ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
ஞானம் என்றால் என்ன...? ஞானத்தை எப்படி விளக்குவது...?
🔥புறத்தில் நடப்பவற்றை எல்லாம் பிரதிபலிப்பது நம் மனதின் இயற்கை. நம் அறிவு முயற்சி செய்து தான் விரும்பியதை நம் மனம் பிரதிபலிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணமும் போராடுகிறது..இந்த முடிவில்லா போராட்டம், ஒரு வீண்முயற்சி என்று நம் அறிவு புரிந்துக் கொள்ளும் பொழுது தன் முயற்சியை முழுமையாக கைவிடுவது தான் ஞானம். இதுவே அகசரணாகதி.... ஞானம் என்பது ஒரு 'அறிவுபூர்வமான புரிதல்' மட்டுமே.🔥
எல்லாம் அவன் செயல் - நம் மனதில் தோன்றும் இன்ப துன்பங்கள் எல்லாம் அவன் செயல் என்று பக்தி மார்க்கம் போதிக்கும் சரணாகதியும், இந்த அகசரணாகதி தான்.சும்மா இருப்பது என்பது நம் முயற்சியால் வருவதன்று...முயற்சியை கை விடுவதால் வருவது...இந்த உண்மையை எவரும் கடை பிடித்து புரிந்துக் கொள்ள முடியும் ... இது நம் மனதிற்கானது...
இந்த 'ஞான புரிதலின்' விளைவு...?
ஞானப் புரிதலுக்கு பின் ... நம் மனம் விடுதலையுடன் இயங்க தொடங்கி விடுகிறது....சதா மகிழ்ச்சியையும் நிம்மதியையும், மனதிடம் தேடி கொண்டு இருந்த நம் அறிவு, தேடுதலை நிறுத்தி விடுகிறது. மனதில் ஓடும் உணர்வுகளுடன் போராடி புதுப்பித்துக் கொள்வதை நிறுத்தி விடுகிறது...அறிவின் குறுக்கீடோடு இல்லாத நம் மனம் நின்று விடுவதில்லை ... அது விடுதலையுடன் இயங்க தொடங்கி விடுகிறது.இதுவே விடுதலை ... இதுவே ஆன்மீகத்தில் உயர்வாக கருதப்படும் ... முக்தி ... இதுவே ஞான விடுதலை...இந்த விடுதலை ஒரு அனுபவம் அன்று. எல்லா அனுபவங்களும் சுதந்திரமாக வந்து போவது தான் விடுதலை.
ஒரு குழந்தையானது இந்த விடுதலையுடன் தான் இருக்கின்றது. எல்லா ஞானிகளும் இந்த மன விடுதலையுடன் தான் வாழ்கின் றார்கள்..
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻.. !
ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக