ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இயற்கையின் எட்டு அம்சங்களும் நமக்குள் இருக்கும் சத்தியத்தை மறைக்கின்றன. கிருஷ்ணர் சொல்கிறார், “இவற்றிற்குள்ளே, இவற்றிற்கப்பாலாய் நான் மூலமாய் இ ஶ்ரீ ருக்கின்றேன். எனக்கு இரு வகை சொரூபங்கள் உள்ளன. உயிருள்ளதாயும், உயிரற்ற ஜடப்பொருளாகவும் இருப்பது நானே! இவ்விரு சொரூபங்களின் சேர்க்கையால் தான் எல்லா உயிரினங்களும் உற்பத்தியாகின்றன” என்று. அதாவது இயற்கைத் தன்மையுடன் கூடியதாய் அமைந்துள்ள இந்த உடலும் பிரபஞ்சமும் ஜடப்பொருள்கள். இவற்றோடு சைதன்யம் சேருகின்றபோது அவை இயங்குகின்றன. சைதன்யம் இவற்றைக் கைவிடுகின்றபோது இயக்கம் நின்று சடப்பொருளாகிவிடுகிறது. கண் இருந்தாலும் பார்க்க முடியாது, கைகள் இருந்தாலும் அசைக்க முடியாது...
ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக