வியாழன், செப்டம்பர் 14, 2023

கடவுள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வது எப்படி..?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கடவுள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்வது எப்படி..?

கடவுளிடமிருந்து வந்த உறுதிப்படுத்தப்பட்ட செய்தி...நான் ஒவ்வொரு மனிதனிடமும் பேசுகின்றேன்.. எப்பொழுதும்.... நான் யாரிடம் பேசினேன் என்பது அல்ல கேள்வி, யார் யாரெல்லாம் நான் பேசியதை கவனித்தார்கள் என்பது தான் என் கேள்வி...இப்படி உங்களோடு தொடர்பு கொள்ள இந்த பரந்த அண்டம் (பிரபஞ்சம்) முழுவதும் இயங்குகின்றேன். ஆகவே இனிமேலாவது நான் பேசுவதை, வெவ்வேறு வழிகளில் உங்களோடு தொடர்பு கொள்வதை கவனிக்க ஆரம்பியுங்கள்.. மிகவும் கவனமாகவும், நுட்பமாகவும்...அடுத்து நீங்கள் கேட்கும் பாடலின் சில வார்த்தைகளாகவோ, வாசிக்கும் கட்டுரையில் சில தகவல்களாகவோ, தற்செயலாக நீங்கள் கேட்கும் அறிமுகமற்ற ஒருவரின் அபிப்பிராயமாகவோ அது வெளிப்படலாம்...

மேலும், சலசலக்கும் ஆற்றின் ஓசையும், ஆர்ப்பரிக்கும் கடலின் அலையோசையும், மென்மையாக தொட்டு செல்லும் தென்றலின் கிசுகிசுப்பும் உங்களிடம் பேச நான் படைத்த சில உத்திகள் தான். இவற்றில் ஏதாவது ஒன்றில் உட்புகுந்து வருவேன்....எண்ணங்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள், வார்த்தைகள் எல்லாமே என்னுடைய வழிமுறைகள் தான்.. நீங்கள் கவனிக்க வேண்டும், அவ்வளவு தான்...மேலும் , நீங்கள் அழைக்காமல் நான் வருவதில்லை....ஆனால், என்னுடைய அதிமுக்கியமான கருவி உங்கள் உள்ளேயேயிருந்தே பேசும் எனது குரல் தான்…இதன் மூலம் உங்களை விரைவில் அணுக முடிகிறது. மேலும், உங்களுக்கும் மிக நெருக்கமாக இருப்பதால, நான் உரத்த குரலில் பேசுவது போலிருக்கும்...அந்த குரல் தான் உண்மையா, பொய்யா; சரியா, தவறா..நல்லதா, கெட்டதா என்பதை உங்களுக்கு சொல்லும் குரல்....அந்த குரல் தான் உங்கள் வாழ்க்கை படகு கரை சேர திசைகாட்டும் கருவி.ஆனால், அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு அனுமதிக்க வேண்டும்..ஆகவே, கடவுள், உங்களுக்கான சரியான எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது உணர்வுகளை தேவையான சரியான நேரத்தில் கொண்டு வருவார் - தேவை விழிப்புணர்வு மட்டுமே....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக