ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻
ஶ்ரீசீரடி சாயீன் உபதேச பொன்மொழிகள்..🙏🏻
ஶ்ரீசாயீ கூறுகின்றார்...என்னுடைய யோக மாயையினால் எல்லோராலும் என்னைக் காண இயலாது. இந்தப் படைப்பில் எல்லா விதமான காரணங்களுக்கும் மூல காரணமாக இருப்பவன் நான். எந்த நிகழ்வுக்கும் காரணம் நான் தான். என்னில் எதுவும் குறையாது..
எதுவும் கூடாது. ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பவன் நான். என்றும் பிறந்ததில்லை, இறக்கப் போவதும் இல்லை. மூடர்களுக்கு இது புரியாது.” “சிறிது அறிவு படைத்தவர்கள் கூட நான் தூய்மையான பரமாத்மா, பிறப்பு இறப்பு அற்றவன் என்று அறிவார்கள். பிறப்பு இறப்பை நான் எப்போதும் அனுபவித்ததில்லை. என்னைச் சுற்றி இருப்பவர்கள் காலப்போக்கில் வயது முதிர்ச்சி அடைகிறார்கள். மாறி கொண்டிருக்கிறார்கள். என்னில் எந்த மாற்றமும் இல்லாததால் நான் எப்படி இறக்க முடியும்..?” எது மாறிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு மட்டும் தான் அழிவு உண்டு...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக