ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

ஒரு ஸாதகர் குருவின் பணியான ஆன்மீகத்தினை பரப்பும் காரியங்களை செய்து குருவின் அருளினைப் பெற்று விரைவான ஆன்மீக முன்னேற்றத்தினை அடைகிறார்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

ஒரு ஸாதகர் குருவின் பணியான ஆன்மீகத்தினை பரப்பும் காரியங்களை செய்து குருவின் அருளினைப் பெற்று விரைவான ஆன்மீக முன்னேற்றத்தினை அடைகிறார். குருவின் அருளைப் பெறுதலை வேறு எந்த உலக வெற்றிகளுடனும் ஒப்பிட முடியாது. இருந்தாலும் பின்வரும் உதாரணம் இதனை நன்கு புரிந்து கொள்ள உதவும். வறுமையில் வாடும் மாணவன் ஒருவன் தன்னுடைய கடும் உழைப்பால் கோடீஸ்வரன் ஒருவரின் கவனத்தைப் பெறுகிறான். அதன் பின் அக்கோடீஸ்வரர் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் அவன் சேர்வதற்கான அனைத்து செலவினையும் ஏற்கிறார் மற்றும்  அவனது எதிர்கால வேலைவாய்ப்புக்களையும் பார்த்துக் கொள்கிறார். இதன் மூலம் பல வருடங்களாக வேலை செய்து மெதுவாக வேலைத்தளத்தில் உயர்வினை பெறும் காலம் சேமிக்கப்படுகிறது. அதுபோல் குருவின் அருளினைப் பெறும் இறைவனின் ஸாதகரும் மற்றைய ஆன்மீக பாதைகளில் செலவழிக்கும் பல வருட ஆன்மீக பயிற்சியினை சேமிக்கிறார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக