ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻
இப்பொழுது சரணாகதி பற்றி பேச போகிறேன் ...?
நீங்கள் சரண் செய்ய வேண்டிய எதுவும் ஏற்கனவே இறைவனுடையது அல்லவா...?
ஆனால், உங்களுடையது என்று நீங்கள் நினைக்கும் எதையும் ‘விட்டு விடுங்கள்’ என்றே நான் சொல்வேன்...! எதையாவது நீங்கள் இறுகப் பற்றிக் கொண்டிருந்தால், ‘தளர்வாகுங்கள்...!’ தளர்வதே சரணாகதி.. வேறு எதுவும் இல்லை. உங்கள் மனதை ஏதாவது உறுத்திக் கொண்டிருந்தால், அந்தக் கவலையை சரண் செய்வதே சரணாகதி. இது ஆகுதி போலத்தான். (ஆகுதி என்பது யாகத் தீயில் பிரார்த்தனையுடன் போடப்படும் பொருட்கள்).எனவே உங்களை என்ன உறுத்திக் கொண்டிருந்தாலும் அல்லது உங்களிடம் கவலை இருந்தாலும் அதை ஆகுதியாகக் கருதி இறைவனிடம் அளித்து விடுங்கள்.
எதை உங்களால் சமாளிக்க முடியவில்லையோ, எது உங்களுக்கு பாரமாக இருக்கிறதோ... எதை சுமப்பதால் நீங்கள் சோர்வடைகிறீர்களோ, அதை அப்படியே போட்டுவிட்டுச் சென்றால் போதும். சரணாகதி என்பதின் பொருள் இதுதான். இல்லையென்றால் சரணாகதிக்கு என்ன இருக்கிறது..? உங்கள் உடம்பு இறைவனுடையது. உங்கள் மனம் கூட இறைவனுடையது தான்...எல்லாம் இறைவனுடையது...ஆனால், இது உங்களுடையது என்று நினைக்கிறீர்கள். எனவே, எல்லாம் போகட்டும், இறுக்கம் தளந்து புன்னகை செய்தால் போதும்.
புத்த சமயத்தில், ‘புத்தம் சரணம் கச்சாமி’, என்பார்கள். அதன் பொருள் உங்களால் சுமக்க முடியாத சுமையை புத்தரிடம் அளித்து விடுங்கள் என்பதே. அல்லது குருவிடம் சமர்ப்பணம் செய்யுங்கள், அல்லது இறைவனிடம் சமர்ப்பணம் செய்யுங்கள், அல்லது உங்களுக்கு நெருக்கமான யாரிடமாவது சமர்ப்பணம் செய்யுங்கள். உங்களைச் சேர்ந்தவர்கள் யாரோ ஒருவர் இருக்கிறார், அவர் உங்களுக்கு அன்பானவர், நீங்கள் அவருக்கு அன்பானவர் என்று நீங்கள் உணரவே இது.உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்...ஒரு குழந்தை தன் அம்மா வீட்டில் இருக்கிறாள் என்றால் வசதியாய் உணர்கிறது. அந்தக் குழந்தை இங்கும் அங்கும் ஓடி விளையாடுகிறது. ஆனால்,அந்த குழந்தையால் தன் அம்மாவைப் பார்க்க முடியவில்லை, அவர்கள் எங்கோ சென்றிருக்கிறார்கள் என்றால், தன் தாயைத் தேடி அழ ஆரம்பிக்கிறது சிறு குழந்தைகள் எப்போதும் தன் அம்மா அருகே இருக்கிறார்களா என்று பார்த்தபடியே இருக்கும். ஒரு கண் தன் அம்மா மீது வைத்தபடியே இருக்கும். இது ஏனென்றால், ‘எனக்காக ஒருவர் உண்டு, அவர் இருக்கிறார்’ என்று தெரிந்தால் அந்தக் குழந்தை வசதியாய் உணர்கிறது...சரணாகதி மந்திரம் இதுவே..!!
சரணாகதியின் மகிமையை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்...!
ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக