ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
ஆன்மீக விழிப்புணர்வு..!?
பல கோடி ஆண்டுகளாக ஒரு குகைக்குள் வெளிச்சமே போகவில்லை. இருட்டாகவே இருந்தது...இந்த இருண்ட குகைக்குள் வெளிச்சம் வர ஒரே ஒரு தீக்குச்சியின் நெருப்பு போதும்...அந்த தீக்குச்சியின் நெருப்பை மூட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகுமே அவ்வளவே ஆன்மீகத்தின் விழிப்பும்...
ஒரு கலையை கற்க வேண்டுமானால் நிறைய நிலைகள் இருக்கலாம். ஆனால் ஆன்மீகத்தில் விழிப்புணர்வு ஒரு நொடியிலும் வரலாம், ஓராயிரம் பிறப்பிற்கு பிறகும் வரலாம், வராமலும் போகலாம்...பல நூல்கள் படித்து, பூஜை செய்து, யோகப் பயிற்சி செய்து வராமல் போகலாம். வெறும் வானத்தைப் பார்த்து விழிப்புணர்வு வரலாம்...இப்படி பல பேர்களுக்கு சித்தியாவது நமக்கு ஏன் ஆகவில்லை என்ற கவலையை விடுங்கள்...நமக்குள் இருக்கும் ஒரு சக்தி, இந்த பிரபஞ்ச சக்தியை போன்றது. அதற்குத் தெரியும்… எப்பொழுது வெளிவரவேண்டுமென்று...நிம்மதியாய், ஆனந்தமாய், தாமரை இலையில் நீர் போல், உலகவாழ்வின் உங்களுக்கு பிடித்த, ஏற்ற எல்லா விஷயங்களிலும் ஈடுபடுங்கள்...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய வழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக