ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷிகளால் உணர்ந்து உரைக்கப்பட்டவையான இதில் ஜகத் என்பது நமக்குள் இருக்கின்ற எண்ண உலகம், உணர்ச்சி உலகம், மன உலகம் ஆகியவையும், வெளி உலகமும் சேர்ந்தது ஆகும். ஜகத் என்றால் உலகம் என்று மட்டும் தான் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நமக்குள்ளேயும், வெளியேயுமாக விரிந்திருக்கின்ற ஜகத் பற்றி இப்போது தான் தெரிய வருகின்றது இல்லையா...?
கண்களால் நாம் காண்பது மட்டும் உலகம் அல்ல. நமக்குள்ளேயே இருக்கின்ற மேற்குறித்தவையும் உலகங்களே. ஜீவனாகிய நம்மைப் பற்றியும் ஜகத் எனப்படுகின்ற நாம் காணும் உலகத்தையும் ஈசன் என்று குறிப்பிடுகின்ற உண்மை இருப்பைப் பற்றியும் மேலும் எனக்கும் உலகத்திற்கும், எனக்கும் ஈசனுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் ஆராய்ந்து தகுந்த சொற்களால் எடுத்துரைப்பதே வேதாந்தத்தின் நோக்கமாகும். இந்த மூன்றும் ஒன்றே என்ற ஆராய்ச்சியில் தான் குருவும் சிஷ்யனும் சேர்ந்து ஈடுபடுகின்றனர். இந்த ஞானவேள்வியில் பங்குபெற்று ஞான ஆராய்ச்சி செய்கின்ற மாணவனுக்கு ஜிக்ஞாசு என்று பெயர்...
ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக