புதன், ஏப்ரல் 10, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...!!???

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🏻🙏🏻

சனாதன தர்மம் இதைப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்திய விதம் தான் இந்துக்கள் யாரை சந்தித்தாலும் கரம் குவித்து அவர்களை வணங்குவது. எல்லாம் தெய்வம் என்று பார்க்கின்ற பக்குவ வெளிப்பாடு இது. யாதும் ஊரே...! யாவரும் கேளிர்...! என்று உலகத்தையே அணைக்கச் செய்தது இந்த உயர்ந்த ஞானத்தால் தான்.

இந்தப் பக்குவம் நமக்குள் வந்துவிட்டால் பிறகு கீதையை ஒவ்வொரு சொல்லாக நுணுக்கி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லாம் ஒன்று. அவ்வளவுதான். பிரச்னையே இருக்காது. எதிரில் இருப்பவரும் நானும் ஒன்று என்று அணைக்கத் தெரிந்தால் தீர்ந்தது. இதைவிட சுலபமான வழி ஏதாவது இருக்கிறதா...? எது தடுக்கிறது என்று பார்த்தால் நமக்கு நாமே தான் தடை. புரிகிறதா...?

கீதையில் கிருஷ்ண உபதேசம் மேலும் இப்படித் தொடர்கிறது. ‘‘என்னிடமிருந்துதான் சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்னும் முக்குணங்கள் உருவாகின்றன. நான் அவைகளைக் கடந்து அவைகளுடன் ஒட்டாமல் இருக்கிறேன். ஆனால் உலக மக்கள் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களில் மோகித்து வாழ்கிறார்கள். அதனால் தான் முக்குணங்களைக் கடந்தவனும், அழிவற்றவனுமாகிய என்னை அறிய முடியாமல் போகிறது.”

“என்னுடைய முக்குணங்களாகிய மாயையைக் கடப்பது மிகவும் கடினம். எந்த சாதகர்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு என்னையே புகலாக அடைகிறார்களோ, அவர்கள் என் அருளால் இந்த மாயையைக் கடக்கிறார்கள். மாயையிலிருந்து விடுபட்ட பிறகு என்னை அறிந்துகொள்கிறார்கள்.”

“அசுர குணம் கொண்டவர்களும், மாயையால் மறைக்கப்பட்ட ஞானத்தைக் கொண்டவர்களும், மிகக் கேவலமானதும் பாவமுமான செயல்களைச் செய்பவர்களும் என்னைச் சரணடைவதில்லை.”..

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக