ஞாயிறு, செப்டம்பர் 17, 2023

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்,..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்,..

என்னுடைய பக்தனாகவும், என்னை முழுவதுமாக நம்பியும், இப்படைப்பில் என்னை அனைத்திலும் காணும் ஞானியானவன் ஒரு மஹாத்மா..இது, ஞானிக்கும், மஹாத்மாவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். மஹத் ததுவத்திற்கு (அகங்காரத்தை விடவும் நுண்ணியதென்று சொல்லப்படுகிறது) அப்பாற்பட்ட ஒருவன் ஒரு மஹாத்மா. எட்டு வித ப்ரக்ருதியைப் போல – பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அகங்காரம் (பரமாத்மாவின் சக்திகளின் எட்டு பௌதீக படைப்புகளைக் குறிப்பிட்டு) – மஹத் தத்துவம் அகங்காரத்திற்கும் அப்பாற்பட்டது, மிகவும் நுண்ணியது. அஹங்காரத்தைக் கடந்து, மஹத் தத்துவத்தை அனுபவித்தவன், மஹாத்மா எனப்படுகிறான்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக