வியாழன், மே 13, 2021

🔥🔥சத்குருநாதர் சீரடி பாபாவுடன் எவ்வாறு நம்மை பிணைத்துக் கொண்டு ஆத்மார்த்தமாக பூஜிப்பது என்பதன் விளக்கம்....🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்....🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥சத்குருநாதர் சீரடி பாபாவுடன் எவ்வாறு நம்மை பிணைத்துக்கொண்டு  ஆத்மார்த்தமாக  பூஜிப்பது என்பதன் விளக்கம்....🔥🔥

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை...நம் தாயை எவ்வாறு  அணுகுவோமோ அவ்வாறே அனுக வேண்டும்..... சத்திய அன்புடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்...அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள்...அதே போல் பகவான் தம்  குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிறவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார்...ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது.,?அவர்கள் பாபாவை அணுகவேண்டும், என் மனப்பூர்வமாக விரும்பிய உடனே அணுகுமுறை  துவங்கி விட்டது...அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது... அவர்கள் மேலும் மேலும் உற்சாகம் அடைகின்றனர்..ஆகவே அதிகளவில் பலனை  அடைகின்றனர்...முதலில் ஒரு வித நன்றியுணர்வையும், நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகின்றார்கள்.... 

பக்தர்கள் பாபாவின் திருவுருவைத்  தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள், படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து,பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவர வேண்டும்.... கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அற்புத லீலைகளை உணர சாய்சரித்திரப் பாராயணத்தை மேற்க்கொள்ளுங்கள்...பாபாவின் குணாதிசயங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ள பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி [108 நாமாக்கள்] மிக்க சக்தி வாய்ந்த சாதனம்... ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள வேண்டும்...ஆத்மார்த்தமான உயரிய அன்பும் ஆர்வமும்,  ஏக்கமும்  உள்ள  சாதகனுக்கு பகவானே  மேற்க்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார்...

ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது..அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பகவானே  உணர்த்துவார்..பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும்....உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கின்றார்கள்...விழிப்புடன்  இருக்கும் போதே அவருடன் பேசவும் செய்கின்றார்கள்... சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது.... பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயீ பக்தர்கள் எண்ணற்றவர்கள்....அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு முழு  பலன்களைப் பெறுகின்றார்கள்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏼🙏🏼

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக