ஞாயிறு, செப்டம்பர் 24, 2023

ஆன்மாவிற்கு வலி, வேதனை, துன்பம், துயரங்கள் உண்டா இல்லை உடலுக்கு மட்டும் தானா..? ஆத்மா என்றால் என்ன..??? ஆத்மாவின் வேலை என்ன..???


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆன்மாவிற்கு வலி, வேதனை, துன்பம், துயரங்கள் உண்டா இல்லை உடலுக்கு மட்டும் தானா..?ஆத்மா என்றால் என்ன..??? ஆத்மாவின் வேலை என்ன..???இவற்றை யாராவது சரியாக சொல்ல முடியுமா..???

கடோபனிஷததில், நசிகேதஸ் என்ற பெயருள்ள ஒரு சிறு பையனுக்கு, யமதர்ம ராஜன் பதிலளிக்கிறார்..

ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவது

புத்திம் து சாரதிம் வித்தி, மனம் ப்ரக்ரஹமேவது

இந்திரியாணி ஹ்யானாஹுர் விஷயாம்தே சு கோசரான்

ஆத்மேந்திரிய மனோ யுக்தம் லப்த்வா தாதுர் மணிசினஹ.....

அதாவது ஆத்மாதான் பயணி, உடல்தான் ஊர்தி அறிவு தான் ஓட்டுனர், மனம்தான் கடிவாளம்...இந்திரியங்கள் தான்  குதிரைகள், விஷயங்கள்தான் பாதைகள்...ஆத்மன், இந்த்ரியம், மனம் ஆகியவையின் கூட்டை இப்படி அறிந்துக் கொள்....

Note : ஆத்மா என்பது ஒரு சக்தி (energy). எப்படி battery என்பது சக்தியின் கொள்கலனோ (container), அதே போல், ஆத்மா என்ற சக்தியின் கொள்கலன் நம் உடம்பு. இதில் ஆத்மா பயணிக்கிறது..அவர் மேலும் சொல்கிறார் :

ஹந்த சேன் மன்யதே ஹந்தும்

ஹதச்சேன் மந்ததே ஹதம்

உபௌ தௌ ந விஜானீதோ

நாயம் ஹந்தி ந ஹன்யதே.

கொல்பவன் கொல்வதாக எண்ணினாலும், கொல்லப்பட்டவன் கொல்லப்பட்டதாக எண்ணினாலும், இருவருமே (ஆத்மாவை) அறியாதவர்கள்...ஆத்மா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை...

அவர் மேலும் சொல்கிறார் :

அணோரணீயான் மஹதோ மஹீயான்

அத்மஸ்ய ஜந்துர் நிஹிதோ குஹாயாம்

தமக்ரதுஹு பஷ்யதி வீத ஷோகோ,

தாதுப்ரசாதன் மஹிமானம் ஆத்மனஹ.

அணுவிலும் சிறிதான, பெரிதிலும் பெரிதான ஆத்மன், ஒவ்வொரு ஜந்துவின் இதய குகைக்குள் இருக்கிறது...தனக்குள் அந்த ஆத்மனை உணர்பவன், சோகத்தை களைகிறான்...ஆத்மனின் மகிமையை உணர்கிறான்......

Note : இந்த ஆத்மா நம் இதய குகையில் (இது heart அல்ல). இது நம் நாபிக்கு (தொப்பிளுக்கு) ஒரு சாண் மேலே அமைந்திருக்கிறது. இது மார்புக்குழி. இந்த இடத்தை Solar pleaxus என்று கூறுவார்கள்......

இந்த ஆத்மா, ஒரு ஆண் சாப்பிடும் உணவு, தண்ணீர், அல்லது சுவாசிக்கும் காற்று வழியாக ஒரு ஆணின் உடலுக்குள் புகுந்து, அவன் விந்து வழியாக ஒரு பெண்ணுக்குள் சென்று, அவள் கரு முட்டையுடன் கலந்து, ஒரு கருவாக உருவாகிறது. அந்த கரு உருவான உடனே, அந்த உடலுக்கு மனம் உருவாகிறது....

தாத்ரீய உபனிஷதம்....

அந்த மனம், தான்தான் அந்த உடல் என்று நினைக்கிறது...ஆனால், அந்த "நான்" என்ற உணர்வு ஆத்மனுடையது....அந்த "ஆத்மனே நான் என்ற உணர்வுதான்"...ஒரு உயிரினத்துக்கும், ஜடப்பொருளுக்கும் என்ன வித்தியாசம்..???

ஒரு உயிரினம், வேறு ஒரு உயிரினத்திலிருந்து பிறக்கிறது, உணவு தேடி உண்கிறது, உடல் கழிவை வெளியேற்றுகிறது, வளர்கிறது, தன் இனத்தை பெருக்குகிறது, சாகிறது...ஆனால், ஒரு ஜடப்பொருள் இவற்றில் ஒரு காரியத்தையும் செய்வதில்லை..ஆதலால், ஒரு உயிரினத்தை இந்த காரியங்கள் எல்லாம் செய்ய வைப்பது "நான்" என்ற உணர்வே...இது தான் ஆத்மா..!!! சரி..எது கடவுள்..??? எல்லா உயிரினங்களின் 'உள்' ளே இருக்கக் 'கட' வது - கடவுள்...அப்படியென்றால், அந்த ஆத்மாதான் கடவுள்...அப்படியென்றால் அந்த "நான்" என்ற உணர்வுதான் கடவுள்...

திருமூலர் சொல்கிறார்...

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.

அவர் மேலும் சொல்கிறார்...

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானே தான்செய்த வினப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே.

திருமூலர் சொன்ன "தன் / தான்" எல்லாமே "நான்" தான்.

"அகாயோ நிர்குணோஹ்யாதமா"

- சிவ சங்கல்ப சூக்தம் (சுக்ல யஜுர் வேதம்)

காயம் - உடல்....அப்படியென்றால், ஆத்மனுக்கு உடலில்லை. ஆகையால் மனம் என்பதுமில்லை. அதனால், இன்பதுன்பங்களும் இல்லை.மேலும், ஆத்மா - குணமில்லாதது. சுகுணம், மற்றும் துர்குணம் அற்றது...இப்போது புரிந்ததா, அந்த "நான்" தான் ஆத்மா என்று...???

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக