திங்கள், மார்ச் 11, 2024

ஞான உபதேசம் செய்ய குரு வேண்டும்.


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஞான உபதேசம் செய்ய குரு வேண்டும். அவர் சொல்வதைக் கேட்பதற்கு நான் உடலால் அங்கு இருக்க வேண்டும். என் காது எந்தவிதக் குறையுமின்றி நன்றாகச் செயல்பட வேண்டும். மனம் அங்கு இருந்து சொல்வதைக் கவனிக்க வேண்டும். குரு சொல்வதைக் கேட்பதற்குரிய தயார் நிலையில் நான் இருத்தல் மிக மிக அவசியம். அதாவது மனம் தூய்மை பெற்று கேட்பதற்குரிய தகுதியுடன் இருத்தல் வேண்டும். குரு எவ்வளவு விளக்கமாகவும் நுணுக்கமாகவும் வேதாந்தக் கருத்துக்களை எடுத்துக் கூறி விளக்கினாலும் அதைக் கேட்டுப் புரிந்து அனுபவிக்கின்ற பக்குவ நிலை மாணவருக்கு இருந்தால் தான் அந்த போதனை பயனளிக்கும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக