ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏
கேள்வி : தக்க குருவை அடைவதற்கான வழியை தெரிவிக்க வேண்டும்..?
குருநாதர் அகத்திய மாமுனிவர வாக்கு...🙏
இறைவன் அருளால் தக்க குரு குறித்து பல்வேறு மனிதர்கள் எம்மிடம் வினவுகிறார்கள். சிலர் வந்து கேட்பார்கள் 'என் குரு யார்..? எங்கிருக்கிறார்..? எந்த குருவை நான் பின்பற்ற வேண்டும்..? என்றெல்லாம் கூட கேட்பதுண்டு. நாங்கள் கூறுவது என்னவென்றால் ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்களை பாேதிக்கின்ற எல்லாேருமே குருமார்களே. ஒவ்வாெரு அனுபவமும் கூட ஒரு மனிதன் நல்ல விஷயத்தைக் கற்றுக் காெள்ள உதவினால் அதுவும் குருதான்....எனவே நாங்கள் பாெதுவாகக் கூறுவது என்னவென்றால் குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக்கூடாது. சிஷ்யனை தேடிதான் குரு வரவேண்டு்ம். அந்த அளவிற்கு அந்த சிஷ்யன் நடந்து காெள்ள வேண்டும்.இந்த இடத்தில் ஆழ்வார்களின் கதையை நினைவூட்டிக் காெண்டால் நன்றாகவே புரியும். அந்த புளிய மரத்தின் அடியிலே கிடந்த ஆழ்வானைத் தேடித்தான் குரு சென்றார் என்பதை நினைவூட்டிக் காெண்டால் மற்றவை தானாக விளங்கும்...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக