செவ்வாய், செப்டம்பர் 12, 2023

ராம கிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி,ஷீரடி சாய்பாபா போன்றோரை வழிபட்டு வருபவர்கள் அடைந்த நன்மைகள் என்ன...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஶ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி,ஷீரடி சாய்பாபா  போன்றோரை வழிபட்டு வருபவர்கள் அடைந்த நன்மைகள் என்ன...!🙏🏻

ஒரு பக்தரின் உண்மை அனுபவ கதை..!

எனக்கு வாய்ப்பு கிடைக்கின்ற போது மானச பூஜா என்று தியானத்தில் அமர்வது உண்டு. அதாவது.. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தெற்கு கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைகிறேன். முதலில் பொற்றாமரைகுளத்தில் கை கால்களை கழுவி விட்டு விபூதி பிள்ளையாரை வணங்குகிறேன். அடுத்து வழியில் கிளிக்கூண்டு இருக்கும் அங்கே கிளிகளுக்கு ஆப்பிள், வாழைப்பழங்கள், போன்றவை வைத்துவிட்டு அம்மன் சன்னதி செல்கிறேன். அப்படியே சுற்றி இருக்கும் தெய்வங்களை வணங்கி விட்டு வெளியில் வந்து முக்குருணி பிள்ளையாரை வணங்குகிறேன். அதன் பிறகு சுவாமி சன்னதி நோக்கி செல்கிறேன். இத்தனையும் தியானத்தில் இருந்து எனக்கு நானே நினைத்துப் பார்த்து வீட்டில் அமர்ந்திருக்கிறேன்...இப்படி சுவாமி சன்னதி நுழைகின்ற போது.. திடீரென்று என் தோள்களைப் பிடித்து இரு.. நானும் உன்னோடு வருகிறேன் என்று குரல் ஒலிக்கிறது. திரும்பிப் பார்த்தால் நம்ம ரமணர்தான்..அவர்..!!சுவாமி.. சரணம்.. அபயம்.. என்று இரண்டு கைகளை எடுத்து வணங்குகிறேன். அதுதான் நல்லா வரப்போறியே.. இன்னும் என்ன அபயம் சொல்ற. எப்போதும் போல ராமானு சொல்லு. என்கிறார் அவர்..!! இது நடந்தது-மானச பூஜாவில்..!! கனவு அல்ல... கற்பனை அல்ல...அது சமயத்தில் ரமணரை பற்றி எதுவும் நான் நினைக்கவும் இல்லை... இது எப்படி நடந்தது..? எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது..!! அன்று உண்மையாகவே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்து அன்று மாலையே செல்கிறேன். தெற்கு கோபுரம் நோக்கி செல்கிற போது_அருகில் தான் ரமணரின் இல்லம் இருக்கிறது. அங்கே ரமணரின் திருஉருவ படத்தை பார்த்துவிட்டு.. கொஞ்சம் கேலியாகவே.. இப்போது நான் கோயிலுக்கு தான் போறேன்.சாமி வரிங்களா..? என்று அவர் படத்தைப் பார்த்து நினைத்துக் கொள்கிறேன்.

அங்கே இருக்கும் பூசாரி அவர்கள் நான் யாரு..? ஏது..? எங்க போறேன்..?என்று..? எதையும் கேட்கவில்லை. மாறாக எனது கையில் ஒரு மாலையை கொடுத்து.. இதை சொக்கநாதனுக்கு கொடுத்து விடுங்கள் என்கிறார்..! நானோ.. நான் கோயிலுக்கு போகவில்லை. ஒரு வேலை விஷயமாக இந்த பக்கம் போறேன் என்று அவரிடம் பொய் சொல்கிறேன். அவர் சிரித்துக் கொண்டே.. பரவால்ல.. கோயிலுக்கு போயிட்டே போ.நீ நல்லா வரணும்ல அதற்குத்தான் சொல்றேன் என்கிறார். இப்போது ரமணர் படத்தை பார்க்கிறேன். அவர் சிரிப்பது போல காட்சி தெரிகிறது...இது எனது பத்து வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம். அதன் பிறகு ரமணரை நினைத்து மானஷ பூஜாவில் நான் இருப்பது உண்டு. அப்போதெல்லாம்..அவர் குரல் எதுவும் கேட்டதில்லை.. ஆனால் தியானம் முடிந்து எழுகின்ற போது எனக்குள்ளே ஏதாவது தத்துவம் போல தோன்றும்.. 

அடைந்த நன்மைகள் என்ன..? இதுதானே கேள்வி. ஆம்.! நன்மைகள் அடைந்திருக்கிறேன்.எப்படி..? என்னையும் அறியாமலே நிறைய ஒழுக்க சிந்தனைகளும், எம்மதமும் சம்மதம் என்கிற உணர்விற்கு வந்தது தான் அது,,.!!

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக