ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
உன்னை உலகறிய நீயே போராடி..உன் மக்களை காத்து நிற்கிறாய்..!!🙏
1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் தேதியன்று நெல்லூரில் இருந்து வந்த பாப்பையா செட்டீ என்ற ஜமீன்தார் நரசிம்மஸ்வாமிஜி சாயியை பற்றி எழுதிய புத்தகத்தினால் பெரிதும் கவரப்பட்டு நரஸிம்மஸ்வாமிஜியிடம் வந்து 11,455 ரூபாயை தந்தார். தன்னுடைய சொந்த சொத்தான பல லட்சக்கணக்கான பணத்தையே உதறிவிட்டு வந்தவர் அதை பெற்றுக்கொள்ள ஒரு கணம் யோசித்தார்...அவர் முன் மூன்று கேள்விகள் எழுந்தன...அதை சாயி பிரச்சாரத்திற்காக ஏற்றுக்கொள்வதா , இல்லை பிக்செட் டெபோசிட்டில் போட்டு அதில் வரும் வட்டியில் ஏழைகளுடைய நலனுக்குத்தருவதா இல்லை சாயி சமஸ்தானத்திடம் ஆலய வைப்பு நிதியாகத் தரலாமா..? விடை தெரியாததினால் சீட்டு குலுக்கி போட்டு அதை ஒரு குழந்தையய் அழைத்து எடுக்கச்சொல்லி முடிவு செய்தனர். அந்த பணத்தை சீரடி சாயி சமஸ்தானத்திடம் கொடுக்க அவர்கள் அதை வாங்க மறுத்து விட்டனர்...ஆகவே அதை சென்னைக்கு கொண்டு வந்து சாயி பிரசாரத்திற்கு உபயோகிக்க முடிவு செய்தார்.
1940...ஆம் ஆண்டு சாயீசுதா என்ற பத்திரிகை துவங்கப்பட்டது...தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கில் பத்திரிகை துவங்கியது .. 1943.ஆம் ஆண்டில் மரணம் அடைந்த திரு சம்பத்குமார் என்பவர் அதுவரை அதன் ஆசிரியராக இருந்தார்... ஸ்ரீஸ்வாமி சிவானந்தரும் , ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமி என்பவர்களும் அதன் பின் அதை நிர்வாகித்தனர் . நரஸிம்மஸ்வாமிஜி அடுத்து சாயி பக்தர்களின் அனுபவம் என்ற புத்தகத்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டார்...அதே நேரத்தில் அகில இந்திய சாயி சமாஜத்திற்கு இளமை துடிப்பான ஒருவர் பிரசாரத்தை மேற்கொள்ளத் தேவையாக இருந்தது. அதைத் தவிர வயதாகி வந்ததினால் நரஸிம்மஸ்வாமிஜிக்கும் ஒரு உதவியாளர் தேவையாக இருந்தது....
அப்போது சென்னை தலைமை நீதிபதியின் மாப்பிள்ளையான ஒ .கே . வரதராவ் என்பவர் ரிசர்வ் பாங்கில் வேலை பார்த்து வந்தார். அவர் அகில இந்திய சாயி சமாஜத்தின் முதல் செகரட்டரியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடைய மனைவியான சாரதா என்பவர் நரஸிம்மஸ்வாமிஜிக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய அவருடைய தத்து மகளாயினார். பினர் சாரதாவே நரஸிம்மஸ்வாமிஜிக்கு அனைத்து உதவியும் செய்து வந்தார், அவருடைய பயணங்களை தீர்மானித்தார், பத்திரிகையில் எழுத உதவினார்..அவர்கள் நரஸிம்மஸ்வாமிஜியிடம் வந்தபொழுது அவர்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது...
''சாயிபாபாவே அனைத்து கடவுளின் அவதாரமும் என்றால் நாங்கள் லக்ஷ்மி , சரஸ்வதி , கணேஷர் போன்றவர்களை வணங்கலாமா வேண்டாமா...?''நரசிம்மசுவாமி அவர்களுக்கு விளக்கினார்..'‘ சாரதா இதோ பார் . நான் நரசிம்மசுவாமி என்ற உருவத்தில் உள்ளவன் என்றாலும் என் உடம்பில் உள்ள கை , மூக்கு , கண்கள் , காது என அனைத்தும் தத்தம் வேலையை தனித்தனியாக செய்கின்றன . அனால் அவை அனைத்தும் உள்ளது ஒரு உடலில்தானே. ஆகா நாம் பல செயல்களை செய்யும் ஒரு உடலை கொண்டவர்கள் எனும் பொழுது ஏன் இந்த கேள்வி எழ வேண்டும்...?''சாரதா மௌனம் ஆகி விட்டாள். அவளுக்கு விடை கிடைத்துவிட்டது...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக