சனி, பிப்ரவரி 24, 2024

மரப்பலகை - பாபாவின் படுக்கைக்கானது,


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ... 🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்... 🙏🙏

மரப்பலகையில் பாபா உறங்குவதில் இருக்கும் சூட்சமம் என்ன....🙏🏻

தமது ஆரம்ப நாட்களில் நாலு முழ நீளமும் ஒரு முழ அகலமும் உள்ள ஒரு மரப்பலகையின் நான்கு மூலைகளிலும் சிட்டி (அகல்) விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க பாபா உறங்கினார்.  பின்னர் அவர் அப்பலகையைத் துண்டுத் துண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டார்.  (அத்தியாயம் 10) ஒருமுறை இப்பலகையின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் காகா சாஹேப் தீஷித்திடம் பாபா விவரித்தார்.  இதைக்கேட்டுக்கொண்டிருந்த அவர் பாபாவிடம், "நீங்கள் இன்னும் மரப்பலகையை விரும்பினால் சௌகரியமாகத் தூங்குவதற்காக மசூதியில் மீண்டும் ஒன்றைத் தொங்க விடுகிறேன்" என்றார்...

பாபா:  மஹல்ஸாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் மேலே துயில விரும்பவில்லை.

காகா: ...பகத் மஹல்ஸாபதிக்காக நான் மற்றொரு பலகையையும் ஏற்பாடு செய்கிறேன்.

பாபா:  அவன் எங்ஙனம் பலகையில் தூங்கமுடியும்...?  பலகையின் மீது தூங்குவது எளிதல்ல.  தன்னிடத்து பல நல்ல குணங்கள் - பண்புகள் உள்ள ஒருவனே அங்ஙனம் செய்ய இயலும்... தனது கண்கள் 'அகல விழித்திருக்கும் நிலையில்' தூங்கக் கூடியவனே அதில் தூங்கமுடியும்....நான் தூங்கப்போகும்முன் மஹல்ஸாபதியை என் அருகில் அமரச் சொல்லி எனது நெஞ்சின் மீது கைவைத்துநாமஸ்மரணம் கேட்கிறதா எனக் கவனிக்கும்படியும், தூங்கிவிட்டால் எழுப்பும்படியும் அவனைக் கேட்கிறேன்.  இதைக்கூட அவனால் செய்ய இயலுவதில்லை.  தூக்க மயக்கத்தில் தலையை ஆட்ட ஆரம்பிக்கிறான்...எனது நெஞ்சில் அவனது கை ஒரு கல்லைப் போல் கனப்பதை உணர்ந்து நான், "ஓ! பகத்" என்று கூவும்போது அவன் அசைந்து கண் விழிக்கிறான்...தரையின் மீதே சரியாக அமர முடியாமலும், தூங்க முடியாமல் தடுமாறுபவனும் தனது ஆசனம் (தோற்ற அமைவு) நிலையுறுதியாக இல்லாதவனும், தூக்கத்திற்கு அடிமையானவனுமான அவன் உயரத்திலுள்ள பலகையில் எவ்விதம் தூங்க இயலும்?மற்ற அநேக முறைகளில் அடியோர்கள் மேல் கொண்ட அன்பினால், "எது நம்முடையதோ (நன்மையோ, தீமையோ) அது நம்மிடம் இருக்கிறது." " எது மற்றவனுடையதோ அது அவனிடம் இருக்கிறது" என்று பாபா கூறினார். பாபா மகல்சாபதியை மிகவும் நேசித்தார் என்பது தெரிகிறது. 

ஒரு சமயம்"மகல்சபாதி வருகிறான். அவன் சாப்பிடவில்லை. அவன் பசி தாங்க மாட்டான். அதனால் அவனுக்கு உணவை எடுத்து வையுங்கள்.” என்றார் சாய்பாபா. அதற்கு சாய்பாபாவின் அருகில் இருந்தவர், “பாபா..மகல்சபாதி அஸ்தினாபுரம் சென்று இருக்கிறார். நாளைதான் வருவார்.” என்றார். அப்போது, “பாபா” என்று வேதனை கலந்த குரல் வந்த திசையை அனைவரும் திரும்பி பார்த்தார்கள். மகல்சபாதி கண்ணீருடன் நின்றிருந்தார். “வா மகல்சபாதி. உனக்காகதான் காத்திருக்கிறேன். அஸ்தினாபுரத்தில் நடந்த தகராறில், உன்னை அழைத்தவர்கள் உன்னையே மறந்துவிட்டார்கள். முதலில் நீ போய் சாப்பிடு. பிறகு பேசலாம்.” என்றார். சாய்பாபா. “பாபா… என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் பேச்சை கேளாமல் சென்று, உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் வேதனையும் கஷ்டங்களும் அனுபவித்துவிட்டேன். இனி உங்கள் பேச்சை மீற மாட்டேன்.” என்றார் மகல்சபாதி...காகா சாஹேப் தீஷித் அவரேப்பற்றி- ஆன்மீகத்தின் அதிகாரம் என்று கூறினார். அவர் உலக விஷயங்களுக்கு எந்தவிதமான ஆசைகளும் இல்லாமல் இருக்கிறார். இவர் மூலம்   பாபாவின் அடியவர்கள் பலர்    ஆன்மீகத்தை கற்றுக் கொண்டனர். 

பாபா மூலம்   பல தெய்வீக அனுபவங்கள் அவர்  பெற்றார். ஒரு சமயம்  கண்டோபா கோயிலின் வருடாந்திர விழாவுக்கு செல்கையில்,  தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். வரும் வழியில் கிணறுகள் வற்றி விட்டன. பாபாவை மனதில் வேண்டிக் கொண்ட சில நிமிடங்களில் கிணற்றில் தண்ணீர் வந்தது அதை  அவருடன் வந்தவர்கள்  அருந்தி தாகம் தீர்த்தனர்....இன்னொரு சமயம்  கண்டோபா பல்கி யாத்திரை செல்கையில்,  ஒரு இடத்தில் பிளேக் நோய் பரவியிருந்தது. அனைவரும் மேலே எவ்வாறு செல்லமுடியும் திகைத்தனர். மகல்சபாதி பாபாவை வேண்டியபடி இருந்தார். தீடீரென்று தன்அருகில் யாரோ இருப்பதை உணர்ந்து திரும்பினார். பாபா அங்கே அவருக்கு தரிசனம் தந்தார். சிறிது நேரத்தில் பாபாவை அங்கு காணவில்லை. ஆனால் அதன் பிறகு அவர்களிடமிருந்த பயம் போய்விட்டது. பிரயாணத்தில்  தடங்கல் இல்லாமல் சென்றனர்.

திரும்பவும்  சீரடி வந்து பாபாவை பார்க்கையில்"" ,பகத்,விழா நன்றாக நடந்தது இல்லையா..? "என்றார்   பின்பு பாபா தான் அவரது பின்புறம் வந்து நின்றதும், விழாவுக்கு தான் வந்ததையும்  தெரிவித்தவுடன் மகல்சபாதி  பாபாவை வணங்கினார்...தான் எப்போது   போவோம் என்பதை முன்கூட்டியே அறிந்த மகல்சபாதி  தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்க்கு இது பற்றி கூறினார். காகா சாஹேப் தீஷித் வருவதற்காக ஒரு நாள் காத்திருந்தார்.பாபா அவருக்கு 12ம் தேதி செப்டம்பர் 1922ல்  சத்கதி அளித்தார். ..ஒரு சமயம் பாபாவின் கஃனி, தண்டம், பாபாவின் உதி மூன்று வெள்ளி காசுகள்  இவை எல்லாம் பாபாவால்   மகல்சாபதிக்கு கொடுக்கப்பட்டது.

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக