ஞாயிறு, செப்டம்பர் 10, 2023

எல்லா உருவமும் நானே..எல்லா தெய்வமும் நானே..(சாய் மொழி)

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ கூறுகிறார்...எல்லா உருவமும் நானே..எல்லா தெய்வமும் நானே.....

அணிலும் எலியும் – பகவான் ரமண மகரிஷி

அணிலும் எலியும்.. !பகவான் ரமணர் உரைகேட்கப் பக்தர்கள் இருந்தார்கள் அவர் முன் அமர்ந்தபடி அகமும் முகமும் மலர்ந்தபடிஅருளுரை சொன்னார் ரமணர் கனிந்தபடி..!

அணில்போல் இருங்கள்.. தவறில்லை..!

ஆனால் எலிபோல் கூடாது..!

மணிமொழி இதனை உதிர்த்தபடி

மவுனமானார்  ரமணர்..!

காரணம் வேண்டிப் பக்தர்கள்

காத்துக் கொண்டே இருந்தார்கள்

பூரண ஞானி விடைசொன்னார்

புன்னகை ஒன்றைத் தந்தபடி..!

உண்ணும் அணிலைப் பாருங்கள்...உண்டது போதும் என உணர்ந்தால் கொண்ட கனியை அதன்பின்னர்க் கொறிப்பதில்லை..ஓடிவிடும்..!ஆனால் எலியோ பதுக்குவதில் ஆசை கொள்ளும்..மறுபடியும் தானாய் வந்து பொருள்தேடும தனக்கு மீறிச் சேர்த்துவிடும்..!போதும் என்ற மனம் இன்றிப்பொருளைச் சேர்க்கக் கூடாது நீதி இதுதான், எனச்சொல்லி நிறுத்தி அருளினார் ரமணர்..!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக