ஞாயிறு, செப்டம்பர் 17, 2023

துறவு பலருக்கும் நடைமுறை சாத்தியமற்றது.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஆன்மிகம் என்பது நமது அன்றாட வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டாடி மகிழும் கலை ஆகும்....ஆன்மிகம் என்னும் வார்த்தையை பிரித்தெழுதினால், ஆன்மீகம் = ஆன்மா + இகம்...இங்கு ஆன்மா என்பது மனநிறைவை குறிக்கும் சொல்லாகும். இகம் என்பது இம்மை/இவ்வுலக வாழ்வை குறிக்கும் சொல்லாகும்...

மனநிறைவான வாழ்க்கையை எப்படி வாழ்வது என தெரிந்து கொண்டு அதன்படி வாழ்பவது ஆன்மீகம் ஆகும்...துறவு பலருக்கும் நடைமுறை சாத்தியமற்றது. அதனால்தான் மெய்தேடும் பொருட்டு, துறவறம் வேண்டி வருவோருக்கு, மெய்ஞானம் அடைந்த குருமார்கள் சாமானியமாக சன்யாஸ தீக்ஷை அளித்துவிட மாட்டார்கள்....

இல்லறத்தில் ஈடுபட்டு, அதற்கான கடமைகளைச் செவ்வனே செய்தவாறே, மெய்தேடலில் ஈடுபடுவது, விருப்பமும், ஆர்வமும், முயற்சியும், முனைப்பும் உடைய எல்லோருக்கும் சாத்தியம். அம்மாதிரி வழிகாட்டலையே தற்காலத்தில் குருமார்கள் பெரும்பாலும் தம்மை நாடி வரும் ஆர்வலர்களுக்கு வழங்குகின்றனர்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக