வியாழன், பிப்ரவரி 22, 2024

ரமண மகரிஷி ,சுவாமி சின்மயானந்தா , வேதாத்திரி மகரிஷி, ஸ்ரீராமகிருஷ்ணர்,சுவாமி ஷீரடீ சாய்பாபா போன்ற எல்லா சக்தி படைத்த குருக்களும் நோயினால் அவதிப்பட்டே இறந்துள்ளார்கள்..அவர்கள் சக்தியால்( self -healing) அவர்களை அவர்கலாலே காப்பாற்ற முடியாமல் போனதா...?

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏

ரமண மகரிஷி ,சுவாமி சின்மயானந்தா , வேதாத்திரி மகரிஷி, ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி சீரடீ சாய்பாபா போன்ற எல்லா சக்தி படைத்த குருக்களும் நோயினால் அவதிப்பட்டே இறந்துள்ளார்கள்..அவர்கள் சக்தியால்( self -healing) அவர்களை அவர்கலாலே காப்பாற்ற முடியாமல் போனதா...?இந்த உடம்பே ஆத்மாவுக்கு வந்த வியாதி தான்...அந்த உடம்புக்கு நோய் வந்தால் அது வியாதிக்கே வியாதி வந்த மாதிரிதான்....இது ஷீரடீ சாய்பாபா,பகவான் ரமண மகரிஷியின் கூற்று.

ஆன்மீக அனுபவத்தின் உச்சத்தை அடைந்து நிலை பெற்ற மகான்களுக்குத் தான் உடல் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அவர்களுக்கு உடல் துச்சம். எப்படி பசி, தாகம் இவையெல்லாம் உடலுக்கு வருகின்றனவோ அதைப் போலவவே உடலுக்கு நோயும் நோவும் வரத்தான் செய்யும். பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடம்பு நோகும், தேயும், அழியும். அது இம் மகாத்மாக்களுக்கு ஒரு பொருட்டல்ல.

கண்டிப்பாக மகாத்மாக்கள் தமது சங்கற்பத்தால் தம் உடல் நோயை நீக்கிக்கொள்ள முடியும். எத்தனையோ பக்தர்களின் நோய்களைத் தீர்ப்பவர்களுக்குத் தம் உடலிலுள்ள நோயைக் குணப்படுத்திக்கொள்ள முடியாதா என்ன...!பக்தன், தன் உடல் மீது பற்று வைத்திருக்கிறான்...அவன், தன் உடல் நோயைத் தாங்க முடியாமல் வேதனையில் தவிக்கிறான்...அவன் குடும்பத்தினர் அவனைக் குறித்துத் தீராக் கவலையில் வாடுகின்றனர்.. அதனால் மகாத்மாக்கள் தமது அபார கருணையின் காரணமாக, தம் பக்தர்களின் பிராரப்தங்களைத் தாம் ஏற்றுக்கொண்டு அவர்களை நோயிலிருந்து விடுவிக்கின்றனர். தாம் ஏற்றேடுத்த நோய்களை அனுபவித்துத் தீர்க்கின்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரே தாம் புற்று நோயால் அல்லலுறுவது பக்தர்களின் நோய்களை ஏற்றெடுத்ததால் தான் என்று சொல்லியதுண்டு...மகான்களுக்குத் தமது உடம்பைப் பேணி நீண்ட நாள் வாழ்ந்து மேலும் பலருக்கு வழி காட்டலாமே என்கிற கணக்குப் போடும் புத்தியெல்லாம் இல்லை. அவர்கள் இயற்கையின் போக்குக்கு வணங்கி அதன் வழியே நடப்பது நடக்குமாறு விட்டு விடுகிறார்கள்...

மெய்யாய் நோக்குகையில், இந்த உடம்பைச் சுமந்துகொண்டு அவர்கள் சுற்றி வருவது ஒரு விதத்தில் பாரம் தான். பக்தர்கள் மீது உள்ள தம் கருணையின் காரணமாகவே அவர்கள் உடம்பைச் சுமந்துகொண்டு திரிகின்றனர். அதன் காலம் முடியவரும் சமயத்தில், அவர்களுக்கு அதனை நீட்டிக்க யாதொரு ஆர்வமும் இருப்பதில்லை.

"தலையில் பெரும் பாரத்தை சுமந்துகொண்டு நடக்கும் ஒரு கூலியாள் 'எப்போதடா பாரத்தை இறக்கி வைப்போம்' என்று இருப்பானா, இல்லை இன்னும் இன்னும் சுமந்துகொண்டு தூரம் நடக்கலாமே என்று நினைப்பானா...?" என்பார்கள் ரமண மகரிஷியும்..ஷீரடீ சாயீபாபாவும்...!

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🙏

ஓம் நமசிவாய....🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக