ஞாயிறு, மே 09, 2021

சீரடிபகவான்,தான் மகா சமாதியடைந்த பின்பும் கூட, நம்பிக்கையோடு முழு மனதுடன் செய்யப்படும் தமது அன்பான பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறு செவிசாய்த்து நிறைவேற்றுகின்றார் என்பதைப் பார்ப்போம்..🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச  அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

🔥நமது  சத்குருநாதர்  சீரடிபகவான், தான் மகா சமாதியடைந்த பின்பும்  கூட,  நம்பிக்கையோடு முழு மனதுடன் செய்யப்படும் தமது அன்பான பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறு  செவிசாய்த்து   நிறைவேற்றுகின்றார் என்பதைப் பார்ப்போம்..🔥

சீரடி பகவான் தன்  உண்மையான பக்தர்களின் வேண்டுதலை  ஏற்று, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவர்களை காப்பாற்ற முன் வருகின்றார்..இன்றைக்கும் பலருடைய வாழ்வில் நடக்கின்றது  என்பதை அறிந்திருப்பீர்கள்..ஒவ்வொருவருடைய  கனவுகளிலும், காட்சிகளிலும் தோன்றி பூர்த்தி செய்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது... பாபாவின் மிகப்பெரும் பக்தர் பக்த நாராயணராவ். பாபாவின் வாழ்நாளில் சீரடிக்கு அவர் இரண்டுமுறை விஜயம் செய்து பாபாவின் தரிசனத்தைப் பெரும் நல் அதிர்ஷ்டம் பெற்றிருந்தார்....

பாபா 1918-ஆம் ஆண்டில் மகா  சமாதியடைந்தார். இதற்குப்பின் ஒரு வருடத்திற்குள் நாராயணராவ் நோயாளியாகி படுத்தார்...மிகவும் கஷ்டப்பட்டார்... அவருக்கு அளிக்கப்பட்ட எவ்வித சிகிச்சைகளும் உரிய நிவாரணத்தை தரவில்லை..பாபா சமாதியாகி மூன்று  ஆண்டுகளுக்கு பின் நாராயண ராவ் சீரடிக்கு விஜயம் செய்ய விரும்பினார்..

மருத்துவர்கள்  கொடுத்த மருந்துகள் அவருக்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை...எனவே அவர் பிரார்த்தனை செய்துகொள்ளவும் கஷ்டத்திலிருந்து விடுபடவும்  சீரடிக்கு போக விழைந்தார்...ஆனால் எப்படியோ, அவரால் சீரடிக்கு செல்ல இயலவில்லை,..இரவும் பகலும் பாபாவை அவர் தியானம் செய்ய ஆரம்பித்தார்...

ஒருநாள் இரவு பகவான்  அவரது கனவில் தோன்றினார்....ஒரு குகையிலிருந்து வருவது போன்று காட்சி கொடுத்து கீழ்கண்ட  மொழிகளை கூறி ஆறுதல் நல்கினார்.... " நாளைய தினத்திலிருந்து நீ முன்னேற்றமடைவாய்...ஒரு வாரத்துக்குள் நீ எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவாய்"...என்று பாபா ஆசி வழங்கினார்..

சரி நுட்பமாக ஒரு வாரத்தில் கனவில் பகவான்  உறுதி கூறியபடி நாராயணராவ் தனது வியாதியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார் என்பது உறுதியாகின்றது.. ஆகவே பகவானிடம் நிலைமாறாது தூய்மையான  பக்தியுடன், ஒளிவு மறைவில்லாமல் அனைத்தும் ஒப்படைத்து சரணாகதி அடைந்தவர்களை, பகவான்  சத்தியமாக காப்பாற்றுவார் என்பது உணர்ந்து பகவானை வழிபடுவோம் ..

 ஓம்  ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக