ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏🙏
🔥🔥ஶ்ரீசீரடி சாய் நாதரின் பாமாலை...🔥🔥
உம் பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா.... அனைத்திலும் நீக்கமற நிறைந்தவர் என்று உணர்ந்தோம் பாபா...
எம்மில் நீர் இருப்பதை உணர்ந்த கணம் அனைத்தையும் மறந்தோம் பாபா...
எங்களைத் தாயுமானவராக காத்திட வந்த நீரே...எங்களுக்குத் தாயன்பைத் தந்தாயே பாபா...
உம் சத்திய பேர் அன்பில் திளைத்தோம் பாபா...அதனால் அனைத்தும் ஓம் வெறுமையாக இருக்கின்றதே பாபா..
எதிலும் பற்றாமல் பற்றிரு என்பதனை உணர்த்தி விட்டாயே பாபா....
உங்கள் ஆசியால் நாங்கள் விழிப்புணர்வோடு சாட்சியாக எதையும் அனுகுகின்றோம் பாபா..
இதனால் எங்களின் கர்ம வினைகள் பின்தொடராமல் எங்களை விடுவித்தாயே பாபா...
உம் ஆசிர்வாதத்தாள் வெற்றிடமாக எங்களை நெறிப்படுத்தி வெற்றி வாகை சூட அனுக்கிரகம் செய்தாயே பாபா..
மந்திரமானது உன் பெயர் பாபா...மனக்குறை நீக்கும் மகத்துவம் பாபா....
ஜென்மங்கள் யாவிலும் துணை நீங்கள் பாபா...மௌனத்தின் மொழியாய் பேசிடும் பாபா........
எங்களை மீளாத்துயரத்திலிருந்து மீட்டிடும் பாபா....எங்களை நேர்ப்படுத்தி இகத்தோர் புகழ பாற் போற்றி பறைச்சாற்ற வைத்த பேராற்றலே சாய்பாபா...
மன்னுயிர்க்கெல்லாம் தலைவன் நீர் தானே பாபா...பௌர்ணமி நிலவாய் ஒளி தரும் பாபா....
திவ்ய மூர்த்திகள் வடிவே பாபா.....தீவினை அகற்றும் திருவே பாபா....
எங்களின் பாவத்தை நீக்கிடும் பாபா...சீரடி மண்ணில் தோன்றிய பாபா... செய்தாயே பற்பல அற்புதங்கள் பாபா.....
பூவடி தந்து அருள்வாய் பாபா..சர்வேஸ்வரனே சாயி பாபா....தாய்மடி தேடி தவித்தோம் பாபா..தாங்கிட வந்தாய் நீயே பாபா...
ஆதரவான உறவே பாபா...சர்வேஸ்வரனே சாயி பாபா....பரம்பொருள் நீயென அறிந்தோம் பாபா...
பக்தியில் உன்னைத் தொழுதோம் பாபா...கரங்களை நீட்டி காத்திடும் பாபா..தடைகளை நீக்கும் பேரரருள் பாபா...
தன்னிகரில்லா எங்களின் தவைவன் நீ தானே பாபா...இடர்களை களையும் வளம் தரும் பாபா......
குழந்தை உள்ளம் கொண்டாய் பாபா.....எங்களையும் வெள்ளந்தியாய் இருக்கச் செய்த பாபா.. குறைகளை நீக்கும் குருவே பாபா.....
நிழல் தரும் மரமாய் நின்றாய் பாபா.... விழுந்திடும் விதையாய் விளங்கிடும் பாபா....
விதை விடும் பயிராய் பயன் தரும் பாபா.எழுந்திடும் கதிராய் சுடர்விடும் பாபா..
நீரினில் தீபம் ஏற்றிய பாபா...நெஞ்சினில் உன்னை வைத்தோம் பாபா.....
நேரிடும் துன்பம் நீக்கிடும் பாபா..பூரணமான அருளே பாபா...பூமியை காத்திட வந்தாய் பாபா.
யார் உன்னை போற்றினும் போற்றாவிட்டாலும் பேதம் பார்க்காமல் நலங்கள் அனைத்தும் வாரி வழங்கும் பாபா...
ஆயிரம் யுகங்கள் வாழ்ந்திடும் பாபா..அடியவர் கெல்லாம் நலம் தரும் பாபா...
தாமரை பூவாய் சிரித்திடும் பாபா..வாழ்வினில் உன்னை வணங்கிட்டோம் பாபா...
வரும் வினையாவும் போக்கிடும் பாபா.தாழ்வுகள் அகன்றிட செய்திடும் பாபா..
காலையில் விழித்ததும் உன் முகம் பாபா...காண்போம் ஒவ்வொரு நாளும் பாபா...
பாலேனும் உள்ளம் படைத்தவர் பாபா...நாளைய பொழுதை நலமாய் பாபா...
நடத்திட அருளும் இறைவா பாபா....தாழ் பணிந்தோமே அன்புடன் பாபா...சர்வேஸ்வரனே சாயி பாபா...
உதி நீர் நோய்களை போக்கிடும் பாபா...உலகோர் போற்றிடும் பகவான் பாபா.....
நீதியை மண்ணில் காத்திடும் பாபா... சத்தியத்தை என்றும் உரைத்திட்ட பாபா...
சோதனைகள் அனைத்தையும் நீக்கிடும் பாபா..சுந்தர வடிவாய் தோன்றிடும் பாபா
சாதனை புரிந்திட துணை வரும் பாபா.எளியவர் கெல்லாம் எளியோன் பாபா...
ஏற்றம் வாழ்வில் தந்திடும் பாபா..தலைமுறை காக்கும தயாபரி பாபா...நிலைத் தரும் நிம்மதி நின்பதம் பாபா.....
நினைவுகள் எல்லாம் உன் வாசம் பாபா..... சலனத்தை வெல்லும் சக்தியே.. பாபா....
சுடு மணல் பாறையில் நிழல் தரும் பாபா... சுழ்ந்திடும் இருளை விளக்கிடும் பாபா...
கடலென கருணை கொண்டாய் பாபா...விடை தெரியாத விளக்கம் பாபா...விண்ணும் மண்ணும் ஆழ்வது பாபா...
சடைமுடி சிவனாய் வந்தாய் பாபா....அடைமழை நாளில் குடையாய் பாபா...
அன்பரைக் காத்திட வருவாய் பாபா... சரணடைந்தொமே உன்னிடம் பாபா..
இமயத்தை போலே உயர்ந்தாய் பாபா.... இதயத்தில் நீயே நிறைந்தாய் பாபா...
சமயத்தில் வந்து உதவிடும் பாபா.... சர்வேஸ்வரனே சாயீபாபா..சர்வேஸ்வரனே சாயீபாபா......🙏🙏🙏
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக