செவ்வாய், ஆகஸ்ட் 29, 2023

என் தெய்வீக ரூபம் என்றும் இருப்பது. இவ்வுலகில் இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஈடில்லாதது. ..!

ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

என் தெய்வீக ரூபம் என்றும் இருப்பது.... இவ்வுலகில் இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஈடில்லாதது. என் ரூபம் யார் கண்ணுக்கும் தெரியாதது. என்னை அறியாதவர்கள் என்னுடைய கண்ணுக்குத் தெரியும் மனிதனைப் போன்ற உருவத்தையும் என்னுடைய இந்த குணங்களையும் மட்டும் நினைப்பவர்கள் மூடர்கள். நான் ஒரு தெய்வீக சக்தி. மனிதன் அல்ல. நான் தூய்மையான ஆத்மா. எங்கும் நிறைந்திருப்பவன். இந்த தெய்வசக்தியை அறியாதவர்களின் கண்ணுக்கு நான் சாதாரண மனிதனாகக் காட்சி அளிக்கிறேன். இது ஒரு குறுகிய கண்ணோட்டமாகும். குறுகிய கண்ணோட்டம் என்றால் என்ன..? சின்னச் சின்ன விஷயங்களில் சிக்கிக் கொள்வது. உதாரணத்துக்கு“அவர் அவனைப் பார்த்தார். என்னைப் பார்க்கவில்லை. அவனோடு பேசினார். என்னோடு பேசவில்லை. இதெல்லாம் வேண்டாதவையாகும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக