ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்..🙏🙏
🔥🔥யாருக்கு பொறுப்பாளரோ, பாதுகாப்பாளரோ இல்லையோ, அவரையே சாயீ மாதா ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. இடுக்கண்ணில் மாட்டிக் கொண்டவர்களும், துன்பப்படுபவர்களும், வேண்டாமென்று ஒதுக்கப்பட்டவர்களும் பகவானை புகலிடமாகக் கொண்டனர்..🔥🔥
பாபாவிற்கு எவ்விதமாக சேவை செய்ய வேண்டுமென்று பக்தர்கள் தீர்மானம் செய்தாலும், வாஸ்தவத்தில் பாபா தம் பக்தர்கள் மூலமாக சேவையைச் செய்துகொள்கின்றார்... இதுவிஷயத்தில் உணர்வூட்டுதலை பாபாவே செய்கின்றார்...பக்தர்கள் வெறும் கருவி மாத்திரமே..! நான் மற்ற எல்லோரையும் விட கீழ்மையானவன்...என் சக்தி கட்டுக்குள் அடங்கியதாகும், நான் தெரிந்து கொள்ள வேண்டியது அளவற்றதாகவுள்ளது" என்று யார் எண்ணுகின்றார்களோ அவர்களுக்கு அகம் (அகங்காரம்) மிகுந்த தொலைவிலேயே இருக்கும்."..செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது...பலனை அளிப்பவர் எல்லாம் வல்ல இறைவன் என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்...மாமரத்தில் இருக்கும் அனைத்து பூக்களும் மாங்கனிகளாவதில்லை...சில பூக்கள் மட்டுமே மாங்கனிகளாகின்றன...அதே போல் சில மக்கள் மட்டுமே என்னிடம் வருகின்றனர்.....ஸ்ரீ சாய் சத்சரித்திரம்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக