ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻
🔥🔥ஏன் விழிப்புணர்வுத் தியானத்தை, நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். அதனால் நமக்கு கிடைக்கப்போகும் பலாபலன்கள் என்ன என்பதனையும், மேலும் அதில் உள்ள மூல சூட்சமம் என்ன என்பதன் விளக்கம்...🔥🔥
விழிப்புணர்வு தியானம் என்பது.. நீங்கள் செய்கின்ற அன்றாட செயல்பாடுகளையும், மனதில் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பையும், நீங்கள் அதனோடு செயல்புரியாமல், பற்றில்லாமல், சாட்சியாக இருந்து கவனிப்பது என்பதாகும்....உங்களது வாழ்க்கை செல்பாடுகளை, சாட்சியுடன் கூடிய விழிப்புணர்வோடு பற்றில்லாமல் செய்வீராக.... நீங்கள் தான் அதனை செய்வதாக எண்ணாமல் , கடவுளின் கைகளில் ஒரு கருவியாக அதாவது சாட்சியாக இருந்து செயல்படுவீராக.. அந்த செயலின் பலனை கடவுளிடம் சமர்ப்பித்து விடுவீராக...அதனால் அந்த செயல்களின் நன்மையோ அல்லது தீமையோ உங்களைச் சாராது...அது கட்டுப்படுத்தாது.. அதன் தாக்கமானது உங்களை எவ்வித துன்பத்திற்கும் உள்ளாக்காது....எந்த செயலைச் செய்தாலும், நீங்கள் செய்கின்ற செயலையும் கவனித்துக் கொண்டே ,உங்களுடைய மனதில் தோன்றும் எண்ணங்களையும் கவனித்தல் வேண்டும்...
இவ்வாறு கவனிக்க, கவனிக்க உடலும், மனமும் வேறாகின்றது. இவ்வாறு நீங்கள் செயலை சாட்சியாக கவனிக்கும் போது , நான் என்ற தன்மை மாற்றமடைந்து, நீங்கள் செய்த செயலோடு ஒன்றி விடுவீர்கள்..அந்தச் செயல் செய்த களைப்பு ஏற்படாது...ஏனெனில் நான் என்பது இங்கு இல்லாமல் போகின்றீர்கள்.... நீங்கள் அங்கே வெறும் சாட்சியே... மூன்றாவதாக ஒன்று அதாவது நான் என்பது நீங்கி, சாட்சியாக உள்ள நிலையில் மூல இறையாற்றல் உங்களை இயக்க ஆரம்பித்து விடும்...அதே சமயத்தில், நீங்கள் மனதையும் கவனித்தீர்களேயானால் மனதில் தோன்றும் எண்ண அலைகளும் அழிந்து செயலிழந்து விடும்..ஏனெனில் நீங்கள் மனதை சாட்சியாக, விழிப்புணர்வோடு,தோன்ற கூடிய அனைத்து எண்ணங்களை மறுப்பின்றி, எந்த எதிர் சலனமும் இன்றி, எதிர்ப்பின்றி கவனிக்கும் போது மனதில் தோன்றும் எண்ண அலைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள்...இது ஒரு மாயை செயலிழப்பு தன்மையாகவே இருக்கும்.. ஆனால் இவ்வாறு ஏற்றுக் கொள்ளும் போது, எண்ண அலைகள் போராடாமல் ஒரு சுழற்சியில் செயலிழந்து விடும் ...ஏனென்றால் மனதில் தோன்றிய எண்ணங்களை ஏற்றுக் கொண்டதால், தோன்றிய அனைத்து விதமான எண்ணங்களின் தொகுப்பு செயல்புரியாமல் அமைதியடையும்... நீங்கள் அந்த எண்ணத்தின் அதிர்வை அனுமதித்ததன் காரணமாக , அதன் வீர்யம் இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பிக்கும்.
ஆனால் விழிப்புணர்வுடன் சாட்சியாக கவனித்தல் என்பதை, எவ்வித முன்னேற்பாடும் இன்றி போராடாமல் கவனிக்க வேண்டும்.... இயல்பாக முடிந்தளவு கவனித்தால் போதுமானது... உங்களை கவனிக்க வேண்டும் என்ற தன்மையை திணிக்காதீர்கள்...நீங்கள் வலுக்கட்டாயமாக கவனித்துத் தான் ஆக வேண்டும் என்று கவனித்தால், அது இயல்புத் தன்மை மாறிவிடும். இது ஒரு வித செயற்கைத் தன்மையை ஏற்படுத்தும்..இதன் காரணமாக பஞ்சேந்திரியங்களின் மூலமாக ஈர்த்த எண்ணங்களின் தாக்கம் இருந்துக் கொண்டே இருக்கும்..விழிப்புணர்வுடன் தான் இருக்கின்றோமா என்பதை உங்களுக்குள்ளே கேட்டு நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்... இந்தப் பயிற்சியை, எதிலும் பற்று வைக்காமல் சாட்சியாக இருந்து விழிப்புணர்வுத் தியானத்தை மேற்க் கொண்டீர்கள் என்றால் வாழ்வே தியானமாகும். ..நீங்கள் செய்த அனைத்து செயலும் முழுமையடைந்து சிறந்த தீர்வைப் பெற்றுத் தரும்....ஏனெனில் அந்தச் செயலை நீங்கள் செய்யவில்லை..சாட்சியாக உங்களை நிலைநிறுத்திக் கொண்டு, இறையாற்றலை உங்களை இயக்க அனுமதிக்கிறீர்கள்....ஏனெனில் நீங்கள், நான் என்ற தன்மையை எடுக்காமல், பார்வையாளராக, விழிப்புணர்வுடன், பற்றில்லாமல் சாட்சியாக இருக்கும் போது, நான் என்பது முற்றிலும் மறைந்து, நாம் என்ற தன்மையில் இறையின் வசம், உங்களை ஒப்படைத்து விடுகிறீர்கள்... இந்த நிலையானது உங்களுக்குத் தெரியாமலேயே, ஒருவித முழு சரணாகதி நிலையில் மூல ஆற்றலோடு சென்று விடுகிறீர்கள்...இப்போது உடலும், மனமும் வேறாகின்றது...இந்த நிலையில் நமக்குள்ளே என்றென்றும் நிலைத்து இருக்கின்ற மூல சிவத்திற்குள் நிலைப் பெறுவோம் ....இந்த நிலையில் இறைசக்தி முழுவதும் உங்களை இயக்க ஆரம்பித்து விடும்ட இதுவே விழிப்புணர்வு தியானமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது....
இந்த நிலையைத் தான் குரு உபதேசம் செய்தின்றார்... எதிலும் பற்றில்லாமல் பற்றுங்கள் என்றும், சாட்சியாக இருங்கள் என்று குரு போதிக்கின்றார்.. .இந்த தியானத்தை கடைப்பிடிக்க.. உங்களுக்கு இறையாற்றலின் மூல சூட்சமத்தைப் பற்றிய புரிதலும், உணர்தலும் வரும்.. நமக்குள் இருக்கின்ற உயிர்ச்சக்தி என்கிற இறையாற்றல் இயக்க ஆரம்பித்து விட்டால் உங்களின் வாழ்க்கை ஒரு விதமான தெய்வீகத் தன்மையை அடைந்து விடும்....நீங்கள் தொட்டது துலங்கும்..வாக்கு சித்திப்பெறும்....ஏனெனில் உம்மை இயக்குவது இறையாற்றலாக இருக்க எதிலும் தோற்றுப் போக மாட்டோம்.....
நாம் அனைவரும் செய்ய வேண்டியது விழிப்புணர்வு தியானத்தைக் கடைப்பிடித்து, அதாவது விழிப்புணர்வோடு செயல் மற்றும் மனதையும் கவனித்து, அனைத்தையும் குருவின் பால் ஒப்படைத்து நாம் வெற்றிடமாவோம்.... நானை இழந்து அதாவது நான் என்கின்ற சரீர பாவனை மற்றும் அகந்தையை இழந்து வெற்றிடத்தை நமக்குள் உருவாக்குவோம்....வெற்றிடத்தில் மட்டுமே குருத் தன்மை இயங்க ஆரம்பிக்கும்.... .வெற்றிடமே வெட்டவெளி தரிசனத்தைப் பெறச் செய்யும். .ஆகவே இதனை உணர்ந்து,இத் தியானத்தை பின்பற்றி குருவின் கரம் பிடித்து நம்மை மேன்மைப்படுத்திக் கொள்வோமாக....
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக