ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
பகவான்.....
நான் படித்தவள் இல்லை , எனக்கு ஏழு குழந்தைகள்...தியானம் செய்ய இவ்வளவு பெரிய குடும்பத்தில் சிறிதும் நேரம் கிடைப்பதில்லை ...." ஆன்ம விசாரம் எனக்குப் புரியவில்லை...எனவே எனக்கு எளிய வழிமுறையை கூறுங்கள்!
பகவான்....
ஆன்மாவை அறிய சாஸ்திர அறிவோ, புத்தக அறிவோ தேவையில்லை ....வீட்டு வேலைகளும் ,பொறுப்பும் ஆன்மாவை அறிய தடையில்லை .என்ன வேலை செய்து கொண்டுஇருந்தாலும் சரி , உட்கார்ந்து இருந்தாலும் , நடந்து கொண்டிருந்தாலும் சரி எப்போதும் உன் மனதிற்கு "நான், நான் , நான் என இடை விடாமல் கூறிக் கொண்டு இரு...."இது ஒரு நாள் நிச்சயம் ஆன்மாவில் கொண்டு போய்ச் சேர்த்து விடும் ..."நான் " என்பது கடவுளின் பெயர் .... எல்லா மந்திரங்களைக் காட்டிலும் இதுவே முதன்மையான மிகச்சிறந்த மந்திரம்....." ஓம் " மந்திரம் கூட இதற்கு அடுத்தபடி தான் வருகிறது ....
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக