ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻
எமது குழந்தைகளே..நீர் யாவரும் சகல விதமான ஐஸ்வர்யத்தை பெற்று , ஒழுக்கத்தோடும் சிறந்த நற்குணங்களோடு இருந்தாலும், வறுமையின் காரணமாக மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனதூய்மையும்,தன்னலமற்ற சிந்தனைகளும், எண்ணங்களும் இல்லை என்றால் , எதையுமே நீ எதிர் கொள்ள முடியாது. சாதிக்கவும் முடியாது... மிகவும் முக்கியம் சகிப்புத் தன்மையோடு வாழக் கற்றுக் கொள்வீராக....
நான் பக்கபலமாக இருந்தாலும் நானே அனைத்திற்கும் சர்வாதிகாரி என்றாலும் அனைத்தும் எனக்கு கட்டுப்பட்டு இருந்தாலும் உன்னிடம் நிலையான,உண்மையான, ஆத்மார்த்தமான,விசுவாச பக்தியும் இருந்தால் மட்டுமே, நான் உன்னை அனைத்திலும் இருந்து பாதுகாக்க முடியும்....நம்பிக்கையையும், சகிப்புத்தன்மையும், தைரியத்தையும், நேர்மையையும்,சத்திய நெறிமுறைகளை கடைப்பிடிப்பவர்களாக, மனித நேயம் பேணி புனித நிலையை அடையக்கூடிய தன்மையில் உள்ளவர்களை நான் சற்று உற்று நோக்கி அவர்களின் வாழ்வியலின் இயக்கத்தில் செயல் நோக்கத்தை சரி செய்கின்றேன்...உமது சித்தத்தை தூய்மைப் படுத்தவே இதை அனைத்து நற்குணங்களையும்,நல்ல நெறிமுறைகளையும் அறிவுருத்துகிறேன்.
இவை யாவும் வாழ்க்கைப் பாதையில் உம்மை விழிப்புணர்வோடு செயல்பட வைக்கும்... உம்மை முன்னேற்றப் பாதையில் கொண்டு சேர்க்கும்...ஆகவே உங்களுக்காகவே இதனை அனைத்தும் அறிவுருத்துகின்றேன்..இதில் யான் எனக்கு எந்தப் பலனும் இல்லை ..உங்களை மிகச் சிறந்த கர்ம யோகியாக இந்த உலகம் எமது குழந்தைகளை செல்லாக் காசாக நினைத்து மதிக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காகவே இதனை அறிவுருத்துகிறேன்.. உன்னிடம் இருந்து இதைத் தான், நான் எதிர்பார்க்கிறேன்...ஆகவே புரிந்து உணர்ந்து செயல்படுத்துவீராக...
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீட்ம்...🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக