வியாழன், டிசம்பர் 21, 2023

ஓம்சாய்ராம் 🙏

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஒரு ஊரில் ஒர் வியாபாரி இருந்தான் அவன் ஒரு சமயம் வெளியூர் சென்று வியாபாரம் செய்து மிகுந்த பொருளீட்டினான். திரும்ப வீட்டிற்கு வர எண்ணி தான் சம்பாதித்த பொன்னும், பொருளும், ரத்தினத்தையும்,  மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தான்...அவன் ஊரை அடைவதற்குமுன் ஒரு ஆற்றைக் கடந்தாக வேண்டும். அவன் ஆற்றிற்கருகே வந்து விட்டான்....ஆனால் அவனுக்கு நீச்சல் தெரியாது.ஆற்றில் அப்போதுதான் புது வெள்ளம் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் ஏறுவதற்குள் ஆற்றை கடந்து விடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போட்டவன்  முட்டையை தலைக்குமேல் வைத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கினான்...பாதி ஆற்றைக் கடப்பதற்குள் திடீரென அதிகரித்த வெள்ளம் அவனை அலைக்கழித்தது. சமாளிக்க முடியாமல் வெள்ளம் கரைபுரண்டு வந்தது. ஒரு நிலைக்குமேல் வெள்ளம் வியாபாரியை இழுத்துச் சென்றது.

வியாபாரி எவ்வளவோ முயன்றும் மூட்டையை காப்பாற்ற முடியவில்லை.மூட்டையை வெள்ளம் அடித்துச் சென்றது. அப்போது வியாபாரி கத்தினான். அய்யோ எனது மூட்டை தண்ணீரில் போகிறது பிடியுங்கள் அதைப் பிடியுங்கள் என்று கூப்பாடு போட்டான்...இவனது கூக்குரல் கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனின் காதில் விழுந்தது. அவன் குபீரென தண்ணீரில் குதித்து மூட்டையை நோக்கி நீந்தினான்.  பலகட்டப் போராட்டத்திற்குப்பின் ஒரு வழியாக மூட்டையை காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்தான்...

மூட்டையை கரையில் இழுத்துப் போட்டுவிட்டு கூப்பாடு போட்டவனை நோக்கி, உங்களது மூட்டையை காப்பாற்றி விட்டேன்.நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள். வந்து உங்களது மூட்டையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கத்தினான். அவன் இருந்தால்தானே, அவன் ஆற்றோடு போய் வெகு நேரமாகிவிட்டது...என்னை காப்பாற்றுங்கள் என்று கூப்பாடு போட்டிருந்தால் அந்த இளைஞன் அவனை காப்பாற்றியிருப்பான். மூட்டையை காப்பாற்றச் சொன்னதால் இப்போது மூட்டை காப்பாற்றப்பட்டது... 

நம்முடைய பிரார்த்தனை எப்போதுமே இவ்வாறாகத்தான் இருக்கின்றது...என் கஜானா எப்போதும் திறந்தே இருக்கின்றது. எவ்வளவு வேண்டுமானாலும் வந்து வாரிக்கொள்ளுங்கள் என்றார் பாபா...அவரது கஜானாவில் அப்படி என்ன இருக்கும்...? வீடு, கார், ஏ.சி, நிலம், தங்கம், வைரம், குழந்தை, பணம், புகழ். மனைவி, உத்யோகம்….. இப்படியாகவா இருக்கும். இவை எல்லாம் அழியும் பொருளல்லவா...? கடவுளே அவதாரம் எடுத்து வந்த பாபாவின் கஜானாவில் அழியும் பொருட்களா..? இதையா தன் பக்தர்களுக்கு கொடுக்க விரும்புவார் பாபா..?அழியா பொருட்களான,  சத்யம், நேர்மை, ஞானம், தவம்,கருணை, அன்பு,என்றல்லவா அவரது கஜானாவில் நிரம்பியிருக்கும். 

அழியும் பொருட்களை கொடுப்பதற்கு மனிதனே போதுமே, அவனால் அதுமட்டும் முடியும். அழியாத பொருளான ஞானத்தை கொடுப்பதற்காகத்தான் இறைவனே குருவடிவாக நம்மிடம் வருகின்றான். ஏனெனில் அவனால்தான் ஞானம் கொடுக்க முடியும். அவனையே, என்னிடம் ஞானம் கேட்பார் ஒருவருமில்லை. என்று வருந்த வைப்பவர் தானே நாம்....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக