சனி, ஆகஸ்ட் 26, 2023

ஞானம் பெறுவதற்கு நேரம்..காலங்களை நம்மால் நிர்ணயிக்க முடியாது...!?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஞானம் பெறுவதற்கு நேரம்..காலங்களை  நம்மால் நிர்ணயிக்க முடியாது...!?

ஞானம் பெறுவதுவதற்கு ஒரு கண நேரம் போதும் என்பார்கள் ஆன்றோர்கள். ஆனால் அந்தக் கண நேர அனுபவத்திற்குப் பக்குவப்பட எத்தனையோ காலம் ஆகலாம்..அது பல பிறவிகள் தாண்டி நிகழலாம்...ஒரு மாங்காய், மரத்திலேயே முற்றும் பழுப்பது போல இது...பிஞ்சு காயாகி, காய் முற்றிப் பின் கனிந்து பக்குவமாகி விடக் காலம் தேவை. அதற்குள் எவ்வளவோ நிகழலாம்.. பிஞ்சிலேயே வெம்பிப் போகலாம், சிறுவர்கள் கல்லால் அடித்து வீழ்த்தலாம்.. அணிலும் வவ்வாலும் கடித்துக் குதறி வீணாகலாம். தோட்டக் காரன் முற்றிய காயைப் பறித்து விற்றுவிடலாம். இந்த எல்லா ஆபத்துகளையும் தாண்டி காய் மரத்திலேயே பழுக்கக் கொடுப்பினை இருக்க வேண்டும்.

🔥(அதே போலத்தான் ஞான வேட்கை உள்ளவனுக்கு சம்சாரத்தில் எத்தனையோ தடைகளும், தடங்கல்களும் நேரும்)..ஆனால் கனிந்த பழம் எப்போது தானே விழும் என்பதை ஊகிக்க முடியாது. காம்பு முற்றிலும் காய வேண்டும் (பற்றுகள் முற்றிலும் ஒழிய வேண்டும்)அந் நிலையில் ஒரு பலமான காற்றிலோ, அல்லது ஒரு பறவை கிளையில் உட்கார்ந்த அதிர்ச்சியிலோ, அல்லது காற்றின் சலனமற்ற ஒர் நண்பகலிலோ நள்ளிறவிலோ பிடித்திருந்த காம்பு முற்றிலும் பலமற்றுப் போக, கனி பொத்தென்று விழலாம். யாரால் சொல்ல முடியும்...?🔥

அது போலத்தான் ஞானம் உள்ளில் ஒளிரும் அந்தத் தருணமும். அதை ஊகிக்க இயலாது... சத்குருவின் சங்கல்பமும் அருளும் சேரும் அந்த நொடியில் ஒரு பக்தன் ஞானம் பெருகிறான். அது எப்போது என்பதை சத்குரு மாத்திரமே அறியக்கூடும்..!

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக