சனி, செப்டம்பர் 02, 2023

சாதிபூதாதிதைவம் மாம் சாதியஜ்ஞம் ச யே விதுஹ். பிரயாணகாலே அபி ச மாம் தேவிதுர்யுக்த-சேதசஹ்..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

சாதிபூதாதிதைவம் மாம் சாதியஜ்ஞம் ச யே விதுஹ். பிரயாணகாலே அபி ச மாம் தேவிதுர்யுக்த-சேதசஹ்...🙏🏻

இங்கு ஸ்ரீகிருஷ்ண பகவான் கூறுகிறார்... ‘யாருடைய புண்ய செயல்களுக்கு பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கிறதோ அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபட்டு என்னை நோக்கி வரத் தொடங்குகிறார்கள். யாருடைய பாபங்கள் துடைக்கப்படவில்லையோ அவர்கள் அறியாமையிலும் மாயையிலும் சிக்கியிருப்பார்கள்.’ இது தான் பாவ  புண்ணியங்களுக்கு இடையேயான வித்தியாசம். இதுதான் இரண்டிற்குமான விளக்கம். உங்களை ஆன்மீகப் பாதைக்கு வர விடாமல் தடுப்பது தான் பாவம் என்பது. வெளிச்சத்தை நோக்கி நடந்தால் இருள் (அறியாமை) தானாக மறையும். ஆனால் உங்களை வெளிச்சத்தை நோக்கி நகர விடாமல் செய்வது தான் பாவம் எனப்படுகிறது. சோகம், வலி மற்றும் துயரம் இவற்றிற்கான காரணமும் இது தான்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக