சனி, டிசம்பர் 30, 2023

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள்...!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான முதிர்ந்த நிலையில் இருப்பார்கள். அவரவர்களுக்கு எந்த மாதிரியான மார்க்கம் தேவையோ அதை அவர்களுக்குக் காட்டி, அவர்களை அதில் நிலைத்து நிற்கவும் செய்வேன் என்று அனைவருக்கும் கண்ணன் உறுதிமொழி  அளிக்கிறார். தான் செய்வது சரியோ, தனது வழி சரியோ என்று எந்த சாதகனும் ஐயம் கொள்ள வேண்டாம். ஆன்மீக வழியில் ஈடுபடும் எவரும் இறைவன் மேல் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்பதுதான் ஒரே ஒரு முக்கியமான கோட்பாடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சாட்சாத் பரமாத்வாவே கூறும்போது, எவருக்கும் அவர் செல்லும் வழியிலோ, தான் கடைத்தேறுவேனோ என்ற எந்த விதமான சந்தேகமும் வந்தால் சாதகன் இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடையவில்லை என்றே பொருள். அந்த நிலையை எவரும் தவிர்க்கவேண்டும். நீயே எல்லாம் என்று கண்ணனிடம் ஐக்கியமாவதே அனந்னிய பக்தி பாவம்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக