ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🙏🙏
பாலாஜி பாடீல் நெவாஸ்கர் என்ற பக்தர், பகவானின் கொண்ட குருபக்தியின் காரணமாக ... பாபா ஸ்நானம் (குளிப்பது) செய்ததும், கை, கால், முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார். .ஶ்ரீசாயீ சத்சரித்திரம்..🙏
பாபா தட்சிணை பற்றி காகா மஹாஜனி -யிடம் கூறியது, "உம்முடைய மனதில் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை;..ஆகவே நான் கேட்கவில்லை. இப்போது உமக்கு கொடுக்க மனமிருந்தால் கொடுக்கலாம்". உடனே காகா மஹாஜனி பதினேழு ரூபாயை பாபாவின் பாதங்களில் வைத்தார்...ஶ்ரீசாயீ சத்சரித்திரம்...🙏
சீரடியிலிருந்து வீடு திரும்பும் பக்தர்கள் பாபா-விடம் அனுமதி பெற வந்தபோது, அவர்களுக்கு உதீ அளிப்பது பாபாவின் வழக்கமாகியது.. பகவான் "உதீ கொண்டு வா" என்று சொன்னாலே, வீடு திரும்ப அனுமதி கிடைத்துவிட்டதென்று அறிந்து கொள்வார்கள். ஸ்ரீ சாயீ சத்சரித்திரம்..🙏
பிறர் கொடுப்பது நமக்கு எப்படி போதும்..? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம்...." இதனை உணர்ந்து கொள்வீராக..ஸ்ரீசீரடி சாய்பாபா....🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக