செவ்வாய், செப்டம்பர் 12, 2023

நீங்கள் சரண் செய்ய வேண்டிய எதுவும் ஏற்கனவே இறைவனுடையது அல்லவா..?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நீங்கள் சரண் செய்ய வேண்டிய எதுவும் ஏற்கனவே இறைவனுடையது அல்லவா..? ஆனால், உங்களுடையது என்று நீங்கள் நினைக்கும் எதையும் ‘விட்டு விடுங்கள்’ என்றே நான் சொல்வேன்..! எதையாவது நீங்கள் இறுகப் பற்றிக்கொண்டிருந்தால்,‘ தளர்வாகுங்கள்..!’ தளர்வதே சரணாகதி; வேறு எதுவும் இல்லை....🙏🏻

உங்கள் மனதை ஏதாவது உறுத்திக் கொண்டிருந்தால், அந்தக் கவலையை சரண் செய்வதே சரணாகதி. இது ஆகுதி போலத்தான். (ஆகுதி என்பது யாகத் தீயில் பிரார்த்தனையுடன் போடப்படும் பொருட்கள்).எனவே உங்களை என்ன உறுத்திக் கொண்டிருந்தாலும் அல்லது உங்களிடம் கவலை இருந்தாலும் அதை ஆகுதியாகக் கருதி இறைவனிடம் அளித்து விடுங்கள்...எதை உங்களால் சமாளிக்க முடியவில்லையோ, எது உங்களுக்கு பாரமாக இருக்கிறதோ; எதை சுமப்பதால் நீங்கள் சோர்வடைகிறீர்களோ, அதை அப்படியே போட்டுவிட்டுச் சென்றால் போதும். சரணாகதி என்பதின் பொருள் இதுதான். இல்லையென்றால் சரணாகதிக்கு என்ன இருக்கிறது,.? உங்கள் உடம்பு இறைவனுடையது. உங்கள் மனம் கூட இறைவனுடையது தான்....எல்லாம் இறைவனுடையது. ஆனால், இது உங்களுடையது என்று நினைக்கிறீர்கள். எனவே, எல்லாம் போகட்டும், இறுக்கம் தளந்து புன்னகை செய்தால் போதும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக