ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏
தத்வமஸி..
அகம் பிரம்மாஸ்மி...!!
காலத்தால் எழுந்த தத்துவ ஞானத்தின்
இரண்டு பிரிவுகள் உள்ளன.
தத்துவமஸி....
முதலில் எல்லாப் பொருட்களும் அணுக்கள். அணுவாக இணைந்ததுதான் எல்லா பொருட்களும். எல்லாமே ஒன்றுதான். ஆதிநிலையாகிய சிவம்தான் என்று கண்டுபிடித்தார்கள்..தத்துவம்ஸி என்ற வார்த்தை அப்போது வந்தது...
அகம் பிரம்மாஸ்மி....
பிற்காலத்தில் சித்தர்கள் அகத்தவம் புரிந்து மனமே புறமனதிலிருந்து நடு மனம் சென்று அங்கிருந்து இறை நிலையோடு ஒன்றி அவனேதான் அறிவாக இருக்கிறான் என்ற போது "அகம் பிரம்மாஸ்மி" என்று சொன்னார்கள்...இறைவனேதான் மாற்றம் பெற்றுக் கொண்டே வந்த நிலையிலே இன்று மனிதனாக வந்திருக்கிறான்.
இப்போது நான் யார்..?
இறைவனே நானாக இருக்கிறேன் என்ற உண்மையை தெளிவாக உணர்ந்த நிலையில் தன் முனைப்பு எழவே எழாது...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக