சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்....🙏

🔥எதற்க்கெடுத்தாலும் வாதம் செய்யும் இயல்போ மற்றவர்களுடன் போட்டிப் போடுவதோ நற்குணம் அன்று.... உள்ளார்ந்த நம்பிக்கையும், தைரியமும்,  பொறுமையும், விசுவாசமும்  இல்லையனில் என்னை அடைவது சாத்தியமில்லை என்பதை நினைவில் கொள்வீர்களாக....🔥🔥

நீ என்ன செய்தாலும் நான் உன் மீது கோபம் கொள்ளவே மாட்டேன்...நீ என் செல்லக்குழந்தை. உனக்கு இன்னும் பக்குவத்தைப்  போதிக்கவே நான் தோல்வியை அனுமதித்தேன்..உனது சிந்தனை இன்றைய காலக்கட்டத்தை பார்க்கிறது.., எனது நோக்கமோ உனது  எதிர்காலம் தொடர்பானது... நீ அந்தக்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக உன்னால் சகித்துக்கொள்ளக் கூடிய வகையில் இத்தகைய சின்னச் சின்ன பிரச்சனைகளை தந்து உன்னை பக்குவப் படுத்துகிறேன்.  

ஸ்ரீஹரி நிஜமான பக்தர்களுடன் விளையாடுகிறான்.. அவர்களுடைய தாளத்திற்கு ஆடுகிறான், அன்புக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனை தேடி அலைகிறான். பாஷாண்டிகளுக்கு (வெளிவேஷம் போடுபவர்களுக்கு) அவன் என்றுமே அகப்படுவதில்லை. 

எவ்வளவு முயற்சி செய்யினும் எங்கள் கண்களுக்குப் புலப்படாதவாறு செய்துவிடுகிறீர்.. அவ்வளவு மெல்லியதான நூலைப் பிடித்திருக்கிறீர். எப்படி இருந்தால் என்ன...? இந்த தேசத்தில் இருப்பினும், அல்லது வேறு தேசத்தில் வசிப்பினும், பக்தர்களை இந்நூலால் உம் திருவடிக்கு இழுத்து வந்துவிடுகிறீர். அவ்வாறு இழுத்துவந்து அவர்களை கட்டியணைக்கிறீர், ஒரு தாய் தம் குழந்தையை பராமரிப்பதுபோல சிரமமின்றி அவர்களை சுலபமாக கவனித்துகொள்கிறீர். 

ஸ்ரீ சாயி சத்ச்சரித்திரம்..

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக