ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்..🙏🏻🙏🏻
நான் யார்...?
"ஏழு விதமான தாதுக்களால் (அதாவது, குருதி நீர், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை மற்றும் சுக்கிலம் இவற்றால்) உருவாகியுள்ள இந்த ஸ்தூலமான உடம்பு நான் அல்ல. ஒளி, ஒலி, சுவை, மணம், தொடு உணர்வு என்னும் ஐம்புலன்களை அறிகின்ற கண், காது, மூக்கு, நாக்கு, தோல் எனும் அறிவு உறுப்புகளாகிய ஐம்பொறிகளும் நானல்ல. பேசுதல், நடத்தல், கொடுத்தல், மலம் கழித்தல், சுகித்தல் என்னும் ஐந்து தொழில்களை செய்யும் வாய், கால்கள், கைகள், குதம், பிறப்புறுப்பு என்னும் செயல் உறுப்புகளும் நானல்ல...
"மூச்சு விடுதல், பிரித்து நீக்கல்,ஜெரித்தல் போன்ற அகத் தொழில்களை இயக்கும் பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் எனும் ஐந்து வாயுக்களும் நானல்ல. நினைக்கின்ற மனமும் நானல்ல. இப்படி எல்லா விஷயங்களும், தொழிற்பாடுகளும் அற்று அதே சமயத்தில் விஷயங்களைப்பற்றிய நுண்ணுணர்வுகளோடு (வாசனைகளோடு) மட்டும் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானல்ல...
"இப்படி ‘நானல்ல’ ‘நானல்ல’ என்று தள்ளிய பிறகும் தனித்திருக்கும் அறிவே நான். அந்த அறிவின் சொரூபமே (மெய்யியல்பே) சச்சிதானந்தம்."...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக