தியுடனும் அளிக்கப்படும் எத்தகைய சிறிய பொருளையும், பாராட்டுதல்களுடன் ஏற்றுக் கொள்வார் என்று அக்கதையின் வாயிலாக பகவான்  அறிவுறுத்தினார்....ஆனால் அதுவே பெருமையுடனும், இறுமாப்புடனும் அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்...தாமே சச்சிதானந்தத்தினால் (சத்து - சித்து - ஆனந்தம்) முழுமையும் நிரம்பப் பெற்றிருந்தமையால், வெறும் புறச் சம்பிரதாயங்களை அவர் பெருமளவு இலட்சியம் செய்வதில்லை...அதுவே நான் என்ற அகந்தையின்றி,  பணிவான உணர்வுடன் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டால், அதை பகவான் வரவேற்று பேரார்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது..

உணமையில் சாயீபாபாவைப் போன்ற தாய்மையுணர்வு, தன்னடக்கம்,எளிமை, அன்பு,  அனைவரின் பாலும் பேதமின்றி நேசித்தல், மிகுதியான தாராளம், தயை முதலான பண்புகள் அமையப்பெற்ற பிறிதொருவர் எவரும் இல்லை என்றே கூறலாம்...சீரடி பகவானுக்கு நிகர்  பகவானே...அவரை சிந்தாமணிக் கல்லுக்கோ (நினைத்தவை அனைத்தையும் தரும் ஓர் அரும் பொன்மணி), கற்பக தருவிற்கோ(விருப்பங்களை ஈடேற்றும் தெய்வீக மரம்), காமதேனுவிற்கோ (விருப்பங்களை ஈடேற்றும் தெய்வீகப்பசு) ஒப்பிடமுடியாது...ஏனெனில் நாம் விரும்பியவற்றை மட்டுமே அவை அளிக்கின்றன...ஆனால் சத்குருவோ, கருதுதற்கியலாத, ஆராய்ந்து அறிதற்கியலாத, மெய்ப்பொருளாம் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை நமக்கு நல்கிறார்...

இப்போது சாயீபாபாவை  நாடி வந்த பக்தர், தனக்கு துரிதமாக பிரம்மஞானம் அளிக்க வேண்டுமென்று மன்றாடி வேண்டிக் கொண்ட  பக்தரிடம், பகவான் எவ்வாறு பிரம்மஞானத்தின் மூல சூட்சமத்தை எளிய அனுபவ  நிகழ்ச்சி மூலம் உணர்த்தி அந்த பக்தரின் அறியாமையைப் போக்கினார் என்பதைப் பார்ப்போம் இங்கே....தனது வாழ்க்கையில் மிகவும் சுபிட்சத்துடன் விளங்கிய பணக்காரர் ஒருவர் இருந்தார்.  (துரதிஷ்ட வசமாக அவர் பெயர், இருப்பிடம் முதலியன குறிக்கப்படவில்லை) அவர் ஏராளமாக செல்வம், வீடுகள், வயல்கள், நிலங்கள் முதலியவற்றைப் பெற்று ஏகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்... பல வேலையாட்களும், சார்ந்து வாழ்வோரும் வாய்க்கப்பட்டவராக இருந்தார்...பாபாவினது புகழ் பணக்காரரின்  செவிகளை எட்டியபோது, அவர் தனது நண்பர் ஒருவரிடம், தனக்கு எவ்விதமான பொருளும் தேவையிருக்கவில்லை  என்றும்,  எனவே அவர் சீரடிக்குச் சென்று, பாபாவிடம் பிரம்மஞானத்தை அருளும்படி பிரார்த்தனைச் செய்யப் போவதாகவும், அங்ஙனம் நான் ஞானத்தைப்  பெற்றால், அது நிச்சயம் தன்னை இன்னும் அதிக மகிழ்ச்சியுடையவராக்கும் என்றும் கூறினார்...அவருடைய நண்பர் பின்வருமாறு உரைத்து, அவர் கருத்தை மாற்ற முயன்றார்.. "பிரம்மத்தை அறிவதென்பது அவ்வளவு எளிதல்ல...அதிலும் குறிப்பாக மனைவி, மக்கள், செல்வம் என்னும் கவனங்களிலேயே முழுவதுமாகக் கவரப்பட்டிருக்கும் பேராசைக்காரர்களுக்கு அது எளிதே அல்ல.  ஒரு பைசாவும் தர்மத்திற்காக வழங்காத  மனிதராகிய உம்முடைய பிரம்மஞான நாட்டத்தை யார் திருப்தி செய்ய இயலும்...?" என்று நண்பர் பணக்காரரிடம் அறிவுருத்தியிருக்கின்றார்.

இந்தப் பணக்கார பெருந்தகை ,தமது நண்பரின் அறிவுரையைப் பொருட்படுத்தாது சீரடிக்குச் சென்று வர  குதிரைவண்டியைப் பேசியமர்த்தி சீரடிக்கு வருகைப்புரிந்தார்..மசூதிக்குச் சென்று சாயீபாபாவை தரிசித்தார்..பகவானின்  பாதங்களில் வீழ்ந்து, "பாபா, இங்கு வருவோர் அனைவருக்கும் எவ்விதத் தாமதமுமின்றித் தாங்கள் பிரம்மத்தைக் காண்பிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டு தொலைவிலுள்ள இடத்தில் இருந்து நான் இங்கு வந்திருக்கிறேன்... எனது பிரயாணத்தால் மிகவும் களைப்படைந்து உள்ளேன்.  நான் தங்களிடமிருந்து பிரம்மத்தைப் பெறுவேனாகில் எனது கடின முயற்சிகளுக்கெல்லாம்  கடைத்தீர்வாக இது அமையும் என்றார்....பாபா அப்போது கூறியதாவது, "ஓ! எனதருமை நண்பனே, ஏங்கிக் கவலையுறாதே... நான் உடனேயே உனக்குப் பிரம்மத்தைக் காண்பிக்கிறேன்...எனது நடைமுறைத் தொடர்புகள் அனைத்தும் ரொக்கத்திலேதான்...கடனில் அல்ல... எனவே பலர் என்னிடம் வந்து, செல்வம், தேக ஆரோக்கியம், ஆற்றல், புகழ், பதவி, நோய் தீர்த்தல் போன்ற இவ்வுலகப் பொருட்களையே கேட்கின்றனர்... இங்கு வந்து பிரம்ம ஞானத்தைக் கேட்டவர் மிகவும் அரிது...  இவ்வுலகப் பொருள்களைக் கேட்டவர்களுக்குப் பஞ்சமே இல்லை...ஆத்மார்த்த விஷயங்களில் ஆர்வமுடைய மனிதர்களைக் காண்பது மிகவும் அரிதாகையால், உம்மைப்போன்ற மனிதர்கள் வந்து என்னைப் பிரம்மஞானம் தரச்சொல்லி வற்புறுத்தும்போது அத்தருணத்தை யான் அதிஷ்டமும், புனிதமும் வாய்ந்ததாகக் கருதுகிறேன்...எனவே, உடனே மகிழ்ச்சியுடன் உனக்கு பிரம்மத்தின் சுற்றுச்சூழலையும், அதை அடைவதில் உள்ள சிக்கல்களையும், தெரிவித்துத் தெளிவிப்பேன்" என்றார் பகவான்....

இவ்வாறு அறிவுருத்தியப் பின்னர், பாபா பிரம்மத்தைப் பற்றி தெளிவுப்படுத்த  ஆரம்பித்தார்..பக்தரை அங்கே அமரும்படி செய்து, பிறிதோர்உரையாடலிலோ, விவகாரத்திலோ அவர் ஈடுபடும்படியாகச் செய்தார்....இவ்வாறாகத் தற்காலிகமாக பிரம்மஞானம் கேட்ட பக்தரின்  வினாவினை மறக்கச் செய்தார்..பிறகு ஒரு சிறுப்பையனைக் கூப்பிட்டு, நீ  நந்து மார்வாடியிடம் சென்று ஐந்து ரூபாய் கைமாற்று வாங்கி வரும்படி கூறினார்.  பையன் சென்று உடனே திரும்பிவந்து, இல்லையென்றும் அவர் வீடு பூட்டி இருப்பதாகவும்  கூறினான்...பின்னர் பாபா அவனை, மளிகைக் கடைக்காரர் பாலாவிடம் சென்று அவரிடமிருந்து குறிப்பிட்ட கைமாற்றை வாங்கிவரும்படி கூறினார்....இம்முறையும் பையன் வாங்கி  வெற்றிபெறாமல் திரும்பி வந்தான்..இந்தப் பரிசோதனை இரண்டு, மூன்று முறை அதே விளைவுடன் நடத்தப்பட்டது.  

நாம் அனைவரும் அறிந்தவாறு சாயீபாபா பூரணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற, இயங்கிக் கொண்டிருக்கின்ற அவதாரமாகும்... பின்னர் அற்பத் தொகையான ஐந்து ரூபாய் அவருக்கு ஏன் தேவைப்படுகிறது..?அதனைக் கைமாற்றாகப் பெறுவதற்கு அவர் ஏன் அரிதில் முயலவேண்டும் என்று சிலர் வினவக்கூடும். உண்மையில் அவருக்கு இத்தொகை தேவையிருக்கவில்லை.  நந்துவும், பாலாவும் அவரவர் இடங்களில் இல்லை தனது ஞானத்திருஷ்டியால்  பாபா நிச்சயமாக முழுமையும் தெரிந்துகொண்டே அச்சிறுவனை அனுப்பினார்.. 

இவ்வழிமுறையை பிரம்மத்தினை எய்த நினைக்கின்றவருக்கு ஒரு சோதனையாக மேற்கொண்டார் போலும்...அப்பெருந்தகை கரன்சி நோட்டுக்களின் கற்றை ஒன்றைத் தம் பையில் வைத்திருந்தார்....  அங்ஙனம் அவர் உண்மையிலேயே ஆர்வமுள்ளவராக இருந்திருப்பின், ஐந்து ரூபாயைப் பெறுவதற்காக பாபா தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் அத்தருணம், அங்கே அமைதியாக உட்கார்ந்துகொண்டு, நிகழ்வனவற்றின் வெறும் மேலோட்டப் பார்வையாளராக இருந்திருக்க மாட்டார். பாபா தமது மொழிகளைக் காப்பாற்றுவார் என்றும், கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்றும், தேவையான பணமும் ஓர் அற்பத் தொகையே என்றும் பிரம்மத்தை நாடிவந்தவர் அறிந்தே  இருந்தார்...  எனினும் அவருக்கு ஓர் உறுதியான தீர்மானத்திற்கு வரவோ, தொகையை முன்வந்து அளிக்கவோ இயலவில்லை.. 

அத்தகைய மனிதர் உலகிலேயே மிகமிகப் பெரிய கிடைத்தற்கரிய  பிரம்மஞானத்தை பாபாவிடமிருந்து பெற விரும்பினார்...  பாபாவிடம் அன்பு பூண்ட வேறெந்த பக்தரும், இவ்வாறு  பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக உடனடியாக பாபாவுக்கு ஐந்து ரூபாயை அளித்திருப்பான்...இம்மனிதரின் இயல்போ வேறானதாக இருந்தது.  அவர் எவ்விதப் பணமும் கொடுக்கவில்லை, அமைதியாகவும் அமர்ந்திருக்கவில்லை.  திரும்பிச் செல்வதற்குப் பதட்டமாக இருந்தமையால், பொறுமை இழக்கத் தொடங்கினார்....பாபாவிடம் மன்றாடி, "ஓ..! பகவானே,  தயவு செய்து சீக்கிரம்  எனக்கு பிரம்மத்தைக் காண்பியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்... 

பாபாவும், "ஓ..! எனதருமை நண்பனே, நீ பிரம்மத்தைக் கேட்டதன்  பொருட்டாகவே இவ்விடத்தில் அமர்ந்துகொண்டு நான் நுணுக்க விபரமாக ஆராய்ந்து நடத்திய அனுபவ  வழிமுறைகளையெல்லாம் நீ புரிந்து கொள்ளவில்லையா..?  சுருக்கமாக அவை இவ்வாறானதாகும்....பிரம்மத்தினைக் கண்டுணர்வதற்கு ஒருவன் ஐந்து நிலைகளைச்  சமர்ப்பிக்கவேண்டும்.. அவையாவன..

(1)  ஐந்து பிராணன்கள் (முக்கிய சக்திகள்)..

(2) ஐந்து உணர்வுகள்(செயலில்   ஐந்து, பார்வையில் ஐந்து)..

(3)  மனது..

(4)  புத்தி..

(5)  அகங்காரம் ...

பிரம்மஞானம் அல்லது ஆத்மானுபூதி என்னும் வழியானது கத்தி முனையில் நடப்பதற்கு  நிகரான கடினமான ஒன்றாகும்" என்று ஆரம்பித்து பிரம்மஞானத்தைப் பற்றி சாயீபாபா நீண்ட போதனை அளித்தார்....அதனுடைய கருத்துரை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.. பிரம்மஞானம் அல்லது ஆத்மானுபூதியைப் பெறுவதற்கு வேண்டிய முன்னீட்டான வரையறைகள் (தகுதிகள்) பெற்றிருப்பது அவசியமாகின்றது..எல்லோரும் தத்தமது வாழ்நாட்களிலேயே பிரம்மத்தைப் பார்க்கவோ, தெளிவாக உணரவோ முடியாது... அதற்கென்றே  சில  உயரியத் தகுதிகள் முழுமையாகத் தேவைப்படுகின்றன.. அத்தகுதிகளின் மூல சூட்சம விளக்கவுரைகளை இங்கே காண்போம்...

முதலாவதாக...

1. முமுக்ஷை::...என்பது விடுதலையடைய செறிந்த விருப்பம்..அதாவது ஒரு மனித உயிரானவன்  தான் மாயையில்  கட்டுப்படிருப்பதாக நினைத்து, தடைகளினின்று விடுபட வேண்டும் என்ற அந்த இலட்சியத்திற்காக  ஊக்கத்துடனும், தீர்மானத்துடனும் உழைப்பவனும் , மற்றெதைப் பற்றியும் கவலையுறாதவன் ஆத்மீக வாழ்க்கைக்குத் தகுதியுடையவன் ஆகின்றான்....  

2. விரக்தி:: -  என்பது இவ்வுலக, மறுஉலகப் பொருட்களின் மீதுள்ள வெறுப்புணர்ச்சி... அதாவது  இகபரங்களில் தனது செய்கையால் விளையும் ஐஸ்வர்யப் பொருட்கள், ஆதாயங்கள், கௌரவங்கள் இவைகளை ஒருவன் வெறுத்தாலன்றி ஆத்மீக ராஜ்யத்தின் எல்லைக்குள் நுழைய உரிமை இல்லை.

3. அந்தர் முகதா:: -  என்பது உள்முக சிந்தனை..அதாவது கடவுளால் நமது உணர்வுகளனைத்தையும் புறத்தே செல்லும் போக்குடையவைகளாய் படைக்கப்பட்டிருக்கின்றன.  எனவே, மனிதன் எப்போதும் தனக்குப் புறத்தே உள்ளனவற்றையே நோக்கி அகத்தைப் பாராதிருக்கின்றான்.. ஆத்மானுபூதியையும், இறவாப் புகழுடைய பெருவாழ்வையும் விரும்புபவன், தனது கூர்ந்த நோக்கை உள்முகமாகத் திருப்பி உள்ளிருக்கும் ஆத்மாவைப் பார்க்கவேண்டும்....

4. தீவினைகள் கசடறக் கழிபடுதல்::- ஒருவன் தீய மற்றும் கொடுந்தன்மைகளிருந்து மாறினாலன்றியும், தவறுகள் செய்வதை நிறுத்தினாலன்றியும், தன்னைத் தான் ஒருங்கிணைத்து அமைதியுற்றாலன்றியும், மனம் சாந்தமுற்றாலன்றியும், தத்துவ ஞானத்தின் மூலமாக மட்டும் ஆத்மானுபூதியை எய்துவிட இயலாது...

5. ஒழுங்கான நடத்தையும், உண்மையுடைய, தவமுடைய,  சத்திய உள்தரிசனத்துடன் கூடிய பிரம்மச்சர்ய வாழ்க்கையை நடத்தினாலன்றி, ஒருவன் இறையனுபூதியை எய்த இயலாது....

6. புலனுணர்வு மகிழ்ச்சி:: - என்பது நலம் பயப்பவைப்பொருட்கள் இரண்டு படித்தரமானவை.... அதாவது நன்மையானவைகளும், மனமகிழ்ச்சிக்கு உரியவையுமாகும்... முன்னவை ஆன்மீகச் செயல் தொடர்புடையவை... பின்னவை இகலோகப் பொருட்களின் செயல் தொடர்புடையவை....தம்மை ஏற்றுக் கொள்ளும்படி இவை இரண்டுமே மனிதனை அணுகுகின்றன....ஆலோசித்து அவற்றினுள் ஒன்றை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.  விவேகமுள்ளவன் மகிழ்வைவிட நன்மையைத் தேர்ந்தெடுக்கிறான்.ஒன்றுமறியாத  அவிவேகியோ, பேராசையாலும், பற்றாலும், மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கிறான்...

7. மனத்தையும் மற்ற உணர்வுகளையும் அடக்கியாளுதல்..அதாவது நமது தேகமே தேர்...ஆத்மாவே எஜமானர்...புத்தியே தேரோட்டி.. மனதே கடிவாளம்..உணர்வுகளே குதிரைகள்... உணர்விற்குரிய பொருட்களே அவைகளின் பாதைகள்... எவனொருவன் அனைத்தையும்  பற்றுணர்வுடன் பற்றிக் கொள்கின்றானோ, எவனுடைய மனம் கட்டுப்பாட்டுடன் தடுக்கப்பட இயலாததோ, எவனுடைய  உணர்வுகள் அடக்கியாளப்பட முடியாதவைகளோ, இவை  தேரோட்டியின் குறும்புச் சூழ்ச்சியுடைய பொல்லாத குதிரையின் செயலைப் போன்று , அவன் தன் பயண இலக்கான ஆத்மானுபூதியை சென்றடையாமல் பிறப்பு-இறப்பு என்னும் சுழலுக்கு ஆட்படுகிறான்...

ஆனால், எவரொருவர் அனைத்தையும் பற்றில்லாமல் சாட்சியாக பார்க்கின்றாரோ,  அடக்கியாளப்படுகிறதோ, எவரது  உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, அவன் சாரதியின் (குதிரையை திறம்பட செலுத்துபவர் )குதிரையின் செயலை நிகர்ப்ப,  அதற்க்குரிய சேரும் இடத்தையடைகிறான்.  அதாவது, ஆத்மானுபூதியென்ற நிலையை  எய்துகிறான்.  அங்கே அவன் மீண்டும் பிறப்பதில்லை... தனது சாரதியை (வழிகாட்டியை) போன்ற பற்றுணர்வுத் திறம் உள்ளவனும், தன்  மனத்தைக் கடிவாளத்தினால் கட்டுப்படுத்தக் கூடியவனும், பிரயாணத்தின் இலக்கான எவற்றினும் மேம்பட்ட எங்கும்நிறை விஷ்ணுவின் (கடவுள்) வாசஸ்தலத்தை எய்துகிறான்....

8.  மனத்தூய்மை ஒருவன் தனது பணித்துறைக் கடைமைகளை மனநிறைவுடனும், பற்றின்றியும் செய்தாலொழிய மனம் தூய்மைப்படாது... மனம் தூயதாக்கப்படாவிடில் அவன் ஆத்மானுபூதியைப் பெற இயலாது...  தூய்மையான மனம் ஒன்றினாலேயே விவேகமும் (நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பரிந்துணரும் ஆற்றல்), வைராக்கியமும் முளைத்து மேல் எழும்பி ஆத்மானுபூதிக்கு இட்டுச் செல்கின்றன...

9.குருவின் இன்றியமையாமை..அதாவது ஆத்ம ஞானமானது, எவரொருவரும் தன்னுடைய சுய முயற்சியால் அடைந்து விடலாம்  என்று ஒருகாலும் நினைக்கக்கூட முடியாத அளவுக்கு, சூட்சமமாகவும், அறிவுநிலை கடந்ததாகவும் இருக்கிறது...ஆகவே தாமே ஆத்மானுபூதி எய்தப்பெற்ற மற்றொருவர் - அதாவது, குருவின் உதவி முழுமையாக வேண்டப்படுகிறது...பெரும் உழைப்பாலும், தீவிர  முயற்சிகளாலும் பிறர் அளிக்க இயலாதவைகளை அத்தகைய குருவின் உதவியால் எளிதில் அடையலாம்.... ஏனெனில், அவர், முன்னரே ஆத்மானுபூதி  என்ற  அப்பாதையில் நடந்திருப்பதால் தன் சீடர்களை ஆன்மீக முனேற்றத்தின் ஏணியில், பட்ப்படியாக எளிதில் அழைத்துச் செல்ல முடியும்...

10. இறுதியாக கடவுள் அனுக்கிரகம் மிகமிக முக்கியமான பொருளாகும்... கடவுள் எவர் மீதாவது மகிழ்ச்சியுற்றவராயின், அவருக்கு விவேகம், வைராக்கியத்தை அளித்து, இகவாழ்வென்னும் பெருங்கடலைத் தாண்டி பத்திரமாக அவரை அழைத்துச் செல்கிறார்... "ஆத்மாவானது வேதங்களைக் கற்பதாலோ, புத்தியாலோ, மிகுதியான புலமையினாலோ பெறப்படுவதன்று...ஆத்மா எவனைத் தேர்ந்தெடுக்கின்றதோ, அவனாலேயே அது பெறப்படுகின்றது.அவனுக்கே, அது தனது இயல்தன்மையை  வெளிப்படுத்துகின்றது" என்று கடோபநிஷதம் கூறுகின்றது...

இவ்வாறாக பகவான் பிரம்மஞானத்தின்  மூல சூட்சம  விளக்கவுரையை முடித்ததும், பகவான், பிரம்மஞானம் கேட்டு வந்த பக்தரிடம்  திரும்பி, "பக்தனே.., உனது பையில் ஐந்து ரூபாயைப் போன்று ஐம்பது மடங்குள்ள உருவில் (ரூ. 250) பிரம்மம்  இருக்கிறது. அவற்றைத் தயவுசெய்து வெளியே எடு" என்றார்...அந்தப் பக்தரும்  நோட்டுக்களின் கற்றையைத் தமது பையினின்று வெளியே எடுத்தார்....அவற்றை அவர் எண்ணியபோது அவரது பெருவியப்பிற்குரிய வகையில், ஒவ்வொன்றும் பத்து ரூபாயான இருபத்தைந்து நோட்டுக்கள் இருப்பதைக் கண்டார்.. பாபாவின் எங்கும்நிறை பேரறிவைக் கண்ணுற்று உணர்ந்த பக்தர் மனதுருகி, பாபாவின் ஆசீவாதங்களுக்காக தாக்கம் கொண்டு  பகவான்  பாதத்தடியில் வீழ்ந்தார்....

அப்போது பாபா அவரிடம், "உனது  பணக் கட்டுப்பிரம்மதைச் சுருட்டிக்கொள்க...(அதாவது கரன்சி நோட்டுக்கள்)  உன் பேராசையை முழுமையாக விட்டொழித்தாலன்றி, மெய்யான பிரம்மத்தை நீ அடையமுடியாது...  செல்வம், மக்கள், சுபிட்சம் என்னும் கவனங்களால் முழுமையுமாய் கவரப்பட்டிருக்கும் மனதை உடைய மனிதன், அவைகளுக்கான அவனது பற்றுக்களையெல்லாம் விட்டொழித்தாலன்றி, எவ்வாறு  பிரம்மத்தை அறிந்து உணர்வதை  எதிர்பார்க்கமுடியும்... பற்றென்னும் மாயத்தோற்றம் அல்லது பணத்தாசை என்னும் இறுமாப்பு, பொறாமை போன்ற குணமானது, எங்கும்  முதலைகள் நிறைந்த துன்பப் பெருநீர்ச்சுழி ஆகும்... ஆசைகளை விட்டொழிந்தவனுக்கே சுழியைக் கடத்தல் இயலுவதாம்...  பேராசையும், பிரம்மமும் எதிர் எதிர் துருவங்கள். அவைகள் நிரந்தரமாக ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.  எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே பிரம்மத்தைப் பற்றிய எண்ணத்திற்கோ, தியானத்திற்கோ இடமில்லை...  பின்னர் எங்கனம் ஒரு பேராசைக்காரன் சாந்தத்தையும், பரகதியையும் பெற்றிடமுடியும்.பேராசைக்காரனுக்கு அமைதியில்லை, திருப்தியுமில்லை, நிலையுறிதிப்பாடுமில்லைஎன்பதை அறிவீர்களாக...

பேராசையுள்ளவன் செய்கின்ற  சாதனைகள் (ஆன்மீக முயற்சிகள்) அனைத்தும் பயனற்றவையேயாம்.  தனது இக கர்மங்களின் விளைவால் அடையவிருக்கும் பொருட்களின் ஆசையினின்று விடுபடாமலும், அவைகளின் மேல் வெறுப்புறாமலும் உள்ளவனுடைய ஞானமும், நன்றாகக் கற்றறிந்தவனுடைய ஞானமும் கூடப் பயனில்லை..அது அவனுக்கு ஆத்மானுபூதியைப் பெறுவதில் உதவ இயலாது...அகங்காரம் முழுமையும் நிரம்பப்பெற்று புலனுணர்வுப் பொருட்களையே சிந்தித்துக்கொண்டு இருப்பவனுக்குக் குருவின் போதனைகள் கூடப் பயனற்றவையே.  மனத்தூய்மை மட்டுமே இங்கு தேவைப்படுகிறது.  அஃதின்றி நமது ஆன்மீக சாதனைகள் யாவும் பயனற்ற வெளித்தோற்றமும், பகட்டு ஆரவாரமுமேயன்றிப் பிறிதில்லை... எனவே, ஒருவனால் ஜீரணிக்க முடிந்த, கிரகிக்க இயன்றவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வது நலமாகும். எனது கருவூலம் நிறைந்திருக்கிறது.  எவனுக்கும் அவன் விரும்புவதை நான் அளிக்க முடியும்... ஆனால் நான் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அந்தந்த மனித உயிருக்கு  இருக்கிறதா என்பதை நான் கவனிக்க வேண்டும். யான் உபதேசிப்பதை  கவனத்துடன் கேட்பீர்களேயானால், நீங்கள் உண்மையிலேயே நன்மை அடைவீர்கள்.  இம்மசூதியில் அமர்ந்துகொண்டு நான் உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை" என்று பகவான் தீர்க்கமாக  உரைத்தார்....

ஒரு வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கும் போது, வீட்டைச் சேர்ந்தவர்களும், அங்கிருக்க நேரிடும் மற்ற நண்பர்களும், உறவினர்களும், விருந்தாளியுடன் உபசரிக்கப்பட்டு மகிழ்வெய்துவார்கள்.  அவ்வாறே மசூதியில் அப்போது இருந்த அனைவரும், பாபாவினால் பிரம்மஞானம் கேட்டு வந்த பக்தருக்கு  பரிமாறப்பட்ட ஆன்மீக விருந்தில் பங்குக் கொண்டு லாபமடைந்தனர்...பணக்காரப் பெருந்தகை உள்ளிட்ட அனைவரும், பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்ற பின்னர், மிகவும் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் அந்த இடத்தைவிட்டுச் சென்றனர்...

🔥பாபாவின் சிறப்பான குணாதிசயங்கள் பற்றிய சிறுகுறிப்பு.... 🔥

தங்களது வீட்டைத் துறந்து காடுகளில், குகைகளில், துறவி மடங்களில் தனிமையில் இருந்துகொண்டு, தங்களுக்கே விடுதலை அல்லது பரகதி தேட முயற்சிக்கும் பல முனிவர்கள் உள்ளனர்.மற்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை...எப்போதும் அந்தராத்மாவிலேயே தம்மை மறந்து மூழ்கி இருப்பார்கள்... ஆனால் சாயீபாபா அவ்வகையைச் சார்ந்தவர் அல்லர்...  அவருக்கு வீடில்லை,  மனைவி இல்லை,  மக்களில்லை, சேய்மை அண்டைய  உறவினர்கள் யாருமே இல்லை...  எனினும் அவர் இவ்வுலகில் (சமூகத்தில்) வாழ்ந்தார்.. நாலைந்து வீடுகளிலிருந்து தமது உணவை அவர் தானே  இரந்துண்டு தன்னுடைய பசியாற்றி , எப்போதும் வேப்பமரத்தடியில் தவத்தில் தன்னிலையில்  வாழ்ந்தார்.... 

உலக விவகாரங்களை நடத்திக்கொண்டு, மக்களுக்கு உலகில் எங்ஙனம்  சத்திய மற்றும் விவேகத்துடன் மிகச் சிறந்த  கர்மயோகியாக வாழ வேண்டுமெனப் போதித்தார்...வாழ்க்கைப் பாதையையும் ஞானப்பாதையையும் ஒருசேரக் கற்பித்தார்...அனுபூதியடைந்தப் பிறகு   மக்களின் சுபிட்சத்துக்காகப் பாடுபடும் முனிவர்களையோ, சாதுக்களையோ காண்பதரிது...சாயீபாபா இவர்களிலெல்லாம் தலையாயவர்... எனவே ஹேமத்பந்த் பின்வருமாறு கூறுகிறார்.....இத்தகைய அசாதாரணமான, அறிவாற்றல் மிகுந்த, விலைமதிப்பற்ற, தூய்மையான மாணிக்கக்கல் (சாய்பாபா) அவதரித்த நாடு ஆசீர்வதிக்கப்பட்டது.  குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது.தூயவர்களாகிய அவரின் பெற்றோர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்."

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🙏🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்...🙏🙏🙏

https://youtu.be/8yz8WU76bkg


https://youtube.com/channel/UC_StOEm4cGxRNjlt1vSjs8A

http://o8ng7.163esports.com/jp/1620979331.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக