ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
யான் ஞானம் அடைந்த நிலையை உங்களுக்கு புரியவைக்க முற்ப்பட்டால் அது உங்களுக்கு புரியாது..மாறாக நீங்கள் உணர்ந்து தெளி(ரி)வதே ஞானம்...!!??🙏
ஞானம் அடைந்த நிலை என்பது மனம் அழிந்த நிலை. அது மனத்தைக் கடந்த அனுபவம். ‘கண்டதை விள்ளுவதற்கு’ மனம் வேண்டும். அந்த அனுபவத்தை ஓரளவேனும் புரிந்துக் கொள்வதற்கு, நமது சுஷுப்தி எனும் ஆழ் உறக்க நிலையே ஒரு நல்ல உதாரணம்..ஆழ் உறக்க நிலை, நம் எல்லாருக்குமே மிகவும் பிடித்திருக்கிறது. அதில் ஒரு ஆனந்தம் இருப்பதால்தான் எல்லாருக்கும் அது மிகவும் வேண்டியிருக்கிறது. "அந்த ஆனந்தத்தை விளக்கு" என்றால் எப்படி விளக்க முடியும்..? ஏனென்றால் அது மனம் வேலை செய்யாத நிலை..! அந்நிலையில் நாம் பெறற்கரிய ஏதோ ஒரு இனிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம்..
ஆனால், அது என்ன என்று அறிந்து சொல்ல வழியில்லை..காரணம் அங்கே மனம் இல்லை..! காற்று நீக்கப்பட்டு வெற்றிடமாக்கப் பட்ட ஓர் கண்ணாடிப் பெட்டியில் ஓர் அலாரம் கடிகாரம் மணி அடித்துக்கொண்டிருந்தால் நம்மால் கேட்கமுடியுமா..? ஒலியைக் கடத்த அங்கே காற்று இல்லாததால் கேட்க முடியாது. அதே போலத்தான் மனம் செயல்படா நிலை.
“திரிபுடி" என்று ரிஷிகள் சொல்லுவார்கள். ஒரு காட்சியின் அனுபவத்தை விளக்கிக்கூற மூன்று அம்சங்கள் வேண்டும்..காண்பான், காண் பொருள், காணும் செயல். ஞான நிலையில், காண்பான், காண்பொருள், காணும் செயல் இவை மூன்றும் ஒன்றாகி விடுகிறது. பின்னர் அதை எப்படி விளக்குவது..? அனுபவிப்பவன், அனுபவம், அனுபவிக்கும் செயல் இவை மூன்றும் ஒன்றாகிவிடுகிறது..! விளக்கம் கேட்டால், “என்ன இருக்கிறதோ அது தான் இருக்கிறது" என்று தான் சொல்ல முடியும்...!
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மிகச் சிறப்பான ஓர் உதாரணம் இது...“ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தை அளக்கச்சென்றது.. ‘அடிவரை போய் ஆழம் எத்தனை என்று கண்டுவந்து சொல்வேன்’ என்று சொல்லிச் சென்றதாம் அது..! அது கடலில் மூழ்கி ஆழத்தில் செல்லச் செல்லக் கரைந்துபோய் கடலோடு ஒன்றாகி விட்டது..! பின்னர் யார் வந்து ஆழத்தைச் சொல்வது...?”
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக