புதன், மே 26, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் பதினான்கு🙏🏻

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏻அத்தியாயம்::பதினான்கு(14)🙏🏻

🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே.🔥

ஶ்ரீசாயீன் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்..இதில்  சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேதபாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதக் கமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்...🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்..இவ்வேதப்  பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்... சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥

🙏அத்தியாயம் ::பதினான்கு(14)🙏

🙏முன்னுரை..🙏

சீரடி பகவான்  தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, எவ்வாறு எளிய  உபதேசங்கள் மூலமாக உயரிய நிலையை அடைய  வழிநடத்தினார் என்பதன்  விளக்கவுரை....

பகவான், தன்னுடைய  ஆத்மார்த்தமான பக்தர்  நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி வாடியாவின் நீண்ட நாள் குறையை தீர்த்து குழந்தைப் பாக்கியம்  வழங்கியதைப் பற்றிய  அனுபவ விளக்கவுரை....

பகவான் தன்னை நாடி வந்த பக்தர்களிடம் ஏன்  தக்ஷிணையைப்  பெற்றார்.. அவ்வாறு தக்ஷிணைப் பெற்றதன் மூல சூட்சம விளக்கங்களும், தக்ஷிணை அளித்தவர்களின்  அனுபவ விளக்கவுரைகளும் ....

மேற்க்கண்டத் தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக இங்கே பார்ப்போம்...

🔥முதலில் சீரடி பகவான்  தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, எவ்வாறு எளிய  உபதேசங்கள் மூலமாக உயரிய நிலையை அடைய  வழிநடத்தினார் என்பதன் விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

இயற்கையிலேயே ஞானியரின்  வாழ்க்கையானது அகமும்  புறமும் இனிமையானதாய் இருக்கிறது...சீரடி பகவானின் இயல் வாழ்வியல் இயக்க முறைகளும்  கூட,  பிற உயிர்கள் எவ்வாறு உயிரியப் பண்புகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக  இருந்தது.. அதாவது பகவானின் வாழ்வியல் இயக்க  செயல்பாடுகளும் ,பகவான்  வாழ்ந்த விதமும், கடைப்பிடித்த கோட்பாடுகளும் , உபதேச மொழிகளும், ஆதி மூல மறை ஞான விளக்க உரைகளை எளிமையான நடையில் போதித்த விதமும், மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக அனைத்து மத சடங்குகள்,விழாக்கள் ஆகியவற்றை அனுசரித்த விதமும், சக  உயிர்களை  சமமாக பாவித்து,  சகிப்புத் தன்மையுடன்  எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்பித்த விதமும்,  ஏகத்தன்மையுடன் அனைத்து ஜீவராசிகளையும்  ஒன்றாக பாவித்தத் தன்மையும், தன்னை நாடி வந்த  ஏழை  எளியவர்களுக்கு அன்னதானமிட்டு அன்னதானத்தின் மகிமையை உலகறியச் செய்த நிலையும், எளிமையாக எவ்வாறு , எதிலும் பற்றில்லாமல் சாட்சியாக வாழ்வது என்பதை போதிக்க , பகவான் வாழ்ந்த காலம் முழுவதும்  நமக்கான பாடசாலையாக தன்னை உருமாற்றி,  அனைத்து உயரிய சத்திய உண்மை  நற்ப்பண்புகளுடன்  தான் வாழ்ந்து காட்டினார்... நாம் அவ்வாறு வாழ வேண்டும் என்பதற்காகத் தான், பகவான் முன் உதாரணமாக  வாழ்ந்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது..

சாட்சிநாதராக எதிலும் ஒட்டாமல்  விழிப்புணர்வுடன் தனக்குள் அனைத்தையும்  கண்டு , அகத்தில் மகிழ்ந்து புறத்தில் பற்றற்று வாழ்ந்தார்...பகவான் மிகுந்த தாய்மை உணர்வுடன் தன்னை நாடி வந்த பக்தர்களின் ஆவல்களையும்,ஏக்கங்களையும், நோய் நொடிகளையும் தீர்த்து சகல சம்பத்துக்களையும்  வழங்கி ஆசிர்வதித்த  விதமானது அபூர்வமானது..மிக ஆழமான  அற்புதங்களை உள்ளடக்கியது...பகவான் தன்னை பேரன்பின் பிறப்பிடமாகவும், பேரானந்தத்தின் பிறப்பிடமாகவும், உயரிய சத்திய தன்மையின் பிறப்பிடமாக, மிகுந்த தயை நிரம்பிய தாய்மையுணர்வின் பிறப்பிடமாகவும், சகிப்புத்தன்மையின் பிறப்பிடமாக  பகவானின் பேராற்றல்  இருந்தது...அனைவரும் தன்னை எளிமையாக பூஜிக்க வேண்டும் என்பதற்காக, ஆத்மார்த்தமாக உண்மையான தூய்மையான அன்புடன் தமக்கு ஓர் இலையைக் கூட வைத்து வழிப்பட்டால்  போதுமானது என்றார்..நம்பிக்கை மற்றும் பொருமை, நேர்மை, சகிப்புத்தன்மை, சாந்தம், சத்தியம், உண்மை, மனிதநேயம், தெய்வீகம், ஒற்றுமை, பிற உயிர்களை நேசித்தல் , தர்ம காரியங்களைச் செய்தல், வைராக்கியம், தவம், தானம், வஞ்சகமின்மை, புறங்கூறாமை,  மற்றும்  எவ்வாறு  கர்மயோகியாக  வாழ்வது  போன்ற  இறைப் பண்புகளுடன், எவ்வாறு தன் பக்தர்கள்  வாழ வேண்டும் என்பதற்காக பல உவமான அனுபவ உபதேச  விளக்கவுரைகளை எடுத்துக்காட்டாக  கூறி  மக்களுக்கு நல்வழிக்காட்டினார்.. இவ்வுலகில்  அனைவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக பல உயரிய  உபதேசங்களைக் கூறி வழிநடத்தினார்...  வாழ்க்கையின் மூல உயரிய  நோக்கத்தை ஒவ்வொரு மனித உயிரும்  உணர்ந்து,  தெளிந்து வாழ வேண்டும் என்பதற்காக வழிக்காட்டினார்....அதாவது  அனைத்து மனித உயிர்களும்  சித்தம் சீரடைந்து ஆத்மானுபூதி அடைய வேண்டும் என்று  உயரிய சத்திய உபதேசங்களை போதித்தார்..

முந்தைய ஜென்மங்களிலுள்ள நல்வினைகளால்  நாம் இவ்வுடம்பைப் பெற்றிருக்கிறோம்...பக்தியையும், விடுதலையையும் பெற, இந்த ஸ்தூல உடலே  தகுதியுடையதாகும்.எனவே எப்போதும் நாம் சுய விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும்  இருக்கவேண்டும்...நமது குறிக்கோளையும், நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய்,  நாம் நம்மை உற்று நோக்கிக் கொண்டே இருக்கவேண்டும்...நாம்  தினந்தோறும்  சாயீன்   நாமத்தை ஜெபித்தல்,  சத்திய உபதேச உரைகளைக் கேட்டல், சாய்சரித்திர பாராயணம் மேற்க்கொள்ளல், அற்புத அனுபவ உரைகள்,  லீலைகள் போன்றவற்றை  அகந்தையின்றிக் கேட்டு, பகவானை  எப்போதும்  நமக்குள் கண்டு சத்தியப் பாதையை நோக்கிச் செல்ல முன்வர வேண்டும்...நாம்  இவ்வாறாக அனைத்து உபதேச உரைகளையும்,  சாயீ லீலைகளையும், விழிப்புணர்வு தியானத்தையும் பின்பற்றினால் , நமது மனம்,சொல், செயல் ஆகியன ஒரே நேர்க்கோட்டில் இயங்கப் பெற்று  சித்தம் தெளிவடையும்.. இவ்விதமாகவே முழுமைத் தன்மையுடன் அனைத்தையும்  பின்பற்றினால்  அது முடிவாகச் சுத்த  ஞானத்தில் இரண்டறக் கலந்து பகவானின் மூல  சைதன்யத்தை அடைந்து விடுவோம்...

🔥பகவான், தன்னுடைய  ஆத்மார்த்தமான பக்தர்  நாந்தேடைச் சேர்ந்த   ரத்தன்ஜி வாடியாவின் நீண்ட நாள் குறையை தீர்த்து குழந்தைப் பாக்கியம்  வழங்கியதைப் பற்றிய  அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்....🔥

நைஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேடில், ஒரு பார்சி மில் காண்ட்ராக்டரும், வியாபாரியுமான ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் வசித்து வந்தார்...இவர் பெருமளவு செல்வம் சேகரித்து வயல்களையும், நிலங்களையும் பெற்றிருந்தார்...ஆடு, மாடு, குதிரை, போக்குவரத்து வசதிகள் இவ்வளவையும் பெற்று மிகவும் சகல விதமான  சுபிட்சத்துடன் வாழ்ந்தார். புறத்தோற்றங்கள் அனைத்திற்கும் மிகவும் திருப்தி வாய்ந்தவராகவும், சந்தோஷமுடையவராகவும் காணப்பட்டார்...ஆனால் அந்தரங்கமாகவும், உண்மையாகவும் அவர் அங்ஙனம் இருக்கவில்லை.  ஒவ்வொரு மனித உயிருக்கும் ஏதோ ஒரு குறையிருப்பது போல்,   ரத்தன்ஜிக்கும் குழந்தை பாக்கியம் இல்லை....

ரத்தன்ஜி  தாரரளமானவராகவும்,தான தர்மசீலராகவும், ஏழைகளுக்கு  உணவு, உடையளித்தும், சக உயிர்களுக்கு தன்னால் முடிந்தளவு  உதவிபுரிந்தார்.  மக்கள் அவரை நல்லவர், மகிழ்ச்சி நிரம்பியவர் என்று கருதினர்...ஆனால் நெடுநாளாகத் தனக்கு  குழந்தை  இல்லாததனால் தமக்குள்ளேயே அவர் மிக்க துயர் கொண்டவரானார்.  அன்பும் பக்தியுமின்றிப் பாடப்பெறும் இறைவன் புகழ் குறித்த கீர்த்தனை போன்றும், பக்க வாத்தியங்களற்ற இசையைப் போன்றும், பூணூல் அற்ற பிராமணனைப் போன்றும், பொது அறிவின்றிக் கலைகளில் பெற்ற சிறப்பறிவைப் போன்றும், பாவத்திற்காகக் கழிவிரக்கமின்றிச் செய்யும் தீர்த்த யாத்திரையைப் போன்றும், அட்டிகை அற்ற ஆபரண அணிமணிகள் போன்று அழகற்றதாகவும், பயனற்றதாகவும் இருப்பதைப் போன்றே ஆண் குழந்தையற்ற இல்லறத்தானுடைய நிலையும் என்பது குறிப்பிடத்தக்கது..

இவ்விஷயத்தைப் பற்றியே ரத்தன்ஜி சதா சிந்தித்து, எனக்கொரு புத்திரனைக் கடவுள் எப்போதாவது மகிழ்ந்தருளுவாரா..? என்று ஏங்கினார்...  இவ்வாறாக அவர் கலகலப்பின்றியும், முகவாட்டத்துடனும் எப்போதும்  காணப்பட்டார்....உணவில் அவருக்குச் சுவை  ஈடுபாடு  இல்லை.  தான் ஒரு புதல்வனுக்காக ஆசீர்வதிக்கப்படுவோமோ என்று அவர் அல்லும் பகலும் இதே கவலையால் பீடிக்கப்பட்டார்...தாஸ்கணு மகராஜி என்ற பகவான் பக்தரிடம்  ரத்தன்ஜிக்கு   மரியாதை அதிகம்...  அவரைக் கண்டு ரத்தன்ஜி, தன் உள்ளத்தின் ஆவலை  வெளியிட்டார்... தாஸ்கணுவும் அவரை சீரடிக்குப் போகும்படியும், பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர்தம் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதத்தைப் பெற்று குழந்தை வேண்டுமென வேண்டிக்கொள்ளவும் அவருக்கு அறிவுறுத்தினார் ரத்தன்ஜிக்கு இக்கருத்துப் பிடித்தது...சீரடிக்குப் போகவும் தீர்மானித்தார்...

சில நாட்களுக்குப் பின்னர் ரத்தன்ஜி  சீரடிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தார்...பிறகு தம் கூடையைத் திறந்து ஒரு அழகிய பூமாலையை எடுத்து, அதை பாபாவின் கழுத்திலிட்டுக் கூடைநிறையப் பழங்களையும் சமர்ப்பித்தார்... பிறகு  பாபாவின்  அருகில் மிக்க மரியாதையுடன் அவர் அமர்ந்து பின்வருமாறு வேண்டத் தொடங்கினார்... "இக்கட்டான நாட்களில் இருக்கும்போதே அநேகர் தங்களிடம் வருகிறார்கள்...தாங்கள் அவர்களின் துன்பங்களை உடனே துடைக்கிறீர்கள்... இதைக்கேட்டு நான் தங்களது பாதகமலத்தை அடைக்கலம் புகுந்தேன்.ஆகவே தயவுசெய்து என்னை ஏமாற்றாதீர்கள்"..என்று ரத்தன்ஜி வேண்டுதலை வைத்தார்....

பகவான்  ரத்தன்ஜி கொடுக்க இருந்த ரூ.5 கேட்டார்.  ஆனால் ரூ. 3.14  முன்னரே வாங்கிக்கொண்டதாகவும், மீதம் உள்ளதை மட்டும்  கொடுக்க வேண்டும் என்றார்...ரத்தன்ஜி பெரிதளவில் குழப்பமடைந்தார்...பாபா என்ன கூறினார் என்று அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை...அவர் சீரடிக்குச் செல்வது இதுவே முதல்முறை...முன்னமே ரூ. 3.14 ஐ தாம் வாங்கிக்கொண்டதாக பாபா  கூறியது எங்ஙனம் என்று அவர் நினைத்தார்...அவரால் புதிரை விடுவிக்க இயலவில்லை. ஆனால் ரத்தன்ஜி  பாபாவின் பாதத்தடியில் அமர்ந்து, கேட்கப்பட்ட மீதமுள்ள தட்ஷிணையை அளித்தார்.

பாபாவிடம் தாம் வந்த காரணத்தை முழுமையும் விளக்கிக்கூறி, அவருடைய உதவியைக் கோரினார்.. தமக்கு ஒரு புத்திரனை பாபா ஆசீர்வதித்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டார். பாபாவும் மனதுருகி, ரத்தன் ஜியிடம் கவலைப்படாமல் இருக்கும்படியும், அதிலிருந்து அவரின் கஷ்டமான நாட்கள் முடிந்துவிட்டன என்றும் கூறினார்... பின்னர் அவருக்கு உதீயை அளித்து, அவரது தலையில் கையை வைத்து, அல்லா உமது  உள்ளத்தின் ஆசையைப் பூர்த்திசெய்வார் என்றும் கூறினார்...

பின்னர் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு நாந்தேடுக்குத் திரும்பி, சீரடியில் நடந்த எல்லாவற்றையும் தாஸ்கணுவுக்குக் கூறினார்...அங்கு எல்லாம் நன்றாகவே நிறைவேறியதாகவும், தாம் பாபாவின் தரிசனத்தையும், ஆசீர்வாதத்தையும், பிரசாதத்துடன் பெற்றதாகவும், ஆனால் அவரால் ஒன்றை மட்டுமே புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார்....பாபா அவரிடம் தாம் ஏற்கனவே  ரூ 3.14 ஐ வாங்கிக்கொண்டதாகக் கூறினார்.இக்குறிப்பினால் பாபா என்ன கூறுகிறார் என்பதைத் தயவுசெய்து விவரியுங்கள்...நான் சீரடிக்குச் சென்றதில்லை.. பிறகு பாபாவிடம் அத்தொகையை நான் எவ்விதம் கொடுத்திருக்க முடியும் என்று தாஸ்கணுவிடம் கூறினார்...தாஸ்கணுவுக்கும் அது ஒரு புதிராகத்தான் இருந்தது....  அதைப்பற்றிப் பெரிதும் அவர் நீண்ட நேரம் சிந்தித்தார்...சிறிது நேரத்திற்குப் பிறகு பின்வரும் நிகழ்ச்சி அவர் கவனத்திற்கு வந்தது...சில நாட்களுக்கு முன் ரத்தன்ஜி, மௌலா சாஹேப் என்ற ஒரு முகம்மதிய முனிவரை வரவேற்று, அவரின் வரவேற்பு உபசாரணைக்காக  சிறிது பணம் செலவழித்தார்.  

மௌலா சாஹேப், நாந்தேட் மக்களை நன்றாக அறிந்த ஒரு முனிவர்.  (சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தவர்)  ரத்தன்ஜி  சீரடிக்குப்  போகத் தீர்மானித்தபோது, இந்த மௌலா சாஹேப் தற்செயலாய் ரத்தன்ஜியின் வீட்டிற்கு வந்தார்...ரத்தன்ஜி அவரை அறிந்திருந்தார்.. அவரிடம் அன்பு செலுத்தி, சாஹேப்பை  கௌரவிக்கும் விதமாக ஒரு விருந்து கொடுத்தார்.  தாஸ்கணு, ரத்தன்ஜியிடமிருந்து விருந்து உபசாரத்துக்கான செலவுக் குறிப்புக்களை வாங்கிப் பார்த்தார்.  எல்லாம் சரி நுட்பமாக ரூ 3.14 ஆகியிருந்தது.  அதற்குக் கூடவோ, குறையவோ இல்லாதது கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் செயலிழந்தனர்...அவர்கள் பாபா எங்கும் நிறை பேரறிவுடையவர்  என்பதை அறியத் தலைப்பட்டார்கள்...சீரடியில் வாழ்ந்தாலும், சீரடியிலிருந்து நெடுந்தூரம் உள்ள வெளியிடங்களில் நடப்பதையும் பகவான்  அறிந்திருந்தார்.  

உண்மையில் அவர் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் தன்னுடைய  எங்கும் நிறைந்த பேரறிவால்  அறிந்திருந்தார்... அனைத்து ஆத்மாவினுள்ளும் தன்னைக் கண்டார்....  மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மூலம் பகவான் அனைவருக்குள்ளும் நீக்கமற நிறைந்ததன் சூட்சம மூல காரணத்திற்கு எடுத்துக்காட்டே, ரத்தன்ஜி மௌலா சாஹேபுக்குக் கொடுத்த வரவேற்பு பற்றியும், அதற்கு அவர் செலவழித்த தொகையைப் பற்றியும் பகவான் அறிந்திருப்பதைக் காட்டுகின்றது. ஏனெனில் மௌலா சாஹேப்புக்குள்ளும்  பகவான் இருந்தக் காரணத்தால் தான்  அனைத்தையும் அறிந்திருந்தார்....மேலும் ரத்தன்ஜி தாஸ்கணுவின் விளக்கத்தால் திருப்தியுற்றார்.  பாபாவிடம் அவருக்குள்ள நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுப் பல்கிப் பெருகியது.  பின்னர் உரிய காலத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை ஆசீர்வதிக்கப்பட்டது...அவரின் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை...அவருக்குப் பன்னிரண்டு குழந்தைகள் மொத்தத்தில் பிறந்தன என்றும் அதில் நான்கே உயிர் பிழைத்ததாகவும்  கூறப்படுகிறது...

இவ்வத்தியாயத்தின் அடிக்குறிப்பில் பாபா, ராவ்பகதூர் ஹரி விநாயக் சாதே என்பவரை, அவர் முதல் மனைவி இறந்த பின்னர் மீண்டும் மணம் செய்துகொள்ளுமாறும், அவருக்கு மகன் பிறப்பான் என்றும் கூறினார்.... சாதே இரண்டாவது மணம் புரிந்துகொண்டார்.  இம்மனைவி மூலம் அவருக்குப் பெண் குழந்தைகளே பிறந்தன.  எனவே அவர் மிகவும் மனத்தளர்வடைந்தார்.  ஆனால் மூன்றாவது ஆண் குழந்தையாகப் பிறந்தது.  பாபாவின் சொற்கள் உண்மையாயின.  அவரும் திருப்தியுற்றார்.

🔥பகவான் தன்னை நாடி வந்த பக்தர்களிடம் ஏன்  தக்ஷிணையைப்  பெற்றார்.. அவ்வாறு தக்ஷிணைப் பெற்றதன் மூல சூட்சம விளக்கங்களும், தக்ஷிணை அளித்தவர்களின்  அனுபவ விளக்கவுரைகளும் இங்கே. ...🔥

தக்ஷிணையைப் பற்றிய சில குறிப்புக்களுடன் இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம்....பாபாவைப் பார்க்கச் சென்றவர்களிடத்தில் பகவான்   தக்ஷிணைப் பெற்றது  என்பது எல்லோரும் அறிந்த உண்மை..சிலர் பாபா ஒரு பக்கிரியாகவும், அறவே பற்றன்றியும் இருந்தக் காரணத்தினால் , அவர் ஏன் தக்ஷிணை கேட்கவேண்டும்...? ஏன் பணத்தைப்பற்றி இலட்சியம் செய்யவேண்டும்...? என்ற பலருடைய மனதில் தோன்றலாம்.... இவைகளை இப்போது விளக்கமாகக் கவனிப்போம்....  

ஆரம்பத்தில் நெடுநாட்களுக்கு பாபா எதையுமே கேட்கவில்லை.  அவர் எரிக்கப்பட்ட தீக்குச்சிகளைச் சேமித்து தம் பைகளில் வைத்துக்கொண்டார்....  எவரிடமிருந்தும், அவர் அடியவராக இருப்பினும் பாபா எதையும் ஒருபோதும் கேட்கவில்லை... யாராவது ஒரு பைசாவோ, இரண்டு பைசாவோ அவர் முன்னால் வைத்தால், அவர் எண்ணெயோ அல்லது புகையிலையோ வாங்கினார்... அவர் புகையிலையின் மீது விருப்பமுடையவராக இருந்தார்....ஏனெனில் அவர் எப்போதும்  சில்லிம் (புகைபிடிக்கும் ஒரு மண்குழாய்) குடித்தார்.

பின்னர் சில பக்தர்கள் ஞானிகளை  வெறும் கையுடன் பார்க்கக் கூடாது என நினைத்தனர்.  எனவே அவர்கள் பாபாவின் முன்னால் சில செப்புக் காசுகளை வைத்தனர்....  ஒரு பைசா கொடுக்கப்பட்டால் அதை அவர் பைக்குள் போட்டுக்கொள்வார்.  இரண்டு பைசா நாணயமாக இருப்பின் அது உடனே திருப்பிக் கொடுக்கப்படும்... பாபாவின் புகழ் திக்கெங்கும் பரவிய பின்னர், மக்கள் அவரிடம் பெருந்திரளாக வரத் தொடங்கினர்...  அவர்களிடம் பாபா தக்ஷிணை கேட்கத் தொடங்கினார்.  ஒரு தங்கக் காசு வைக்கப்பட்டாலன்றி கடவுளின் பூஜை பூர்த்தியாவதில்லை என்று ஸ்ருதி (வேதங்கள்) அறிவுருத்துகின்றது..

கடவுள்களின் பூஜைக்கு தக்ஷிணை  தேவைப்பட்டிருந்தால், ஞானிகளின் பூஜைக்குக் கூட ஏன் அது அங்ஙனம் இருக்கக்கூடாது..?  ஒருவன் கடவுள், அரசன், ஞானி, குரு இவர்களைப் பார்க்கும்போது வெறும் கையுடன் போகலாகாது என்று விதிக்கப்பட்டது...அவ்வாறு ஞானி மற்றும் மகானை தரிசிக்க விரும்புகின்றவர்கள் பழங்கள், பூ, தக்ஷிணை என்று முடிந்தளவு  எதையாவது அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்...இது சம்பந்தமாக உபநிஷதங்கள் சிபாரிசு செய்த கருத்தை நாம் கவனிக்கலாம்...

பிருதாரண்ய உபநிஷதம் பிரஜாபதிக் கடவுள்கள், தேவர்கள், மனிதர்கள், பிசாசுகள் இவைகளை 'த' என்ற ஒரே எழுத்தால் அறிவுருத்துகின்றது.. இச்சொல்லால், தேவர்கள * த*  வை  தமா என்ற தன்னடக்கத்துடன்  பழகவேண்டுமென்று புரிந்துக் கொண்டனர்.. மனிதர்கள் *த * வை  தானம் அல்லது தர்மம் செய்ய வேண்டுமென்று புரிந்துக்கொண்டனர்... பேய்கள் * த*  வை தயை அல்லது பரிவு செய்யவேண்டுமென்று புரிந்துக்கொண்டனர்.. எனவே மனிதர்கள் தர்மம் அல்லது ஈகை செய்ய வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகின்றது.... தைத்ரீய உபநிஷத்தின் குரு தனது மாணவர்களை தர்மத்தையும், மற்ற நல்ல பண்புகளையும் பயிலும்படி ஊக்குவித்து உபதேசிக்கிறார்...தர்மத்தைப்பற்றி அவர், நம்பிக்கையுடன் தானம்  வழங்குங்கள்..ஆனால்  தானத்தை வழங்கும் போது  பெருந்தன்மையுடனும்,  தாராளமாகவும், பணிவுடனும், பயபக்தியுடனும், இரக்கத்துடனும் பிற உயிர்களுக்கு  கொடுங்கள் என்று அறிவுறுத்துகின்றது..  

தான தர்மத்தை அடியவர்களுக்குப் போதிப்பதற்கும், ஐஸ்வர்யத்தில் உள்ள  பெரும் பற்றுக்கள் குறைவதற்கும், அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும், பகவான் தன்னை நாடி வந்தவர்களிடம்  தக்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார். ஆனால் அதில் இவ்விசித்திரம் இருந்தது. அதாவது  பகவான் , தாம் வாங்கியதைப் போன்று நூறு மடங்குக்கு  அதிகமாக  திரும்பக் கொடுத்தார்... இவ்வாறாகப் பல இடங்களில் நிகழ்ந்தது... உதாரணத்திற்கு , பிரசித்திபெற்ற நடிகரான கணபதிராவ் போடஸ் தனது மாராத்திய சுயசரிதையில், பாபா தம்மைத் திரும்ப திரும்ப தக்ஷிணை கேட்டதாகவும், தனது பணப்பையையே அவர் முன்னர் காலியாக்கியதாகவும், இதன் விளைவாகப் பிற்கால வாழ்வில் தமக்கு ஏராளமாக ஐஸ்வர்யம்  வந்ததால் பணத் தேவையே இருக்கவில்லை என்றும் கூறுகிறார்.  

பல சந்தர்ப்பங்களில் தக்ஷிணைக்கு பதிலாக  மற்ற உயரியத் தன்மைகளைக்  கேட்ட  மறைபொருளும் உண்டு. இரண்டு நிகழ்சிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.  

பேராசிரியர் G.G.நார்கேயிடமிருந்து பாபா தட்ஷிணையாக ரூ. 15  கேட்டார்...நார்கே தன்னிடம் ஒரு  பைசாகூட இல்லையென்று பதிலளித்தார்...அதற்குப் பாபா கூறியதாவது, "உன்னிடம் பணம் இல்லையென்பதை நான் அறிவேன்...யோக வசிஷ்டத்தை நீங்கள் படித்திருக்கிறீர்கள்...அதிலிருந்து எனக்கு தக்ஷிணை கொடுங்கள்"...தக்ஷிணை அழிப்பது என்பதற்கு இதற்கு  பொருள்...அதாவது நூலிலிருந்து நீதிகளை உய்த்துணர்ந்து அவைகளை பாபா வாசம் செய்கிற ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருத்திக் கொள்ளுதல் என்பதாகும்.. 

இரண்டாவது சந்தர்ப்பத்தின்போது, திருமதி தர்கட் என்ற அம்மையாரிடம் ரூ.6 தக்ஷிணையாகக் கொடுக்கும்படி பாபா கேட்டார்...ஏதும் அவள் பகவானுக்கு  கொடுக்க இயலவில்லை என்று மன வருத்தம் அடைந்தாள்...பின்னர்,  பாபா கூறுகின்றார் ... ஆறு என்பது மனித உயிரின்  உட்பகைவர்களையே  (காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம்) தம்மிடத்தில்  சமர்ப்பிக்கும்படி கேட்டார் என்று அம்மையாருக்கு விளக்கினார்...   

தக்ஷிணையின் மூலம் பாபா ஏராளமாகப் பணம் சேகரித்தார் என்பதும், அவ்வளவு பணத்தையும் அதே நாளில் பகிர்ந்தளித்து விடுவார் என்பதும், அடுத்த நாள் காலை வழக்கம்போல் பகவான்  ஒரு ஏழைப் பக்கிரியாகிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஏறக்குறையப் பத்து வருடங்களாக ஆயிரம் ஆயிரம் ரூபாய்களைத் தக்ஷிணையாகப் பெற்றுவந்த பாபா, பின்னர் மகாசமாதி அடைந்தபோது அவருடைய உடமையில் சில ரூபாய்களே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது... சீரடி பாபா தன் பக்தர்களிடம் ஏன் தக்ஷிணைப் பெற்றார் என்றால், நாம் அனைவரும் அனைத்திலும் பற்றில்லாமல் சாட்சியாக வாழ வேண்டும் என்று வலியுருத்தவும்,  சக உயர்களுக்கு உதவிகள் செய்து, தூய்மையான உயரிய நிலையை அடையவும், நம்முடைய கர்ம வினைகளைத்  தக்ஷிணையாகப் பெற்று உயரிய நிலையை அடையச்செய்தார்  என்பது குறிப்பிடத்தக்கது...

🙏பின்னுரை..🙏

B.V.தேவ் என்பவர் ஓய்வுபெற்ற மம்லதாரும், பாபாவின் பெரும் அடியவர்களுள் ஒருவரும் ஆவார்...அவர் சாயீலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 7, எண். 25, பக்கம் 26) தக்ஷிணையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்... 

"பாபா எல்லோரிடமிருந்தும் தக்ஷிணை கேட்கவில்லை. கேட்காமலேயே சிலர் தக்ஷிணை அளித்தால் அவர் அதைச் சில சமயங்களில் ஏற்றுக்கொண்டார்..மற்ற நேரங்களில் மறுத்துவிட்டார்...சில குறிப்பிட்ட அடியவர்களிடமே தக்ஷிணைக்   கேட்டார்... பாபா தங்களிடம் எதற்காகக் கேட்கவேண்டும்..ஏன்  கொடுக்கவேண்டும் என்று நினைத்தவர்களிடம் அவர் கேட்டதேயில்லை.  பாபாவின் விருப்பத்திற்கு மாறாக யாரேனும் அதைச் சமர்ப்பித்தால், அவர் தொடுவதில்லை...அந்த அடியவர் அஃதை அங்கேயே வைத்திருந்தாள், அதை அப்பால் எடுத்துக் கொள்ளும்படி பாபா கூறுவார்...பக்தர்களின் விருப்பம், பக்தி, சௌகர்யம் இவைகளுக்கேற்றவாறு அவர் சிறிய, பெரிய தொகைகளைக் கேட்டார்.  எல்லாச் செல்வந்தர்களையும் கேட்கவில்லை...அன்றி எல்லா ஏழைகளிடமும் கேட்கவுமில்லை...

தக்ஷிணை கேட்டு கொடுக்காதவர்களிடம் பாபா கோபம் அடைந்ததே இல்லை..யாரேனும் நண்பன் மூலம் தக்ஷிணை அனுப்பப்பட்டு, அவன் அதை பாபாவிடம் கொடுக்க மறந்துவிட்டானாயின், பகவான்  அவனுக்கு அதை எப்படியோ ஞாபகமூட்டி தனக்கு  கொடுக்கும்படி செய்தார்...சில சந்தர்ப்பங்களில் தக்ஷிணையாகக் கொடுத்தப் பணத்தில் கொஞ்சப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அதைப் பாதுகாக்கும்படியோ  அல்லது வழிபாட்டிற்காக அவர்களின்  இல்லத்து  பூஜை அறையில் வைக்கும்படியோ கேட்டுகொள்வார்....

இம்முறையானது பணம் அளித்தவருக்கோ அல்லது அந்த பக்தருக்கோ எல்லையற்ற அளவு நன்மையளித்தது... தான் கொடுக்க நினைத்திருந்ததை  விட அதிகமாக யாரேனும் கொடுத்தால், அவர் அதிகப்படியான மீதமுள்ள தொகையைத் திரும்ப அளித்துவிடுவார்...  சிலரிடம் தாங்கள் முதலில் கொடுக்க நினைத்திருந்ததைவிட அதிகமாகவும், அப்படி அவர்களிடம் பணம் இல்லையானால் மற்றவர்களிடம் பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ அளிக்கக் கூறினார்..சிலரிடம் அவர் ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தக்ஷிணை கேட்டார்.  

தக்ஷிணையாகச் சேர்ந்த பணத்திலிருந்து அவர் தமக்காக மிகவும் கொஞ்சமே செலவழித்தார்.  அதாவது சில்லிம் என்ற புகைக் குழாய் வாங்குவதற்கும், துனி என்ற புனித அடுப்புக்கு எரிபொருள் வாங்குவதற்கும் செலவழித்து மிச்சமனைத்தையும் பல்வேறு மனிதர்களுக்கு வேறுபடும் விகிதங்களில் தர்மமாகப் பகிர்ந்து அளித்தார்.. சீரடி சமஸ்தானத்தின் சிறுசிறு பொருட்களெல்லாம் அப்போது இருந்த பணக்கார அடியவர்களால் ராதாகிருஷ்ணமாயீன் வேண்டுகோள், யோசனையின் பேரில் வாங்கி அளிக்கப்பட்டவை...விலைமதிப்புள்ள, செல்வமிகு பொருட்களை யாரேனும் கொணர்ந்தால் பாபா சீற்றமடைந்து அவர்களைக் கடிந்துக்கொள்வார்...  நானா சாஹேப் சாந்தோர்கரிடம் தமது உடைமைகள் ஒரு கௌபீனம், ஒரு துண்டு, ஒரு கஃப்னி, ஒரு தகரக்குவளை என்றும் அவரைப் பலர் தேவையற்ற, பயனற்ற விலையுயர்ந்த பொருட்களெல்லாம் கொண்டுவந்து தொல்லைப்படுத்துவதாகவும் கூறினார்.

நமது பரமார்த்திக வாழ்வில் இருக்கும் இரு பெரிய தடங்கல்கள் பெண்ணும், செல்வமும். பாபா சீரடியில் இரண்டு நிலையான அமைப்பு முறைகளைஏற்படுத்தினார் அதாவது தக்ஷணையும், ராதாகிருஷ்ணமாயீயும் ஆகும்...எனவே பக்தர்கள் அவரிடம் வந்த போதெல்லாம் அவர்களிடம் தக்ஷணை கேட்டார்...பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொன்னார்....பள்ளிக்கூடமென்பது  ராதா கிருஷ்ணமாயீயின் வீடு  என்பதாகும்..அவர்கள் இவ்விரண்டு சோதனைகளில் நன்றாகத் தேறினார்களேயானால், அதாவது செல்வத்துக்கும், பெண்ணுக்குமுள்ள பற்றுக்களிலிருந்து விடுபட்டவர்கள் என்று தெளிவுப்படுத்துவார்களேயானால் அவர்களின் ஆன்மீக முன்னேற்றம் துரிதமானது..பாபாவின் அருளாலும், ஆசிகளாலும் உறுதியளிக்கப்பட்டது...

தேவ், கீதை உபநிஷதங்களிளிருந்து புண்ணிய க்ஷேத்திரத்தில் புண்ணிய ஆத்மாவுக்குக் கொடுக்கப்பட்ட தர்மமானது கொடுத்தவருக்கு அதிக பலன் அளிக்கிறது என்பதை ஸ்லோகங்கள் மூலம் எடுத்துக் காண்பித்து இருக்கிறார்.  சீரடியில் அதில் உறையும் தெய்வவுமான சாயீபாபாவையும் தவிர புனிதமானது என்ன இருக்க முடியும்...?

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்...🙏🙏🙏🙏🏼🙏🏼


https://youtube.com/playlist?list=PL2wMPZhligflE6VZJndcQUXqkIxidNcmW


https://eprofile.brandspot365.com/business409542


https://www.facebook.com/groups/1257804604570307/permalink/1435376020146497/



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக