சனி, செப்டம்பர் 23, 2023

பிரார்த்தனையும், சரணாகதியும்.....!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

பக்தரின் கேள்வி....பல்வேறான துயரத்தின் பிடியில் உள்ள எமக்கு மீண்டு வர முடியவில்லை.எவ்வித உதவியும் கிடைக்கவில்லை...இறைவனின்  ஆசியும் கிடைக்க வில்லையே...என்பதாக கூறுகின்றவர்களுக்கான பதிவு..🙏

தனிப்பட்ட மனித உயிர்களின் பிரார்த்தனை, மற்றும் சரணாகதியாலும் ...பாரத்தை எங்கும் வியாபித்திருக்கும் அவனிடம் கொடுத்து விடுங்கள்....அந்த மாபெரும் சக்தி உங்களை சரியான வழியில் நடத்தும்...சந்தேகமே வேண்டாம்....பிரார்த்தனைக்கும் சரணாகதிக்கும் வலிமை அதிகம்...மேலும் உங்களின் பிரச்சனைகளை தெள்ளத்தெளிவுடன் ஒளிவு மறைவின்றி முறையிடுங்கள்...நீங்கள் செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோருங்கள்...இறைவன் வழங்கிய நல்ல வாழ்க்கைக்கு நன்றி கூறுங்கள்...உங்களின் தற்போதைய வாழ்க்கை வரை பேருதவியாக இருந்த அனைத்து மனிதர்களுக்கும் நன்றி கூறுங்கள்....ஒளிவு மறைவின்றி இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து  ஆத்மார்த்தமாக இறையுடன் அன்பு செய்து திடமாக விசுவாசம் கொண்டு இறையாற்றலை உங்களுக்குள் உருவேற்றிக் கொள்ளுங்கள்...இங்கு இறைவனை எவ்வாறு பாவித்து உள்ளுக்குள் ஏற்கின்றீர்களோ அவ்வாறாகத்தான் அவ்வாற்றல் செயல்பட முடியும்...முயற்சித்துப் பாருங்கள்..தினந்தோறும் இறையைத் தொழுவதை வழக்கமாக்கிக் கெள்ளுங்கள்...உங்களுக்கும் இறைக்குமான தனிவழிப்பாதையில் நீங்கள் அடைந்த உணர்வின் வெளிப்பாடு உங்களுக்கு மட்டும் உரித்தானது...இதனை பிறருடன் ஒப்பிட முடியாது....இது தனிவழிப்பாதை...ஆகவே எந்த அளவிற்கு சிரத்தையுடன் பக்தி செய்ய முடியுமோ அவ்வளவிற்கு பக்தி செய்து பூஜித்து வந்தால் உயரிய நிலையை எளிதாக அடையலாம்...எதிர்பார்ப்பற்று பூஜித்தல் உகந்தது...இறையுடன் மல்லுக்கட்டாமல் இணத்துடனும்,  ஏக்கத்துடனும்,  தாக்கத்துடன் அவனது அன்பை ஆசியைப் பெற முயற்சித்தல்அவசியம்....நான் என்கிற அகந்தை அகங்காரமற்று இறையை இயல்புடன் பூஜித்து வாருங்கள்...அனைத்து இடர்களும் நீங்கிட துணையிருப்பார்கள்... 

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக