புதன், அக்டோபர் 11, 2023

சரணாகதி தத்துவம் என்பது என்ன..



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

இறையாற்றலை நம்மினுள் உருவேற்றிக் கொள்ள  எவ்வாறு இறைவனுடன் பிணைந்துக் கொள்வது என்பதைப் பற்றியும், சரணாகதி தத்துவம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் விளக்கம் இங்கே...🙏

இறைவனை ஒரு தந்தையாகவோ, தாயாகவோ, நண்பனாகவோ நினைக்க முயல வேண்டாம். உங்களை ஒரு குழந்தையாகவே கருதுங்கள். குழந்தை ஏதும் செய்யாமல், தன்னைத் தூக்கிக் கொள்பவரின் பாதுகாப்பில் தன்னை விட்டுவிடுவதைப் போல, நீங்களும் கடவுளின் வசம் முழுச் சரணாகதியடைந்து விடுங்கள்...

ஒருதாயிடம் எவ்வாறு ஆத்மார்த்தமாக அன்புடன் இணைந்து கலந்து இருப்பீர்களோ அவ்வாறாக எந்த எதிர்ப்பார்ப்பின்றி இறைவனை உருவேற்றுங்கள் உங்களுள்...இறைவனும் உங்களுக்கு ஏற்றாற்ப்போல்  உங்களுள் பிணைந்துக் கொள்வான்....தீராக்காதலுடன் காத்திருந்து நெடுநாள் பிறகு சந்திக்கின்ற காதலன் காதலி போல் இறைவன் மீது ஏக்கம் மற்றும்  தாகத்துடன்  இறையன்பிற்காக காத்திருக்க வேண்டும்....கணவனுக்காக காத்திருக்கும புதுமணத்தம்பதிகளின் மனைவி போல் நெருக்கம் இருக்க வேண்டும்... உள்ளத்தில் அமர வைக்க கனிவுடன் ஏக்கத்துடன் தேட வேண்டும்...ஏதோ ஒன்றை எதிர்பார்த்து சரணாகதி, நம்பிக்கை வைக்காமல் ஏதும் எதிர்பாராது சரணாகதி அடைய வேண்டும்....இதுவே சம்பூரண சரணாகதி....

இறையுடன் கலந்து, கரைந்து, பிணைந்து, உருகி, திளைந்து, உணர்ந்து, தெளிந்து, அனுபூதி அடைய வேண்டும்.....எதற்கும் நம்பிக்கை பொறுமை, நேர்மை, சகிப்புத்தன்மை இவை நான்கும் இருந்தால் வைராக்கியம் தானாக உட்புகும் உங்களினுள்...இறைவனை அவனின் ஸ்பரிசத்தை உணர நீங்கள் ஏதும் பிரயத்தனம் படத்தேவையில்லை...இயல்பு மாறாது வெள்ளேந்தியான மனதுடன் இணக்கமாக, மனதை வெறுமையாக, பஞ்சு பொதியாக, இளகுவாக, இயற்கையை ரசிப்பது போன்றும், ஒரு பூவை முகர்வது போல் உங்களை வைத்திருங்கள்....இது போதும்....இணக்கம், இயல்பு, எதார்த்தம், இயற்கை, கருணை,கனிவு, குழந்தைத்தனம,  பாமரத்தன்மையுடன் கூடிய வெகுளிகளாக அதே சமயத்தில் உயர்ந்த எண்ணங்களுடன் வாழக்கூடியவர்களாக , இறைவனை ஆராயாமல், அவனின் ஆற்றலை உணர முற்பட வேண்டும்...கோரிக்கைகளை வைத்துக்கொண்டு நீங்கள் இறைவனை வணங்க முற்படும் போது அங்கே இறைவனின் இயல் பேராற்றலிலுள்ள தன்மையையும், ஸ்பரிசத்தையும்  உணர முடியாது....

ஆகவே இறைவனின் முழுமையை உணர வேண்டுமெனில், முதலில் நீங்கள் நீங்களாக இயல்பில், இணக்கத்தில், இயற்கையுடன் சேர்ந்து வாழ்பவராக இருத்தல் அவசியம்...மனதை வெறுமையாக வைத்து அவன் அன்பிற்காக ஏங்குங்கள்....கலக்க முயற்சி செய்யுங்கள்...மனம் திறந்து தந்தை தாயிடம், தோழனிடம், காதலியிடம் பேசுவது போன்று எதனையும்  மறைக்காது பேசுங்கள்....மன்னிப்பைக் கேளுங்கள்....இதுவரை இறையாளன் வழங்கிய அனைத்திற்கும் நன்றி கூறுங்கள்...இறைவனை வாழ்த்துங்கள்...இறையாளனை வாழ்த்தும் போது அது  அனைத்து உயிர்களையும் சேர்த்து வாழ்த்துவது போலாகின்றது...ஏனென்றால் ஏகமாகி... அநேகமாகி..ஏகமாக படர்ந்து அண்டசராசரத்தில்  அனைத்துயிரிலும் அனைத்துமாக அவனின் ஆற்றலே இயக்கியும் இயங்கியும் அருவமாகவும் உருவமாகவும் அனைத்துமாகவும் இருக்கின்றான்...ஆகவே இறைவனை அவனின் உயர்த்தன்மையை உருகி உணர்ந்து வாழ்த்துங்கள்... இறைவனுக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பையும் அன்பையும் உரிமையும் அளித்து விட்டு பிறகு சண்டையிடலாம்... கேட்கலாம்...உங்களுக்கு வேண்டியதை கேட்கலாம்...ஆனால் முதலில் அஸ்திவாரமாகிய  ஆத்மார்த்தமான அன்புடன் கூடிய சத்திய பிணைப்பு அவசியம்.... இப்பிணைப்பு இருந்தால் இறையிடம் மல்லுக்கட்டலாம்...ஆனால் எதிர்பார்ப்பில்லா ஆத்மார்த்தமான அன்பை வழங்கிய பிறகு நீங்கள் அவனிடம் வாதாடலாம்...இங்கே சரணாகதியும் நம்பிக்கையும் அன்பும் காதலும் அவசியம்...இதனை உணர்ந்துக்கொண்டால் ஆ...வான இறையும் வசப்படுவான உங்களுக்குள்...முயற்சித்துப் பாருங்கள்...இது ஒவ்வொரு உயிர்களுக்கான தனிவழி....அது இறைவழி..இவ்வழியில் பொதுவான இறைப்  பாதையைக்  காண்பிக்கலாம்..ஆனால் அவ்வழிமுறைகளைக் கடைப்பிடித்து உணர்ந்து அதில் கிடைக்கும் பலாபலன் அவரவர்களுக்குரியது...ஆகவே இறைவழிப் பயணத்தில் ஒப்பீடு தேவையில்லை....

இங்கே ஒவ்வொருவரும் உங்களுக்குள் இறையாற்றலை  எவ்வாறு  உணர்கின்றீர்களோ அதுவே உங்களுக்கானது...நூறுவருடம்  இறைவனை வழிப்பட்டவர்களுக்கு கிடைக்காத பலன் ஒரு நாள் இறைநாமத்தை உச்சரித்தவனுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது..அவரவர்களின் சுயதர்மத்தின் படி வாழ்கின்ற வாழ்க்கையில்,  அவரவர்கள் வழிபட்டதால் அவரவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளும் அவரவர்களின் ஏற்புத்திறனைச் சார்ந்தது...ஆக உண்மை,  சத்தியம், நேர்மை, ஒழுக்கம், அன்பு, கருணை, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது அறவழியில் நடந்தால்  இறைவனை அடைவது சுலபம்....ஆகவே முடிந்தளவு இறைக் கோட்பாடுகளை உட்புகுத்திக் கொண்டு அதனை செயலாக்கத்திற்கு கொண்டு வருவது அவசியம்...இதனை உணர்ந்து சிந்தித்து வாழ்வில் கடைப்பிடித்தால்  சந்திக்கலாம் மெய்ஞானத்தை....

திருச்சிற்றம்பலம்...தில்லையம்பலம்...🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக