ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏
குரு என்பவர்..!!?
வாஹேகுரு என்றால், ஒரே ஒரு குருதான் இருக்கிறார். அவர்தான் கடவுள் எனப்பொருள். அவரே லட்சியம். இந்த குருவிலிருந்து அந்த குரு என்று அங்கும் இங்கும் அலைய வேண்டாம். எந்த நிலையிலும் இறைவனை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்....
குரு பிரம்மா,
குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ...
கடவுள் தான் உங்களது உண்மையான குரு. நீங்கள் அவரை எந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் அழைக்கலாம். குரு என்ற வார்த்தையில் ‘கு’ என்பது குணாதீதன் (குணங்களற்றவன்) என்பது ருபரஹிதன் (உருவமற்றவன்) எனவும் குறிப்பிடுகின்றன. ஆகவே குரு என்பவர், குணங்களைக் கடந்த உருவமற்றவர் என ஆகிறது. ஆகவே, இறைவனே உங்களது உண்மையான குரு...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக