ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, நவம்பர் 18, 2023

ஆன்மீக அனுபவத்தை மழையாக பொழிய சாய் இருக்க...


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆன்மீக அனுபவத்தை மழையாக பொழிய  சாய் இருக்க...அந்த மழையில் சிறிதும் நனையாமல் மாயை என்னும் குடை பிடித்து தன்னை மறைத்துக் கொண்டிருப்பது ஏனோ..

நீங்கள் இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும் கடினமான சூழ்நிலைகள் யாவும் ,உங்கள் சிறுவயது முதல் உங்களால் உருவாக்கப்பட்டவையே...!!

நீங்கள் அறிந்தும் அறியாமலும்  செய்த தவறுகளை உங்களுக்கு நினைவுபடுத்தவே இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்டுருக்கும் இந்த கடினமான சூழ்நிலைகள் ..!

நீங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்றால் தண்டணைக்கு ஆளாக மாட்டீர்கள் ..தவறு என்று இங்கு குறிப்பிடுவது .சொல்,செயல்,பார்வை, உணர்ச்சி இவைகள் மூலமாக அடுத்த உயிரை காயப்படுத்துவதே...!

உங்கள் மனதில் இந்த நிமிடம் இந்த பதிவை படிக்கும் பொழுது ..உங்கள் மனம் பாரமற்றதாக..மனஉளைச்சல் இல்லாமலும் இருந்தால் நீங்களும் சாயீயின் ஆன்மீக அனுபவ மழையில் நனைந்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள்  என்று உணர்வீராக..

அதே சமயம் உங்கள் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கினால்..நீங்கள் இன்னும் குடை(மாயை) பிடித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று உணர்வீராக ..!

மழைச்  சாரலில் நனைய உங்களை நீங்களே இனியாவது தயாராக்குங்கள்..!

இந்த பதிவை எந்த நேரத்திலும் நீங்கள் படிக்க உங்கள் அனுபவம் உங்களுக்கு உங்களை யார் என்று உணர்த்தும்..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

உன்னை போல் பலர் உண்டு...உன்னை போல சிலரே உண்டு...!!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

உன்னை போல் பலர் உண்டு...உன் தன்மைப் போல  சிலரே உண்டு...!!

தந்தையோடு கடைவீதிக்குச் செல்லும் குழந்தை தந்தையின் சுண்டுவிரலைப் பிடித்துக் கொள்கிறது. அந்த சின்ன ஒரு பற்றுதல் குழந்தைக்கு அதீத நம்பிக்கையைத் தருகிறது. தந்தை தன்னைக் கைவிடமாட்டார், தந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என குழந்தை சந்தேகத்துக்கு இடமின்றி நம்புகிறது. தந்தை மீது அந்த குழந்தை வைக்கும் நம்பிக்கைக்குக் காரணம் என்ன...? தந்தையின் சுண்டு விரலின் வலிமையா...? இல்லை, குழந்தை தந்தையை அறிந்திருக்கிறது என்பது தான்.

அதே போல தான் இறைவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு அடிப்படையும் ‘அவர் எப்படிப்பட்டவர்’ என்பதை நாம் அறிந்து கொள்வதில் தான் அடங்கியிருக்கிறது. இறைவனின் தன்மைகளை முழுமையாய் அறிந்துக்  கொள்ளாமல் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அறிந்து கொள்ளாமல் வைக்கின்ற நம்பிக்கைகள் வலுவிழந்து போய், வாழ்க்கைப் புயலில் சின்னாபின்னமாகி விடும்.

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

வியாழன், நவம்பர் 16, 2023

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்..?


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்..?

குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது.

“யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்...? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா...?” என்று கேட்க்கிறான்.

“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்” என்று கூறுகிறார் குரு.

மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள். மாணவர்களுக்கு முன்னாள் இரண்டு மண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள் இருக்கின்றன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன. “இங்கே இருப்பது என்ன..? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா..?” என்று மாணவர்களை பார்த்து கேட்கிறார் குரு.

மாணவர்கள் ஒரு கணம் கழித்து “இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான் என்றார்கள்.

“இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா..? என்று குரு மாணவர்களை பார்த்து கேட்கிறார். மாணவர்கள் தெரியவில்லை என்று கூறினார்கள்.

“ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. ”மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக் கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில் தான் இருந்தது.. அது வெளியே தெரியாமல் இருந்தது...ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது.

இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும் போது தான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது.

நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” என்றார் குரு...

மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்..? என்று கேட்டார். மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்! என்றார்கள்.

“இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்...? சற்றுயோசித்து பாருங்கள்! கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான் ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை...

இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால்தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻🙏🏻

பொறுமையின் காய் மிக மிக மிக கசப்பானது ஆனால் அதன் கனியோ இனிப்பானது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

பொறுமை என்கிற காய் மிக மிக மிக கசப்பானது ஆனால் அதன் கனியோ இனிப்பானது..

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ...ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....!ஒவ்வொரு மனிதனும்  தனித்தனி ஜென்மங்கள்...தனித்தனி பிறவிகள்..தனித்தனி ஆன்மாக்கள் அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்..அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா..? கெட்டதா..? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது....இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை...அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்...அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. 

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...ஒதுங்கி நின்று வேடிக்கை பார்...! பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே...அவர்களுக்கு அனுபவம் தான் குரு.அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு...

ஓம் ஸ்ரீ  சாயீராம்...🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...