ஞாயிறு, மே 09, 2021

🔥🔥🔥ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேதநூலான சாய்சத்சரித்திரம் யாரால் எவ்வாறு எழுத தொடங்கியது என்பதைப் பற்றிய விளக்கம்....🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻

ஸ்ரீசீரடி சாய்பாபாவின்  சாய்சரித்திர அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்..🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித  வேதநூலான சாய்சத்சரித்திரம் யாரால், எவ்வாறு  எழுத தொடங்கப்பட்டது  என்பதைப் பற்றிய அனுபவ விளக்கம்.🔥🔥

ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை  இயற்றியவர்  ஹேமாட்பந்த்  என்பவர் ஆவார்.., சீரடி பாபாவை தன் சத்குருவாக  ஏற்று, பாபாவின் ஆசியையும்,அனுக்கிரகத்தையும் ஒருங்கேப் பெற்ற  உயரிய பக்தராவார்...சீரடி சாய்  பாபாவைப் பற்றி எழுத பகவானின் ஆசி முதலில் தேவை என்று உணர்ந்த ஹேமாட்பந்த், மாதவ்ராவ் தேஷ் பாண்டே என்ற பாபாவின் நேரடிப் பக்தரை, அணுகினார்...இருவரும் பாபாவிடம் ஒருநாள் சென்று வணங்கினார்கள் அப்போது  மாதவ்ராவ் தேஷ்பாண்டே  பகவானிடம்  கூறுகின்றார்...பகவானே உங்கள் சரித்திரம் எழுத ஹேமாட்பந்த் மிகவும் ஈடுபாடும் ஆவலும் கொள்கின்றார் என்று அனுமதி கேட்கின்றார்..அதற்கு பகவான் என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது...நான் ஒரு சாதாரண பக்கிரி என்று கூறுகின்றார்..அதற்கு மாதவ்ராவ் அவ்வாறு கூறாதீர்கள்..உங்கள் ஆசியில்லாமல் அவரால் இது எழுத  துவங்க இயலாது.'' என்று கூறுகின்றார் மாதவ்ராவ்...பகவான் இதை கேட்டுவிட்டு சிறிதும் யோசிக்காமல் அருகே இருந்த உதியை  (சாம்பல்) எடுத்து ஹேமாட்பந்தை  அருகே வர ஜாடை காட்டி  சிரம் தொட்டு தலையில் இட்டு, ''அவன் எழுதட்டுமே  என்று ஆசி வழங்குகின்றார்....பக்தர்களின் கதை, அனுபவம்  எல்லாம்  சேமித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதட்டும்  நான் உதவுகிறேன் என்றும், அவன் என்னை வெளிப்படுத்தும் கருவி..ஆகவே  நான் அவனை  என்னைப் பற்றி சொல்ல  உபயோகித்துக் கொள்கின்றேன் என்று கூறுகின்றார்....என் பக்தர்கள் விரும்புவதை சாய்சரித்திர வேத சொற்கள்  நிறைவேறட்டும்  'என்கின்றார்  பகவான்....இதற்கு அகம்பாவம், தற்பெருமை  கூடாது... நானே கதி என்கிற சரணாகதி அவசியம்... அதெல்லாம் அவனிடம் உண்டாகும்போது நானே அவனுள் இயங்கி  என்னைப்பற்றி கூறிக் கொள்வேன்'' என்கிறார் பகவான்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக