சனி, அக்டோபர் 21, 2023

கிருஷ்ணா வருவாயா...!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

கிருஷ்ணா வருவாயா...!

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார், ‘அஹம் வைஷ்ணவரோ புத்வா ப்ரனினாம்  தேஹமஸ்ரிதா.’ ‘நான் தான் ஜடாராக்னி’ (நம் வயிற்றில் உணவை செரிக்கும் நெருப்பு) ‘அனைத்து ஜீவா ராசிகளிலும் உள்ள பசி நானே மற்றும் நன்கு விதமான உணவை செரிப்பவனும் நானே.’

ஆனால் நாம் என்ன செய்கிறோம்..? அந்த பசியை வரக் கூட விடுவதில்லை. அதிகமான உணவுகளைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். ஸ்ரீ கிருஷ்ணரை நாம் கொஞ்ச நேரம் கூட இருக்க விடுவதில்லை..! 

 எனவே, பசிக்கும்போதெல்லாம், ஸ்ரீ கிருஷ்ணர்  வந்துவிட்டார் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் வயிற்றிலிருக்கும் நெருப்பும் இறைவன், பசியும் இறைவன்...உணவும் இறைவன். அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னார், ‘உங்கள் வயிற்றிலிருக்கும் பசி நான், நீங்கள் உண்ணும் உணவும் நான்தான்.’ இது சுவாரசியமான ஒரு மெய்யறிவு....இதைப் போன்ற மெய்யறிவு காண்பதற்கு அரிது. 

உலகத்திலுள்ள எல்லா நூல்களை படித்தாலும் கூட இப்படி ஒரு மெய்யறிவு கிடைக்காது.பலர் இதை புரிந்துக் கொள்வதில்லை. இதை ஏதோ சொல்லி இருக்கிறார் என்றே நினைக்கின்றனர். புத்திசாலிகள் இந்த மெய்யறிவை புரிந்துக் கொள்கிறார்கள். இதிலுள்ள உண்மையையும் அதன் சாரத்தையும் புரிந்துக் கொள்கிறார்கள்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.....🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக