ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, ஜூன் 05, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்தாறு(26

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏🏻

🙏🏼 அத்தியாயம்:.இருபத்தாறு(26)🙏🏼

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம் பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது..ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்... இவ்வாறாக நாம் அனைவரும் ஶ்ரீ சாய்  சத்சரித்திர வேதப்பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🙏🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.... மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....இவ்வேதப் பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்.... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥

🙏அத்தியாயம்:::. இருபத்தாறு(26 )🙏

🙏முன்னுரை...🙏

சத்குருநாதர் சீரடி பாபாவின்  பாதகமலத்தில் சரணாகதியடைந்து, எவ்வாறு அனைத்து விதமான மாயை சுழற்சியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வது என்பதைப் பற்றிய குறிப்புரை..

சத்குருநாதர் சீரடி  பகவானை எவ்வாறு மானசீகமான முறையில் வழிபாடு செய்து அகண்டப்  பிரார்த்தனையை மேற்க்கொள்வது என்பதைப் பற்றிய விளக்கவுரை....

சீரடி பாபா தன்னை நாடி வந்த பகத் பந்த் என்ற பக்தரை,  எவ்வாறு  தாய்மையுணர்வுடன்  ஆசிர்வதித்து வலிப்பு நோயிலிருந்து குணப்படுத்தினார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை...

சீரடி பாபா எவ்வாறு ஹரிச்சந்திர பிதலேவின் குடும்பத்தை ஆசிர்வதித்து , அவர் மகனின் காக்காய் வலிப்பு நோயைக்   குணப்படுத்தினார் என்பதைப் பற்றியும்,  மற்றும்  பாபா, எவ்வாறு  பிதலேவிற்கு மூன்று ரூபாயை வழங்கி, அக்குடும்பத்தை ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய அனுபவ  விளக்கவுரை... 

சீரடி பாபா தன்னைக் காண வந்த  ஆம்ப்டேகர் என்ற பக்தரின் தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கு  எவ்வாறு   உபதேச மொழிகளின் மூலமாக  அனுக்கிரகம் செய்தார் என்பதைப் பற்றிய அனுபவ உரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கே பார்ப்போம்...

🔥முதலில் சத்குருநாதர் சீரடி பாபாவின்  பாதகமலத்தில் சரணாகதியடைந்து, எவ்வாறு அனைத்து விதமான மாயை சுழற்சியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வது என்பதைப் பற்றிய குறிப்புரையை இங்கு காண்போம்..🔥

இப்பிரபஞ்சத்தில் நாம் காணும் யாவும் மாயையின் விளையாட்டே என்பது குறிப்பிடத்தக்கது...கடவுளின் ஆக்கும் ஆற்றலே  ஆதி மாயை..மாயை என்பது  உண்மையில் இருப்பவை அல்ல...உண்மையான பரப்பிரம்மமே நிச்சயமாக இருக்கிறது... இருளின் காரணமாக ஒரு கயிற்றையோ அல்லது  மாலையையோ பாம்பாக நாம் எண்ணிக்கொள்வதைப் போலவே, புறத்தோற்றத்தை மட்டுமே நாம் காண்கிறோம்.. .காணக்கூடிய பொருட்களிலெல்லாம் உள்ளுறைந்து கிடக்கும் மெய்ப்பொருளை நாம் காண்பதே இல்லை...

நமது அறிவுக் கண்களை சத்குரு மட்டுமே திறந்துவிடுகிறார். பொருட்கள் அனைத்தும்  அவைகளின் தோற்றத்தில் காணப்படுவது போல் பாராமல்,  உண்மையான ஒளியில் அவைகளைக் காணுமாறு நம்மை ஊக்குவிக்கின்றார்... எனவே நாம் சத்குருவை வணங்கி, உண்மையான காட்சியை அதாவது கடவுள் காட்சியை நமக்கருள வேண்டி பிரார்த்தனை மேற்க்கொள்வோம்...

🔥சத்குருநாதர் சீரடி  பகவானை, எவ்வாறு மானசீகமான முறையில் வழிபாடு செய்து அகண்டப் பிரார்த்தனையை மேற்க்கொள்வது என்பதைப் பற்றிய  ஹேமாட்பந்தின்  விளக்கவுரை இங்கே....🔥

ஒரு நூதன வழிபாட்டை ஹேமாட்பந்த் நமக்கு எடுத்துரைக்கின்றார்..சத்குருவின் பாதாம் புயத்தைக் கழுவும் நன்னீராக நமது ஆனந்தக் கண்ணீரை உபயோகித்து, பரிசுத்தமான அன்பு என்னும் சந்தனத்தை அவர் மேனியில் பூசிவிட்டு, உண்மை, நம்பிக்கை என்னும் உடையை அவர் மேனிக்கு உடுத்தி, நமது எட்டு விதமான சாத்வீக உணர்ச்சிகள் என்னும் அஷ்ட கமலங்களையும், 'ஒருமைப்பாட்டுடன் கூடிய  மனம்' என்னும் கனியை சத்குருநாதருக்கு  சமர்ப்பிப்போம்...பக்தி என்னும் நறுமணப் பொடியை சத்குருவின் சிரத்தில் இட்டு, அனைத்துப் பற்றுக்களையும்  துறக்க  அதனை சத்குருவின் தேகத்தில்  உடையாக  அணிவித்து  நமது தலையை சத்குருவின்  பாத கமலத்தில் வைப்போம்....

இத்தகைய எல்லா அணிமனிகளாலும் சத்குருவை அலங்கரித்துவிட்டு, நமதனைத்தையும் அவரிடம் சமர்ப்பித்து விடுவோம்.. உஷ்ணத்தைப் போக்குவதற்குப் பக்தி என்னும் சாமரம் கொண்டு வீசுவோம்... இத்தகைய பேரானந்த வழிபாட்டுக்குப் பின் அவரை இங்ஙனம் வேண்டுவோம்..இப்போது சத்குருவை நோக்கி "எங்களது புத்தியை  அந்தர்முகமாக திசை திருப்பிவிடுங்கள்.. நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், எல்லா உலகப் பொருட்களின் மீது பற்றின்மை ஆகியவைகளை எங்களுக்கு நல்கி, ஆத்மமலர்ச்சி அடையக் கூடிய வகையில் எங்களை  இவ்விதமாக ஊக்குவியுங்கள்.. ஆன்மாவையும், உடலையும் (உடலுணர்வு, மற்றும் அகங்காரம்) உம்மிடம் ஒப்புவித்தோம்... எங்களுடைய கண்களைத் தங்களது ஆக்குங்கள்...அதன்மூலம் நாங்கள் இன்பத் துன்பங்களையே உணராதிருப்போம்.. தங்கள் சங்கல்பத்தின்படியும், விருப்பத்தின்படியும்  எங்களது மனதையும், உடலையும் கட்டுப்படுத்துங்கள் சத்குருநாதா....தங்கள் பாதாம்புஜத்தில் எங்களது மனம் ஆறுதல் பெறட்டும்."..இப்போது இந்த அத்தியாயத்தின் கதைகளுக்கு வருவோம்...

🔥சீரடி பாபா தன்னை நாடி வந்த பகத் பந்த் என்ற பக்தரை, எவ்வாறு  தாய்மையுணர்வுடன் ஆசிர்வதித்து வலிப்பு நோயிலிருந்து குணப்படுத்தினார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை இங்கே...🔥

சத்குருவின் மற்றொரு சீடரான பகத் பந்த் என்பவர் சீரடிக்கு வரும் நல்லதிர்ஷ்டம் பெறநேர்ந்தது..அவருக்கு சீரடிக்குச் செல்லும் ஆவல் இல்லை..ஆயின் மனிதன் ஒரு விதமாக எண்ணக் கடவுள் வேறொரு விதமாகச் செயல்படுகிறார்...அவர் ரயில் வண்டியில் பிரயாணம் செய்துக் கொண்டிருக்கும் போது சீரடிக்குப் போய்க் கொண்டிருந்த தனது பல நண்பர்களையும், உறவினர்களையும் காண நேர்ந்தது...அவர்கள் எல்லோரும் அவரை உடன் அழைத்தனர்..அவரால் இயலாதென்று சொல்ல முடியவில்லை..அவர்கள் எல்லோரும் பம்பாயில் இறங்கினர்...பகத் பந்த் மட்டும்  விராலில் இறங்கினார்..பின்னர் பகத்பந்த் சீரடி விஜயத்திற்காகத் தனது சத்குருவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு செலவுக்கு ஏற்பாடுகள் எல்லாம் செய்தபின் அக்கோஷ்டியுடன் சீரடிக்குப் புறப்பட்டார்...எல்லோரும் மறுநாள் சீரடியை அடைந்து மசூதிக்குச் சுமார் பதினொரு   மணிக்குச் சென்றனர்...பாபாவின் வழிபாட்டிற்காகக் குழுமியுள்ள பக்தர்கள் வந்துக்கொண்டும், போய்க்கொண்டும் இருப்பதைக் கண்ட அவர்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ந்தனர்....ஆனால் பகத்  பந்த் திடீரென்று வலிப்பு வந்து உணர்வின்றிக் கீழே சாய்ந்தார்..அவர்கள் எல்லோரும் பீதியடைந்தனர்...எனினும் அவரைத் திரும்ப உணர்வுக்குக் கொண்டுவர தங்களால் இயன்றதைச் செய்தனர்...

சீரடி பாபாவின் அருளாலும், அவர் தலைமீது தெளிக்கப்பட்ட புனித நீராலும் பிரக்ஞைக்கு  வந்து, அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல் எழுந்து உட்கார்ந்தார்.... மற்றொரு குருவின் சீடர் தான்  பகத் பந்த்   என்று  அறிந்துகொண்ட சர்வாந்தர்யாமியான பாபா, அஞ்சாமலிருக்கும்படி பகத்பந்திற்கு  அறிவுருத்தி, அவரது சொந்தக் குருவின் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த கீழ்க்கண்டவாறு அவரிடம் கூறினார். "வருவது வரட்டும், விட்டு விடாதே.  உனது ஆதாரத்தையே அதாவது  குருவையே உறுதியாகப் பற்றிக்கொண்டு எப்போதும் நீர்  நிதானத்துடனும், சதாகாலமும் அவருடன் ஒன்றியும் இருப்பாய்"...என்று ஏகத்தன்மையுடன் ஆசி வழங்கினார் பாபா... இம்மொழிகளின் குறிப்பை பந்த் உடனே அறிந்துக் கொண்டார்..இவ்விதமாக அவர் சத்குருவை நினைவுக் கூர்ந்தார்.  பாபாவின் இந்த அன்பை அவர்தம் வாழ்நாளில் மறக்கவே இல்லை....

🔥சீரடி பாபா எவ்வாறு   ஹரிச்சந்திர  பிதலேவின் குடும்பத்தை ஆசிர்வதித்து , அவர் மகனின் காக்காய் வலிப்பு நோயைக்   குணப்படுத்தினார் என்பதைப் பற்றியும்,  மற்றும்  பாபா, எவ்வாறு  பிதலேவிற்கு   மூன்று ரூபாயை வழங்கி,அக்குடும்பத்தை ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய அனுபவ  விளக்கவுரை இங்கே... 🔥

பம்பாயில் ஹரிச்சந்திர பிதலே என்னும் பெயருள்ள மனிதர் ஒருவர் இருந்தார்...  காக்காய் வலிப்பால் அவதியுறும் ஒரு மகன் அவருக்கு இருந்தான்...பல அலோபதி ஆயுர்வேத வைத்தியர்களிடம் காண்பித்தும் குணமேதும் ஏற்படவில்லை.. ஒரே ஒரு வழிதான் பாக்கி இருந்தது.  அதாவது ஞானிகளிடம் அடைக்கலம் புகுவதால் நோயின் தாக்கம் குறையலாம் என்ற நம்பிக்கை மட்டும் பிதலேவிற்கு இருந்தது... தாஸ்கணு என்ற பக்தர்  தமது மிகச்சிறந்த, அற்புதமான கீர்த்தனைகளால் பம்பாய் மற்றும்  ராஜஸ்தானி போன்ற இடங்களில் பாபாவின் புகழைப் பரவச் செய்தார் என்று முன்னரே  அத்தியாயம்  பதினைந்தில் கூறப்பட்டுள்ளது..முன்னரே   ஹரிச்சந்திர பிதலே இக்கீர்த்தனைகள் சிலவற்றை 1910..ஆம் ஆண்டில்  கேட்டார்.... அதிலிருந்து மற்றவர்கள் மூலமாகவும் பாபா தமது ஸ்பரிசத்தாலும், வெறும் சக்தியுடன் கூடிய  பார்வையாலும் மட்டுமே அனேக தீர்க்க முடியாத வியாதிகளைக் குணப்படுத்தியிருப்பதாக பிதலே  அறிந்திருந்தார்...அதனால் சாயீபாபாவைக் காண பிதலே  மனதில் ஆர்வம் எழுந்தது... எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, வெகுமதிகளையும், பழக்கூடைகளையும் எடுத்துக்கொண்டு, பிதலே குடும்பத்துடன் சீரடிக்கு வந்து சேர்ந்தார்.. 

பின்னர் அனைவருடன்  மசூதிக்குச் சென்று பாபாவின்முன் வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு தனது நோயாளிப் புதல்வனைப் பாபாவின் பாதங்களில் வைத்தார்... பாபா அக்குழந்தையைக்  கண்ட அத்தருணத்திலேயே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது...கண்களைச் சுற்றிக்கொண்டு அப்புதல்வன் உணர்வற்றுக் கீழே விழுந்தான்...அவனது வாயில்  நுரைத்தள்ளி, உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டியது...உயிரை விட்டுவிட்டான் போல் தோன்றியது... இதைக் கண்டு பெற்றோர் மிகவும் படப்படப்புடன்  உணர்ச்சி வசப்பட்டனர்.. பையனுக்கு அடிக்கடி வலிப்பு வருமாயினும் தற்போது  இந்த வலிப்பு நீண்டதாகத் தோன்றியது.தாயாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து அழத் தொடங்கிவிட்டாள்...கொள்ளைக்காரனுக்குப் பயந்து ஒரு வீட்டில் ஒளிந்த ஒருவன் மீது அவ்வீடு சரிந்து விழுந்துவிட்டதைப் போலவும், புலிக்குப் பயந்து ஓடிய பசு ஒன்று கசாப்புக் கடைக்காரன் கையில் அகப்பட்டுக் கொண்டதைப் போலவும், வெப்பம் தாங்காது ஒரு மரத்தடியில் ஒதுங்கிய ஒரு வழிப்போக்கன் மீது அம்மரமே சாய்ந்து விழுந்துவிட்டதைப் போன்றும், பக்தியுள்ள ஒருவன் கோவிலுக்கு வழிபடச் சென்றபோது அக்கோவிலே அவன்மீது இடிந்து விழுந்துவிட்டதைப் போன்றும் தனது நிலையிருப்பதாகக் கூறி அவள் ஓலமிடத் தொடங்கினாள்.பின் பாபா அவளை நோக்கி, "இம்மாதிரி ஓலமிடாதே.. கொஞ்சம் பொறுமையுடன்  அமைதியாய் இருப்பாயாக.  உமது  இருப்பிடத்திற்கு உமது மகனை  எடுத்துச் செல்...அரைமணி நேரத்தில் அவன் சுவாதீனத்துக்கு வருவான்" என்று கூறித் தோற்றினார்.  பாபா கூறியபடியே அவர்கள் செய்தனர்.  பாபாவின் மொழிகள் உண்மையானதைக் கண்டனர்...வாதாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடனேயே பையன் குணமடைந்தான்....பிதலேயின் குடும்பத்தினர்  அனைவரும் மிகவும் மகிழ்வோடு ஆச்சரியம் அடைந்தனர்.  அவர்கள் ஐயம் அழிந்தது...பின் ஹரிச்சந்திர பிதலே தனது  மனைவியுடன் பாபாவைக் காணவந்தார்...பகவான் முன் மிகப்பணிவாகவும், மரியாதையாகவும் வீழ்ந்து நமஸ்கரித்து விட்டு பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டவாறே, மனதில் பாபாவின் உதவிக்கு நன்றி செலுத்தினார்..பாபா புன்சிரிப்புடன், "உமது எல்லா எண்ணங்களும், சந்தேகங்களும், கருத்துக்களும்  இப்போது சாந்தப்படுத்தப்பட்டனவா.? நம்பிக்கையும், பொறுமையும் உடையோரையே ஹரி காப்பாற்றுகிறார்" என்றார்  பாபா...

ஹரிச்சந்திர  பிதலே வசதியுள்ள பணக்கார மனிதர்... பெருமளவில் அவர் இனிப்புக்களை விநியோகித்து பாபாவுக்கு மிகச்சிறந்த பழங்களையும், வெற்றிலை பாக்கையும் அளித்தார்....பிதலேயின் மனைவி மிகச்சிறந்த பண்புடையவள்... எளிமை, அன்பு, நம்பிக்கை உடையவள்...தூணுக்கு அருகில் அமர்ந்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய பாபாவையே உற்றுப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள்...அவளது நட்பும், அன்பும், கருணையும் கொண்டக்  குணத்தைக் கண்டு பாபா மிகவும் சந்தோஷமடைந்தார்...முழு மனதோடும், முழு ஆத்மாவோடும் தம்மிடம் சரணடைந்து வழிபடுவோர்பால் ஞானிகளும், கடவுளரும் சார்ந்திருக்கின்றனர் அன்றோ..!  பாபாவின் சந்நிதானத்தில் சில இன்பமான நாட்களைக் கழித்த பின்னர் அக்குடும்பத்தினர் புறப்படுவதற்குப் பாபாவின் அனுமதியைப் பெற மசூதிக்கு வந்திருந்தனர். உதீயையும், ஆசீர்வாதத்தையும் அவர்களுக்கு பாபா அளித்த பின்பு பிதலேயை அருகே அழைத்தார்.  "பாபு நான் உனக்கு முன்பே இரண்டு ரூபாய் கொடுத்திருக்கிறேன்.  இப்போது மூன்று ரூபாய் தருகிறேன்.... இதை உனது பூஜை அறையில் வைத்துக்கொள்வீராக..நீர் நன்மையடைவாய்" என்று கூறி ஆசி வழங்கினார்..இவைகளைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் அவர்முன் வீழ்ந்து வணங்கிவிட்டு, அவரது ஆசீர்வாதத்துக்காக வேண்டி நின்றார்....  சீரடிக்கு இதுவே தமது முதல் விஜயமாதலால் பாபா தாம் முன்னரே இரண்டு ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியது தமக்கு விளங்கவில்லை என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது...இப்புதிர் விடுபடுவதற்கு அவர் ஆவலாய் இருந்தார்.  ஆனால் பாபா மெளனமாக இருந்துவிட்டார்....

பிதலே பம்பாய்க்குத் திரும்பியபின் தனது தாயாருக்கு சீரடியில் நடந்த எல்லாவற்றையும், பாபா தனக்கு  முன்னரே இரண்டு ரூபாய் கொடுத்திருப்பதாகச் சொன்ன கூற்றையும்  கூறினார்...அந்தத் தாயாருக்கும்  அப்புதிர் புரியவில்லை.. ஆனால் இதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்தபின், நினைவுக்கு வந்த ஒரு பழைய சம்பவம் அப்புதிரை விடுவித்தது.  "உனது மகனோடு இப்போது நீ சாயிபாபாவைப் பார்க்கச் சென்றதுபோல், பல ஆண்டுகளுக்கு முன் உனது தந்தையும் உன்னை அக்கல்கோட்டுக்கு அப்பெருமானின் தரிசனத்துக்காக அழைத்துச் சென்றார்.....  அப்பெருமான்கூட ஒரு சித்தர், பரிபூரண யோகி, சர்வவியாபி, தாராள மனதுடையவர்.  உனது தந்தை தூயவர், பக்தியுடையவர்...அவரது வழிபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது...அவர் உனது தந்தைக்கு இரண்டு ரூபாய்களைப் பூஜையறையில் வைத்து வழிபடுவதற்காக அளித்தார்.  உனது தந்தை, தான் சாகும்வரை அதை முறைப்படி வழிபட்டு வந்தார்.  ஆனால் அதற்குப்பின் வழிபாடு புறக்கணிக்கப்பட்டு அந்த ரூபாய்கள் தொலைந்து போயின...சில ஆண்டுகளுக்குப் பின் அவற்றின் நினைப்பும் மறந்துபோயின. தற்போது நீ அதிஷ்டசாலியாக இருந்ததால், சாயீபாபாவின் ரூபத்தில் அக்கல்கோட் மஹராஜ் உனது கடமைகள், வழிபாடு இவற்றை நினைவூட்டவும், அபாயங்களை அகற்றிவிடவும் தோன்றியிருந்தார்...இனிமேலாவது ஜாக்கிரதையாக எல்லா ஐயங்களையும், கெட்ட எண்ணங்களையும் அகற்றிவிடு...உனது மூதாதையர் வழிநின்று நன்றாக நடந்துகொள்.... குடும்ப தெய்வங்களையும், காசுகளையும் வணங்கி, நன்றாக  ஞானிகளின் ஆசிகளில் பெருமைகொள்.  உனது பக்தி உணர்ச்சிக்கு சமர்த்த சாயீ அன்புடன் புத்துணர்ச்சி ஊட்டியிருக்கிறார்... உனது நன்மைக்காக இதைப் பயிர் செய்வாய்" என்று கூறினாள் பதலேவின் தாயார்...தாயாரின் இம்மொழிகளைக் கேட்டு பிதலே மிகவும் ஆச்சரியப்பட்டார்.  பாபாவின் சர்வவியாபித்துவத்  தன்மையை அவர் அறிந்து உணர  தலைப்பட்டு, அதில் உறுதியானார்... பாபாவின் தரிசனத்தின் மகிமையையும், முக்கியத்துவத்தையும் அவர் அறிந்தார்.  அதிலிருந்து அவர் குணத்தைப் பற்றி சர்வ ஜாக்கிரதை உடையவரானார்....

🔥சீரடி பாபா தன்னைக் காண வந்த  ஆம்ப்டேகர் என்ற பக்தரின் தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கு  எவ்வாறு   உபதேச மொழிகளின் மூலமாக  அனுக்கிரகம் செய்தார் என்பதைப் பற்றிய அனுபவ உரை இங்கே...🔥

புனேவைச் சேர்ந்த கோபால் நாராயண் ஆம்ப்டேகர் என்பவர் பாபாவின் பக்தர்...அவர் பத்து ஆண்டுகளுக்கு தாணே ஜில்லாவிலும், பின் ஜவ்கர் ஜில்லாவிலும் எக்ஸெய்ஸ் டிபார்ட்மென்டில் பணியாற்றிய பிறகு ஓய்வுபெற்றார்...வேறு ஒரு வேலை பெறுவதற்காக அவர் முயற்சித்தார்...ஆனால் முடியவில்லை... மற்ற கேடுகளால் அவர் தாக்கப்பட்டு அவரது நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துக் கொண்டே வந்தது...இதே நிலைமையில் சீரடிக்கு ஒவ்வோர் ஆண்டும் சென்று தனது கவலைகளை பாபாவின்முன் சமர்ப்பிப்பதுமாக ஏழாண்டுகள் கழித்தார்....  1916..ஆம் ஆண்டில் அவரது நிலைமை மோசமாகி, சீரடியிலேயே தற்கொலை செய்துகொள்வது எனத் தீர்மானித்தார்....எனவே தன் மனைவியுடன் சீரடிக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார்..  ஒருநாள் தீஷித் வாதாவின் முன்னால் உள்ள மாட்டு வண்டியில் அமர்ந்துக் கொண்டிருக்கும்போது பக்கத்திலுள்ள ஒரு கிணற்றில் குதித்துத் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவர் தீர்மானித்துவிட்டார்...அவர் ஒரு மாதிரியாக எண்ண, பாபா வேறொருவிதமாக வழிக் காண்பித்தார்...இந்த இடத்துக்குச் சில அடி தூரத்தில் இருந்த ஒரு ஹோட்டல் முதலாளியும், பாபாவின் அடியவருமான சகுண் என்பவர் வெளியே வந்து அவரிடம், "அக்கல்கோட் மஹராஜின் இச்சரிதத்தை நீங்கள் எப்போதாவது படித்திருக்கிறீர்களா....?" என்று கேட்டார்..ஆம்ப்டேகர் அவரிடமிருந்து அந்நூலை வாங்கிப் படிக்கத் தொடங்கினார்... எதேச்சையாக அல்லது தெய்வாதீனமாகக் கீழ்கண்ட ஒரு கதையை அவர் படிக்கத் தொடங்கினார்...

அக்கல்கோட் மஹராஜின் அடியவன் ஒருவன் தீர்க்கப்பட முடியாத ஒரு வியாதியால் மிகவும் அல்லலுற்றுக் கொண்டிருந்தான்..அந்த வேதனையை மேற்கொண்டு தாங்க முடியாமற் போகவே அவன் மனம் உடைந்து தனது தொல்லைகள் எல்லாம் ஒரு முடிவுக்குக் கொண்டுவர ஒருநாள் நள்ளிரவு கிணற்றில் குதித்துவிட்டான்...உடனே மஹாராஜ் அங்குவந்து அவனைத் தன் கரங்களாலேயே வெளியே எடுத்து, "நல்லதோ, கெட்டதோ உன் முந்தைய கர்மத்தின் பயனை நீ அடைந்தாக வேண்டும்.  அந்த கர்மவினைகள் அனுபவித்தலில்  பூரண எய்தவில்லையானால் தற்கொலை உனக்கு உதவியளிக்காது..மீண்டும் ஒரு பிறவி எடுத்து அக்கஷ்டத்தையே அடைய வேண்டும்.. எனவே உன்னை நீயே கொன்று கொள்வதற்குப் பதிலாக ஏன் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைத்து, முந்தைய கர்மத்தின் பலன்களை எல்லாம் முழுவதுமாக தீர்த்துவிடக்கூடாது...?" என்றார்....

இந்தப் பொருத்தமான, தக்க சமயத்தில் கிடைத்த கதையைப் படித்துவிட்டு ஆம்ப்டேகர் மிகவும் ஆச்சரியப்பட்டார்....உள்ளம் உருகினார்.  பாபாவின் குறிப்பை இக்கதையின் மூலம் அவர் பெற்றிருக்காவிட்டால் அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்.  பாபாவின் சர்வ வியாபித்துவத்தையும், தயாள குணத்தையும் கண்டு, பாபா மேலுள்ள நம்பிக்கை அவருக்கு உறுதியாகி, பாபாவின் பெரும்  ஆத்ம பக்தராகிவிட்டார்...அவர் தந்தையார் அக்கல்கோட் மஹராஜின் பக்தராக இருந்தவர்... சாயீபாபா ஆம்ப்டேகரையும், அவர் தந்தையார் சென்ற அடிச்சுவட்டிலேயே சென்று அவரின் குருவிடம்  பக்தி பூண்டவராகத் தொடர்ந்திருக்கும்படி அறிவுருத்தினார்..பின்னர் பாபாவின் ஆசீர்வாதத்தைப்  பெற்றார்...அவரின் எதிர்காலம் சிறப்புறத் தொடங்கியது...பின்னர் ஜோதிடம் படித்து, அதில் திறமை பெற்றுத் தனது செல்வத்தைப் பெருக்கினார்... போதுமான பணத்தை சம்பாதிக்க அவரால் இயன்று, தனது பிற்கால வாழ்வை சௌகரியமாகவும், வசதியாகவும் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஸ்ரீ சாயீயைப்  பணிக.... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏


https://youtu.be/67fo8-7J12c

வெள்ளி, ஜூன் 04, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்தைந்து (25)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼

🙏 அத்தியாயம் ::- இருபத்தைந்து (25)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம் பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் சீரடி சாய்பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர  வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது. ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும்  ஶ்ரீசாய்  சத்சரித்திர  வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🔥

🔥குறிப்பு..ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்.. ஶ்ரீசாய் சத்சரித்திர  வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்..மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்..மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥

🙏அத்தியாயம்::-இருபத்தைந்து(25)🙏

🙏முன்னுரை...🙏

சீரடி பாபாவிடம்  எவ்வாறு முழுமையாக சரணாகதி  அடைந்து, பாபாவின்  அனுக்கிரக  ஆசியைப் பெறுதல் பற்றிய குறிப்புரை மற்றும்  பாபா  எவ்வாறு  ஹேமாட்பந்தின் சாய் சத்சரித்திரம் எழுதும் ஆவலைத் தீர்த்து குறிப்புக்களை கொடுத்து வழிக்காட்டினார் என்பதன் குறிப்புரை...  

தன்னுடைய   வியாபாரத்திற்காக  ஆசிப் பெற வந்த தாமு அண்ணா என்ற பக்தரை,  எவ்வாறு பகவான் அவரின் வியாபார நோக்கத்தில் இருக்கின்ற எதிர்மறையான போக்கைக் கண்டித்து வியாபாரம் செய்வதற்கு தடைவிதித்ததைப் பற்றிய விளக்கவுரை.. 

சீரடி பாபா எவ்வாறு தாமு அண்ணாவின் குழந்தையின்மையை போக்க மாம்பழக்கனிகளை அளித்து  ஆசிர்வதித்து ஆம்ரலீலையை நடத்தினார் என்பதன் அனுபவ உரை...

சீரடி பகவான் தன் பக்தர்களுக்காக  உரைத்த உபதேச சூட்சம அருள்மொழிகள் இங்கே.

ஶ்ரீசாய் சத்சரித்திர நூலாசிரியர் ஹேமாட்பந்த் , சீரடி பாபாவிடம் பக்தர்களுக்காக செய்த பிரார்த்தனை படிவத்தின் குறிப்புரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கே கீழே காண்போம்....

🔥 முதலில் சீரடி  பாபாவிடம்  எவ்வாறு முழுமையாக  சரணாகதி அடைந்து, அவரின் அனுக்கிரக  ஆசியைப் பெறுதல் பற்றிய குறிப்புரை மற்றும் பாபா எவ்வாறு  ஹேமாட்பந்தின் சாய் சத்சரித்திரம் எழுதும் ஆவலைத் தீர்த்து குறிப்புக்களை கொடுத்து வழிக்காட்டினார் என்பதன் குறிப்புரையை இங்கே காண்போம்..🔥 

கருணைக் கடலும், ஈசுவர அவதாரமும், பரப்பிரம்மமும் மாபெரும் யோகீஸ்வரனும் ஆகிய சாயிபாபாவுக்கு நமது அஷ்ட அங்கங்களாலும் நமஸ்கரித்துவிட்டு நாம் இந்த அத்தியாயத்தைத் தொடங்குகிறோம். ஞானிகளின் முடிமணியாகவும், எல்லாப் புனிதப் பொருட்களின் இருப்பிடமாகவும், நமது ஆத்ம ராமனேயனாகவும், பக்தர்களுக்கு ஒரு வல்லமை வாய்ந்த அடைக்கலமாகவும், இகஜெக வழிக்காட்டியாகவும், மிகுந்த விழிப்புணர்வுடன் பக்தர்களை உற்றுநோக்கி வழிக்காட்டும் சத்குருவாக விளங்கும் சாயிபாபாவின்  பாதகமலத்தில் சரணாகதி  அடைகின்றோம்.. வாழ்க்கையின் இலட்சியம், குறிக்கோள் இவற்றை எய்திய சத்குருநாதரை வீழ்ந்து வணங்குவோம்....

சாய்பாபா எப்போதுமே கருணை நிறைந்தவராகவும், தாய்மையுணர்வுடனும்  இருக்கிறார்...சத்குருவிடம் முழுமனதுடனான, நிலைமாறாத, தூய்மையான ஆழமான பக்தியை நாம் வளர்த்துக் கொள்ளல் வேண்டும்....உறுதியான நம்பிக்கையும், விசுவாசத்துடன்  கூடிய  பக்தியும் ஒரு பக்தனானவன் பெறும்போது, அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன...  சாய்பாபாவின் வாழ்க்கையையும், லீலைகளையும் எழுதவேண்டுமென்ற ஆர்வம் ஹேமாட்பந்தின் உள்ளத்தில் எழுந்தபோது, அதை உடனே அவரைக் கொண்டு எழுதிமுடிக்கச் செய்தார் பகவான்...மேலும் பாபா தன்னைப் பற்றிய முக்கியக் குறிப்புகள், உவமான விளக்கங்கள்,உபதேசங்கள், மறை ஞான விளக்கங்கள், லீலைகள், அனுபவங்கள், அற்புதங்கள் இவைகளை  குறிப்பெடுத்துக் கொள்ள உத்தரவு கொடுக்கப்பட்டபோது, ஹேமாட்பந்த்  மேன்மேலும்  எழுதும் சக்தியும், புரிந்துக் கொண்டு எழுதக்கூடிய  உணர்வும் ஊட்டப்பெற்றார்...பகவானின் ஆசியானது ஹேமாட்பந்தின் அறிவுக் கூர்மையை அதிகரித்து, வேலையை மேற்கொண்டு முடிப்பதற்கு வேண்டிய உறுதியையும், நம்பிக்கையையும், தைரியத்தையும்  பெற்றது....

ஹேமாட் கூறுகின்றார்....ஶ்ரீ சாய் சத்சரித்திரம் எழுதும் இப்பணியை மேற்கொள்ளத் தாம் தகுதியுடையவரல்ல என்றும், ஆனால் பாபாவின் அருள் நிறைந்த ஆசீர்வாதங்களும்,  ஊக்கமுமே  மேற்கொண்ட பணியை சம்பூர்ணமாக செயல்பட  என்றும் அவர் கூறினார்.  எனவே சாய் சத்சரித்திரம்  என்ற இக்கிணற்றிலிருந்து அல்லது நீர்த்தேக்கத்திலிருந்து, அல்லது சோமகாந்தக் கல்லிலிருந்து சாயி லீலைகள் என்ற ரூபத்தில் அமிர்தம் ஊறி வருகிறது... படிப்போர் அதை மனதாறப் பருகுகிறார்கள்..சத்குரு சாய்பாபாவின் மீது எந்த ஒரு பக்தனுக்கு முழுமனதான, பூரணமான பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும், துன்பத் துயரங்களும், பலப்பிறவி கர்மவினைகளும்  துடைக்கப்பட்டு, அவனது வாழ்க்கை  பாபாவால் கவனிக்கப்படுகின்றது...அகமத்நகரிலிருந்து  வியாபாரத்திற்காக  பகவானிடம் ஆசிப்பெற வந்த தாமு அண்ணாவின்  அனுபவ விளக்கவுரையைப் பற்றி  விளக்கமாகக்  கீழே தரப்படுகின்றது...

🔥தன்னுடைய   வியாபாரத்திற்காக  ஆசிப் பெற வந்த தாமு அண்ணா என்ற பக்தரை,  எவ்வாறு பகவான் அவரின் வியாபார நோக்கத்தில் இருக்கின்ற எதிர்மறையான போக்கைக் கண்டித்து வியாபாரம் செய்வதற்கு  தடைவிதித்ததைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம்..🔥

ஆறாவது அத்தியாயத்தில் சீரடியில் ராமநவமித் திருவிழா சம்பந்தமாக தாமு அண்ணாவைப் பற்றி  முன்னரே  கூறப்பட்டிருப்பதை பக்தர்கள்  கவனித்திருப்பீர்கள்...ஏறக்குறைய 1895 ஆம் ஆண்டில்  ராமநவமி உற்சவக் கொண்டாட்டம் துவக்கப்பட்டபோது அவர் சீரடிக்குச் சென்றார்.... அதிலிருந்து ஒவ்வொரு வருட விழாவின் போதும் அவர் அலங்காரக் கொடியை ஏற்பாடு செய்துவந்தார். அவ்விழாவுக்கு வரும் ஏழைகளுக்கும், பக்கிர்களுக்கும் அன்னதானம் செய்தார்....

ஒருமுறை தாமு அண்ணா பாபாவிடம் கடிதம் மூலம் தொடர்புக் கொண்டார்... தானும் தன்  நண்பரும் சேர்ந்து வியாபாரம் மேற்க்கொள்ளப் போவதாகவும் , கூட்டாகச் சேர்ந்து  பஞ்சு பேர வியாபாரம் செய்யவேண்டுமென்றும், அது பல இலட்சங்களை இலாபமாகக் கொணரும் என்றும் எழுதியிருந்தார்...(ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியிடம் 1936 ஆம் ஆண்டில் தாமு அண்ணா கொடுத்த வாக்குமூலத்தின்படி, பம்பாய் விவகாரம் கூட்டாளி இல்லாமல் தரகர் ஒருவரிடமிருந்து பெற்றதென்பதும், தாமு அண்ணா மட்டும் இலாபம் பெறுவார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.) மேலும் வியாபாரம் நன்றாயிருக்கிறது என்றும், எவ்வித அபாயமுமில்லை என்றும் வாய்ப்பு தவற விட்டு விடக்கூடாது என்றும் தரகர் எழுதியிருப்பதாக  தாமு கடிதத்தில் குறிப்பிட்டு  இருந்தார்...இந்த கடிதத்தை எழுதிவிட்டு பாபாவின் அனுமதிக்காக காத்திருந்தார்.... 

தாமு அண்ணா மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தார்...இந்த  வியாபார விவகாரத்தில் தாமு அண்ணாவால்  உடனே முடிவெடுக்க  முடியவில்லை....இதைப்பற்றி தாமு சிந்தித்துக் கொண்டே இருந்தார்...  எல்லாத் தகவல்களையும்,வியாபார நோக்கத்தையும்  முழுமையாக எழுதி   ஷாமாவுக்கு ஒரு கடிதம் எழுதினார் தாமு... இதுகுறித்து பாபாவைக் கேட்டு அவரது ஆலோசனையை எழுதும்படியும் வேண்டிக் கொண்டிருந்தார்...அடுத்தநாள் கடிதம் ஷாமாவுக்குக் கிடைத்தது...மத்தியானம் மசூதிக்கு வந்து, அதை பாபாவின் முன் வைத்தார்....ஷாமாவை விஷயம் என்னவென்று கேட்டு, கடிதம் எதைப்பற்றியது என்று வினவினார் பகவான் ..அதற்கு ஷாமா கூறுகின்றார்...

ஷாமா :  வியாபார விஷயங்கள் பற்றி அகமத்நகரைச் சேர்ந்த தாமு அண்ணா தங்களைக் கேட்க விரும்புகிறார்... 

பாபா :   அவன் என்ன எழுதுகிறான்...  என்ன திட்டம் போடுகிறான்...?  கடவுள் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடையாமல் ஆகாயத்தைப் பிடிக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது...கடிதத்தைப் படி...

ஷாமா :  தாங்கள் இப்போது கூறியதைத் தான் இக்கடிதம் கூறுகிறது.ஓ...! தேவா, நீங்கள் இங்கே அமைதியாகவும்,சாந்தமாகவும், அடக்கமாகவும் அமர்ந்துக்  கொண்டு பக்தர்களைக் குழம்பச்செய்து அவர்கள் அமைதியற்றுத் தவிக்கும்போது சிலரைக் கடிதம் மூலமாகவும், சிலரை நேரடியாகவும் இங்கு இழுக்கிறீர்கள்.  கடிதத்தில் அடங்கியுள்ள விஷயம் தங்களுக்கு தெரியுமென்றால் பின் என்னை ஏன் படிக்கும்படி சொல்லி வற்புறுத்துகிறீர்கள்..? என்று கேட்கின்றார் ஷாமா....

பாபா :  ஓ...! ஷாமா, தயவுசெய்து அதைப்படி, சந்தர்ப்பவசமாக நான் ஏதாவது பேசுவேன்.  அதை யார் நம்புவார்கள்..?

பின் ஷாமா அக்கடிதத்தை வாசித்தார்.....  பாபா அதைக் கவனத்துடன் கேட்டு உணர்ச்சியுடன் கூறினார், "சேட்டுக்கு (தாமு அண்ணாவுக்கு) பைத்தியம் பிடித்துவிட்டது...அவனது வீட்டில் எதுவும் தேவையிருக்கவில்லை.  இப்போது அவனுக்கு இருப்பதைக்கொண்டு திருப்தியடைந்து, இலட்சங்களைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்படி பதில் எழுது."

தாமு அண்ணா ஆவலுடன் காத்திருந்த பதிலை ஷாமா அனுப்பினார்...அதைப்படித்துவிட்டு இலட்சரூபாய்களை இலாபமாகப் பெறவிருந்த அவரின் ஆர்வமும், நம்பிக்கையும் தரைமட்டமாக்கப்பட்டத்தை தாமு அறிந்தார்.  பாபாவைக் கலந்தாலோசித்ததில் தாம் தவறு செய்துவிட்டதாகக் கருதினார்...ஆனால் பதிலில் ஷாமா கூறுகின்றார் தாமுவிடம்..நீங்கள் பகவானை  பார்ப்பதற்கும், கடிதம் மூலம் கேட்பதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகவும்,ஆகவே  சீரடிக்கு நேரடியாக வரவேண்டுமெனவும், பாபாவைக் காணவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததார்...

ஆகவே  தாமே சீரடிக்குச் சென்று பாபாவை நேரடியாக இவ்விஷயத்தைப் பற்றிக் கேட்பதே சரியானது என்று நினைத்தார்...எனவே  தாமு அண்ணா சீரடிக்குச் சென்று பாபாவைக் கண்டு, வீழ்ந்து பணிந்து அவரது கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.  விவகாரத்தைப் பற்றி வெளிப்படையாகக் கேட்க அவருக்குத் தைரியமில்லை... பாபாவுக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்தால் நலமாயிருக்கும் என அவர் எண்ணினார்....

பாபா இந்த வியாபாரத்தில் தமக்கு உதவி செய்தால் அவருக்குக் கொஞ்சம் பங்கையோ, இலாபத்தையோ அளிக்கலாம் என மனதில் நினைத்தார் தாமு...தாமு அண்ணா தன் மனதில் இரகசியமாக இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தார்..ஆனால் பாபாவுக்கு எதுவுமே திரையிடப்பட்டிருக்கவில்லை....நடந்தது, நடப்பது, நடக்கப்போவது யாவும் அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக இருந்தது. குழந்தை இனிப்பை விரும்புகிறது.  ஆனால் தாய் அதற்குக் கசப்பான மாத்திரைகளைப் புகட்டுகிறாள்..முன்னது அதன் தேக நிலைக்குக் கேடு செய்கிறது..பின்னது நலப்படுத்துகிறது.  சிசுவின் நலன்கருதியே தாய் கசப்பான மாத்திரையை அதற்குச் சமாதானம் செய்து புகட்டுகிறாள்....அவ்வாறு மிகுந்த தாய்மையுணர்வுடன் பாபாவும்,  பக்தர்களின் நிகழ்கால, எதிர்கால நன்மைகளை அறிந்தவர் என்பதால், தாமு அண்ணாவின் மனதில் இருப்பதை அறிந்து, "பாபு, அம்மாதிரியான உலக விவகாரத்திலெல்லாம் (இலாபப் பங்கு) நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை" என்றார்.  பாபாவின் சம்மதமின்மையை அறிந்த தாமு அண்ணா அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.

மேலும் தாமு அண்ணா தானிய வியாபாரம் செய்வதற்கு  பாபாவிடம் அனுமதி கேட்டார்... மேலும் அவர் தானியம், அரிசி, கோதுமை, பலசரக்குச் சாமான்கள் போன்றவற்றை  வியாபாரம் செய்யலாம் என நினைத்தார்...பாபா அவரின் இந்த எண்ணத்தையும் படித்து "ரூபாய்க்கு  ஐந்து சேர் என வாங்கி  ஏழு  சேர் என விற்பாய்" எனக் கூறினார்.  எனவே இந்த வியாபாரமும் கைவிடப்பட்டது...தானிய விலையேற்றம் சிலநாள் வரை இருந்தது.. பாபாவின் தீர்க்கத்  தரிசனம் பொய்யாகி விடும்போல் தோன்றியது தாமுவிற்கு....  ஆனால் ஓரிரண்டு மாதங்களில் எங்கும் மழை பெய்து, விலைகளெல்லாம் திடீரென இறங்கி நஷ்டத்தை நோக்கி சென்றது...எனவே தானியத்தைச் சேர்த்து வைத்தவர்கள் எல்லாம் பெரும்  நஷ்டம்  அடைந்தனர்...

இவ்விதியிலிருந்து தாமு அண்ணா பாபாவால்  காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.. மற்றொரு வியாபாரியுடன் தரகர் நடத்திய பஞ்சு வியாபாரமும் பயங்கரமான நஷ்டம் அடைந்ததெனக் கூறத் தேவையில்லை..பஞ்சு, தானியம் என்ற இரண்டு வியாபாரங்களிலும் உள்ள பலத்த நஷ்டத்தில் இருந்து தன்னைக் காப்பற்றியதைக் கண்ட தாமு அண்ணாவின் நம்பிக்கை தீவிரமாக  பலமடைந்து, பாபாவின் உண்மை பக்தராக இன்றுவரை கூட இருந்து வருகிறார்.....

🔥சீரடி பாபா எவ்வாறு தாமு அண்ணாவின் குழந்தையின்மையை போக்க மாம்பழக் கனிகளை அளித்து  ஆசிர்வதித்து  ஆம்ரலீலையை நடத்தினார் என்பதன் அனுபவ உரையை இங்கு காண்போம்...🔥

ஒருமுறை முன்னூறு நல்ல மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டி  சீரடிக்கு வந்தது..அது கோவாவிலிருந்து ராலே என்ற மாம்லதரால் பாபாவுக்காக ஷாமாவின் பெயரில் அனுப்பப்பட்டு இருந்தது...அது திறக்கப்பட்டதும் எல்லா மாம்பழங்களும் நன்றாக இருந்தன.. அவைகளில் நான்கை மட்டும் தமது கோலம்பாவில் வைத்துக்கொண்டு மீதியை ஷாமாவிடம் ஒப்படைத்தார்..."இந்த நான்கு  மாம்பழமும் தாமு அண்ணாவுக்காக வழங்க இருக்கின்றது...ஆகவே , அவைகள் இங்கேயே இருக்கட்டும்" என்றார் பாபா...இந்த தாமு அண்ணாவுக்கு இரண்டு மனைவிகள்... தாமுவுக்கு   குழந்தைப்பாக்கியம் இல்லை... பல ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்தும் , தாமே ஜோதிடத்தை ஓரளவு கற்றதனால்  ஒரு பாபக்கிரகம் தன்னுடைய  ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என அறிந்து கொண்டார். ஆனால் பாபாவிடம் தாமுவுக்கு  பெரும் நம்பிக்கை உண்டு....மாம்பழம் வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், பாபாவை வணங்க தாமு அவர்கள்  சீரடிக்குச் சென்றபோது, மற்றவர்களெல்லாம் அந்த மாம்பழத்துக்காக ஏங்கினார்களாயினும், அவை தாம்யாவினுடையதே என்றார் பகவான்.... யாரைச் சேரவேண்டுமோ அவர் அதை "உண்டு மரிக்கவேண்டும்" என பாபா கூறினார்.....

பகவான் கூறிய இவ்வார்த்தைகளை முதலில் தாமு அண்ணா கேட்டபோது அதிர்ச்சி அடைந்தார். ..ஆனால் மகல்சாபதி பாபாவின் வார்த்தையின் சூட்சமத்தை  விளக்கினார்.. இறப்பது  என்பது 'நான்' என்ற அகங்காரம் இறப்பது  ஆகும்...அது பாபாவின் திருவடிகளருகில் நிகழ்வது ஓர் ஆசியேயாகும்.. உடனே தாமு அண்ணா மனம் தெளிந்து தாம் பழத்தை வாங்கிச் சாப்பிடுவதாகக்  கேட்டுக் கொண்டார்...ஆனால் பாபா அவரிடம், "நீயே உண்டுவிடாதே...உனது இளைய மனைவிக்குக் கொடுப்பீராக...இந்த ஆம்ரலீலா என்கின்ற மாம்பழ அற்புதம் அவளுக்கு நான்கு மகன்களையும், நான்கு மகள்களையும் கொடுக்கும்"  என்று  காலப்போக்கில் வாக்குருதி அளித்தார்...பாபாவின்  வாக்கே சத்திய மொழிகளாயின...ஜோதிடர்களின் வாக்கு  அல்ல என்றும் அறியப்பட்டது..

🔥சீரடி பகவான் தன் பக்தர்களுக்காக  உரைத்த உபதேச சூட்சம அருள்மொழிகள் இங்கே.🔥

பாபாவின்  வாய்மொழி கூற்றுக்கள், வாக்குருதிகள் அனைத்தும் சத்திய வேத வாக்காகவும், திறமும், பெருமையும் அவர் வாழ்நாளில்  நிரூபனமாயிற்றென்றால், ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!..பகவான் வாழ்ந்தபோது  என்ன வாக்குருதிகளை பக்தர்களுக்கு  அளித்தாரோ,அவர்   சாமதியடைந்த பின்னும் அது மாதிரியே நிகழ்ந்தன.  "நான் இறந்து விட்டபோதிலும் என்னை நம்புங்கள்....எனது சமாதியில் உள்ள எலும்புகள் உங்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும்.. நான் மட்டுமல்ல, என்னிடம் முழு இதயத்தோடு சரணடைபவர்களுடன் என்னுடைய சமாதியும் பேசும், ஒவ்வொருவருடன் கூடவே சென்று  தொடர்புக் கொள்ளும்...நான் உங்களிடத்தில்  இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தைக் குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள்... ஆனால் அதற்கு  என்னையே எப்போதும் நீங்கள்  நினைவு கூறுங்கள்.  உள்ளம், உயிர் இவற்றால் என்னை நம்புங்கள்...முழுமையாக அனைத்தையும் ஒப்படைத்து நான் என்ற அகந்தையின்றி பொருமையுடனும், விசுவாசத்துடனும்  காத்திருப்பீராக... அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள்" என்று  பகவான் உபதேசித்தார்..

🔥ஶ்ரீசாய் சத்சரித்திர நூலாசிரியர் ஹேமாட்பந்த், சீரடி பாபாவிடம் பக்தர்களுக்காக செய்த பிரார்த்தனை படிவத்தின் குறிப்புரையை இங்கே காண்போம் ...🔥

இவ்வத்தியாயத்தை ஹேமாட்பந்த் பிரார்த்தனையுடன் முடிக்கின்றார்..."ஓ..! சாயீ சத்குருவே, பக்தர்களின் கற்பகதருவே!..நாங்கள் வேண்டுகிறோம்....தங்கள் பாதக்கமலத்தில் சரணாகதி அடையாமலோ, மறக்கவோ, உங்களின் பேராற்றலை உணராமலோ  இருந்து விடக்கூடாது... இச்சம்சார வாழ்க்கையில் பிறப்பு, இறப்புகளால் நாங்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றோம்... இந்த மாயை நிறைந்த சூழலலிருந்து எங்களை இப்போது காத்து  விடுவித்தருளும்..எங்களது புலன்கள் ஆசைகளைத் தேடி ஓடுவதிலிருந்து  தடுத்தருளி அந்தர்முக ஆத்மதரிசனத்தைப் பெறத் திருப்பிவிடுங்கள்...புலன்களும், மனதும் இப்படி வெளியில் ஓடித்திரியும் இயல்பைத் தடுக்காவிடில், தடை செய்யப்படாதவரை, தன்னை உணரும் நல்வாய்ப்பே கிடையாது. சொந்த பந்த உறவுகள் யாவரும்  இறுதியில் நமக்கு உதவுவது கிடையாது...  

தாங்கள் மட்டுமே எங்களுக்கு முக்தியையும், மகிழ்ச்சியையும் அளிப்பீர்கள்..ஆகவே சத்குருவே.. எங்களது விவாதம் செய்கின்ற  பண்பையும், மற்ற பல கெடுதலான விஷயங்களையும் அறவே அழித்துவிடுங்கள்.  தங்களது திரு நாமத்தை உச்சரிப்பதில் எங்களின்  நாவுக்கு ஒரு பேராவல் ஏற்படட்டும்... எங்களின்  தேவையற்ற எதிர்மறை   எண்ணங்கள் அனைத்தையும் விலக்கி, எங்களது வீடு, உடல் இவைகளைப் பற்றிய உணர்வை மறக்கச்செய்து, மேலும்  எங்களது 'நான்' என்ற அகங்காரத்தை அழித்துவிடுங்கள் சத்குருவே...எப்போதும் தங்களின்  நாமத்தை நினைவுகூர்ந்து மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடச் செய்யுங்கள்....

எங்களது மனச்சலனங்களை அடக்கி அமைதி, சாந்தம் இவைகளை எங்களுக்கு அருளுங்கள்... தாங்கள் எங்களைச் சற்றே அரவணைத்தால், எங்கள் அறியாமை இருள் மறைந்து உங்கள் ஒளிபெற்ற மகிழ்வுடன் வாழ்வோம்...தங்களது ஆசியினாலும், நல்லருளினாலும், எங்களது முந்தைய நல்வினைகளாலும் தங்களது லீலாம்ருதத்தை பருகச்செய்து ஆழ்ந்த துயிலிலிருந்து எங்களை எழுப்பிவிட்டீர்கள்".. நாங்கள்  அனைவரும் என்றென்றும் உங்களின் பாதகமலத்தில் சரண்புகுகின்றோம் சத்குருநாதா..எங்கள் அனைவரையும் காத்தருள்வீராக...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻

ஸ்ரீ சாயீயைப்  பணிக...அனைவருக்கும்  சாந்தி நிலவட்டும்...🙏🏻🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏

https://youtu.be/cuMYm-Q6D-c

வியாழன், ஜூன் 03, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்து நான்கு(24)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🙏🙏

🙏🏻 அத்தியாயம்::- இருபத்து நான்கு(24)🙏🏻

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம் பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும்,பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்.....சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது.. ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏🏻

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின்   சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது.... 

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்.🔥

🙏ஸ்ரீ சாயி சத்சரித்திரம்:🙏

🙏அத்தியாயம்::- இருபத்து நான்கு..(24)🙏

🙏🏻முன்னுரை...🙏🏻  

குருவின் பாதங்களை வணங்கி  சரணாகதி அடைவதனால் ஏற்படும் நன்மைகளும், பகவான், நகைச்சுவை உரையாடல் மூலமாகவே  ஏன் நிவேதனம்  செய்ய வேண்டும் என்பதன்  மூல சூட்சம உரையும் , உண்ணும் போது  அருகில் உள்ளவர்களுக்கு  சிறிதளவு அளித்து விட்டு உண்ண வேண்டும்  என்று ஹேமாட்பந்திடம்  கூறியதன் அனுபவ விளக்கவுரை.... 

சுதாமருக்கும்  கிருஷ்ணருக்கும் இடையேயான சூட்சம உரையாடலைப் பற்றிய  அனுபவ விளக்கவுரை...

அண்ணா சிஞ்சணீகருக்கும், மௌஷிபாயீக்கும் இடையே நடந்த உரையாடலின் விளக்கவுரை...

பக்தர்களின்பால் பகவான் கொண்ட இணக்கத்தைப் பற்றிய உரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை  ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்...

🔥 முதலில் குருவின் பாதங்களை வணங்கி  சரணாகதி அடைவதனால் ஏற்படும் நன்மைகளும், பகவான், நகைச்சுவை உரையாடல் மூலமாகவே ஏன் நிவேதனம் செய்ய வேண்டும் என்பதன்  மூல சூட்சம உரையும், உண்ணும் போது  அருகில் உள்ளவர்களுக்கு  சிறிதளவு அளித்து விட்டு உண்ண வேண்டும் ஹேமாட்பந்திடம் நகைச்சுவையாக   கூறியதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்🔥

சத்குருவின் பாதங்களில் நம் அகங்காரத்தை விடுத்து சரணாகதி  அடைந்து,  அனைத்து இயல் வாழ்வியல் இயக்கச் செயல்பாடுகளையும்  சமர்ப்பித்தாலன்றி, நமது வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது கடினம்....அகங்காரத்தை ஒழித்தால் நமது வெற்றி உறுதியளிக்கப்படுகிறது... சாயீபகவானை உள்ளார்ந்த பக்தியுடன் திடமான விசுவாசம் கொண்டு  வணங்குவதால், இகபர சௌபாக்கியம் இரண்டுமே கிடைக்கிறது....நமது வாழ்வில்  உண்மையான மற்றும்  நிலையான  அமைதியும், பேர் மகிழ்ச்சியும் அடைகிறோம்...எனவே எவரொருவர் சத்குருவின் ஆசியையும், அனுக்கிரகத்தையும், சுபிட்சத்தையும் பெற விரும்புகின்றாரோ, அவர் சாயீபாபாவின் லீலைகளையும், கதைகளையும் பக்தியுடன் அகந்தையின்றி கேட்கவேண்டும்..அவைகளைத் தியானம் செய்யவேண்டும்..மேற்க்கண்டவற்றை எவர்  கடைப்பிடிக்கின்றார்களோ அவர்கள்  தமது வாழ்க்கையின் இலட்சியத்தை சுலபமாக அடைந்து பேரானந்தம் பெறுவார்கள்...

பொதுவாக அனைவரும் நகைச்சுவையான உரையாடலையும், வேடிக்கையையும் விரும்புவார்கள்...ஆனால் தங்களைப் பொருளாக வைத்து தமாஷ் செய்யப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை..ஆனால் பாபாவின் வழியோ விசித்திரமானது...பகவான் நகைச்சுவையுடன் வெகு இயல்பாக  அபிநயத்துடன் கூறும்போதும், அதனை கேட்கும் போதும் பக்தர்களுக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், அறிவுரை தருவதாகவும் இருக்கின்றன...எனவே கேலிக்கு பக்தர்கள்  இலக்காயினும் அதனை யாரும்  பொருட்படுத்துவதில்லை.  ஹேமாட்பந்த் தனது சொந்த அனுபவத்திலேயே கீழே குறிப்பிடுகின்றார்....

சீரடியில் ஞாயிறுதோறும் சந்தை நடைபெறும்.  அண்டையிலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் அங்குவந்து தெருவில் பந்தல் கடைகளைப் போட்டு தங்களது பொருட்களையெல்லாம்  விற்பனை செய்வர்....ஒவ்வொரு மாலையும் மசூதியில்  ஏறக்குறைய அதிகமானோர்கள் வருவார்கள்..ஆனால் ஞாயிறு மாலையோ மூச்சுத் திணறும் அளவுக்குக் கூட்டம் கூடிவிடும்..அத்தகைய ஒரு ஞாயிற்றுக் கிழமையின்போது ஹேமாட்பந்த் பாபாவின் முன்னால் அமர்ந்து பாபாவின் கால்களை நீவிப் பிடித்துக்கொண்டும், கடவுள் பெயரை உச்சரித்துக்  கொண்டும் இருந்தார்.ஷாமா பாபாவின் இடப்பக்கத்திலும், வாமன்ராவ் வலப்பக்கத்திலும் இருந்தனர்....அப்போது பாபா சிரித்துக்கொண்டே அண்ணா சாஹேப்பிடம், "பாரும் உமது கோட்டின் கை மடிப்பில் தானியங்கள் இருக்கின்றன" என்று கூறிக்கொண்டே அவர் கோட்டு மடிப்பைத் தொட்டு அங்கு தானியங்கள் இருப்பதைக் கண்டார்...  ஹேமாட்பந்த் விஷயம் என்னவென்று அறிவதற்காகத் தனது இடது முழங்கையை நீட்டினார்..அப்போது அனைவரின் ஆச்சரியத்திற்கேற்ப சில பருப்பு மணிகள் கீழே உருண்டோடி சுற்றி உட்கார்ந்திருந்தவர்களால் பொறுக்கியெடுக்கப்பட்டன  இந்நிகழ்ச்சியே தமாஷிற்கான விஷயமாக ஆனது...அங்கிருந்த அனைவரும் எங்ஙனம் தானியம் கோட்டு மடிப்புக்குள் சென்று அவ்வளவு நேரமும் அங்கேயே இருந்தன என்று யூகிக்க இயலவில்லை..  ஒருவரும் இவ்விஷயத்தில் திருப்தியான பதிலை அளிக்க இயலாத இவ்வினோதத்தைப்  பார்த்துக்  கொண்டிருக்கையில் பாபா கூறினார்.."இந்த ஆளுக்கு அண்ணா சாஹேப்பை சுட்டிக் காண்பித்து தனியாகத் தின்னும் பழக்கம் இருக்கிறது.. இன்றைக்குச் சந்தை நாளாகையால் பருப்பு மணிகளை அசைபோட்டுக்கொண்டே வந்தார்...அவர் பழக்கம் எனக்குத் தெரியும்...அதற்கு இதுவே சாட்சி, இவ்விஷயத்தில் வேறென்ன ஆச்சரியமிருக்கிறது...?"

ஹேமத்பந்த் கூறுகின்றார் பகவானிடம்::: பாபா பொருட்களைத் தனியாகத் தின்று நானறியேன்.  பின்னர் என்மீது இந்தக் கெட்ட வழக்கத்தை ஏன் சுமத்துகிறீர்கள்...?  சீரடி சந்தையையே நான் இன்னும் பார்த்தது இல்லை...இன்றைக்கு, சந்தைக்கு நான் போகவே இல்லை...பின்னர் எங்ஙனம் நான் பருப்பு மணிகள் வாங்கியிருக்க முடியும்...?  அவைகளை வாங்காதபோது எப்படி நான் உண்ணமுடியும்..?  எனதருகில் உள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் நான் ஒருபோதும் எதையும் சாப்பிடுவதில்லையே..!

பாபா ::-  அருகிலிருப்பவர்களுக்கு நீர் கொடுப்பது உண்மைதான்...ஆனால் ஒருவரும் அருகில் இல்லையென்றால் நீரோ, நானோ என்னசெய்யமுடியும்...?  ஆனால் நீர் உண்ணும் முன் என்னை நினைவு கொள்கிறீரா...?  எப்போதும் நான் உம்முடன் இருக்கவில்லையா...?  பின்பு நீர் உண்ணும் முன்பாக எதையேனும் எனக்கு அளிக்கிறீரா...?

இந்நிகழ்ச்சியின் வாயிலாக பாபா நமக்கு என்ன போதிக்கிறார் என்பதைக் கவனத்துடன் நினைவில் வைப்போமாக!  புலன்கள் தரும் தேவைகளை அடையும் முன்னதாகவே மனமும், அறிவும் அவைகளின் பலன்களை அனுபவித்து விடுகின்றன என பாபா அறிவுறுத்தியுள்ளார்.  முதலில் எதனை செய்ய முற்பட்டாலும் அல்லது உண்பதற்கு முற்பட்டாலும்,  பாபாவை தியானித்து நினைவில் கொள்ள வேண்டும்.... அதுவே உன் மனதில் நிலைக் கொண்டுள்ள அவருக்கு நிவேதனம் செய்யும் உன்னத முறையாகிறது...புலன்கள் முதலியன தங்கள் தேவைகளை அடையாமல் இருக்க இயலாது...ஆனால் எதனையும்  முதலில் குருவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டால் அவைகளின் மீதுள்ள பற்று இயற்கையாகவே மறைந்துவிடுகிறது...இவ்விதமாக ஆசை, கோபம், வெறுப்பு முதலியவை பற்றிய நமது எல்லா எண்ணங்களும் முதலில் குருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவரை நோக்கிச் செலுத்தும் பயிற்சியானது அளிக்கப்பட்டால் எல்லாவித எண்ணங்களையும் களைவதற்குக் சத்குரு  உதவிசெய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.... .பொருட்களை அனுபவிக்கும் முன் பாபா அருகில்  இருந்து  உங்களைக்  கவனிப்பதாகவோ, அல்லது உங்கள் உடன் இருப்பதாக  நினைத்துக் கொண்டால், அப்பொருள்  அனுபவிக்கத்தக்கதா அல்லது தேவையில்லையா என்ற கேள்வி உடனே எழும்...பின் அனுபவிக்கத் தகாதவை எல்லாம் நம்மால் ஒதுக்கப்பட்டு, நமது தீய பண்புகள் அல்லது செயல்கள் நம்மைவிட்டு மறைகின்றன...நம்மிடம் உயர்ந்த  பண்பும் வளர்கிறது....பின்னர் குருவிடம் மேன்மேலும் தூய்மையான  அன்பு வளர்ந்து தூய ஞானம் துளிர்க்கிறது. ...

இந்த ஞானம் வளரும்போது, 'நான்', 'எனது' என்ற எண்ணம் அழிந்து நமது அறிவு ஆன்ம உணர்வுடன் கலக்கிறது.  பின்னர் நாம் பேரின்பத்தையும், திருப்தியையும் பெறுகிறோம்.  குருவுக்கும், திருவிற்கும்  பேதமில்லை...  அவர்களுள் பேதம் காண்பவன் கடவுளை எவ்விடத்தும் காண்பதில்லை.... எனவே பேத மனப்பான்மையை ஒழித்துக் குருவையும், திருவையும் ஒன்றாகக் கருதவேண்டும்...எனவே எண்ண மாறுபாடுகளை நீக்கி குருவைக் கடவுளாக வழிபடவேண்டும்.  இவ்வாறு நமது குருவுக்குப் பணிவிடை செய்தோமேயானால் சத்குரு  முழுவதும்  மகிழ்வடைந்து நமது சித்தத்தைத்  தூய்மைப்படுத்தி நம்மை நாமே அறியும் உணர்வையளிக்கிறார்.  இரத்தினச் சுருக்கமாக, முதலில் குருவை நினைக்காமல் நாம் எப்பொருட்களையும் புலன்கள் வழி அனுபவிக்கக்கூடாது...

இவ்விதமாகப் பயிற்சியளிக்கப்பட்டால், நம் மனம் பாபாவால் நிறைந்து, பாபாவின் உருவம் தியானத்தில்  விரைவில் வியாப்பிக்கும்..பாபாவின் சகுணரூபம் எப்போதும் நம் கண்முன் இருக்கும்....பிறகு பக்தி, பற்றின்மை, முக்தி யாவும் நம்முடையதேயாம்.  இங்கனமாக நமது மனக்கண்ணில் பாபாவின் ரூபம் நிலைப்படுத்தப்பட்டால், பசி,  தாகத்தையும், இச்சம்சார வாழ்க்கையையும் மறந்துவிடுகிறோம்... உலக போகங்களில் நமக்கிருக்கும் அதீத பற்று  மறைந்துவிடும்.  நமது மனம் அமைதியையும், மகிழ்ச்சியையும் அடையும்...

🔥சுதாமருக்கும்  கிருஷ்ணருக்கும் இடையேயான சூட்சம உரையாடலைப் பற்றிய  அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்🔥

மேற்கூறிய கதை சொல்லப்படும்போது ஹேமாட்பந்த் அதே மாதிரியான சுதாமரின் கதையை நினைவுக்கூர்கிறார்...அதே தத்துவத்தை இக்கதையும் விளக்குவதால் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணரும், அவரது அண்ணனான பலராமரும் சுதாமர் என்ற தோழருடன் அவர்களது குரு சாந்தீபனி முனிவரின் ஆச்சிரமத்தில் வசித்து வந்தனர்.  ஒருமுறை  கிருஷ்ணரும், பலராமரும் காட்டிற்கு விறகு கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டனர்..பின்னர் சாந்தீபனியின் மனைவி அதேபோல் சுதாமரையும் மூவருக்குமான கடலைப் பருப்புகளுடன் காட்டுக்கு அனுப்பினாள்..கிருஷ்ணர், சுதாமரைக் காட்டில்  கண்டபோது அவரிடம், "தாதா, நான் தாகமாயிருப்பதால் எனக்கு தண்ணீர் வேண்டும்" என்றார்...அதற்கு சுதாமர் "வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது.  சிறிதுநேரம் இளைப்பாறுவது நல்லது" என்றார்...அவர் தன்னிடம் கடலை இருப்பதாகவோ, அதைச் சிறிது அவர் எடுத்துக்கொள்ளலாம் என்றோ கூறவில்லை...  கிருஷ்ணர் களைப்பாயிருந்தமையால் சுதாமரின் மடியில் தலைவைத்துப் படுத்துக் குறட்டைவிட்டார்...  இதைக்கண்டு சுதாமர் தன்னிடமிருந்த கடலையை எடுத்து உண்ணத் தொடங்கினார்...கிருஷ்ணர் திடீரெனக் கேட்டார், "தாதா என்ன சாப்பிடுகிறாய்...? சப்தம் எங்கிருந்து வருகிறது...?"அதற்கு சுதாமர், "சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது...?  நான் குளிரால் நடுங்கிக் கொண்டு இருக்கிறேன்.  எனது பற்கள் தாளம் அடித்துக்கொண்டு இருக்கின்றன..விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் கூட என்னால் திருத்தமாகப் பராயணம் செய்யமுடியவில்லை" என்றார்....

இதைக்கேட்ட சர்வவியாபியான கிருஷ்ணர், "மற்றவர்களது பொருட்களை உண்ணும் ஒரு மனிதனைக் கனவில் கண்டேன்...அதைப்பற்றிக் கேட்டபோது தின்பதற்கு ஒன்றுமில்லை என்ற பொருளில், 'என்ன...? மண்ணா தின்பதற்கு உள்ளது..!' எனக் கேட்டான்.  அதற்கு மற்றொருவன் 'அது அங்ஙனமே இருக்கட்டும்' என்றான்.... தாதா இது ஒரு கனவுதான்.  நீ எதையும் எனக்கில்லாமல் உண்ணமாட்டாய் என்று எனக்குத் தெரியும்.  ஆயினும் கனவில் கண்ட ஞாபகத்தில் நீ என்ன உண்கிறாய் என்று நான் கேட்டேன்...?"  என்றார்....சர்வவியாபியான கிருஷ்ணரைப் பற்றியும், அவர்தம் லீலையைப் பற்றியும், சுதாமர்  அறிந்திருப்பாராயின் அவர் அவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கமாட்டார்...  எனவே தன் செய்கைக்காக அவர் வருந்த வேண்டியதாயிற்று....அவர் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரானபோதும் தமது வாழ்க்கையை அஷ்டதரித்திரத்தில் கழிக்க வேண்டியதாயிற்று....

ஆனால் பின்னர் அவர் கிருஷ்ணருக்குத் தன் மனைவியின் சொந்த உழைப்பால் ஈட்டிய ஒரு பிடி அவலை அளித்தபோது கிருஷ்ணர் மகிழ்ச்சியடைந்து அவருக்கு அனுபவிப்பதற்காக ஒரு பொன் நகரத்தை அளித்தார்... மற்றவர்களுடன் பகிர்ந்துண்ணாது தனியாக உண்போர்  இக்கதையை நினைவில் வைக்கவேண்டும்.கடவுளுக்கு முதலில் சமர்ப்பித்து அவைகள் அவரால் திருப்தியடையப் பெற்ற பிறகே அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று  இங்கு  கூறப்படுகின்றது...பாபாவும் நமக்கு அதையே அவர்தம் ஒப்புவமையற்ற வேடிக்கையான வழியில் கற்பித்திருக்கிறார்....

🔥அண்ணா சிஞ்சணீகருக்கும், மௌஷிபாயீக்கும் இடையே நடந்த உரையாடலின் விளக்கவுரை இங்கே......🔥

ஹேமத்பந்த் இப்போது சமாதானம் நிலைநாட்டுவோரின் பாகத்தை பாபா ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார்.  தாமோதர் கனஷ்யாம் பாபரே என அழைக்கப்பட்ட அண்ணா சிஞ்சணீகர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார்...அவர் எளிமையானவர், முரடர், நேர்மையானவர்.அவர் எவரையும் இலட்சியம் செய்யமாட்டார்...எப்போதும் கர்வமின்றிப் பேசி எல்லாவற்றையும்  நடத்தினார்... வெளிப்படையாகக் கடுமையாகவும், வசப்படாதவராகவும் இருந்தபோதும், அவர் நட்பண்புடையவராகவும் கள்ளமின்றியுமிருந்தார்.  எனவே சாயீபாபா அவரை நேசித்தார்... இவர் பின்னர் தனது சொத்துக்கள் யாவற்றையும் சீரடி சாயிபாபா சமஸ்தானத்துக்கு எழுதி வைத்தார்....

ஒருநாள், ஒவ்வொருவரும் ஒரு வழியில்  பாபாவிற்கு சேவை செய்வதைப் போன்று, அண்ணாவும் தலைகுனிந்து நின்றுகொண்டு கைப்பிடியில் இருந்து இடது கைக்கு நீவிக்கொண்டிருந்தார்.  அம்மா என்று பாபாவாலும் மௌஷிபாயீ  என்று பிறராலும் அழைக்கப்பட்ட வயதான  விதவைப் பெண் வேணுபாஜி கௌஜல்கி வலது புறத்தில் அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள்... மௌஷிபாயீ தூய உள்ளத்துடன் கூடிய முதியவள்...அவள் தன் இரு கைவிரல்களையும் கோர்த்துக் கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாக பதித்துப் பிசைந்தாள்..அடிவயிறே தட்டையாகி விடும்படியான வேகத்துடன் சேவை செய்துக் கொண்டிருந்தாள்.  பாபா இப்படியும் அப்படியும் புரண்டுக் கொண்டிருந்தார்.  மற்றொரு புறமிருந்த அண்ணா நிதானத்துடன் இருந்தார்...ஆனால் மௌஷிபாயீன் அசைவுகளுடன் அவளது முகமும் அசைந்தது...  ஒருதரம் அவளது முகம் அண்ணாவின் முகத்திற்கு மிக அருகில் வந்துவிட்டது. வேடிக்கையான பண்புடைய அவள், "ஓ! இந்த அண்ணா ஒரு கெட்டவன்..அவன் என்னை முத்தமிட விரும்புகிறான்... தலை நரைக்கும் வயதாகியும் முத்தமிடுவதற்கு அவன் வெட்கப்படவில்லை" என்றாள்....இச்சொற்கள் அண்ணாவை சற்று கோபப்படச்  செய்தன....  முஷ்டியை மடக்கிவிட்டுக்கொண்டு அவர் "நான் ஒரு கெட்ட கிழவன் என்றா கூறுகிறாய்...?  நான் அவ்வளவு முட்டாளா..?  நீயே சண்டையை ஆரம்பித்தாய், என்னுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்...?" என்றார்....அங்கிருந்த அனைவரும் அவர்களுக்கிடையே நடைபெறும் விஷயங்களை ரசித்துக்கொண்டிருந்தனர்.  அவர்கள் இருவரையுமே பாபா சமமாக நேசித்தார்.  சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார்...அன்புடன் பகவான்  கூறினார்.  "அண்ணா, ஏன் அனாவசியமாக இக்கூச்சலையும், குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்...?  தாய் முத்தமிடும்போது உள்ள நெறியின்மை அல்லது தீங்குதான் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.?" என்றார்... பாபாவின் இம்மொழிகளைக் கெட்ட இருவரும் திருப்தியடைந்தனர்....  எல்லோரும் மன மகிழ்வுடன் தங்கள் உளம் நிறைவடையும்வரை சிரித்தனர்....

🔥பக்தர்களின்பால் பகவான் கொண்ட இணக்கத்தைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥.

பாபாவின் அடியவர்கள் அவரவர்களுக்குரிய வழியிலேயே அவருக்குச் சேவைசெய்ய அவர் அனுமதித்திருந்தார். இதில் பிறர் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.  உதாரணமாக இதே மௌஷிபாயீ  மற்றொரு சந்தர்ப்பத்தில் பாபாவின் அடிவயிற்றைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள்.  அவள் உபயோகித்த கடுமையையும், வேகத்தையும் கண்டு மற்ற அடியவர்களெல்லாம் மனந்தளர்ந்து கவலை கொண்டவரானார்கள்.  அவர்கள் "ஓ..! அம்மா இன்னும் நிதானமாகவும், மெதுவாகவும் செயல்படு.  இல்லாவிடில் பாபாவின் இரத்தக்குழாய், நரம்பு இவைளை உடைத்துவிடுவாய்" என்று அவளிடம் கூறினார்கள். 

இதன் பேரில் பாபா உடனே தன் இருக்கையை விட்டு எழுந்தார்...தமது சட்காவைத் தரையில் ஓங்கி அடித்தார்...அவர் கோபாவேசம் அடைந்தார்..  அவரது கண்கள் நெருப்புத் துண்டம் போலாயின...  ஒருவருக்கும் அவர் முன் நிற்கவோ, பேசவோ தைரியம் இல்லை..  பின்னர் அவர் சட்காவின் ஒரு முனையைத் தன் இரு கைகளாலும் எடுத்துக்கொண்டு, வயிற்றிலுள்ள தொப்புளில் குச்சியின் ஒரு நுனியை அமுக்கினார்....மற்றொரு நுனியைக் கம்பத்தில் பொருத்தவைத்து அழுத்த இரண்டு - மூன்றடி நாலமுள்ள சட்கா முழுவதும் அடிவயிற்றுக்குள் சென்றுவிட்ட மாதிரியாகத் தோன்றியது பகவானின் இந்தச் செயல்....இன்னும் சிறிது நேரத்தில் அடிவயிறு கிழிந்துவிடுமென்று மக்கள் பயந்தனர்.. தூண் உறுதியானது.  அசையாதது.  பாபா அதனருகில் மிகமிக நெருக்கமாகப் போகத் தொடங்கித் தூணைப் பலமாக அணைத்தார்.  எந்த வினாடியிலும் வயிறுகிழியுமென எதிர்பார்க்கப்பட்டது.  அவர்கள் எல்லாம் பீதியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தாலும், வியப்பாலும் ஊமையாகி நின்றனர்...

பாபா தமது அடியவனுக்காகவே இவ்விதம் கஷ்டப்பட்டார்.  மற்ற அடியவர்கள் மௌஷிபாயீடம் அவளது சேவையில் இன்னும் நிதானமாக இருக்கும்படியும் பாபாவுக்கு எவ்வித வலியையோ, தொல்லையையோ உண்டாக்கவேண்டாம் என்றும் குறிக்கவே விரும்பினர்....நல்லெண்ணத்துடனே அவர்கள் இதைச் செய்தனர்...ஆனால் பாபா இதைக்கூடப் பொறுக்கவில்லை... தங்களது நல்லெண்ண முயற்சியினால் பெருந்துன்பம் விளைவிக்கும் இத்திடீர் விளைவைக் கண்ட அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.  காத்திருந்து பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் செய்யமுடியவில்லை....அதிஷ்டவசமாக பாபாவின் ஆவேசம் சீக்கிரம் குளிர்ந்தது...அவர் குச்சியை விட்டுவிட்டுத் தன் இடத்தினுள் வந்து அமர்ந்தார்.. இதிலிருந்து அடியவர்கள் மற்றவர் சேவைகளில் குறுக்கிடக்கூடாது என்றும் தாங்கள் விரும்பியவண்ணமே பாபாவுக்கு அவர்கள் சேவைசெய்ய விட்டுவிட வேண்டுமென்கிற பாடத்தைத் தெரிந்துகொண்டனர்...ஏனெனில் அவர்கள் செய்யும் சேவைகளின் மதிப்பையும், தகுதியையும் பாபாவே அளக்க வல்லமையுடையவராய் இருக்கிறார்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏

ஸ்ரீ சாயீயை பணிக ...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியானபீடம்...🙏🙏🙏🙏


https://youtu.be/mU3Aq5FLDOE

புதன், ஜூன் 02, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்து மூன்று(23)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு..🙏🏼🙏🏻🙏🏻

🙏 அத்தியாயம்::- இருபத்து மூன்று(23)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது.... 

ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய  ஶ்ரீசாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...  

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க் கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேதப்பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🔥

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....இவ்வேதப்  பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.. அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥

🙏அத்தியாயம் ::- இருபத்து மூன்று(23)🙏

🙏முன்னுரை....🙏

குருபக்தியும், குருவிடம் சரணாகதிஅடைதலுமே ஆத்ம மறுமலர்ச்சிப்  பெருவதற்கான ஒரே வழி என்பதன் மூல சூட்சம விளக்கவுரை....

தன்னை  தரிசிக்க வந்த யோக சாதகருக்கு, பகவான் உரைத்த ஞான  உபதேசம் என்ன என்பதன் விளக்கவுரை..

சீரடி பகவான் தன்னுடைய  உயரிய பக்தன் மாதவராவ் தேஷ்பாண்டே என்ற ஷாமாவை எவ்வாறு பாம்புக் கடியிலிருந்து குணமாக்கினார் என்பதன் அனுபவ உரை...

சீரடி பகவான் எவ்வாறு காலரா வியாதியைப் போக்கி சீரடி மக்களைக் காப்பாற்றினார் என்பதன் விளக்கவுரை...

சிறந்த குருபக்தியின் எடுத்துக்காட்டாக , தன் குரு கூறியச் செயலை சத்திய பிரமாணமாக  ஏற்று பின்பற்றிய  காகா சாஹேப் அவர்களின் வாழ்வில் நடந்த  அனுபவ விளக்கம்..

குருவின் கட்டளைகளை வேதவாக்காக எண்ணி பின்பற்றும் பக்தர்களை மூன்றுவித நிலைகளில் ஹேமாட்பந்த் பிரிக்கின்றார் .இதனைப் பற்றிய குறிப்புரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்...

🔥 முதலில் குருபக்தியும், குருவிடம்  சரணாகதி அடைதலுமே  ஆத்ம மறுமலர்ச்சிப் பெருவதற்கான ஒரே வழி என்பதன் மூல சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்....🔥

உண்மையிலேயே இந்த ஜீவன்  அதாவது மனித ஆத்மாவானது  தாமசம்,  சத்துவம், ராஜஸம் என்ற மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கிறது...ஆனால் மனிதன் மாயையால் மறைக்கப்பட்டுத் தனது இயற்ப்பண்பான சச்சிதானந்தப் பெரு நிலையை மறந்து தானே செய்விப்பவனும், அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு இவ்வாறாக முடிவற்ற இடர்ப்பாடுகளில் தன்னைத்தானே சிக்கவைத்துக் கொள்கின்றான்..அதிலிருந்து  விடுவித்துக் கொள்ளும் வழியும் தனிமனித உயிர்களுக்குப்  புலப்படவில்லை....குருவின் பாதங்களில் செலுத்தும் அன்பான பக்தியும், சரணாகதியுமே விடுதலை அடைவதற்கான ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது...சீரடி சாய்பகவான்  மகத்தான, சக்திவாய்ந்த, விழிப்புணர்வுடன் கூடிய  தாய்மையுணர்வு கொண்ட உயரிய பேராற்றல்...தம் அடியவர்களை பேதமின்றி அரவணைத்து, ஆசிர்வதித்து  வேண்டியதை அளித்து  மகிழ்வித்தார்...அவர்களைத் தாமாகவே உயர்ந்த சத்திய நெறிமுறைகளுடன் வாழ வழிக் காட்டியாக இருந்தார்..

முன்னரே குறிப்பிட்ட காரணங்களால் சாயீபாபாவை நாம்  இறை  அவதாரமாகவே கருதுகின்றோம்...ஆனால் தான் கடவுளின் பணிவுள்ள ஒரு சேவகன் என்றே அவர் எப்போதும் கூறினார்...அவர் தாமே ஓர் இறை  அவதாரமாக இருந்த  போதும் கூட எங்ஙனம் திருப்தியான வகையில் மக்கள் நடந்துக் கொள்ளவேண்டும், வாழ்க்கையில் தனிமனித உயிர்கள்  தாங்கள் தங்கள், பணித்துறை இடத்திற்கேற்ற வருணாஸ்ரம தர்மத்திற்கேற்ப  கடமைகளைச் செய்யவேண்டும் என்று வழி காண்பித்தார்....பதவான்  ஒருபோதும் எந்த வகையிலும் மற்றவர்களைப் போட்டியிட்டு மேம்படும் முயற்சிகளைக் கொண்டதில்லை. அல்லது தமக்காக ஏதேனும் செய்யும்படி பக்தர்களைக்  கேட்டதில்லை.இவ்வுலகின் அசையும், அசையாப் பொருட்கள் யாவற்றிலும் கடவுளைக் கண்ட பாபாவிற்கு  பணிவுடைமையே மிகவும் பொருத்தமான ஒன்றாகும்..ஒருவரையும் பகவான்  புறந்தள்ளியதில்லை அல்லது மதிக்காமலோ, அரவணைக்காமலோ  இருந்ததில்லை... நாராயணனை (கடவுளை) சர்வ ஜீவராசிகளிடமும் கண்டார்...*நான் கடவுள்* என்று ஒருபோதும் அவர் கூறியதில்லை... ஆனால் தான் ஒரு பணிவுள்ள சேவகன் என்றும், எப்போதும் அவரை நினைவில் வைத்திருப்பதாகவும் கூறினார்... *அல்லா மாலிக்'*  இறைவனே எஜமான் என்று எப்போதும் உச்சரிப்பார்....

பொதுவாக மகான்கள் மற்றும் சித்தர்கள் போன்றோர்,  அறியாமையிலும், மாயையிலும் சிக்கிக்கொண்ட  ஆன்மாக்களை விடுவிப்பதற்காகக் கடவுள் அருளால் அவர்கள் இவ்வுலகத்தில் தங்களை அவதரித்துக் கொள்கிறார்கள்....நல்வினைகளின் சேமிப்பு ஏதேனும் நமது கணக்கில் இருக்குமானால் மகான்களின் வாழ்க்கை வரலாறு ,அவர்கள் புரிந்த அற்புதங்கள், லீலைகளைக்  கேட்பதற்கு நமக்கு ஓர் ஆர்வம் அல்லது சுவாரசியம் ஏற்படுகின்றது...இவ்வாறு அல்லாவிடில் கேட்பதற்கு ஆர்வம் எழாது...மேலும் இந்த அத்தியாயத்தின் முக்கிய விளக்கவுரைகளை இங்கே காண்போம்...

🔥தன்னை தரிசிக்க வந்த யோக சாதகருக்கு பகவான் உரைத்த ஞான உபதேசம் என்ன என்பதன் விளக்கத்தை இங்கு காண்போம்..🔥

நானா சாஹேப் சாந்தோர்கருடன் ஒருமுறை சீரடிக்கு ஒரு யோகப் பயிற்சியாளர் (யோகா சாதகர்) வரும்படி நேரிட்டது...பதஞ்சலியின் யோகசூத்திரங்கள் உள்ளிட்ட எல்லா யோகப் புத்தகங்களையும் அவர் கற்றிருந்தார்.. எனினும் யோகத்தில் நடைமுறை அனுபவம் ஏதும் அவருக்கு இல்லை..தமது மனதை ஒருமுகப்படுத்தி குவிக்கவும், சமாதி நிலையை ஒரு சிறிதுநேரம் எய்தவும் அவரால் முடியவில்லை.. சாயீபாபா தம்பால் மகிழ்ச்சி அடைந்தாரென்றால், நீண்டநேரம் சமாதி நிலையை எய்துவதற்கு அவர் தமக்கு வழிகாட்டுவார் என்று நினைத்தார்...உள்ளத்தில் இக்குறிக்கோளுடன் அந்த யோக சாதகர்  சீரடிக்கு வந்தார்...மசூதிக்கு அவர் சென்றபோது பகவான்  ரொட்டியை வெங்காயத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்... இதைக் கண்ணுற்ற அவருக்கு மனதில் ஓர் எண்ணம் எழுந்தது.. "மட்கிப்போன ரொட்டியுடன் பச்சை வெங்காயத்தை உண்டுக் கொண்டிருக்கும் இம்மனிதர், எங்ஙனம் எனது தொல்லைகளுக்கு தீர்வைக் காண்பித்து ஆசி வழங்க முடியும் என்று நினைத்தார்.. 

சாய்பகவான் யோக சாதகரின்  உள்ளத்தைப் படித்தறிந்து நானா சாஹேப்பை நோக்கிக் கூறினார், "ஓ..! நானா, வெங்காயத்தை ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவன் மட்டுமே அதை உண்ணவேண்டும்..மற்ற ஒருவரும் அங்ஙனம் செய்யக்கூடாது"...இக்குறிப்பைக் கேட்ட யோக சாதகர்  ஆச்சரியத்தால் செயலிழந்தார்...பின்னர் பூரணசரணாகதியுடன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்துப் பணிந்தார்... தூய, திறந்த உள்ளத்துடன் தனது தொல்லைகளைக்  கேட்டு பாபாவிடமிருந்து அவைகளுக்கு விடையும் பெற்றார்...இவ்வாறாகத் திருப்தியும், மகிழ்ச்சியும் அடையப்பெற்று பாபாவின் உதி ஆசீர்வாதங்களுடன் யோக சாதகர்  சீரடியை விட்டுச்சென்றார்....

🔥சீரடிபகவான் தன்னுடைய உயரிய பக்தன் மாதவராவ் தேஷ்பாண்டே என்கிற  ஷாமாவை, எவ்வாறு  விஷப் பாம்புக்கடி தாக்கத்திலிருந்து காப்பாற்றி ஆசி வழங்கினார் என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

இக்கதையைத் தொடங்கும் முன்பாக ஹேமாட்பந்த், ஜீவனைக் கிளிக்கு உவமானமாக  ஒப்பிடலாம் என்றும், ஒன்று உடம்பினுள்ளும் மற்றொன்று கூண்டினுள்ளுமாக இரண்டுமே கட்டுண்டிருக்கின்றன என்றும், கட்டுண்டுக் கிடக்கும் அவைகளது தற்போதைய நிலையே அவைகளுக்கு ஏற்ற நன்மையானது என்று அவைகள் கருதுவதாகவும் கூறுகிறார்....  உதவியாளர் ஒருவர் அதாவது குரு வரும்போது கடவுளருளால் அவைகளின் கண்ணைத் திறந்து, அவைகளின் கட்டுக்களினின்று அவைகளை விடுவிக்கும்போது மட்டுமே அவைகளின் கண்கள், இன்னும் பெரியதும் சிறந்ததுமான வாழ்க்கைக்குத் திறந்து விடப்படுகிறது...இத்துடன் அவர்கள் முன்னைய வரையறையை உடைய வாழ்க்கையை ஒப்பிட்டால் அது சூன்யமே ஆகும்....இப்போது  விளக்கவுரைக்கு வருவோம்..

ஒருமுறை ஷாமாவை நச்சுப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது... அவரது கையிலுள்ள சுண்டு விரலில் கடிபட்டு விஷம் உடம்பு முழுக்கப் பரவத்தொடங்கியது.  ஷாமாவும் தாம் இறந்துவிடுவோமேன்று என்று எண்ணுமளவிற்கு வலியும் அவ்வளவு தீவிரமாக இருந்தது....அந்த மாதியான விஷயங்களுக்கு எல்லாம் அடிக்கடி அனுப்பப்படும் விட்டோபா கடவுளிடம் அவரது நண்பர்கள் அவரை எடுத்துச் செல்ல விரும்பினர்...ஆனால் ஷாமா, மசூதிக்குத் தமது விட்டோபாவிடம் (சாயீபாபா) ஓடிவந்தார்...மாதவராவைப் பார்த்ததும், பாபா திட்டவும், கண்டிக்கவும் தொடங்கினார்...அவர் மூர்க்கமடைந்து "ஓ! இழிந்த பதுர்த்யா...! (பூசாரியே) மேலே ஏறாதே.  அங்ஙனம் ஏறினாயோ ஜாக்கிரதை" என்று கர்ஜித்தார்.  பின்பு "போ, அப்பாலே போ! கீழிறங்கு" என்றார்.  இங்ஙனம் பாபா சீற்றத்தினால் கூறிய வார்த்தையைப் பார்த்து ஷாமா பெரிதும் குழப்பமடைந்து ஏமாற்றமடைந்தார்...அவர் மசூதியே தமது வீடு என்றும், சாயீபாபாவே தமது ஒரே அடைக்கலம் என்றும் எண்ணியிருந்தார் இதுவரை..ஆனால் இங்ஙனம்  பாபாவால் விரட்டப்பட்டால் அவர் எங்கே செல்வார்...?  உயிர் வாழ்வதின் நம்பிக்கை அனைத்தையும் இழந்து அமைதியாய் இருந்தார்... சிறிது நேரத்திற்குப் பின் பாபா சாதாரணமாகவும், அமைதியாகவும் ஆனார்... அப்போது ஷாமா மேலே சென்று அவர் அருகில் அமர்ந்தார்...

பின்னர் பாபா அவரிடம், "பயப்படாதே, எள்ளளவும் கவலைப்படாதே...!  கருணையுள்ள பக்கிரி உன்னைக் காப்பாற்றுவார்.. போய் வீட்டில் அமைதியாக அமர்ந்திரு...வெளியில் செல்லாதே.. என்னை நம்பு..பயப்படாமல் இரு, கவலைப்படாதே" என்று கூறினார்.. பின்னர் ஷாமா வீட்டிற்கு அனுப்பப்பட்டார்...அதன் பின்னர் ஷாமா எதை விரும்புகின்றாரோ, அதை உண்ண வேண்டுமென்றும், வீட்டில் நடையுடையாக இருக்கவேண்டும் என்றும், ஆனால் படுத்து உறங்கவே கூடாது என்ற குறிப்புக்களுடன் தாத்யா பாடீலையும், காகா சாஹேப் தீஷித்தையும் ஷாமாவுடன்  பாபா அனுப்பினார்.இவ்வுரைகள் பின்பற்றப்பட்டன என்றும், சிறிது நேரத்தில் ஷாமா குணப்படுத்தப்பட்டார் என்றும் கூறவும் வேண்டுமா...! விரைவில் குணமானார் ஷாமா.... இது சம்பந்தமாக நினைவில் வைக்க வேண்டியது  ஒன்றுதான்... பாபாவின் மொழிகள்  அதாவது போ, அப்பாலே ஓடு!, 'கீழிறங்கு' என்னும் ஐந்தெழுத்து மந்திரம்  மேலெழுந்தவாரியாக அது காணப்பட்டாற்போல் ஷாமாவை நோக்கிக் கூறப்பட்டதல்ல..அவை ஷாமாவின் உடலினுள் புகுந்து இரத்த ஓட்டத்துடன் கலக்க வேண்டாமென்று பாம்புக்கும், அதன் விஷத்துக்கும் இடப்பட்ட நேரடிக் கட்டளைகளாகும்...

மந்திர சாஸ்திரத்தில், நல்லறிவுத் திறமுடைய பிறர்களைப் போன்று எவ்வித மந்திர உச்சாடனமிடப்பட்ட அரிசியையோ, தண்ணீரையோ உபயோகிக்க வேண்டியிருந்ததில்லை...பகவானின்  சொற்களே ஷாமாவின் உயிரைக் காப்பதில் மிகச்சிறந்த பயனுள்ளதாக  இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது....இக்கதைகள் அனைத்தும்  கேட்கும் அனைவரும்  சாயீபாபாவின் பாதங்களில் உறுதியான நம்பிக்கை அடையப் பெறுவார்கள் என்பது உறுதியாகின்றது.... மாயை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு பாபாவின் பாதக்கமலத்தில் சரணாகதி அடைவதும்....அவரின்  உபதேச மொழிகளைப் பின்பற்றுவதுமே மிகச் சிறந்த வழியாகும் என்பது இங்கே புலனாகின்றது....

🔥சீரடிபகவான் எவ்வாறு காலரா வியாதியைப் போக்கி சீரடி மக்களை பேராபத்திலிருந்து காப்பாற்றினார் என்பதன் விளக்கவுரையை  இங்கே காண்போம்....🔥

ஒருமுறை சீரடியில் காலரா நச்சுத்தன்மை மிகுந்து தாண்டவமாடியது...ஊர்க்காரர்கள் மிகவும் பயந்து புறத்தேயுள்ள மக்கள் தொடர்புகள்  அனைத்தையும்  நிறுத்திக் கொண்டனர்....பஞ்சாயத்தார் கூடி தொற்றுவியாதி தடுப்புக்கும், வியாதியை ஒழிக்கவும்  இரண்டு கட்டளைகளை ஏற்படுத்தினர்.  அவைகளாவன..

1. எவ்வித எரிபொருள் (விறகு) வண்டியையும் கிராமத்திற்குள் வர அனுமதிக்கக்கூடாது...

2. அங்கு ஒரு ஆடு கூட கொல்லப்படக்கூடாது.

எவரேனும், இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் கிராமப் பஞ்சாயத்தார்களாலும், அதிகாரிகளாலும் அபராதம் விதிக்கப்படுவர் என்று அறிவித்தனர்.. இவைகளெல்லாம் வெறும் மூட நம்பிக்கையென்று பாபா அறிந்தவராதலால் காலராக் கட்டளைகளை சிறிதளவும் இலட்சியம் செய்யவில்லை...இக்கட்டளைகள் அமலில் இருக்கும்போது ஒரு எரிபொருள் வண்டி அங்கு வந்து கிராமத்திற்குள் நுழைய விரும்பியது.... கிராமத்தில் எரிபொருள் பஞ்சம் இருந்தது எல்லோருக்கும் தெரிந்திருந்தது என்றாலும் மக்கள் எரிபொருள் வண்டியை விரட்ட ஆரம்பித்தனர்....பாபாவிற்கு நடந்த நிகழ்வைப்பற்றி  தெரியவந்தது...பகவான்  அவ்விடத்திற்குச் சென்று வண்டிக்காரனை மசூதிக்கு ஓட்டிவரும்படி கூறினார்....பாபாவின் இந்தச்  செய்கைகளுக்கு மறுப்புத் தெரிவிக்க  ஒருவருக்கும் குரல் எழுப்பத் தைரியம் இல்லை. தமது துனிக்கு  விறகுத்  தேவைப்பட்டது... எனவே அதை அவர் வாங்கினார்....

அக்னிஹோத்ரி தனது புனித நெருப்பை தன் வாழ்நாள் முழுவதும் எரியவிடுவது போன்றே பாபா தமது துனியை இரவும், பகலும் எரியவிட்டார்...இதற்காக அவர் எப்போதும் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்தார்.... பாபாவின்  வீடான மசூதி அனைவருக்கும் தடைகளற்றும், திறந்து வைக்கப்பட்டும் இருந்தது...அதற்குப் பூட்டோ, சாவியோ கிடையாது...அங்கிருந்து சில ஏழை மக்கள் தங்கள் உபயோகத்திற்காக விறகை எடுத்துக்கொண்டு சென்றனர்...பாபா இதைக்கண்டு ஒன்றும் கூறவில்லை... பிரபஞ்சமனைத்திலும் ஆதி மூல பேராற்றல்  வியாபித்திருந்ததை அவர் கண்டார்..எனவே எவருடனும் அவர் பகையோ, கெட்ட எண்ணமோ கொண்டதில்லை. முழுவதுமாகத் துறந்தவராயினும் மக்களுக்கு ஒரு முன்.உதாரணமாக இருக்கும் பொருட்டு அவர் இல்லறத்தார் போன்று வாழ்ந்தார்....

🔥சிறந்த குருபக்தியின் எடுத்துக்காட்டாக, தன் குரு கூறியச் செயலை சத்திய பிரமாணமாக ஏற்று பின்பற்றிய பக்தர் காகா சாஹேப் அவர்களின் வாழ்வில் நடந்த அனுபவ விளக்கம் இங்கே.🔥

இரண்டாவது காலரா கட்டளை பாபாவினால் எங்ஙனம் செயல்படுத்தப்பட்டது என்பதைத் தற்போது காண்போம். கட்டளை அமுலில் இருக்கையில் யாரோ ஒருவர் மசூதிக்கு ஒரு ஆட்டைக் கொண்டுவந்தார்...அது பலவீனமாயும், மூப்புடனும் இறக்கபோகும் தருவாயிலும் இருந்தது...  இத்தருணத்தில் மாலிகானைச் சேர்ந்த பக்கீர் பீர் முஹமது என்ற படேபாபா அருகில் இருந்தார்...சாயீபாபா அவரை அதை ஒரே வெட்டில் வெட்டிப் பலியிட்டுச் சமர்ப்பிக்கும்படி கேட்டார்.. இந்த படேபாபா என்றப் பக்தர்  சாயீ பாபாவால் மிகவும்  மதிக்கப்பட்டவர். சாயீபாபாவின் வலதுப் புறத்திலேயே அவர் எப்போதும் அமர்ந்திருந்தார்...ஹூக்காவை அவர் முதலில் குடித்தபின்பு தான், அது பாபாவுக்கும் பிறருக்கும் அளிக்கப்படும்.  மத்தியான உணவுவேளையின் போது கறிவகைகள் எல்லா பரிமாறப்பட்டப் பின்பு பாபா, படேபாபாவை மரியாதையுடன் கூப்பிட்டுத் தமது இடப்பக்கத்தில் அமர்த்திய பின்பு எல்லோரும் உண்டனர்....தக்ஷிணையாகச் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்தும் பகவான்  அவருக்கு தினசரி ரூ.50 அளித்து வந்தார்...அவர் போகும்போது பாபாவும் நூறு அடி தூரம்வரை அவருடன் கூடச் செல்வாராம்...பாபாவிடம் அவருக்கிருந்த பிணைப்பு  அத்தகையது...ஆட்டை வெட்டும்படி பாபா அவரிடம் கேட்டபோது அவர் அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.. "எதற்கும் பயனின்றி அது ஏன் கொல்லப்படவேண்டும்..?" என்று அவர் கேட்டார்..பின்னர் பாபா ஷாமாவை அதனைக் கொல்லும்படி கேட்டுக்கொண்டார்.  ராதாகிருஷ்ணமாயீடம் சென்று கத்தி ஒன்றை அவளிடமிருந்து வாங்கிவந்து அதை பாபாவின் முன்னால் வைத்தார்... கத்தி எதற்காக வாங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்த ராதாகிருஷ்ணமாயீ அதைத் திருப்பி எடுத்துக்கொண்டாள்....

பின்னர் ஷாமா மற்றொரு கத்தியைப் பெறுவதற்காகச் சென்று உடனே திரும்பி வராமல் காகா சாஹேப் தீக்ஷித் வாதாவில் தங்கிவிட்டார்.  அப்போது காகா சாஹேப்பின் முறை வந்தது....அவர் 'நல்ல தங்கம்' தான் என்பதில் ஐயமில்லை என்றாலும் பரீட்சிக்கப்படவேண்டும். கத்தியை வாங்கி வந்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார். அவர் சாதேவின் வாதாவுக்குச் சென்று ஒரு கத்தியுடன் திரும்பிவந்தார். பாபா ஏவியதும் கொல்லுவதற்குத் தயாராக அவர் இருந்தார்.  தூய பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்குத் தமது வாழ்க்கையில் கொலையைப் பற்றியே தெரியாது...ஹிம்சைச் செயலுக்கு முற்றும் அவர் எதிரானபோதும் ஆட்டைக் கொல்வதற்குத் தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொண்டார்...   

முகம்மதியரான படேபாபா அதைக் கொல்வதற்கு விருப்பமற்றவராய் இருப்பதையும், இந்த தூய பிராமணர் அதைக் கொல்வதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருப்பதையும் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...  தன் வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு கையைக் கத்தியுடன் தூக்கிக்கொண்டு பாபாவின் முடிவான அனுமதிக் குறிப்புக்காக அவரைப் பார்த்தார்.  பாபா "என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய், உம்..! வெட்டு" என்றார்...பின்னர் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பகவான், "நிறுத்து, நீ எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்...!  பிராமணனாயிருந்துக் கொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார்.  காகா சாஹேப் கீழ்ப்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார்.  "அமிர்தத்தையொத்த தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும்.  எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது.  எப்போதும் தங்களையே நினைவு கூர்கின்றோம்.... தங்கள் ரூபத்தைத் தியானிக்கின்றோம்.... இரவும், பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகின்றோம்....  கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது அதை நாங்கள் கருதுவதில்லை...  நிகழ்வுகளுக்கான எந்தக்  காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை... ஆனால் குருவின் கட்டளைகளுக்கு ஐயுறாப் பற்றுடன் கீழ்ப்படிந்து உறுதிப்பாட்டுடன், ஒழுங்கான பணிவினக்கப் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்....பின்னர் பாபா, காகா சாஹேப்பிடம் தாமே பலியிடுதலையும், வெட்டும் வேலையையும் செய்துவிடுவதாகக் கூறினார்... பக்கீர்கள் அமரும் தகியா என்னும் இடத்தில் ஆட்டை வெட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.. பின்னர் ஆடு அவ்விடத்துக்குக் கொண்டுசெல்லப் படுகையில் வழியிலேயே இறந்து விழுந்தது.

🔥குருவின் கட்டளைகளை வேதவாக்காக எண்ணி பின்பற்றும் பக்தர்களை மூன்று வித நிலைகளில் ஹேமாட்பந்த் பிரிக்கின்றார்.. இதனைப் பற்றியக் குறிப்புரை இங்கே ...🔥

ஹேமத்பந்த் அடியவர்களைப் பாகுபடுத்துவதுடன் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்....மூன்று விதமானவர்கள் இருப்பதாக ஆசிரியர் ஹேமாட்பந்த்   கூறுகிறார்...

     (1)  முதல் தரமான பக்தர்கள்  சிறந்தவர்கள்

     (2)  இரண்டாம் தரமான பக்தர்கள்  நடுவானவர்கள்

     (3)  மூன்றாம் தரமான பக்தர்கள்       சாதாரணமானவர்கள்...

இதில் முதல் தரமானவர்கள் குரு என்ன விரும்புகிறார் என்பதை ஊகித்தறிந்து அதை உடனே நிறைவேற்றி அவர்களிடமிருந்து உத்தரவு வரும்வரை காத்திராமல் அவர்களுக்குச் சேவை செய்கிறார்கள்.....

இரண்டாம் தரமானவர்கள் தங்களது குருவின் கட்டளையை அட்சர சுத்தமாக சிறிதும் தாமதமின்றிக் கேட்டு  கீழ்ப்படிகின்றார்கள்..

மூன்றாம் தரமானவர்களோ குருவின் கட்டளையை நிறைவேற்றுதலை ஒத்திப்போட்டுக் கொண்டும், ஒவ்வொரு படியிலும் தவறு செய்துகொண்டும் இருக்கிறார்கள்... 

அறிவுக்கூர்மையைப் பின்னனியாகக்கொண்ட உறுதியான நம்பிக்கையையும், திடமான  விசுவாசத்தையும்  சீடர்கள் பெற்றிருக்க வேண்டும்... பொறுமையும், நம்பிக்கையும் இவைகளுடன் சேருமானால் ஆன்மீக இலட்சியம் தொலைவில் இல்லை...மூச்சுக் கட்டுப்பாடு (உள் மூச்சு - வெளி மூச்சு) அல்லது ஹடயோகம் அல்லது பிற கடினப் பயிற்ச்சிகள் தேவையே இல்லை...  மேலே குறிப்பிடப்பட்ட குணாதிசயங்களை அடியவர்கள் பெறுவார்களேயானால் இன்னும் அதிகமான உயரிய  செயல் திட்டங்களுக்கு பக்தர்கள்  தயாராகின்றார்கள்...அதன்  பின்னர் குருமார்கள் ஆன்மீக பாதையின் முழுநிறைவுக்கு அவர்களை வழிநடத்துகின்றார்கள்...அடுத்த அத்தியாயத்தில் நாம் பாபாவின் விறுவிறுப்பான நகைச்சுவையையும், தமாஷையும் காண்போம்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏   

ஸ்ரீ சாயீயைப்  பணிக ..அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்.. 🙏🙏🙏🙏🙏

செவ்வாய், ஜூன் 01, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்திரெண்டு (22)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபாபாவின் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🙏

🙏 அத்தியாயம்இ::- இருபத்திரெண்டு (22)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்பதாகும்.....சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

சீரடி சாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🔥

🔥குறிப்பு : ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்.....மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது.... 

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥

🙏அத்தியாயம்::- இருபத்திரெண்டு(22) 🙏

🙏 முன்னுரை..🙏

நம் சத்குருநாதர் சீரடி பகவானின் பேராற்றலை  எவ்வாறு உணர்ந்து,  தியானித்து வழிபடுவது என்பதைப் பற்றிய  மூல சூட்சம விளக்கவுரை...

சீரடி பகவானின் தோற்ற அமைப்பைப் பற்றிய  மூல சூட்சம விளக்கம்...

சீரடி பகவானின் இயல் வாழ்க்கையைப் பற்றிய குறிப்புரையும்,தன்னை நாடி வந்த பக்தர்களிடம் பகவான் தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டார் என்பதன் மூல  சூட்சம உரை...

பாலா சாஹேப் மிரீகர் பகவானை சந்திக்கும் போது, அவருக்கு பாபா  பாம்பைப் பற்றி அறிவுருத்திய விழிப்புணர்வு விளக்கவுரை...

பாபு சாஹேப் பூட்டியின் அனுபவ விளக்கவுரை...

அமீர் ஷக்கரின் சீரடி வருகையும்,பகவான் அமீர் ஷக்கரை எவ்வாறு வழிநடத்தினார் என்பதன் அனுபவ விளக்கவுரை...

ஹேமாட்பந்தின் வாழ்வில் தேளும் பாம்பினால் நடந்த நிகழ்வைப் பற்றிய அனுபவ விளக்கவுரை...

காகா சாஹேப் வாழ்வில் நடந்த நிகழ்வின் அனுபவ விளக்கம் ....

மேற்க்கண்ட தலைப்புகளின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக இங்கே கீழே  காண்போம்...

🔥நம் சத்குருநாதர், சீரடி பகவானின் பேராற்றலை  எவ்வாறு உணர்ந்து,  தியானித்து வழிபடுவது என்பதைப் பற்றிய  மூல சூட்சம விளக்கவுரையை இங்கு காண்போம்...🔥

கடவுள் மற்றும் சத்குருமார்களின்  தன்மையையோ, ரூபத்தையோ ஆழ்ந்தறிய யாராலும் இயலாது.  வேதங்களும், ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனும்கூட அதை முழுமையாக விவரிக்க இயலவில்லை எனலாம்...கடவுளின் ரூபத்தைத் தரிசிக்கவும், அறியவும் அடியவர்களால் மட்டுமே இயலும்...ஏனெனில் அவர்கள்  பாதங்களில் சரணாகதி அடைவது  மட்டுமே, மனித உயிரின்  மகிழ்ச்சிக்குரிய, வளர்ச்சிக்குரிய  ஒரே வழி என்பதை அவர்கள் அறிவார்கள்... வாழ்க்கையின் உச்ச உயர் இலட்சியத்தை அடைய சத்குருவின் பாதங்களைத் தியானிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறெவ்வித வழியும் தெரியாது.  ஹேமாட்பந்த் தியானத்திற்கும், பக்திக்கும் ஒரு எளிய வழியைப் பின்வருமாறு தெரியப்படுத்துகிறார்..

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகக் கழிவுறுவதைப் போன்றே சந்திரனின்  ஒளியும், அதே சரி நுட்ப அளவில் தேய்வடைகிறது... அமாவாசையன்று நாம் சந்திரனையே பார்க்கமுடிவதில்லை..  அதனது ஒளியையும் பெறுவது இல்லை..  எனவே வளர்பிறை நாட்கள் தொடங்கும்போது மக்கள் சந்திரனைக் காண்பதில் மிக்க ஆவலாக இருக்கிறார்கள். முதல்நாள் அது தெரிவதில்லை...இரண்டாம் நாளும்கூட அது தெளிவாகத் தெரிவதில்லை.. பின்னர் மரத்தின் இரண்டு கிளைகளுக்கு நடுவிலுள்ள திறப்பிலிருந்து அச்சந்திரனைப் பார்க்கும்படி மக்கள் கேட்கப்படுகிறார்கள்.... அவர்களும் ஆர்வத்துடனும், ஒரே கவனத்துடனும் நோக்கும்போது தூரத்திலுள்ள அவ்விளம்பிறை அவர்களின் காட்சி எல்லைக்கு எட்டுவதை அவர்கள் பேருவகையுடன் காண்கின்றார்கள்...இந்த வழிக்குறிப்பைத் தொடர்ந்தே நாம் பாபாவின் ஒளியைக் காண முயலுவோம்...

🔥சீரடி பகவானின் தோற்ற அமைப்பைப் பற்றிய  மூல சூட்சம விளக்கவுரையை  இங்கே காண்போம்...🔥

பாபாவின் தோற்ற அமைப்பைக் காணுங்கள்.  அது எவ்வளவு அருமையாக சாந்தமாக இருக்கிறது...!அவர் அட்டணக்கால் இட்டு அமர்ந்திருக்கிறார்.  வலதுகால் இடது முழங்கால் மேலும், இடது கையின் விரல்கள் வலது பாதத்திலும் படரப்பட்டு இருக்கின்றன... வலதுகால் பெருவிரலில் அவர்தம் இரண்டு கைவிரல்கள் ஆள்காட்டிவிரலும், நடுவிரலும் படர்ந்திருக்கின்றன..இத்தோற்ற அமைப்பால் பாபா குறிப்பிடுவதாகத் தோன்றுவதாவது, நீ எனது ஒளியைக் காண விரும்பினால் அஹங்காரமற்றவனாகவும்,மிகமிகப் பணிவுடனும் இருப்பாயாக... எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக..அதாவது சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றிடையே...அதன்பின் நீ எனது ஒளியைக் காண இயலும்.  இதுவே பக்தியை அடைய மிகமிக எளிய வழியாகும்..

🔥சீரடி பகவானின் இயல் வாழ்க்கையைப் பற்றிய குறிப்புரையும், தன்னை நாடி வந்த பக்தர்களிடம் பகவான் தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டார் என்பதன் மூல சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

சில கணங்கள் நாம் பாபாவின் வாழ்க்கையை உற்று நோக்குவோம்.பாபாவின் வாசத்தால் சீரடி ஒரு புண்ணிய ஷேத்திரமாக மாறியது.  எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் அங்கே கூடத் தொடங்கினார்கள்.  ஏழைகளும், பணக்காரர்களும் பேதமின்றி, ஒன்றுக்கு மேலிட்ட பல வகைகளால் ஏதோ ஒரு ரூபத்தில் நன்மையடையத் தொடங்கினார்கள்.  பாபாவின் எல்லையற்ற அன்பையும், அவரின் வியத்தகு இயற்கையான ஞானத்தையும், அவரின் சர்வவியாபகத் தன்மையையும் யார் விவரிக்க இயலும்!  இவைகளுள் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ யார் அனுபவிக்க வல்லரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

சில நேரங்களில் பாபா நீண்டநேரம் மௌனம் அனுஷ்டித்தார். அது ஒருவகையில் பிரம்மத்தைப் பற்றிய அவரின் நீண்ட விளக்கமாகும்.  மற்ற சிலநேரங்களில் தமது அடியவர்களால் சூழப்பட்டு உணர்ச்சிகளின் திரள், ஆனந்தம் இவைகளின் அவதாரமாகத் தோன்றினார்....சில நேரங்களில் அவர் உருவகக் கதைகளால் பேசி மக்களை நெறிப்படுத்தினார்.மற்ற சில நேரங்களில் தமாஷுக்கும், நகைச்சுவைக்கும் அதிக இடம் கொடுத்தார்..சில நேரங்களில் அவர் முழுவதும் ஐயமின்றியும், சில நேரங்களில் சீற்றம் கொண்டவர் போலும் தோன்றினார்..சில சமயங்களில் தமது நீதியை இரத்தினச் சுருக்கமாகச் கூறினார்... வேறுசில சந்தர்ப்பங்களில் அதைப் பற்றி நெடிய விவாதம் நடத்தினார்.. பல சமயங்களில் அவர் மிகவும் வெளிப்படையாக இருந்தார்... இவ்வாறாக சாட்சியாக எதிலும் பற்றாமல் தனித்து பகவான்,  பலருக்கும் வெவ்வேறு விதமான செயல்துறைக் கட்டளைகளை, அவரவர்களின் தேவைக்கேற்பவும், ஆத்ம பலத்திற்க்கேற்றவாறும்  அளித்தார்...எனவே அவர் வாழ்க்கையானது நம்முடைய அகங்கார அறிவால் அறிந்துகொள்ள இயலாதது...நமது மனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது... நமது புத்தி சாதுர்யத்தையும், மொழிகளையும் கடந்தது... அவரது முகத்தைப் பார்க்க, அவருடன் பேச, அவரது லீலைகளைக் கேட்க இருக்கும் நமது பேரார்வமானது திருப்தி செய்யப்படவேயில்லை என்றாலும், நாம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறோம்...மழையின் துளிகளை நாம் எண்ணிவிடலாம்... காற்றைத் தோல் பையினுள் அடைத்துவிடலாம்...ஆனால் சீரடி பகவான்  லீலைகளை யாரால்  அளக்கமுடியும்...!அவைகளில் ஒரு பண்புக்கூற்றினைப் பற்றி இங்கே நாம் காண்போம்..

🔥பாலா சாஹேப் மிரீகர் என்பவர்  பகவானை சந்திக்கும் போது, அவருக்கு பாபா பாம்பைப் பற்றி அறிவுருத்திய விழிப்புணர்வு விளக்கவுரைப் பற்றி இங்கு காண்போம்...🔥

சீரடி பகவான் மிகுந்த  தாய்மையுணர்வுடன் பக்தர்களுடைய பேராபத்துக்களை உற்றுநோக்கி, உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்து பெரிய ஆபத்திலிருந்து மீட்டார் என்பதைப் பற்றி  இங்கே காண்போம்.. பாலா சாஹேப் மிரீகர் கோபர்காவனில் மம்லதாரான பாலா சாஹேப் மிரீகர் (சர்தார் காகா சாஹேப் மிரீகர் என்பவரின் மகன்) சிதலீக்குச் சுற்றுப் பயணமாகச் சென்றுகொண்டிருந்தார்.வழியில் அவர் சீரடிக்கு சாயீபாபாவை தரிசிக்க வருகைப்புரிந்தார்...மசூதிக்குச்சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்து பணிந்ததும், உடல்நலம் மற்றும் வேறு விஷயங்கள் பற்றிய வழக்கமான உரையாடல் துவங்கியது...பாபா எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை விடுத்தார்.  "உங்களுக்கு நம்முடைய துவாரகாமாயீயைத் தெரியுமா...? "பாலா சாஹேபுக்கு இது புரியாததால் அவர் அமைதியாக இருந்தார். 

பாபா தொடர்ந்து, "நீங்கள் அமர்ந்துக் கொண்டிருக்கும் இதுவே நமது துவாரகாமாயீ... தனது மடியில் அமரும் குழந்தைகளின் எல்லா ஆபத்துக்களையும், கவலைகளையும் அவள் தடுத்து விலக்குகிறாள்... இந்த மசூதி மாயீ (அடக்கி ஆட்சி செய்யும் இதன் அம்பிகை) மிகவும் கருணையுள்ளவள்..இவள் எளிய பக்தர்களின் தாயாவாள்...அவர்களைப் பேராபத்துக்களிளிருந்து துவாரகாமாயீ  பாதுகாக்கிறாள்...ஒரு மனிதன் அவளது மடியில் ஒருமுறை அமர்ந்தால் அவனது எல்லாக் கஷ்டங்களும் முடிவடைந்துவிடும்... அவளது நிழலில் இளைப்பாறுவோர் பேரானந்தம் எய்துகின்றனர்" என்றார்..... 

பின்னர் பாபா அவருக்கு உதியை அளித்து தமது பாதுகாக்கின்ற கரங்களை அவர் தலையில் வைத்தார். பாலா சாஹேப் புறப்படப்போகும் அத்தருணத்தில், "உங்களுக்கு லம்பா பாபாவைத் தெரியுமா? (நீண்ட பெருந்தகை) அதாவது பாம்பை...?" என்றார்.  பின்னர் இடது கை முட்டியை மூடிக்கொண்டு வந்து தமது இடது புஜத்தை பாம்பின் படம் போன்று ஆட்டிக்கொண்டு  அவர் "அவன் எவ்வளவு பயங்கரமானவன், ஆனால் துவாரகாமாயீயின் குழந்தைகளை அவன் என்ன செய்யமுடியும்... துவாரகாமாயீயானவள் பாதுகாக்கும் போது பாம்பு என்ன செய்யமுடியம்" என்று கூறினார்... இவையனைத்திற்கும் பொருள், மிரீகருக்கும்  அதுபற்றிய சுட்டுக்குறியீடு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அங்கு பிரசன்னமாயிருந்த அனைவரும் ஆவலாய் இருந்தனர்...ஆனால் ஒருவருக்கும் இதைப்பற்றி பாபாவிடம் கேட்கத் துணிவு இல்லை.... பின்னர் பாலா சாஹேப், பாபாவை வணங்கிவிட்டு ஷாமாவுடன் மசூதியை விட்டுப் புறப்பட்டார்.  பாபா, ஷாமாவைத் திரும்ப அழைத்து பாலா சாஹேபுடன் கூடச் செல்லும்படியும் சிதலீ சுற்றுலாவை மகிழ்ந்தனுபவிக்கும்படியும் கூறினார்... ஷாமா பாலா சாஹேப்பிடம் வந்து பாபாவின் விருப்பப்படி தாமும் அவருடன் வருவதாகக் கூறினார்...அது அசௌகரியமாய் இருக்குமாதலால் அவர் வரவேண்டியதில்லை என்று பாலா சாஹேப் கூறினார்...ஷாமா பாபாவிடம் திரும்பிவந்து, பாலா சாஹேப் தம்மிடம் கூறியதைத் தெரிவித்தார்.  அப்போது பாபா, "நன்று, போகாதே, நாம் நல்லவற்றையே செய்யவேண்டும்.  எதுதானென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே நிச்சயம் நடந்தேறும்" என்று கூறினார்....  

இதற்கிடையில் பாலா சாஹேப் இதைப்பற்றி மீண்டும் சிந்தித்து ஷாமாவைக் கூப்பிட்டுத் தன்னுடன் வரக்கூறினார். பின்னர் ஷாமா மீண்டும் பாபாவிடம் சென்று, அவரிடம் விடை பெற்றுக்கொண்டு பாலா சாஹேப்புடன் ஒரு குதிரை வண்டியில் புறப்பட்டார்.  அவர்கள் சிதலீக்கு இரவு ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.மாருதி கோவிலில் தங்கினார்கள். அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வரவில்லை.. ஆதலால்  அவர்கள் கோவிலிலேயே பேசிக்கொண்டும், அரட்டையடித்துகொண்டும் அமர்ந்திருந்தனர்....

பாலா சாஹேப், பாயின் மீது அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.  அவரது மேல் வேட்டி இடுப்பின்மீது போடப்பட்டிருந்தது.  அதன் ஒரு பகுதியில் ஒரு பாம்பு கவனிக்கபடாமல் அமர்ந்து கொண்டிருந்தது...அது ஒரு சலசல சத்தத்துடன் நகர்ந்தது பியூனுக்குக் கேட்டது...அவன் ஒரு விளக்கு கொண்டுவந்து பாம்பைப் பார்த்துவிட்டு "பாம்பு... பாம்பு...!" என்று அபாயக்குரல் எழுப்பினான்...பாலா சாஹேப் திகலடைந்து நடுங்கத் தொடங்கினார்.  ஷாமாவும் திகைத்தார்.  பின்னர் அவரும் மற்றவர்களும் சந்தடி செய்யாமல் தடிகளையும், குச்சிகளையும் எடுத்து வந்தனர்.. பாம்பு மெதுவாக இடுப்பைவிட்டுக் கீழிறங்கி பாலா சாஹேபை விட்டு அப்பால் செல்லத் தொடங்கியது..அது உடனே கொல்லப்பட்டது...  இவ்விதமாக பாபாவின் தீர்க்க தரிசனத்தால் அறிவித்திருந்த பேராபத்து தடுக்கப்பட்டது... பாலா சாஹேப்புக்கு பாபாவிடமுள்ள அன்பு மிகவும் ஆழமாக உறுதிப்படுத்தப்பட்டது....

🔥பாபு சாஹேப் பூட்டியின் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

நானா சாஹேப் டேங்க்லே என்னும் பெரிய ஜோசியர் ஒருவர், அப்போது சீரடியிலிருந்த பாபு சாஹேப் பூட்டியிடம் ஒருநாள், "இந்நாள் தங்களுக்கு ஒரு அமங்கலமான நாள், தங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது" என்று கூறினார்... இது பாபு சாஹேப்பை இருப்புக்கொள்ளாமல் செய்தது...அவர் வழக்கம்போல் மசூதிக்கு வந்தபோது பாபா, பாபு சாஹேப்பிடம், "இந்த நானா என்ன கூறுகிறார்... அவர் உமக்கு மரணநேருமென்று ஜோசியம் கூறுகிறார்.  நன்று.., நீங்கள் பயப்பட வேண்டியதில்லை...அவரிடம் தைரியத்துடன் சொல்லுங்கள், எங்ஙனம் மரணம்  நேருகின்றது  என்பதைக் காண்போம் என்று கூறுங்கள்" என்று கூறினார்...பாபு சாஹேப் பிறகு மாலை நேரத்தில் இயற்கைக் கடன்களைச் செய்து முடிப்பதற்காகத் தனியிடத்திற்குச் சென்றார்... அங்கு ஒரு பாம்பைக் கண்டார்.  அவரது சேவகன் அதைக் கண்டு அதை அடிப்பதற்காக ஒரு கல்லை எடுத்தான்.. பாபு சாஹேப் ஒரு பெரிய தடியை எடுத்து வரும்படி கூறினார்....  வேலையாள் தடியுடன் வரும் முன்பே பாம்பு நகர்ந்து சென்று எங்கோ மறைந்துவிட்டது.  பாபாவின், "அஞ்ச வேண்டாம்..!" என்ற மொழிகளை பாபு சாஹேப் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்....

🔥அமீர் ஷக்கரின் சீரடி வருகையும்,பகவான் அமீர் ஷக்கரை எவ்வாறு வழி நடத்தினார் என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்... 🔥

அமீர் ஷக்கரின் சொந்த ஊர் கொபர்காவன் தாலுக்காவைச் சேர்ந்த கொரலா என்னும் கிராமமாகும்...இவர் இறைச்சி விற்கும் ஜாதியைச் சேர்ந்தவர்.  இவர் பாந்த்ராவில் கமிஷன் ஏஜண்டாக வேலை பார்த்தார்.அங்கு மிகவும் பிரசித்தமானவர்.அவர் ஒருமுறை கீழ்வாதத்தால் கஷ்டப்பட்டார்...அது அவருக்கு மிகுந்த கவலையை அளித்தது...அப்போது ஷக்கர் கடவுளை நினைவுகூர்ந்தார்...தனது தொழிலை விட்டுவிட்டு சீரடிக்கு வந்து தனது பிணியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பாபாவை வேண்டிக்கொண்டார்...பாபா அவருக்கு சாவடியில் தங்க இடம் அமர்த்திக் கொடுத்தார்...சாவடி ஈரம் நிரம்பியதாகவும், சுகாதாரமற்ற இடமாகவும், அத்தகைய நோயாளி தங்குவதற்கு ஏற்றதாய் இல்லாமலும் இருந்தது. கிராமத்திலுள்ள மற்ற எந்த இடமும் அல்லது கொரலா கிராமமே கூட அவர் தங்குவதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும்...ஆனால் பாபாவின் மொழிகளே இதைத் தீர்மானிக்கின்ற காரணக்கூறும், ஸ்ரேஷ்டமான மருந்துமாகும்.. பாபா அவரை மசூதிக்கு வர அனுமதிக்கவில்லை...ஆனால் சாவடியிலேயே நிலைநிறுத்தித் தங்கவைத்தார்..அங்கே அவருக்குப் பெரும் நன்மை விளைந்தது..பாபா சாவடி வழியாக ஒவ்வொருநாள் காலையும், மாலையும் கடந்து சென்றார். ஒருநாள் விட்டு ஒருநாள் ஊர்வலமாகச் சென்று அங்கு துயின்றார்... எனவே அமீர், பாபாவின் தொடர்பை மிகவும் எளிதாக அடுத்தடுத்துப் பெற்றார்.....

அமீர் ஒன்பது மாதங்கள் முழுமையாகத் தங்கியிருந்தார்.  பின்னர் எப்படியோ அவ்விடத்தில் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.. எனவே ஒருநாள் ஒருவரும் அறியாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றார். கோபர்காவனுக்கு  வந்து அங்கு தர்மசாலையில் தங்கினார்....அப்போது முதியவருமான பக்கிரி ஒருவர்  இறந்துக் கொண்டிருக்கும் தருவாயில்  அவரிடம் தண்ணீர் கேட்டார்...அமீர் அதைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்...அவர் அதை அருந்திய உடனேயே மரணம் அடைந்தார்.. அமீர் இக்கட்டான நிலையை அடைந்தார்... அவர் சென்று அதிகாரிகளிடம் இதுபற்றித் தெரிவிப்பாரேயாகில், அமீர் ஷக்கரே  முதல் தகவல் அளித்தவராதலாலும், தகவலும் அவருடையது மட்டுமேயானதாலும் அதுகுறித்து அவர் சிறிதளவாவது அறிந்திருப்பதனாலும் அவரே மரணத்துக்குப் பொறுப்பாக்கப்படுவார் என்று அமீர் நினைத்தார்...பாபாவிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் சீரடியை விட்டு வந்ததைப்பற்றி தமது செய்கைக்காக வருந்தி  பாபாவை வேண்டிக்கொண்டார்.  அவர் பின்னர் சீரடிக்குத் திரும்பத் தீர்மானித்தார்....

அதே இரவு வழிநெடுகிலும்  பாபாவின் பெயரை நினைவு கூர்ந்துக்கொண்டும், உச்சரித்துக் கொண்டும் பொழுது விடிவதற்குள் சீரடிக்குத் திரும்ப ஓடி வந்துவிட்டார்...கவலையிலிருந்து விடுபட்டவரானார்...பாபாவின் பரிபூரண விருப்பத்திற்கும் ஆணைகளுக்குமிணங்க சாவடியிலேயே தங்கியிருந்தார்.பாபாவால்  குணப்படுத்தவும்பட்டார்...ஒருநாள் நள்ளிரவு பாபா, "ஓ...! அப்துல், ஏதோ ஒரு பிசாசு ஜந்து என் படுக்கையின் பக்கங்களில் மோதிக்கொண்டு இருக்கிறது" என்று கூறினார்....அப்துல் விளக்குடன் வந்தான்...பாபாவின் படுக்கையைச் சோதித்தான்...ஆனால் அவன் ஒன்றையும் காணவில்லை.  பாபா அவனை எல்லா இடங்களையும் கவனத்துடன் பார்க்கும்படி கூறி தமது சட்காவைத் தரையை நோக்கி அடிக்கத் தொடங்கினார்...இந்த லீலையைக் கண்டு ஏதாவது பாம்பு அங்கே வந்திருப்பதாக பாபா சந்தேகப்பட்டிருக்க வேண்டுமென்று அமீர் நினைத்தார்...நீண்ட நாள் பழக்கத்தின் காரணமாக பாபாவின் மொழிகளுக்கும் செயல்களுக்கும் அமீர் பொருள் தெரிந்துக் கொள்ள வல்லவராயிருந்தார்...பாபா அமீரின் மெத்தைக்கு அருகில் ஏதோ அசைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்....அப்துல்லை விளக்கைக் கொணரும்படி கூறினார்...அவன் அதைக் கொணர்ந்ததும் அங்கு ஒரு பாம்பு தன் தலையை மேலும், கீழும் அசைத்துக்கொண்டு, சுருட்டிக்கொண்டு கிடப்பதைக் கண்டான்... அதன் பின்னர் பாம்பு உடனே அடித்துக் கொல்லப்பட்டது.  இவ்வாறாக பாபா குறித்த நேரத்தில் எச்சரிக்கை கொடுத்து அமீரைக் காப்பாற்றினார்... 

🔥ஹேமாட்பந்த் வாழ்வில் நடந்த தேளும் பாம்பினால் நடந்த நிகழ்வைப் பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

பாபாவின் பரிந்துரையின் பேரில் காகா சாஹேப் தீஷித் தினந்தோறும் ஏக்நாத் மஹராஜின் இரண்டு நூல்களைப் பாராயணம் செய்துவந்தார்.அதாவது பாகவதமும், பாவார்த்த ராமாயணமுமாகும். அவைகள் பாராயணம் செய்யப்படும்போது கேட்டுக் கொண்டிருந்த நல்லதிஷ்டம் பெற்ற மக்களில் ஹேமாட்பந்தும் ஒருவராவார்....தமது தாயாரின் அறிவுரையின் படி அனுமன் ராமரின் பெருமையைச் சோதிக்கும் கட்டம் படிக்கப்பட்டபோது அனைவரும் மந்திரத்திற்க்கு கட்டுப்பட்டவர்கள் போன்று கேட்பதில் மூழ்கியிருந்தனர்....

ஹேமாட்பந்தும் அவர்களுள் ஒருவர்...அப்போது ஒரு பெரிய தேள் (அது எங்கிருந்து வந்ததென்று யாரும் அறியவில்லை) ஹேமாட்பந்தின் வலது தோள் மீதிருந்த துண்டின்மீது தாவியது.  முதலில் அது கவனிக்கப்படவில்லை...ஆனால் கடவுள் தமது கதைகளை ஆர்வத்துடன் கேட்பவர்களைப் பாதுகாக்கிறார்.எனவே ஹேமாட்பந்த் தற்செயலாகத் திரும்பியபோது பெரிய தேளைத் தோள்மீது கண்டார்....அது மரண அமைதியுடன் இருந்தது.  இப்பக்கமோ, அப்பக்கமோ சிறிதும் அசையவில்லை...  அதுவும் பாராயணத்தைக் கேட்டு மகிழ்வது போன்றே தோன்றியது..பின்னர் ஹேமாட்பந்த் கடவுளருளால், அவையோரைத் தொந்தரவு செய்யாமல் வேட்டியின் இரு முனைகளையும் எடுத்துத் தேளை உள்ளே மடித்துக்கொண்டார். பின்னர் வெளியேச் சென்று அதைத் தோட்டத்தில் எறிந்தார்....

🔥காகா சாஹேப் வாழ்வில் நடந்த நிகழ்வின் அனுபவ விளக்கத்தைப் பற்றி இங்கு காண்போம்...🔥

மற்றுமொறு சந்தப்பத்தின்போது ஒருநாள் சிலர் காகா சாஹேப் வாதாவின் மாடியில் அந்தி சாய்வதற்குச் சிறிதே முன்பாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தனர்.அப்போது ஒரு பாம்பு ஜன்னல் நிலையிலுள்ள துவாரத்தின் வழியாக ஊர்ந்து வந்து சுருட்டிக்கொண்டு அமர்ந்தது.. விளக்கு ஒன்று கொண்டுவரப்பட்டது.  முதலில் அது மிரட்சி அடைந்தபோதும் அமைதியாக அமர்ந்து தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்தது..பின்னர் பலர் கம்புகளுடனும், தடிகளுடனும் ஓடி வந்தனர்....அது ஒரு இடக்குமுடக்கான இடத்தில் அமர்ந்துகொண்டு இருந்தமையால், ஒரு அடியும் அதன்மீது படவில்லை.  மனிதர்களின் சப்தங்களைக் கேட்டு பாம்பு தான் வந்த துவாரம் வழியாகவே விரைவாகத் திருபிச் சென்றுவிட்டது.பின்னர் அங்கிருந்த அனைவரும் கவலையை விடுத்தனர்.....   

முக்தாரம் என்ற ஒரு பக்தர் அந்த வாயில்லா ஜீவன் தப்பிச்சென்றது நல்லது என்று கூறினார். ஹேமாட்பந்த் பாம்புகள் கொல்லப்படவே வேண்டும் என்று அவருக்குச் சவால் விட்டார்.  முன்னவர் பாம்பு போன்ற ஜந்துக்கள் கொல்லப்படக் கூடாதென்றும், பின்னவர் கொல்லப்பட வேண்டும் என்றும் இருவருக்குமிடையே சூடான விவாதம் நடந்தது.  இரவு வந்ததும் விவாதம் எவ்வித முடிவுமின்றி முடிவடைந்தது.  மறுநாள் இது பாபாவிடம் தெரிவிக்கப்பட்டது....

பாபா தமது தீர்க்கமான கருத்தைப் பின்வருமாறு தெரிவித்தார்.  தேளானாலும், பாம்பானாலும் கடவுள் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் வசிக்கின்றார்...அவரே இவ்வுலகில் மிகப்பெரிய பொம்மலாட்டக்காரர். அனைத்து ஜீவராசிகளும் (பாம்பும், தேளும்) அவரின் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றன...அவர் நினைத்தாலொழிய யாரும், எதுவும் பிறருக்குத் தீங்கு செய்துவிட முடியாது.  உலகம் அவரையே முழுவதும் சார்ந்திருக்கின்றது....எவருமோ, எதுவுமோ சுதந்திரமானவர்களல்ல.. எனவே நாம் கருணைகூர்ந்து மற்ற அனைத்து  ஜீவராசிகளையும் நேசிக்கவேண்டும். துணிச்சல், வீரமுள்ள கொலைகளையும், சண்டைகளையும் விடுத்துப் பொறுமையாய் இருக்கவேண்டும்.  கடவுளே அனைவரின் பாதுகாப்பாளர்....

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏🏻  

ஸ்ரீ சாயீயைப் பணிக..அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்...🙏🙏🙏🙏

https://youtu.be/_NPu__uvq_g


திங்கள், மே 31, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்தொன்று (21)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏 அத்தியாயம் ::-இருபத்தொன்று (21) 

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்....சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே  ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🔥

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்.....

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥

🙏 அத்தியாயம் ::-இருபத்தொன்று (21)🙏

🙏🙏முன்னுரை..🙏🙏

சீரடி பகவானுடைய ஆசியை முழுமையாகப் பெற்றவரும் , ஶ்ரீசாய் சத்சரித்திரத்தின் ஆசிரியருமான ஹேமாட்பந்த் அவர்கள், தன்னுடைய சத்குருவின்  ஆசியால் பெற்ற  நன்மைகளைப் பற்றிக் கூறிய அனுபவ விளக்கவுரை..

பகவானின் பக்தர்களான திரு. விநாயக் ஹரிச்சந்திர டாகூர்,  புனேவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர், பண்டரீபுரத்து வக்கீல் ஆகியோரின்  கதைகளைப் பற்றி சாய் சத்சரித்திர நூலாசிரியர்  ஹேமாட்பந்தின் விளக்கவுரைகள்....

குறிப்பு....மேற்க்கண்ட பக்தர்களின்  கதைகள் அனைத்தும்  நிறைந்த சுவையானவை... ஆழமானவை.. அவைகளை மிகுந்த கவனத்துடன் கற்றுக் கிரகித்துக் கொண்டால் பக்தர்களை  அது ஆன்மீகப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக கீழே காண்போம்....

🔥முதலில்  சீரடி பகவானுடைய ஆசியை முழுமையாகப் பெற்றவரும் , ஶ்ரீசாய் சத்சரித்திரத்தின் ஆசிரியருமான ஹேமாட்பந்த் அவர்கள்,தன்னுடைய சத்குருவின்  ஆசியால் பெற்ற நன்மைகளைப் பற்றிக் கூறிய  அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

முற்பிறவிகளில் சேகரித்த நல்வினைகள் என்ற ரூபத்தில் உள்ள  நல் அதிஷ்டமே,  மகான்களின்  கூட்டுறவை நாம் விரைவில்  பெறுவதற்கு அடிநாதமா வழியாக  இருக்கின்றது....இந்த சத்குரு  என்கின்ற பிணைப்பினால்  மட்டுமே, தனிமனித  உயிர்கள்  எளிதாக கடைத்தேற்றம் அடைய முடியும்  என்பது  பொதுவான நியதியாகும்.  இந்நியதியின் விளக்கமாக ஹேமாட்பந்த் தமது சொந்த நிகழ்ச்சியை எடுத்துக் காண்பிக்கின்றார்.  பம்பாயின் புறநகர்ப்பகுதியான பாந்த்ராவில் பல ஆண்டுகளாக அவர் ரெஸிடெண்ட் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார்....  

பீர் மௌலானா என்னும் பெயருடைய புகழ்பெற்ற முகம்மதிய முனிவர் ஒருவர் அங்கு வசித்து வந்தார்...  பல இந்துக்கள், பார்சியர்கள், மற்றும் பல மதத்தினரும் அவரிடம் சென்று தரிசனம் பெறுவது வழக்கம்... இனூஸ் என்ற பெயர்கொண்ட  முஜாவர்(பூசாரி) என்பவர்  இரவும், பகலும் பலமுறை முகம்மதிய முனிவரைச்  சென்று தரிசிக்கும்படி ஹேமாட்பந்தை வற்புறுத்தி வந்தார்...ஆனால் என்ன காரணத்தாலோ ஹேமாட்பந்தால்  பீர் மௌலானா என்ற பெயரைக்  கொண்ட முனிவரைத்  தரிசிக்க முடியவில்லை.  பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய முறை வந்தது.  சீரடிக்கு ஹேமாட்பந்த்  அழைக்கப்பட்டார்...  அவர் அங்கேயே சாயீபாபாவின் தர்பாரில் நிரந்தரமாகச் சேர்க்கப்பட்டார்...  துரதிஷ்டம் உள்ளவர்கள், முனிவர்களின் தொடர்பை இப்படிப் பெறுவதில்லை.  அதிஷ்டசாலிகள் மட்டுமே அதைப் பெறுகின்றார்கள்...நினைவுக்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே இவ்வுலகில் மகான்களுக்கு  ஆசிரமங்கள் இருந்து வருகின்றன..பல முனிவர்கள், மகான்கள்  வெவ்வேறு இடங்களில் தம்மைத் தாமே ஆசிரமம்  தோற்றுவித்துக் கொண்டு, தங்களுக்காக ஒதுக்கபட்ட பணித்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.  வெவ்வேறு இடங்களில் செயலாற்றியபோதும் அவர்கள் அனைவரும் ஒருவரேயாவர்...மூலம் ஒன்று தானே...  அனைத்தும் வல்ல பரம்பொருள் என்கின்ற பொதுவான ஆணையுரிமையின் கீழ் அவர்கள் அனைவரும் ஒத்தியையுடன் செயல்படுகின்றார்கள்....  அவர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் தத்தம் இடங்களில் என்ன செய்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது நன்றாகவே தெரியும்..தேவைகள் ஏற்படும்போது பிறிதொருவரின் வேலையை நிறைவு செய்கின்றார்கள்...இதை விளக்கும்  நிகழ்ச்சிகளைப்  பற்றிப் பார்ப்போம் இங்கே... 

🔥பகவானின்  பக்தர்களான திரு. விநாயக் ஹரிச்சந்திர டாகூர்,  புனேவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர், பண்டரீபுரத்து வக்கீல் ஆகியோரின்  கதைகளைப் பற்றி சத்சரித்திர நூலாசிரியர்  ஹேமாட்பந்தின் விளக்க உரைகளைப்  பற்றி இங்கு காண்போம்...🔥

🔥முதலில் திரு.விநாயக் ஹரிச்சந்திர  டாகூர் பற்றிய அனுபவ  உரையைப் பற்றி இங்கு காண்போம்.....🔥

V.H.டாகூர் B.A., என்பவர் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக வேலை செய்தார். அவர் ஒருமுறை ஒரு சர்வே குழுவினருடன்  பெல்காமுக்கு (தெற்கு மஹாராஷ்டிரம்) அருகிலுள்ள வட்காவனுக்கு சென்றுள்ளார்.. அங்கு அவர் கன்னட முனிவர் ஒருவரை தரிசித்து  அவர் முன் வணக்கம் செலுத்தினார்...  நிச்சலதாஸின் 'விசார சாகரம்' என்ற நூலின் (வேதாந்தத்தைப் பற்றிய இயல் மதிப்பார்ந்த இலக்கியப் படைப்பு)  ஒரு பகுதியை அவையோரின் முன் எடுத்து விளக்கிக் கொண்டிருந்தார்...டாகூர் புறப்படுவதற்காக முனிவரிடம் விடை பெறும்போது அவர், "நீ இந்தப் புத்தகத்தைக் கற்கவேண்டும்...அங்ஙனம் செய்வாயாகில் உனது விருப்பங்கள் நிறைவேற்றப்படும்... எதிர்காலத்தில் உமது அலுவலகக் கடமைகளின் நிமித்தமாக நீ வடக்கே செல்லும்போது உமது நல் அதிஷ்டத்தினால் ஒரு பெரிய  மகானைக்  காண்பாய்....அவர் உனக்கு எதிர் காலத்திற்குரிய வழியைக் காண்பிப்பார்.  உனது மனதுக்கு ஓய்வுகொடுத்து உன்னை மகிழச் செய்வார்" என்று கூறினார்...பின்னர் அவர் ஜுன்னருக்கு மாற்றப்பட்டார்..  நாணேகாட் என்ற  நாணே மலைத்தொடரை அவர் கடந்து செல்ல வேண்டியதாய் இருந்தது... மலைத்தொடர் மிகவும் செங்குத்தாகவும், கடப்பதற்கு இயலாததாகவும் இருந்தது.  அதனைக் கடக்க ஒரு எருமை மாட்டைத் தவிர வேறு எவ்விதப் போக்குவரத்து வசதியும் இல்லை.. எனவே மலைத்தொடரின் மீது செல்வதற்கு அவர் எருமையின் மீது சவாரி செய்யவேண்டியதாயிற்று.  அது அவரை மிகுந்த அசௌகரியத்திற்கும், வலிக்கும்  உட்படுத்தியது...  

பின்னர் அவர் கல்யாணுக்கு உயர்ந்த பதவியில் மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு நானா சாஹேப் சாந்தோர்கரின் பழக்கம் ஏற்பட்டது.... சாயீபாபாவைப் பற்றி அவரிடமிருந்து நிரம்பக் கேள்விப்பட்டிருந்தார்...அவரைப் பார்க்க விரும்பினார். அடுத்தநாள் நானா சாஹேப் சீரடிக்குச் செல்வதாக இருந்தார், போகும்போது டாகூரையும் தன்னுடன் கூட வரும்படி அழைப்பு  விடுத்தார்...  டாகூரால் அவருடன் செல்ல இயலவில்லை.. ஏனெனில், ஒரு சிவில் வழக்கு விஷயமாக அவர், தாணே சிவில் கோட்டில் ஆஜராக வேண்டியிருந்தது.. எனவே, நானா சாஹேப் தனியாகச் சீரடிக்குச் சென்றார்...டாகூர் தாணேவுக்குச் சென்றார்... அனால், அங்கு விசாரணை ஒத்திப் போடப்பட்டது...  பின்னர், அவர் தாம் நானா சாஹேப்புடன் செல்லாததற்கு வருத்தப்பட்டார்.. எனினும் அவர் சீரடிக்குச் சென்றார்.  அங்கு சென்றபோது அதற்கு முதல் தினமே நானா சாஹேப் சீரடியை விட்டுச் சென்றதாக அறிந்தார்...அவ்விடத்தில் சந்தித்த அவருடைய மற்ற நண்பர்கள் டாகூரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்கள். டாகூர்  பாபாவைத் தரிசித்து அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.  அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார்...அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது..டாகூரின்  உடம்பு புல்லரித்தது...சிறிது நேரத்திற்குப் பின்னர் எங்கும் நிறை பேரறிவாளராகிய பாபா அவரைநோக்கி, "இவ்விடத்தினுடைய வழியானது கன்னடதேச முனிவரான அப்பாவின் உபதேசங்களைப் போன்றோ, நாணேகாட்டின் எருமைச் சவாரியைப் போன்றோ அவ்வளவு எளிதானதன்று...இது ஆத்மீக வழியாக இருக்கின்றது ..மேலும்  இவ்வழி மிகவும் கடினமானது.

ஆகையால் நீர் மிகச்சிறந்த முயற்சியைக் கைக்கொள்ளுதல் அவசியமாகும்" என்று கூறினார்... தாம் மட்டுமே அறிந்த இத்தகைய உட்கருத்து வளஞ்செறிந்த அடையாளங்களையும், சொற்களையும் கேட்டு டாகூர் ஆனந்தக் களிப்பில் மூழ்கினார்... கன்னடதேச முனிவரின் கூற்று உண்மையானதைத் தெரிந்துகொண்டார்.  பின்னர் அவர் தனது இருகரங்களையும் கூப்பி வணங்கித் தனது சிரத்தை  பகவானின் பாதங்களில் வைத்து,  தாம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று வேண்டினார்.  பின்னர் பாபா கூறினார், " கன்னட அப்பா உன்னிடம் சொன்னது சரியானதே.  ஆனால், இவைகள் பயிலப்பட்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்... வெறும் கல்வியினால் பயனேதும் இல்லை... நீங்கள் சிந்தித்து, கற்றபடி நெறியில் நிற்றல் வேண்டும்.. இல்லாவிடில் அவைகளால் ஒரு பலனும் இல்லை... குருவின் அனுக்கிரஹமின்மையும், ஆத்மானுபூதியின்றியும் உள்ள வெறும் ஏட்டுப் படிப்பால் பயனில்லை".  விசார சாகரம் என்ற நூலின் கோட்பாட்டியல் பகுதி டாகூரினால் படிக்கப்பட்டு வந்தது.  ஆனால் சீரடியில் அவருக்கு நடைமுறையிலான வழி காண்பிக்கப்பட்டது...பின்னால் கொடுக்கப்பட்ட்ட மற்றொரு நிகழ்ச்சியும், இவ்வுண்மையை இன்னும் அதிக வன்மையுடன் வெளிக்கொணர்கிறது...

🔥 பகவானின் பக்தரான அனந்தராவ் பாடண்கர் என்பவர்  பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

புனேவைச் சேர்ந்த  அனந்தராவ் பாடண்கர் என்ற பக்தர்  ஒருவர் பாபாவைக் காண விரும்பினார்...அவர் சீரடிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்... அவரது அனைத்து ஆவல்களும் நிறைவேறியப் பாடண்கர் மிகவும் ஆனந்தமடைந்தார்...  பாபாவின் பாதங்களில் வீழ்ந்து  உரிய வழிபாட்டை நிகழ்த்தியபின்பு, பாபாவிடம் "நான் ஏராளமான நூல்களைப்  படித்திருக்கின்றேன்...வேதங்கள், வேதாந்தங்கள், உபநிஷதங்கள் இவைகளைப் பயின்றும், புராணங்களைக் கேட்டும் இருக்கிறேன்...ஆனால்  எனக்கு மன அமைதி ஏற்படவில்லை...எனவே, எனது கல்வியறிவு யாவும் பயனற்றவை என நினைக்கின்றேன்.. எளிய, ஒன்றும் அறியாத பக்தியுள்ள மக்கள் என்னைவிடச் சிறந்தவர்கள்...மனம் அடங்கினாலன்றி எந்த நூலறிவும் பயனில்லை....  தாங்கள்  அனைவரையும்  உற்று  நோக்கி, விளையாட்டான உபதேச  மொழிகளால், தாங்கள் எளிதாக எவ்வளவோ மக்களுக்கு மனச்சாந்தி வழங்குகின்றீர்கள் என்று நான் பலரிடம் இருந்து கேட்டிருக்கின்றேன்... எனவே, நான் இங்கே வந்திருக்கின்றேன்.. தயவுசெய்து என்மேல் இரக்கம் காண்பித்து, என்னை ஆசீர்வதியுங்கள்" என்று கூறினார்...

இதற்கு பாபா அவருக்கு ஒரு உருவகக் கதையைக் கூறுகின்றார்....ஒன்பது லத்தி உருண்டைகளின் கதை..  ஒன்பது நவவித பக்தியைத் தான் லத்தி உருண்டைகளாக உவமானத்தோடு கூறுகின்றார் பாபா...      

ஒருமுறை ஒரு வணிகன் இவ்விடம் வந்தான்.  அவன் முன்னால் ஒரு குதிரை லத்தி (சாணம்) இட்டது.  (ஒன்பது உருண்டை லத்தி) வணிகன் மனமார்ந்த அக்கறையுடன் தனது வேட்டியின் முனையை விரித்து அந்த ஒன்பது உருண்டைகளையும் அதில் சேகரித்தான்.  அதன் மூலம் அவன் மன ஒருமைப்பாட்டை (மன அமைதி) அடைந்தான் என்று பகவான் உணர்த்துகின்றார்...பாடண்கருக்கு இக்கதையின் உட்பொருள் விளங்கவில்லை.  எனவே, அவர் கணேஷ் தாமோதர் என்ற தாதா கேல்கரிடம் பாபா இதன்மூலம் என்ன பொருள் கொள்கின்றார் என்று கேட்டார்...அவர் "எனக்கும் பாபா பொருள் கொள்வது, சொல்லுவது அனைத்தும் தெரியாது என்றாலும், அவருடைய தெய்வீக அகத்தூண்டுதலால் நான் தெரிந்துக் கொண்டதைக் கூறுகிறேன்....குதிரையே கடவுளின் அருள்....வெளிப்பட்ட ஒன்பது உருண்டைகள் பக்தியின் ரூபங்கள் அல்லது வகைகள்...

அவையாவன:..

(1)  ஸ்ரணவம் ..என்றால்  கேட்டல்

(2)  கீர்த்தனை...என்றால்  வேண்டுதல்

(3)  ஸ்மரணம்..என்றால்  நினைவுறுத்திக் கொள்ளுதல்...

(4)  பாத சேவனம் .. என்றால்  பாதங்களைத் தஞ்சமடைதல்...

(5) அர்ச்சனை.என்றால் பூஜை

(6)  நமஸ்காரம் என்றால் வணங்குதல் .

(7)  தாஸ்யா .. என்றால்  சேவை

(8)  சக்யத்வா.. என்றால்  நட்பு 

(9)  ஆத்மா நிவேதனம் -என்றால்  தன்னையே இறைவனுக்குச் சமர்ப்பித்தல்..

மேற்க்கூறியவையே பக்தியின் ஒன்பது விதங்கள்...இவைகளில் ஏதாகிலும் நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டால் பரமாத்மாவாகிய ஹரி மகிழ்வெய்தி பக்தனின் வீட்டில் தாமே வெளிப்படுவார்.....எல்லாச் சாதனைகளும் அதாவது ஜபம், தபம், யோகப்பயிற்சி, வேதபாராயணம் அவைகளின் வியாக்கியானப் பேச்சு ஆகியவை யாவும் பக்தியுடன் சேர்ந்திருந்தாலன்றி முழுவதுமாகப் பயனற்றவையே ஆகும்.  வேதஞானம் அல்லது பெரும் ஞானி என்ற புகழ், வெறும் சம்பிரதாய பஜனை இவற்றால் பயனில்லை..அன்பான பக்தியே தேவைப்படுவதாகும். வணிகனைப் போன்றோ அல்லது உண்மையைத் தேடும் ஒருவனைப் போன்றோ உங்களைக் கருதிக்கொள்ளுங்கள்.  ஒன்பது வகை பக்தியை விளைவிப்பதில் அல்லது ஒன்பதுவகை சேகரிப்பதில் அவன் கொண்டதைப் போன்ற கவலையுடனும், ஆர்வத்துடனும் இருங்கள். அப்போது நீங்கள் நிலையுறுதியையும், மனச்சாந்தியையும் எய்துவீர்கள்"..

அடுத்தநாள் பாடண்கர் பாபாவை வணங்கச் சென்றபோது, பாபா அவரை ஒன்பது லத்தி உருண்டைகளையும் சேகரித்தீரா எனக் கேட்டார்..  அதற்கு அவர் தான் ஒரு எளியவனாக இருப்பதால் பாபா அவருக்கு முதலில் அருள்செய்ய வேண்டுமென்றும், பின்னர் அவைகளை எளிதாகச் சேர்க்கலாம் என்றும் தெரிவித்தார்...அதன் பின் பாபா அவரை ஆசீவதித்து அவர் மன அமைதியைப் பெற்று  நன்மையும் அடைவார் என்று கூறி ஆறுதல் அளித்தார்....  இதைக்கேட்டு பாடண்கர் அளவுகடந்த இன்பமும், மகிழ்ச்சியும் அடைந்தார்....

🔥பகவானின் ஆத்மார்த்தமான பக்தர் பண்டரீபுரத்தில் வாழ்ந்த  வக்கீல் என்பவரைப்  பற்றிய விளக்கவுரையை இங்குக் காண்போம்.🔥

பாபாவின் எங்கும் நிறைந்த பேரறிவையும், மக்களைத் திருத்துவதையும், சரியான பாதையில் அவர்களை நெறிப்படுத்துவதையும் கூறி இவ்வத்தியாயத்தை முடிப்போம்... ஒருமுறை பண்டரீபுரத்திலிருந்து ஒரு வக்கீல் சீரடிக்கு வந்து மசூதிக்குச் சென்றார்.  சாயீபாபாவைக் கண்டு தரிசித்து அவர்தம் பாதத்தடியில் வீழ்ந்தார்.  கேட்காமலேயே சிறிது தக்க்ஷணை அளித்தார்...  ஒரு மூலையில் அமர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரையாடலைக் கேட்க ஆர்வமுள்ளவராக இருந்தார்..பின்னர் பாபா, தமது முகத்தை அவர் பக்கம் திருப்பி, "மக்கள் தாம் எவ்வளவு வஞ்சனை உடையவர்களாக இருக்கிறார்கள்..!  அவர்கள், பாதங்களில் விழுகிறார்கள், தக்க்ஷணை அளிக்கிறார்கள், ஆனால் அந்தரங்கமாக, காணாவிடத்தில் திட்டுகிறார்கள்... இது அற்புதமாக இல்லையா...? என்று கூறினார்..பகவான் கூறிய இந்த வார்த்தையானது  வக்கீலுக்குப் பொருத்தமாக இருந்தது...ஒருவருக்கும் இக்குறிப்பு விளங்கவில்லை.... வக்கீல் இதைக் கிரகித்தார்.ஆனால் அவர் அமைதியாய் இருந்தார்....      

அவர் வாதாவுக்குத் திரும்பியபோது வக்கீல், காகா சாஹேப் தீக்க்ஷித்திடம் கூறியதாவது, "பாபா குறிப்பிட்டது சரிநுட்பமாக உண்மையே ஆகும்...  இக்கணை என்மேலேயே எய்யப்படடது...அதாவது மற்றவர்களைத் திட்டுவதிலோ, அவதூறு பேசுவதிலோ, நான் மனம்போன போக்கில் போகக்கூடாது என்ற எனக்குரிய குறிப்பேயாகும்.பண்டாரீபுரத்தின் முன்சீஃப் அல்லது சப்-ஜட்ஜ் (நூல்கர்) தமது உடல்நல முன்னேற்றத்தை முன்னிட்டு இவ்விடம் வந்து தங்கியிருந்தபோது, பண்டரீபுரத்தின் பார்-ரூமில் (வக்கீல்கள் அறை) இந்த விஷயத்தைப் பற்றிய விவாதம் (மற்ற பார் அறைகளில் நடப்பதுபோன்று) நடந்தது...துன்புற்று வந்த நோய்கள் யாவும் சாயீபாபாவின் பின்னால் போவதால் மட்டுமே மருந்துகள் இன்றி குணப்படுத்தப்படும் வாய்ப்பு சிறிதேனும் உள்ளதா என்றும், சப்-ஜட்ஜைப் போன்ற படித்தவர்கள் இதைப்போன்ற முறைகளை அனுசரிப்பது சரியா என்று விவாதிக்கப்பட்டது.  அதாவது மறைமுகமாக சாயீபாபா அவதூறு பேசப்பட்டார் அல்லது குறைகூறப்பட்டார்.  நானும் இந்த  விவாத  விஷயத்தில் சிறிது  பங்கு கொண்டேன்....இப்போது சாயீபாபா எனது ஒழுங்கீனத்தை எடுத்துக் காட்டினார்...இது எனக்குரிய கண்டனமாகாது, ஆனால் ஓர் சகாயமாகும்... ஓர் உபதேசமாகும்..அதாவது நான் பிறரைத் தூற்றுவது, துஷ்பிரசாரம் செய்வது இவற்றில் தன்னிச்சையுடன் செயல்படக்கூடாது என்பது பற்றியும்,  அனாவசியமாகப் பிறர் காரியங்களில் தலையிடக்கூடாது என்பது பற்றியுமாகும்"  என்பதை உணர்ந்தேன்..

சீரடி,பண்டரீபுரத்திலிருந்து முந்நூறு (300) மைல் தூரத்தில் இருக்கிறது.  எனினும் அங்குள்ள பார் அறையில் என்ன நிகழ்ந்தது என்பதை பாபா தமது எங்கும் நிறை பேரறிவால் அறிந்திருந்தார்...இடையில் உள்ள இடங்கள், ஆறுகள், காடுகள், மலைகள் யாவும் அவர்தம் அனைத்தையும் உணரும் பார்வைக்குத் தடை செய்வன அல்ல...  அவர் எல்லோருடைய இதயங்களையும் பார்க்க முடியும்,  படிக்க முடியும்.  எதுவும் அவருக்கு இரகசியமோ, மறைக்கப்பட்டதோ அன்று.  அண்மையிலோ, சேய்மையிலோ உள்ள ஒவ்வொன்றும் பட்டப் பகலொளியைப் போன்று தெள்ளத் தெளிவாகவும், சுத்தமாகவும் பாபாவிற்குத்  தெரியும்....

ஒரு மனிதன் பக்கத்தில் இருந்தாலும் சரி....ஏழு கடலுக்கு அப்பால் இருந்தாலும் சரி...அவன் சாயீபாபாவின் எங்கும்நிறை கூர்ந்த பார்வையினின்று தப்ப முடியாது என்பதை உணர வேண்டும்....இதிலிருந்து மற்றவர்களைப் பற்றித் தூஷணையாகப்(தூற்றி) பேசக்கூடாது என்றும், தேவையில்லாமல் மற்றவரைக் குறைக் கூறக் கூடாது என்றும் வக்கீல் அறிந்துக் கொண்டார்..  இவ்வாறாக அவர்தம் கெட்டகுணம் முழுவதுமாக மறைந்து நல்வழிக்குத் திருப்பபட்டார்...இக்கதை வக்கீலுக்கே என்றாலும், அனைவருக்கும் இது பொருந்துவதேயாகும்.... அனைவரும் இந்நியதியை உள்ளத்தில் கொண்டு, அதனால் வரும் பயனை அடையவேண்டும்.....

சாயீபாபாவின் உபதேச மொழிகள் அனைத்தும் ஆழங்காண இயலாதது...அதீத வியாபகமுள்ளது..ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டது...  இவ்வாறே அவர்தம் அற்புதமான லீலைகளுமாகும்.....ஏனெனில் அவரே பரப்பிரம்ம அவதாரம் ஆவார்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...