ஞாயிறு, நவம்பர் 05, 2023

குருவின் உபதேசம் என் சுய நிலை அறிய எவ்வாறு உதவும் ?



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

குருவின் உபதேசம் என் சுயநிலை அறிய    எவ்வாறு  உதவும் ?

பகவான்...காட்டில்  தன்  குடும்பத்தை விட்டு சந்தர்ப்பவசத்தால்  பிரிந்த  சிங்கக்குட்டி   ஒன்று ஆட்டு மந்தையில்  சேர்ந்தது ...இதனால் தானும் ஒரு ஆட்டுக்குட்டியே  என பாவித்துக்கொண்டது .ஆட்டைப் போலவே கனைத்தது ..சில  காலம் கழித்து ஒரு பெரிய சிங்கம் அந்த  ஆட்டு மந்தையை  நோக்கி வந்தது...ஆடுகள் நாலாபுறமும்  சிதறி ஓடின....இந்த   சிங்கக் குட்டியும் தான் ஒரு  ஆடாய்  என்றெண்ணி   பயந்தோடியது ...அதைக்கண்ட   பெரிய சிங்கம்  தன்னினத்தைச சேர்ந்த  அக்குட்டியை   தாவிப்பிடித்து  " நீயும் என்னைப் போல  ஓர்  சிங்கம்  தானே! ஏன் ஆட்டைப்போல   பயந்து  ஓடுகிறாய் ? அருகிலுள்ள  நீர்க் குட்டையில்   உன்  முகத்தைப் பார்  என்றது ..அவ்வாறே   அக்குட்டி  குட்டை நீரில் முகத்தை  பார்த்து   தான்  ஒரு  சிங்கம் தான் என்றுணர்ந்தது .  ஆடுபோல்  கனைப்பதை  விட்டு  அக்கணமே   சிங்கம் போல   கர்ஜித்து  தன்  சுயநிலை   பெற்று  மகிழ்ந்தது...இவ்வாறுதான்   ஒருவன்   குருவின்   உபதேசத்தால்  தன் சுயநிலை  (  ஆத்ம சொரூபம் )  மீட்கப் பெறுகிறான்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு  தியான பீடம்....🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக