புதன், அக்டோபர் 11, 2023

தேனுக்குள் இன்பம் கறுப்போ..! சிவப்போ..!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

இறைவன் எங்கே இருக்கின்றான்..யாரும் பார்த்ததுண்டா என்ற கேள்விக்கான விழிப்புணர்வு விளக்கம்...🙏🙏

சிவமில்லாது உடல் சவமே...அடியவர் ஒருவர் அரசமரத்தடியில் தியானத்தில் இருந்தார். அப்பக்கம் வந்த ஒரு படித்த இளைஞன் பெரியவரே ஏன் உட்கார்ந்து கொண்டு தூங்குகின்றீர். அரசமரத்து காற்று தான் நன்கு வீசுகின்றதே நன்றாக நீட்டி படுத்து உறங்கலாம் அல்லவா என்றான். தம்பி நான் உறங்கவில்லை. கடவுளை தியானித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார். கடவுளை நீர் பார்த்திருக்கின்றீரா, கையால் தீண்டியிருக்கின்றீரா, அவர் குரலைக் காதால் கேட்டுள்ளீரா இப்படி எதற்கும் இல்லை என்று சொல்லும் அறிவற்ற மூட நம்பிக்கை உள்ளவரே...! இல்லாத ஒன்றைக் கற்பனை செய்துக் கொண்டு அரிய நேரத்தை வீணடிக்கின்றீரே என்றான்..கறுப்பா..! சிவப்பா...

அப்போது அவன் கையில் ஒரு பாட்டில் இருக்கக் கண்டவர் தம்பி உன் கையில் இருப்பது என்ன என்றார்..! தேன் என்றான். அது இனிக்குமா..! கசக்குமா என்றார். கோபங்கொண்ட அவன் உமக்கு தேன் தித்திக்கும் என்பது கூட தெரியாதா என்றான்....தம்பி அது இருக்கட்டும் நீ தித்திக்கும் எனக் கூறியது கறுப்பா சிவப்பா என்றார்..அவன் திகைத்தான்...தித்திப்பு என்பதை என்ன நிறமென்று சொல்வது. குழம்பினான்...தேனின் இனிமையை கண்டவனுக்குத் தெரியாது...அதை உண்டவனுக்குத் தான் தெரியும் என்றான்...

பௌதிகப் பொருளான தேனின் இனிமையை உண்டவனுக்குத்தான் தெரியும் என்று புரிந்த நீ ஞானப் பொருளை அனுபவத்தால் தான் உணரமுடியும் என்பதை நீ புரிந்துக் கொள்ள வில்லையே என்று அன்புடன் கூறினார். 

இதையே திருமூலர்,..

தேனுக்குள் இன்பம் கறுப்போ..! சிவப்போ..!

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்..!

தேனுக்குள் இன்பம் செறிந்திருத்தாற்போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே..! என்றார்...

இதைக் கேட்ட இளைஞன் எனக்கு பசிக்கின்றது சாப்பிட்டுவிட்டு வந்து உங்களுடன் பேசுகின்றேன் என்றான்...பெரியவர் தம்பி பசி என்று சொன்னாயே அதைக் கண்ணால் கண்டிருக்கின்றாயா..! காதால் கேட்டிருக்கின்றாயா..! அல்லது அதைத் தொட்டுத்தான் உணர்ந்திருக்கின்றாயா..! இப்படி ஏதுமில்லை என்றபோது நீ பசி பசி என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாய் என்று ஏன் சொல்லக் கூடாது. இப்போது புரிகின்றதா தம்பி. பசி என்பது ஓர் அனுபவப் பொருள் அதை உணரத்தான் முடியும். அதுபோன்றே இறையையும் அவரது செயலையும் அனுபவத்தால்தான் உணரமுடியும் என்றார். அடியேன் தவம் செய்து அதை அந்த அநுபவப் பொருளை உணர முயல்கின்றேன் என்றார்.

சிவம் இல்லையேல் சவம்..!

இளைஞனுக்கு பெரியவர் கூறுவதில் ஏதோ இருப்பதாக நினைத்தான் ஆனால் அதன் உண்மை புரியவில்லை. ஐயா, என்னைப் பொருத்தவரையில் நீங்கள் சொல்லும் கடவுளைக் கண்ணால் கண்டால்தான் ஒப்புக் கொள்வேன் என்றான். அப்போது அடியவர் தம்பி, 64 அடி நீளமுள்ள இரு பக்க சுவரில் பக்கத்திற்கு நான்கு ஜன்னல்கள். அதன் மேல் கூரை வேய்ந்தால் அதனைக் கூடமென்றோ அல்லது உபயோகத்திற்கு ஏற்றவாறு பெயர் பெரும். அப்படி மேற்கூரை இல்லாமலிருந்தால் அது குட்டிச் சுவர் எனப்படும். 64 அடி நீளமுள்ள ஓர் இடம் சிறுமை பெற்று குட்டிச் சுவர் என பழியடைந்தது. இதனால் அந்த இடத்திற்கு சுவர்களால் பெறுமை இல்லை. மேலே வேயப்பட்ட கூரையினால்தான் பெறுமை என்பது புரிகின்றதா என்றார்,

சிவம் என்றால் பெருமை அடையும் சொல்.. இச்சொல் சிவத்திலுள்ள சி-ன் கொம்பு எழுத்தை அழித்துவிட்டுப் பார்த்தால் சவம் என்றாகும். ஒரு கோடே இங்கே பெருமையாகின்றது... அக்கோடில்லாமல் அச்சொல் சவமாகி சிறுமை அடைகின்றது. உயிர்களின் உடம்பில் சிவம் இருந்தால் அது உடல் ஆன்மா எல்லாம். அஃதில்லையெனில் அது உயிரற்ற ஆன்மா இல்லாத சவம்....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக